tag:blogger.com,1999:blog-4827328589671809694.post3222661910543091815..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: தைத்திருநாளை புத்தாண்டாக கொண்டாடுவோமே....Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-18283280006783862002012-01-15T21:53:23.586+08:002012-01-15T21:53:23.586+08:00வருகைக்கும் நீ........ண்ட பின்னூட்டத்திற்கும் நன...வருகைக்கும் நீ........ண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி Jagannath <br /><br /> முதலில் உங்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..<br /><br />தமிழ் மாதங்களை மாற்றுவது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஓன்று என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்..கிராமப் புறங்களில் தமிழ் மாதங்கள்தான் பின்பற்றப்படுகிறது.பயிர் செய்யும் காலம்,நேரம்,அறுவடைக் காலம் எல்லாமே தமிழ் மாதத்தை வைத்துதான் கணக்கிடுகிறார்கள்...<br /><br /> <br /><br />//சிலப்பதிகாரத்தில் சித்திரை விழாக்கள் பற்றிச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. //<br /><br /> <br /><br />தமிழ் புத்தாண்டு எப்போது கொண்டாடப்படவேண்டும் என்பது இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது.தொல்காப்பியமும் ,அகப்பொருள் விளக்கமும்,திவாகர நிகண்டும் ஆவணி மதம்தான் முதல் மாதம் என்று சொல்கிறது.<br /><br />“மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்<br /><br />பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்” எனச் சூடாமணி நிகண்டு கூட ஆவணித் திங்கள்தான் முதலில் தொடங்கியது என்று சொல்கிறது. <br /><br /><br />நம் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்னமும் ஆவணி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது...இதற்கு சொல்லப்படும் காரணம் ..ஆவணிக்கு சொந்தமான ராசி சிம்மம்.சிம்மத்திற்கு சொந்த வீடு ஞாயிறு(சூரியன்).இந்த ஞாயிறு குடியிருக்கும் ஆவணியை புத்தாண்டாகக் கொண்டாடுவதாக சொல்கிறார்கள்.அப்படிஎன்றால் எந்த மாதத்தை கொண்டாடுவது?<br /><br /><br />நம் முன்னோர்கள் வகுத்த தேவரின் பகல் என்பது நில இயல்- வான இயல் உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்களே...இதில் தை தானே முதல் மாதமாக வருகிறது...<br /><br />மேலும்...<br /><br /> பொங்கல் பண்டிகையோடு வரும் திருவள்ளுவர் நாளில் புத்தாண்டு என்பது பெரியார்,திரு.வி.க, பாரதிதாசன் போன்றோர்களின் மனதில் உதித்த ஒரு முற்போக்கு சிந்தனையே!.தமிழ் வருடங்களின் பின்னால் சொல்லப்படும் கதைகள் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவையாக இருக்கிறதே...<br /> <br />ஆனால் பொங்கல் பண்டிகையை தமிழ்க் கிருஸ்துவர்கள் கூட அந்தோனியார் பொங்கலாக கொண்டாடுகிறார்களே! ...<br /> <br />ஆங்கில புத்தாண்டு,சீனப்புத்தாண்டு போல் தமிழ் புத்தாண்டை சமய வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61079637753131735332012-01-13T22:30:57.229+08:002012-01-13T22:30:57.229+08:00சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கான காரணம்...சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கான காரணம் ஜோதிட ரீதியானது மட்டுமல்ல. வானவியல் ரீதியானது. அந்த மாதத்தில்தான் சூரியன் உச்ச பலத்தில் இருக்கிறது என்பது வானவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. சூரியக் குடும்பத்தின் உள்ள கிரகங்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சூரியனே முதல் காரணமாக உள்ளதால் அதற்கு மரியாதை செலுத்தும் பொருட்டு சூரியன் உச்சத்திற்கு வரும் மாதத்தில் பழந்தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினர். சிலப்பதிகாரத்தில் சித்திரை விழாக்கள் பற்றிச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. <br /><br />சித்திரை மாதத்தில் கொண்டாட்டங்கள் ஒன்றும் இல்லை என்பது தவறான கூற்று. சித்திரை முதல் நாள் வீடுகளில் விருந்து சமைத்து உண்கிறோம். கோவில்களில் சிறப்பு வழிபாடு, பஞ்சாங்கம் படிப்பது நடக்கிறது. சித்திரை மாதத்தில்தான் பல கோவில் திருவிழாக்கள் நடக்கின்றன. <br /><br />அறுபது ஆண்டுகளுக்குப் பின் உள்ள தத்துவம் வேறு. அறுபது வருடத்திற்கு ஒருமுறை உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்று நம்பப்பட்டது. ஒவ்வொரு வருடப் பெயரும் உலகம் அறுபது வருடத்தில் கடந்து போகும் நிலைகளைக் குறிக்கிறது. அதற்கு சொல்லப்படும் கதை முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அந்த தத்துவம் முட்டாள்தனமானதல்ல. பொதுவாகப் புராணக் கதைகளில் மறைந்திருக்கும் பொருள் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஒரு சுவாரசியத்திற்காகவும், எளிமைக்காகவும் சொல்லப்படுபவற்றை அப்படியே பிடித்துக் கொள்ளக் கூடாது. <br /><br />இந்த முறை வியாழன் கிரகத்தின் சுற்றை அடிப்படையாகக் <br />கொண்டது. வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர பன்னிரண்டு வருடங்களாகிறது. அது ஐந்து முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் அறுபது வருடங்களில் அது இருக்கும் நிலையைப் பொறுத்து பூமியில் நிலநடுக்கங்கள், வெள்ளம் ஆகியவை ஏற்படுகிறது என்று கணிக்கப்பட்டது. இந்த செய்திகளை வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு செல்ல இத்தகைய அறுபது வருட முறை உருவாக்கப்பட்டது. <br /><br />இத்தனையாவது வருடம் என்பதை எப்படிக் கணக்கிடுவது என்று கேட்கலாம். அதற்குத்தான் யுகக் கணக்கு இருக்கிறது. இது கலியுகத்தில் 5112 வது வருடம். இது மத நம்பிக்கையின் அடிப்படையிலானது. இதற்கு மட்டும் திருவள்ளுவர் பிறப்பை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். திருவள்ளுவர் பற்றி இன்றும் ஆணித்தரமான வரலாறு இல்லை. அவரைப் பற்றிச் சொல்லப்படும் பல விடயங்கள் ஊகங்களாகவே உள்ளன. அப்படி இருக்கையில் சூரியனின் அடிப்படையில் புத்தாண்டை வரையுறுத்த பழைய முறையே சிறப்பானதாகும். <br /><br />தைமாதத்தின் சிறப்பு வேறு வகையானது. அறுவடை நடக்கும் சமயமாக இருப்பதால் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை வருடப் பிறப்பாக இருந்ததாக இலக்கிய ரீதியான சான்றுகள் இல்லை. அரசியல் ரீதியாக சில <br />அறிஞர்களும், கலைஞர்களும் சொன்னார்கள் என்பதற்காக அதைப் பின்பற்றுவது சரியான<br />முறையாக இருக்க முடியாது.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-69470446209816537562012-01-12T11:22:21.952+08:002012-01-12T11:22:21.952+08:00@கோவை நேரம்..வருகைக்கு ரொம்ப நன்றி நண்பரே...திருவள...@கோவை நேரம்..வருகைக்கு ரொம்ப நன்றி நண்பரே...திருவள்ளுவர் நாட்காட்டியைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் அவர் பிறந்த தினத்தை ஏன் தமிழ் புத்தாண்டாக கொண்டாடக்கூடாது? என்பது என் மனதில் தோன்றிய சிறு ஆதங்கம்....Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-76678341364657769262012-01-12T07:37:49.133+08:002012-01-12T07:37:49.133+08:00காலண்டர் பத்தின விளக்கம் தெரிந்தது,..இப்போ நாம எந்...காலண்டர் பத்தின விளக்கம் தெரிந்தது,..இப்போ நாம எந்த புத்தாண்டை கொண்டாடுவது ..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com