Saturday 19 October 2013

இஞ்சி இடுப்பழகி - ஒரு தீவிர ஆராய்ச்சி...(சும்மா அடிச்சி விடுவோம்..-4 )

ராஜா ராணி படம் போன வாரம்தான் பார்த்தேன். இப்படியே போனா .... போன வருசந்தான் பாத்தேன்னு எழுதுற நிலைமையில கொண்டு போயி விட்டுடும். என்னங்க பன்றது. எழுதனும்னு உட்கார்ந்தா ஏதாவது ஏழரை வந்து உச்சத்தில உட்கார்ந்து ஊஞ்சல் கட்டி ஆடுது.அதை பைசல் பண்ணிட்டு வர்றதுக்குள்ள எழுத வந்தது மறந்துடுது. ஒரே குஷ்டமப்பா...

சரி.. என்னசொல்ல வந்தேன்...?  ஆங்... ராஜா ராணி படம். இதுக்கு தனியாக விமர்சனம் எழுதி கழுவி ஊத்த இது மொக்கைப் படமோ அல்லது காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல...  கொஞ்சம் சுமாரான படம்.. சாதாரண கதை. ஆனால் நயன்தாரா -ஜெய் போர்சன் எக்ஸலண்ட்..!  இரவுக்காட்சி சென்றதால் கடைசி ரயிலைப்பிடிக்க படம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டேன். அதை சமீபத்தில்தான் பார்த்தேன். அதுவரை நெஞ்சில் நின்ற ஜெய் கேரக்டர், மம்மியைப் பார்த்த மினிஸ்டர் மண்டை போல 'டொக்' கென்று விழுந்துவிட்டது. வழக்கம் போல சந்தானம்,  'மச்சி..காதல்ன்றது....' என ஆரம்பிச்சி கழுத்தை அறுக்கிறார். இருவருடைய பிளாஸ்பேக் முடியும்போதும், அதைக்கேட்கும் ஆர்யா, நயன்தாராவின் ரியாக்சனை ஒரே மாதிரியாகத்தான் காண்பிக்கவேண்டுமா அட்லி...? இருவரின் முகமும் ஒரே மாதிரியாக குளோசப்பில் கண்களில் நீர்வடிய எதையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது.

ஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.  தம்பி அட்லி, மணிரத்னம் மாதிரி வரணும்னு ஆசைப்படுறாரு போல. அதுக்காக அவர் இயக்கிய  படத்தை ரீமேக் பண்ணக்கூடாது தம்பி. அடுத்த தடவை வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணு.

சரி அதைவிடுங்க.. நான் சொல்ல வந்தது வேற விஷயம். இந்தப்படத்தில நயன்தாரா கூடவே இலவச இணைப்பா ஒன்னு சுத்திகிட்டு இருக்கும். துடைப்ப கட்டைக்கு துப்பட்டா போட்ட மாதிரி. 'வணக்கம்ங்க.. என்ட்ர பேரு புவனாங்க..'.னு ஜெய் கிட்ட ஒரு அம்மணி போனில காலாய்க்குமே. அந்த அம்மணி பெயர்  தன்யா பாலகிருஷ்ணா.. இதைச்சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பானு குறுக்கால கேள்வி கேட்காதிங்க. அப்புறம் சொல்ல வந்தது மறந்துடும்.

சில நாட்களுக்கு முன்னால ஒரு பெங்களூர் அம்மணி சென்னை மக்களை 'பிச்சைக்காரன்' என்கிற ரீதியில்...  ரீதியில் என்ன... நேரடியாவே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, நம்ம மக்கள் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு இனிமே சென்னை பக்கமே வரமாட்டேன்னு சொன்னதே ஞாபகம் இருக்கா...? அப்படியானு ஆச்சர்யகுரியை மூஞ்சில தொங்க விடமா அந்த ஸ்க்ரீன் ஷாட்டை திரும்பவும் போடுறேன் பாருங்க.
இப்போ என்ன  சந்தேகம்னா, இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னால அம்மணி 'ஏழாம் அறிவு' படத்தில முக்கியமான ஒரு ரோல்ல நடிச்சது. பிறகு தான் பிரச்சனை வந்து ஓடிப்போனது.. ஓடிப்போன அம்மணியை திரும்பவும் கூட்டிட்டு வந்து வாய்ப்பு கொடுத்து வாழவைத்திருக்கிறார் நம்ம A.R முருகதாஸ்.

அண்ணா முருகதாஸ்ண்ணா...உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி,  'ஏழாம் அறிவு' படத்தில இந்த அம்மணியை பக்கத்தில வச்சிக்கிட்டு சூர்யா ஒரு உணர்ச்சிபூர்வமான டயலாக் பேசுவாப்டி..."தமிழனை மலேசியாவில அடிச்சாங்க....இலங்கையில அடிச்சாங்க.... இப்போ தமிழ்நாட்டுக்கே வந்து அடிக்கிறாங்க.... "

நரம்பு புடைக்க  வசனம் எழுதுன உங்களுக்கு தமிழர்களை பெங்களூர்ல அடிச்சத மறந்து விட்டீங்களா.. அதனாலதான் அந்த துடைப்ப கட்டை அம்மணிக்கு மாஞ்சி மாஞ்சி வாய்ப்பு தருகிறீர்களோ... தமிழ் நாட்ல ஹீரோயினுக்குத்தான் பஞ்சம்னு கேரளா, ஆந்திராவிலிருந்து இம்போர்ட் பண்ணுறீங்க... ஒரு தொப்புளுக்காக கோர்ட் படி கூட ஏறுவீங்க.. இது போன்ற துக்கடா கேரக்டருக்குக் கூடவா தமிழ் நாட்டில் நடிகைங்க இல்ல..? 

என்ன செய்யுறது தமிழர்களில் மறதி குணம் அப்படி... அடுத்த படத்தில 'ஜப்பான்ல ஜாக்கிச்சான் அடிச்சாரு.. அமெரிக்காவில மைக்கேல் ஜாக்சன் அடிச்சாரு'... னு வசனம் எழுதுங்க. நாங்களும் கைதட்டி, விசிலடிச்சி என்ஜாய் பண்றோம்.
டுத்ததும் வில்லங்கமான மேட்டர்தான். கொஞ்சம் பழைய செய்தி. ஆனால் என் பதிவு சம்மந்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில், நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவருடன் புன்னகை நடிகையைத் தொடர்புப் படுத்தி கிசோர் கேசாமி போட்ட ஒரு ஸ்டேடஸ் பெரும் சர்ச்சையானது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கேப்டன் டிவியில் கிசோர் கேசாமியுடன் நடந்த நேர்காணலை சமீபத்தில்தான் பார்த்தேன். 
http://www.youtube.com/watch?v=jztqrHrf3jY
http://www.youtube.com/watch?v=cPYM926Zt5o

அதில் அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட  கேள்வி அந்த நடிகை சம்மந்தப்பட்டதுதான். உலகம் முழுவதும் அது ஒளிப்பரப்பாகும் என்று தெரிந்திருந்தும்,அதில் அவர் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. கடைசிவரை அது தவறான பதிவு என்றோ, சரியாக விசாரிக்காமல் போடப்பட்ட நிலைத்தகவல் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த நேரத்தில் திருச்சியில் இருந்ததாகவும்,அதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அந்தத் தகவலைப் பதிந்தேன் எனவும் தெரிவித்தார். பிரசன்னா தரப்பு காவல்துறையில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. இடையில் அன்பான நண்பர் ஒருவரின் பேச்சுவார்த்தையால் புகார் அளிக்கவில்லை. அதனால் என் பதிவையும் நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.  அது தொடர்பாக எனக்கெழுந்த சந்தேகம் இதுதான்..

புகார் ஏன் அளிக்கவில்லை என்று  ஊடகவியலார்கள் அன்று பிரசன்னாவிடம் கேட்டபோது, அப்படி யாரும் தவறாக எழுதவில்லை.. நான் யாரிடமும் வாதிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் கிசோர் அந்த ஸ்டேடசை பதிந்தபிறகு பலரும் அதை நக்கலடித்து எழுத, பிரசன்னா கமெண்ட் போட்ட பிறகுதான் அந்த விவாதம் வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதில் நக்கலடித்தவர்கள் அனைவரின் இன்பாக்சுக்கு சென்று பிரசன்னா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதை கிஷோர் தனது அடுத்த நிலைத்தகவலில், ஸ்டேடஸ் போட்ட என்னிடம் வாக்குவாதம் செய்யாமல் கமென்ட் போட்ட நண்பர்களின் இன்பாக்ஸில் சென்று மிரட்டுவது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். பிரசன்னாவின் அந்த கமெண்டில் அவர் பெயரைச் சொடுக்கினால் அது அவரின் பேஸ்புக் பக்கத்திற்குத்தான் சென்றது. அதில், அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'கல்யாண சமையல் சாதம்' படம் பற்றிய அப்டேட்கள் நிறைய இருந்தது. அது அவரது பேஸ்புக் பக்கம்தான்.

ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்டு குடைந்த போது பிரசன்னா கடைசியாக ஒரு போடுபோட்டார் பாருங்க... 'எனக்கு பேஸ்புக்ல அக்கவுண்டே கிடையாது'னு.. இதிலிருந்து என்ன தெரியுது. ..? உங்களுக்கு என்ன தெரியுதோ அதேத்தான் எனக்கும் தெரியுது. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நாம வேற வேலையைப் பார்ப்போம்.


அடுத்து அகழ்வாராய்ச்சி(!) ஒன்றில் ஈடுபடலாம்னு இருக்கேன்..

‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ -தேவர்மகன் படத்தில் வரும் இந்தப்பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப்பாடலுக்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுத்தாங்க... இருக்கட்டும்.

அது என்ன ‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...? அதற்கான ஆராய்ச்சியிலத்தான் இறங்கப்போறோம். ஆமா இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்மந்தம்...?

பழைய பாடல்களுக்கும் புதிய பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியே கின்னஸ் ரெகார்டு வரை போன திண்டுக்கல் லியோனி ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'அது என்ன இஞ்சி இடுப்பழகி... இஞ்சி பாத்திங்கனா ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும். ஒன்னு ஐரோப்பா மேப் மாதிரி இருக்கும். அதுமாதிரியா இடுப்பு இருக்கும்..? ரெண்டாவது வரி மஞ்சச் சிவப்பழகி  போட்டாச்சி. மொத வரில இடுப்பப் பத்தி சொல்லணும். இடுப்புக்கு இ-ல ஆரம்பிக்கிற மாதிரி ஒன்ன போடனும். போட்டுவுடு ஒரு இஞ்சை-னு போட்டுடாங்க' அப்படினு சொல்வாரு. 

தென்கச்சி சொன்னதா எங்கேயோ படித்திருக்கேன். 'இஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பெல்லாம் நீங்கி சிக்-னு சிறியதா நச்சுனு இருக்கும். அப்படி உள்ளவர்களைத்தான் இஞ்சி இடுப்பழகினு சொல்றாங்க' என புது விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு வேறு ஒரு விளக்கம் பேஸ்புக்ல கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கொடுத்திருக்கார்...

இஞ்சுதல்’ என்று தொழிற்பெயர் உண்டாம். இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி. அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !

அடேங்கப்பா... இதுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறதா..?

ஆனால் அந்தப் படத்தையும் பாடலையும் கவனித்தீர்கள் என்றால் இன்னொரு வினா எழுப்பத் தோன்றும். பாடலில் முதலில் பெண் குரல்தான் பாடும். " இஞ்சி இடுப்பழகா... மஞ்சச் சிவப்பழகா.." அப்படி என்றால் இது ஆணுக்கான  வர்ணனை தானே.. ஆணின் இடுப்பை அப்படி வர்ணிக்கலாமா..?  என்றால், இதற்கு பாடல் எழுதிய வாலியே விளக்கம் கொடுத்திருக்கிறார். 'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்' என சொல்லியிருக்கிறார்.

எனக்கிருக்கும் சந்தேகம் அந்த வரியை உண்மையிலேயே வாலிதான் எழுதியிருப்பாரா என்பதே.பொதுவாகவே இசைஞானி நாட்டுப்புற இசைப்பின்னணியில் பாடல் அமைக்கிறார் என்றால் வேறு பாடலாசிரியர் எழுதினாலும் ராஜாவின் பங்கும் அதில் இருக்கும். ஒரு சில நாட்டுப்புற வரிகளை அதில் கோர்த்து விடுவார். 'ஒத்த ரூவாயும் தாறேன்...' பாடலின் முதல் இரண்டு வரிகள் ஏற்கனவே எங்கள் கிராமப்புற பகுதியில் பாடப்பட்ட பாடல்தான்.

அதேப்போல்  “இஞ்சி இடுப்பழகா, எலுமிச்சங்காய் மாரழகா, மஞ்சச் சிவப்பழகா, மறக்க மனம் கூடுதில்லை” என்ற இவ்வரிகள் நெல்லை ,மதுரைப் பகுதிகளில் பாடப்படும் நாட்டுபுறப் பாடல்களில் இடம்பெற்றதாக ஒரு தமிழர் நாட்டுப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இது முதல் வரியிலேயே ரசிகனை கவர்ந்திழுக்க வேண்டும் என்று ராஜா போன்ற மேதைகள் கையாளும் யுத்தி.

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வு எழுதப்போகும் 10,+2 மாணவர்கள் இதைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு தேர்வில் பதில் தெரியாமல் திண்டாடக்கூடாது ஆமா....(உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்..)
 
அரசியல் கலாட்டூன்..  :-)

21 comments:

  1. ahaa pathivu pala visayangala thangi vanthu irukku rasichen sir.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேஷ்

      Delete
  2. enakku raja rani pidichu irunthichu sir.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். படம் மொக்கை எல்லாம் கிடையாது மகேஷ்.. கடைசி பதினைந்து நிமிடங்களை கழித்துப் பார்த்தால் நல்ல என்டர்டைன்மெண்ட்... ஆனால் மௌனராகம் படத்தோட எல்லாம் ஒப்பீடு செய்யும் அளவுக்கு இல்லை என தோணுது.

      Delete
  3. வாவ்... செமையா எழுதியிருக்கீங்க... எல்லாமே நல்ல கன்டென்ட்...

    ReplyDelete
  4. கடைசி கேப்டன் படம் பினிஷிங் டச்.... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரகாஷ்

      Delete
  5. // காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல... // பார்ரா இலக்கியம் பொங்கி வழியுது ஹா ஹா ஹா

    //உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்.// ஹா ஹா ஹா

    ஒரு புறாவுக்கு அக்கப்போறா என்ற பாணியில் இருக்கிறது இஞ்சி பற்றிய தவகல்கள்,

    இஞ்சி பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டோம், தகவலுக்கு நன்றி.. தொடர்ந்து எழுதவும் (ஹா ஹா ஹா எப்பாடி வந்த வேல முடிஞ்சது )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு

      Delete
  6. ராஜா ராணி விமர்சனத்தோடு, இடுப்பு அலசல்... சே... இஞ்சி அலசல் சூப்பர்...

    கலாட்டூன் செம கலாட்டா...!

    ReplyDelete
  7. ஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.////

    nan partha vara palar raja rani mavna ragam oda opittu kaluvi uthey mudichittanga... ana nan tan nampala.. yar sonathum nampama irunthen.. maranthu pona visayathai ninga thonti eduthu elutiya piraku nethu youtube la nanum mavna ragam parthitalam enna than irukunu parthen sir.. rompa acharyama irunthichu 1987 la ippadi oru padamanu.. nalla irunthichu.. kuda oru kadhal kadhai serthu edutha latest version than raja rani...

    raja rani pidichu irunthichuna oruthanukku.. avan mavna ragam parkkalinu artham.. avan mattum parthana avvalvutan enna pola nichayama marituvan..

    ReplyDelete
  8. ஹா.ஹா... என்னால மௌனராகம் பார்த்ததற்கு மிக்க நன்றி மகேஷ். மணிரத்னத்தை யார் இந்த பையன் என அப்போது எல்லோரையும் திரும்பியப் பார்க்கவைத்தப் படமாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறு மெல்லிய உணர்வுகளை அற்புதமாக படம்பிடித்திருப்பார். எல்லாவற்றையும்விட ராகதேவனின் பின்னணி இசை பிரமாண்டம்.

    ReplyDelete
  9. அந்த பெங்களூரு அம்மணி எதோ சீரியல்ல கூட நடிக்குறதா விளம்பரத்துல பார்த்தேன். நம்மாளுங்க கிட்ட இருக்குற ஒரே ப்ளஸ் பாய்ண்ட் மறப்போம்...., மன்னிப்போம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நம் வீக்னஸ் கூட .. மிக்க நன்றி மேடம் .

      Delete
    2. அதுதான் நம் வீக்னஸ் கூட .. மிக்க நன்றி மேடம் .

      Delete
  10. செம ரைட் அப் பாஸ். :):) படிக்க ரொம்ப சுவாரிசியம்மா இருக்கு. அடிக்கடி சும்மா அடிச்சி விடுங்க..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜ் ...

      Delete
  11. பிண்ணியெடுக்கிற...பிரமாதம்....இப்படி சிரிச்சு ரொம்ப நாளாச்சு...நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்

      Delete