Saturday 25 August 2012

பட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழப்பும் கஜினி வரலாறும்...



பட்டைய கிளப்பட்டும்....!!!!




 நாளை  சென்னையில் தமிழ்பதிவர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் சிறு சிறு பதிவர் சந்திப்புகளை வெகு தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.எதிலும் கலந்துகொண்டதில்லை.அதற்காக வருத்தப்பட்டதுமில்லை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பதிவர்களின் சூழ்நிலை அப்படி.ஆனால் முதன் முதலாக மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

   பொதுவாகவே பதிவுலகத்தில் பிரபல பதிவர்களுக்கும் ஆரம்ப நிலையிலுள்ள பதிவர்களுக்கும் ஒரு நீ.......ண்ட இடைவெளியுள்ளது.சில நல்ல பதிவர்கள் கூட பதிவு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஊக்கப்படுத்துபவர்கள் எவரும் இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.அந்த இடைவெளியை இதுபோன்ற பதிவர் சந்திப்புகள் போக்கிவிடும் என்பது என் கணிப்பு.

    முகம் தெரியா நட்புகள்.வெறும் எழுத்தில் மட்டுமே இணைந்த உறவுகள்.அவ்வப்போது சிறு ஊடல்கள்.பிறகு தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கூடல்கள்.இவையெல்லாமே விரவிக்கிடக்கும் பதிவுலகத்தின் இதயங்கள் சங்கமிக்கும் இந்த மெகா மாநாடு மிகப்பெரிய வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...... 
************************************************************************************************************************************************
கஜினியின் தவறான வரலாறு...


    தோல்வியைக் கண்டு அஞ்சமாட்டோம் என்று சொல்வதற்கு நிறைய பேர் கஜினிமுகமதுவைத்தான் உதாரணம் காட்டுவார்கள்.பதினாறு முறை படையெடுத்து தோற்றாலும் தளராத தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அவரை பதினேழாவது தடவையில் வெற்றி பெறச்செய்தது என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இது தவறான வரலாற்றுச் செய்தி.

    உண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வரவில்லை.கஜினியின் பதினேழு படைஎடுப்புமே வெற்றிதான்.இன்னும் சொல்லப்போனால் கஜினி இந்தியப்பகுதிகள் மீது படையெடுத்தது ஆட்சி செய்வதற்காக அல்ல.இங்குள்ள செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் படையெடுத்திருக்கிறார்.

   மத்திய ஆசியாவிலும் சரி,ஆப்கானிஸ்தான்,அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் சரி அங்குள்ள மன்னர்களின் முதல் இலக்கு  இந்தியாதான். இந்தியாவில் விண்ணைமுட்டும் கோவில்கள்,மாடமாளிகைகள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட செல்வசெழிப்புகள் ஏற்படுத்திய பிரமிப்புதான், வெறிச்சோடிய  பாலைவனத்தையும் கரடு முரடான மலைகளையும் ஆட்சி செய்து கொண்டிருந்த அவர்களை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்தது.
  
       ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரை ஆட்சிசெய்த கஜினி முகமது தனது முதல் படையெடுப்பை கிபி 1000-ல் இந்தியாவின் மீது நடத்தினார்.முதல் போரிலே மிகப்பெரிய வெற்றிபெற்ற கஜினியின் படைகள் அடுத்து கொலை கொள்ளை என்று வெறியாட்டத்தில் இறங்கியது.அசுரத்தனமும் அதிபுத்திசாலித்தனமும் கலந்து போரிட்ட ஆப்கான் படையிடம் இந்திய படையின் வீரம் செல்லுபடியாகவில்லை.வந்த வேகத்திலே வெற்றிபெற்று கொள்ளையடித்த பொருட்களோடு சென்றுவிடுவானாம் .

    கஜினிமுகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய்விட்டது.ஆண்டுக்கொரு முறை இந்தியாவின் மீது படை எடுப்பதை ஒரு பிரத்தியோக திருவிழாவாகவே கொண்டாடினான் கஜினி.ஒருமுறை படையெடுத்து கொள்ளையடித்த இடத்திற்கு மீண்டும் வரமாட்டான்.

 கஜினிக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது.தான் போரிட்டு வெற்றிகண்ட மன்னர்களின் விரல்களை வெட்டி எடுத்து சேகரித்து வருவானாம்.ஆக கஜினி தோற்கவில்லை.அவன் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்து வெற்றியோடுத்தான் திரும்பினான் என்பதுதான் உண்மை.

  ஆக...நான் 'கஜினி மாதிரி' என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்பவர்கள் இந்த விஷயத்தை நினைவில் கொள்ளவும்...

************************************************************************************************************************************************

தமிழகம் முழுவதும் மீண்டும் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு.-செய்தி.





வணக்கங்களுடன்....
மணிமாறன்.



 ---------------------------------------------(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))-----------------------

Thursday 23 August 2012

இப்படியும் ஒரு பெயரா?... அதிசயவைக்கும் அழகிய தீவும் தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பும்...


       "அண்ணே...பூவ..பூவுன்னும் சொல்லலாம்..புய்ப்பம்னும் சொல்லலாம்..நீங்க சொல்லுற மாதிரியும் சொல்லலாம்..... " 

      இந்த தீவுக்கு போயிட்டு வருகிற நம்ம ஆளுங்க கிட்டபோய் 'எங்கே போனீங்க'-னு கேட்டா இது மாதிரிதான் எதையாவது சொல்லி நெளியிறாங்க.இதுல கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், சிங்கபூரின் மூலைமுடுக்கு,இண்டுஇடுக்கு, சந்துபொந்துகளில் கூட தமிழில் பெயர்ப்பலகை ஜொலிக்க, இங்கு மட்டும் பெயர்ப்பலகை தமிழில் இல்லை!.

   ஒருவேளை இந்தத் தீவின் பெயரை தமிழில் எழுதியிருந்தால்,"ஒரு காலத்தில எல்லாரும்........." அப்படீன்னு நம்ம ஆளுங்க கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு ஏதாவது கதை கட்டி விட்டுருப்பாங்க. அப்படியென்ன அதிசயத்தீவு..? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்....  

இதுதான் அந்தத்தீவு.
பயணம் செய்த .'.பெர்ரி...
கைக்கெட்டும் தூரத்தில் கப்பல்..

  சிங்கப்பூரைச் சுற்றியுள்ள குட்டித்தீவுகளில் இதுவும் ஓன்று.சென்னை தீவுத்திடல் அளவுக்குத்தான் இதன் பரப்பளவு இருக்கும்.வருடத்திற்கு இரண்டு முறையேனும் குடும்பத்துடன் இந்தத் தீவுக்குச் சென்று ரசித்து,சுற்றிப்பார்த்து வருவதுண்டு.சிங்கபூரிலிருந்து இந்தோனேசியாவிற்கு செல்லும் கடல் மார்க்கத்தில், சிங்கையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்தக் குட்டித்தீவு.தகதகக்கும் வெளிர்நீல கடல் நீருக்கு மத்தியில் வைரக்கல் பதித்தது போல் ஒரு குட்டி தேவதையாக எழுந்து நிற்கிறது இந்த அழகான தீவு.


  மெரீனாபயர் என்னுமிடத்திலிருந்து .'.பெர்ரியில் முக்கால் மணி நேரப்பயணம்.அந்தத் தீவைவிட .'.பெர்ரியில் பயணம் செய்வது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.கடல்நீரைக் கிழித்துக்கொண்டு கைக்கெட்டும் தூரத்தில் செல்லும் ராட்சத கப்பல்களுக்கிடையே பயணிக்கும்போது கொஞ்சம் திரில் கலந்த சிலிர்ப்பு.சிங்கப்பூர் என்ற 'குட்டிசொர்க்கத்தின்' புறஅழகை இந்தத்தீவுலிருந்து பார்க்கும்பொழுது அதன் பிரமாண்ட அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.ரயில்வண்டி போல் தொடர்ச்சியாகச் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் இன்னும் பிரமிப்பூட்டும்.



சரி...எதனால் இந்தத்தீவிற்கு இப்படியொரு பெயர்? இதற்கு வித்தியாசமான ஆச்சர்யம் கலந்த பின்னணி எதுவும் கிடையாது.எல்லாம் மொழிப் பிரச்சனைதான்.சீன மொழியில் ஆமையை இவ்வாறுதான் அழைப்பார்களாம். ஆமைத் தீவு என்பததைத் தான் இப்படி விளிக்கிறார்கள்.

   

  இந்தப்பெயரின் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்பொரு காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மலாய் மற்றும் சீன மீனவர்களை கடுமையான புயல் தாக்க,கடலில் தத்தளித்த அவர்களைக் காக்க மந்திர சக்தி கொண்ட ஒரு ராட்சத ஆமை தீவாக மாறி காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது (கதைக்கட்டுவதில் இந்தியர்களுக்கு சளைத்தவர்களல்ல சீனர்கள் என்பது உலகறிந்த விஷயம் ).அதன் காரணமாகத்தான் இந்தத் தீவிற்கு இப்படியொரு பெயராம்.

 சரி..இதனால் நான் என்ன சொல்லவருகிறேன்னு கேட்கிறீங்களா.? எதுவும் கிடையாது... நீங்கள் எப்போதாவது சிங்கப்பூர் வரும் வாய்ப்பு கிடைத்தால் இந்தத்தீவின் பெயரைப்பார்த்து,தயக்கப்பட்டு பார்க்காமல் போய் விடாதீர்கள் என்பதுதான் நான் சொல்ல வரும் செய்தி. 

போட்டோக்கள்..நான் 'கிளிக்'கியது......
************************************************************************************************************************************************
  புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் அரசுப்பேருந்து சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.மீண்டும் விபத்து ஏற்படாமலிருக்க, பல பொறியியல் வல்லுனர்கள் ராப்பகலா கண்விழித்து ஆராய்ந்து யோசித்ததில் இறுதியாக அவர்கள் மூளையில் உதித்த அதி அற்புத யோசனைதான் இது. இந்தக் கண்டுபிடிப்பை உலக அளவில் செயல்படுத்த வல்லுனர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாம். கண்டிப்பாக 2020 -ல் நம் இந்தியா வல்லரசாகிவிடும்.   




வணக்கங்களுடன்....
மணிமாறன்.


-----------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))))----------------------------------- 

Monday 20 August 2012

சின்னதிரைக் குழப்பமும் சிரிப்பு எம்ஜியாரும்

             நாம்  தமிழில் தொலைக்காட்சியைப்பற்றி எழுதும் போது 'சின்னத் திரை' என்று குறிப்பிடுவோம். ஆனால் இது தவறு.சின்னத்திரை என்று நடுவில் 'த்' போட்டு எழுதினால் small screen என்று பொருள் வராது.சின்னம் பொறிக்கப்பட்ட திரை (screen with an emblem) என்றுதான் பொருள்படும்.சின்ன(சிறிய), பெரிய ஆகிய வார்த்தைகளுக்குப் பின் ஒற்று மிகாது என்பதால் தான் சின்னதம்பி,பெரிய புராணம் என்று எழுதுகிறோம். அதேப்போல் தொலைக்காட்சியைச் 'சின்னதிரை'  என்றே எழுதவேண்டுமாம்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்...

சின்னக்கொடி/சின்னகொடி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.சின்னக்கொடி என்றால் சின்னமுள்ள கொடி.சின்ன கொடி என்றால் சிறிய கொடி.

" இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி
அது-பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி..



    கவிஞர் அ.மருதகாசி எழுதிய இப்பாடலில் வரும் 'சின்னக்கொடி' என்பது சின்னமுள்ள கொடியைக் குறிக்கிறது.ஆனால் சிறிய கொடி என்பதை நடுவில் 'க்' போடாமல் 'சின்ன கொடி' என்றுதான் எழுதவேண்டும். அதைப்போல 'சின்ன கலைவாணர்'  என்று எழுதுவதே சரி.'சின்னக் கலைவாணர்' என்றெழுதுவது பிழை.

************************************************************************************************************************************************
த்தியமா கீழே இருக்கிற இரண்டு படத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாதுனு சொன்னா நம்பவா போறீங்க?
************************************************************************************************************************************************

ப்போதிருக்கும் இசையமைப்பாளர்கள் "வாய்"ப்புகளை சரியாக பயன்படுத்துகிறார்கள் -நடிகர் பார்த்திபன்!! 

 # இப்படி குண்டக்க மண்டக்க பேசினா எப்படிண்ணே(அனிருத் மைன்ட் வாய்ஸ்)

னக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது.எனது பெற்றோர் என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள்.-அனிருத்

 #  இதுதான் அந்த நல்லமுறைனா... வேற வழியேயில்லை.ஒத்துக்குறோம்.

************************************************************************************************************************************************
 ரிலாக்ஸ் ......


  
சார்...டீ மாஸ்டர் டீ போடுறாரு...பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுறாரு... மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடுறாரு... நீங்க ஹெட்மாஸ்டர் தானே... நீங்க ஏன் சார் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?

************************************************************************************************************************************************
    ஒரு அலுவலகத்தில கறாரான  மேனேஜர் ஒருத்தர் இருந்தாரு.ஆபிசில் வேலை செய்பவர்கள் என்ன காரணம் சொல்லி யார் லீவு கேட்டாலும், " எனக்கு மட்டும் பிரச்சனையில்லையா..நான் ஆபிசுக்கு வரலியா " என்று சாதூர்யமாகப் பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்து விடுவார்.

தலைவலி என்று லீவு கேட்டால், "எனக்கும் தான் லேசாக தலைவலி, தைலம் தடவிண்டு ஆபிஸ் வரலையா? போய் வேலையைப் பார்...' என்பார்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை,ஆஸ்பத்திரியில் சேர்க்க லீவு கேட்டால், "என் அம்மாவுக்கும் முடியாமல் இருந்த போது, சீக்கிரமாக ஆஸ்பத்திரி சென்று,அட்மிட் செய்துவிட்டு,ஆபிஸ் வேலைக்கு வந்தும்,லீவு போடவில்லை; அதுபோல் செய். போ...' என்பார்.

மனைவிக்கு பிரசவ நேரம்,கூட இருக்கணும் என்று லீவு கேட்டால், "என் மனைவிக்கும் பிரசவ சமயம்,நான் லீவு போடாமல் அவளுக்கு உதவியாக இருந்து,ஆபிசுக்கும் வந்தேன்.அதுபோல பர்மிஷன் போட்டு சற்றுத் தாமதமாக வந்தால் போதும் லீவு கிடையாது, போ...' என்பார்.

இப்படியே யார் லீவு கேட்டாலும் தன்னைப்பற்றியே பேசி லீவு தராமல் வேலை பார்க்க வைத்துவிடுவார். ஆனால் ஒருத்தருக்கு மட்டும் கேட்ட உடனையே லீவு கொடுத்துட்டார் அந்த டேமேஜர்.

எல்லோரும் ஆவலுடன், "என்ன சொல்லி லீவு வாங்கின"-னு கேட்டாங்க..ஒரே ஒரு சின்ன பொய் சொன்னேன். அவ்வளவுதான் கொடுத்திட்டாருனு சொன்னான்..  

" என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போயிட்டான்.தேடி வர லீவு வேண்டும்..." -னு சொன்னேன்.அவரும் வழக்கம் போலவே, "என் பொண்டாட்டியை கூடத்தான் ...."-னு ஆரம்பிச்சவரு.. "அடச்சே...லீவு தாறேன்.போய்த் தொலை"-னு சொல்லிட்டாரு.  





வணக்கங்களுடன்....
மணிமாறன்.


************************************************************************************************************************************************

Friday 17 August 2012

ரஜினியை களங்கப்படுத்தும் வாரிசுகளும் தேசியக்கொடியை அசிங்கப்படுத்தும் அரசியல்வாதிகளும்.



   ரசியல் சாக்கடையில் கால் வைத்தாலே,தான் களங்கப்பட்டுவிடுவோமோ என்றஞ்சிதான் தன்னை வாழவைக்கும் தெய்வங்களாக நினைக்கும் கோடானுகோடி ரசிகர்களின் வேண்டுகோளையே புறந்தள்ளியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.அவர் கட்டிக்காத்ததை இன்று அவரின் வாரிசுகள் நடு வீதிக்கு கொண்டுவந்து நாறடிக்கின்றனர்.ஏற்கனவே இவரின் இளைய மகள் சௌந்தர்யா,சொந்தக்காலில் நின்று சொந்தப்படம் எடுக்கிறேன் என்று பைனான்சியரின் காலைப்பிடித்து எடுத்தப்படம் காலைவாரிவிட,கோர்ட் படியேறி கடைசியில் ரஜினியே சொந்தக்காசைப் போட்டு பிரச்னையை முடித்தார்.

   அடுத்து மூத்தமகள் ஐஸ்வர்யா தன் பங்குக்கு அப்பாவுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று ஒரு மொக்கைப் படம் எடுத்து,தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் ரஜினியின் இமேஜையே கெடுத்து, சுருதி மூலமாக தானும் சூடுவைத்துக் கொண்டார்.இப்போது அடுத்ததாக இன்னொரு குடும்ப வாரிசு.தான் இசையமைத்த கொலைவெறி பாடலைவிட ஏகத்துக்கும் ஹிட்டாகியிருக்கிறது,நெட்டில் வெளியான இவரது ஹாட் ஸ்டில்.தம்பிக்கு 'வாய்ஸ்டெஸ்ட்'-னா என்னவென்று யாரும் சரியா சொல்லிக் கொடுக்கவில்லை போல.இதில் இன்னொரு கொடுமை,இவரின் கொலைவெறி பாடல் ஹிட்டான போது இவரின் பின்புலத்தை கண்டுகொள்ளாத ஊடகங்கள் தற்போது இவர்,ரஜினியின் மச்சான் ரவிராகவேந்திராவின் மகன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.


 
  
சினிமா அகராதியில நல்ல ஆத்மா/நல்ல உறவு என்பதற்கு இப்படித்தான் அர்த்தம் கொள்ளனும் போல....

************************************************************************************************************************************************
  
தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றும் அரசியல்வாதிகள்.


  ஒவ்வொரு சுதந்திரதினத்திற்கும் மறுநாள் இப்படியொரு செய்தி கண்டிப்பாக பத்திரிகைகளில் வெளிவரும்."தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அதிகாரிகள்".இந்த வருடமும் வந்திருக்கிறது.அதுவும் வேலூர் மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் அவர்கள் இப்படியொரு வரலாற்று சிறப்புவாய்ந்த செயலைச்செய்து நம் தேசத்திற்கும்,தேசியக்கொடிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

    இது தேசிய அளவில் அவ்வப்போது நிகழ்ந்தாலும் தமிழ் நாட்டில் நடப்பதற்கு முக்கியக் காரணம் கட்சிக்கொடிகள்தான்.தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகளின் கொடிகள் எல்லாவற்றிலும் கீழே சிவப்பு வர்ணம் இருக்கும்.இதனால் ஏற்பட்ட குழப்பமாகக் கூட இருக்கலாம்.இதில் கேப்டன் மட்டும் விதிவிலக்கு (தலைகீழா இருக்கிறத வச்சிப் பார்த்தா..ஒருவேளை .'.புல் மப்புல இருந்தபோது கொடியை தயாரித்திருப்பாரோ..).ஆனால் இதுவரை எவரும் கட்சிக்கொடிகளை தலைகீழாக ஏற்றியதாக வரலாறு கிடையாது என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயம்.



  நம் தேசியக்கொடியில் மூன்று வர்ணங்களும் மூன்று சமயங்களை அடையாளப்படுத்துகிறது என்று சொல்வார்கள்.சரி..இதில் எந்த வர்ணம் கீழே எது மேலே என்பதை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

 பள்ளிப் பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் ஒரு விளக்கம் சொல்வார். நாற்பதுகளில்,தென்னிந்தியாவில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியைக் குறிக்க கீழே பச்சை நிறமும்,வட இந்தியப்பகுதியில் 'ஜாலியன்வாலாபாக்' போன்ற படுகொலைகளால் சிந்திய ரத்தத்தை குறிக்கும் விதமாக சிவப்பு(காவி) மேலேயும்,பாரதமாதாவின் வெள்ளை உள்ளத்தை குறிக்கும் விதமாக மத்தியில் வெள்ளை நிறமும் இருப்பதாகக் கூறினார்.இதுதான் சரியான விளக்கமா என்பது தெரியவில்லை.உங்களுக்கு வேறு விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

 ஏதோ ஒரு படத்தில் நம்ம ஊரு 'மீல்ஸ்'-ஐ வைத்து சத்யராஜ் ஒரு விளக்கம் சொன்னதாக ஞாபகம். அதைத்தவிர்த்து வேற ஏதாவது இருக்கிறதா?

************************************************************************************************************************************************
 ரிலாக்ஸ்....


 உலக மகா தத்துவம்ஸ்....

என்னதான் கிளி கீ.கீ..கத்தினாலும், அதால ஒரு பூட்டைக்கூட திறக்க முடியாது..

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும், அதால அவிச்ச முட்டை போடமுடியாது.

ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு.

பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம்.ஆனா கண்ணு வலின்னா கண்ணைப்புடுங்க முடியுமா? இல்ல தலை வலினா தலையைத்தான் புடுங்க முடியுமா?

நைட்ல கொசு கடிச்சா 'குட்நைட்' வைக்கலாம்.காலையில கொசு கடிச்சா 'குட்மார்னிங்' வைக்க முடியுமா?


 ---------------------------------------- X ---------------
 

நெப்போலியன்: என்னுடைய அகராதியில 'முடியாது' என்கிற வார்த்தையே கிடையாது.

சர்தார்ஜி: இப்ப சொல்லி என்ன பிரயோசனம்.அதுக்குதான் வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்கணும்.






வணக்கங்களுடன்....
மணிமாறன்.
--------------------------------------------------------------------(((((((((((((((((((((())))))))))))))))))))-------------------------------------------

Saturday 11 August 2012

இன்போசிஸ் பெண் ஊழியர் கொலையா? அவிழும் முடிச்சுகளும் திடுக்கிடும் பின்னணியும்.


   கடந்த வாரம் ஹைதராபாத்-ல் உள்ள இன்போசிஸ் கம்பெனியின் கார் பார்க்கில்,அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.பத்திரிகைகளில் இப்படித்தான் செய்தி வெளியாகியிருந்தது.இது நடந்தது ஜூலை 31 ஆம் தேதி இரவு.இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் அடுத்தடுத்து வெளிவர,ஒட்டுமொத்த ஆந்திராவே பரப்பரப்பானது.தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களிடையே இந்தச்செய்தி காட்டுத்தீயாய் பரவ அவர்களுக்கும் கலவரம் தொற்றிக்கொண்டது. ஆந்திரா ஊடகங்கள் அனைத்திலும் கடந்தவாரம் இந்த செய்திதான் நிரம்பி வழிந்தது.நம்பமுடியாத பல திருப்பங்களுடன் சென்ற இந்த வழக்கு தற்போதுதான் இறுதி நிலையை எட்டியுள்ளது.

     அந்தப் பெண்ணைப்பற்றி சிறிய அறிமுகம்.பெயர்
நீலிமா.தற்போது 27 வயதை தொட்டிருக்கும் இவர் 2006-ல் இன்போசிசில் வேலைக்கு சேர்ந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ரெட்டி என்பவரை 2009-ல் திருமணம் செய்தார்.இவர் ஹைதராபாத்-ல் செல்போன் கம்பெனி ஒன்றின் டீலர் ஆக இருக்கிறார். இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. 


      நீலிமா அதிபுத்திசாலி.B.E கம்ப்யுடர் சயன்ஸ் படித்து,பின் M.E முடித்தவர்.மிக தைரியசாலியும் கூட. குறுகிய காலத்திலேயே கம்பெனியில் உயர் பதவிக்கு வந்தவர்.யு.எஸ்-க்கு வேலைக்குச் சென்ற சில மாதங்களிலே ப்ராஜக்ட் டீம் லீடாக பதவி உயர்வுபெறும் அளவுக்கு திறமையானவர்.யு.எஸ்-ல் தனியாக .'.பிளாட் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.அவரைப்பற்றி அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் நல்லவிதமாகவே சொல்கிறார்கள். 

     தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி கம்பெனி ப்
ராஜக்ட் தொடர்பாக வெளிநாடுகள் சென்று பணிபுரிய பணிக்கப்படுவது வழக்கம்.ஆண் பெண் என்ற பேதமில்லாமல் யு.எஸ், சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ அந்தந்த ப்ராஜக்ட்-க்கு ஏற்ற மாதிரி கம்பெனிகளால் அனுப்பிவைக்கப்படுவர்.கொஞ்சம் சிரமம் என்றாலும் இரட்டைச் சம்பளத்திற்காக மறுப்பேதும் சொல்லாமல் இதை எற்றுக்கொள்பவர்களே மிக அதிகம்.அப்படித்தான் நீலீமாவும் கடந்த வருடம்(2011) அமெரிக்க சென்றிருக்கிறார்.கணவரும்,குழந்தைகளும் ஹைதராபாத்தில் இருக்க இவர் மட்டும் அமெரிக்காவில் உள்ள .'.புளோரிடாவில் ஓராண்டுக்கு மேல் தனியாக வசித்திருக்கிறார்.கடந்த ஜூலை 22ஆம் தேதி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் நீலிமா.கணவரையும் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு செல்வதற்காக வரும்போதே ரிடர்ன் டிக்கெட்-ம்  சேர்த்துதான் எடுத்து வந்திருக்கிறார்.ஆகஸ்ட் 17ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

        சம்பவத்தை வைத்து இது கொலைதான் என்று ஓரளவு கணித்த போலீஸ்,விசாரணையை முதலில் இன்போசிஸ் ஊழியர்களிடமிருந்து தொடங்கியது.இவர் கீழே விழுந்து இறந்ததாக சொல்லப்படும் அந்த நேரத்தில் கார்பார்க்கில் காரை நிறுத்த வந்த மூன்று ஊழியர்களை கைது செய்து விசாரித்தது. அவர்களிடமிருந்து உபயோகமான எந்தத் தகவலும் கிடைக்காததால் அடுத்து நீலீமா விழுந்து கிடந்ததை முதலில் பார்த்த செக்யுரிடியிடம் விசாரணை செய்தார்கள்.நீலிமா விழுந்த சத்தம் தனக்கு கேட்டதாகவும் உடனே சென்று பார்க்கையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என அந்த செக்யுரிட்டி தெரிவித்தார்.மேலும் அவர் விழுந்ததாக சொல்லப்படும் அந்த மல்டி ஸ்டோரி கார் பார்க்கை சோதனையிட்டபோது, பத்தாவது மாடியில் நீலிமாவின் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.அதேவேளையில் அவரில் ஒரு செருப்பு ஏழாவது மாடியில் கிடந்திருக்கிறது.அப்படிஎன்றால் அவரை யாரோ பத்தாவது மாடியிலிருந்து துரத்தி வந்து ஏழாவது மாடியில் வைத்து தள்ளிவிட்டிருக்க வேண்டும்.ஆரம்பகட்டத்தில் போலீசின் ஊர்ஜிதம் இப்படித்தான் இருந்தது.

     போலிசுக்கு கிடைத்த முதல் துப்பு அந்தக் கம்பெனியில் பொருத்தப் பட்டிருக்கும் CCTV கேமராவில் பதிவான காட்சிகள்தான்.அதில் பதிவாகியிருந்த விடியோவப் பார்த்த போது,அதில் நீலிமா கம்பெனி ஐடியை நுழை வாயிலில் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருந்தது.அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்.பின்பு ஆபிசில் ஒருமணி நேரம் இருந்து விட்டு அங்கிருந்து வெளியியிருக்கிறார்.போலிசை குழப்பிய இன்னொரு விஷயம்,அவர் அன்று காரில் வரவில்லை.பிறகு எதற்காக கார் பார்க்கின் பத்தாவது மாடிக்கு செல்ல வேண்டும்? 


                                         (நீலிமா ஆபிசுக்குள் நுழையும்/வெளியேறும் காட்சி...)
     

   இதற்கிடையில், 'நீலிமா இறந்தது இரவு 10.30மணி.ஆனால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதிகாலை 3 மணிக்குதான்.அப்படியென்றால் இடைப்பட்டக் காலத்தில் என்ன நடந்தது.? சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் 10.30 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் அவரின் கணவர் சுரேஷுடன் செல்போனில் தொடர்பு கொண்டு,இன்று இரவு அம்மா வீட்டிற்கு செல்கிறேன்.காலையில் வந்து அழைத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கெல்லாம் அவள் பலவீனமானவள் அல்ல. அவரை இன்போசிஸ் கம்பெனி ஊழியர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள்' என நீலீமா தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட,விவகாரம் பெரிதாகி வழக்கு சூடு பிடித்தது.விசாரணை இன்னும் முடிக்கிவிடப்பட மர்ம முடிச்சுகள் மெதுவாக அவிழத்தொடங்கின.

                                                     (ஆரம்பக்கட்ட பரபரப்பு...)
     
    அடுத்து நீலீமாவின் செல்போனை ஆராய்ந்த போலிசுக்கு மீண்டும் பின்னடைவு.அதில் உள்ள போன் நம்பர்கள் உட்பட அனைத்து தகவல்களும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்தது.தொடர்பு கொள்ள நம்பர் இல்லாததால் தான் இன்போசிஸ் ஊழியர்களால் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க தாமதமாயிற்று என தெரியவந்திருக்கிறது.நீலிமா எதற்கு போன் நம்பர்களை அழிக்க வேண்டும்? அல்லது வேறு யாரவது அழித்திருப்பர்களா?.

   இதிலிருந்துதான் வழக்கு வேறு ஒரு கோணத்தில் செல்ல ஆரம்பித்தது.அடுத்து விரைவாக செயல்பட்ட போலீசார்
நீலிமாவின் செல்போனிலிருந்து எந்தந்த நம்பருக்கு அழைப்பு சென்றிருக்கிறது என்ற தகவலை(CDR) திரட்டினர்.அதில்தான் இந்த வழக்குக்கான மொத்த முடிச்சும் இருந்தது.கடைசியாக நீலீமா பேசியது அவரின் கணவருடன்தான் என்று இதுவரை போலிஸ் நம்பியிருந்தது.ஆனால் அவருடன் போனைத்துண்டித்த அடுத்த நிமிடமே நீலிமாவின் செல்போனுக்கு மும்பையிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.அதுதான் நீலிமா பேசிய கடைசி நம்பர்.நீலிமா பேசிமுடித்த அடுத்த சில நொடிகளில் நீலிமா செல்போனிலிருந்து அந்த நம்பருக்கு ஒரு மெசேஜ் போயிருக்கிறது.இது கிட்டத்தட்ட இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு.அதுதான் இந்த வழக்கின் போக்கையே மாற்றிய முக்கிய தடயம்.நீலிமா அந்த மும்பை நம்பருக்கு கடைசியாக அனுப்பின மெசேஜ் இது தான் ." I want to be a good wife to you in my next birth ”
     
  உடனடியாக அந்த நம்பரின் விபரங்களை திரட்ட ஆரம்பித்தது போலிஸ்.அது மும்பையில் இருக்கும் பிரஷாந்த் என்பவரின் போன் நம்பர்.ஆக,இந்த வழக்கின் மையப்புள்ளியே பிரசாந்த் தான் என முடிவுக்கு வந்தது போலிஸ். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள இவரது நண்பர்களிடமும் தனியாக விசாரணை நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்து இவர்களுக்கு மற்றொரு தகவல் ஓன்று கிடைத்தது.இவர் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட விளம்பரம்  செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.அப்படியானால் இவர் திரும்பவும் அமெரிக்க செல்வதற்கான திட்டம் இவரிடம் இல்லை என்று தெரியவர,போலிசுக்கு நீலிமா மீதிருந்த சந்தேகம் வலுத்தது.

   பிரசாந்தைப்பற்றி நீலிமாவின் கணவர் சுரேஷ் ரெட்டியிடம் விசாரித்தபோது,தான் நீலிமாவின் பிறந்தநாள் பார்டியில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றிருந்ததாகவும்,நிறைய நண்பர்களை நீலிமா அறிமுகம் செய்துவைத்தபோது அதில் பிரசாந்தும் இருந்தான் எனவும் மற்றவர்களைப் போல் ஒரு சாதாரண நண்பன்தான் என தெரிவித்தார்.பிரசந்தைப்பற்றி மற்ற தகவல்களை சேகரித்த போலிசுக்கு,பிரசாந்தும் நீலிமாவும் முன்பு இன்போசிசில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் பிறகு பிரசாந்த் CTS க்கு சென்று விட்டதாகவும், நீலிமாவைப்போல் பிரசாந்தும் கம்பெனி ப்ராஜக்டுக்காக அமெரிக்க சென்றதாகவும் தகவல் கிடைத்தது. 

 அடுத்து அதிரடியாக களமிறங்கிய போலீஸ்டீம் நீலிமாவின் EMAIL,FACEBOOK -ஐ திறந்துப் பார்க்க முடிவு செய்தது.அதன் பாஸ்வேர்ட் இல்லாததால் சில தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் திறக்கப்பட,அதில் கிடைத்த தகவல்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது.அவரின் ஈமெயில் முழுவதும் பிரசாந்துக்கு அனுப்பிய மெசேஜ்-ஆல் நிரம்பி வழிந்தது.அவற்றைத் திறந்து படித்தபோதுதான் நீலிமாவுக்கும் பிரசாந்துக்கும் இடையே தனி 'லவ் டிராக்' இருந்தது போலிசுக்கு தெரிய வந்தது.சமீபத்திய மெயில்களை திறந்து படித்தபோதுதான் மற்றொரு அதிர்ச்சியும் இருந்தது.அதில் அவர்  தற்கொலை செய்துகொள்ளும் முடிவை சில நாட்களுக்கு முன்பே எடுத்து அதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பது ஈமெயில் மூலமாக நிரூபணமானது.பிரசாந்துக்கு அனுப்பிய கடைசி மெயிலில் 'அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம்' என்று எழுதியிருக்கிறார். 

கடைசி நேரத்தில் நீலிமாவுக்கும்,பிரசாந்துக்குமிடையேயான ஈமெயில் பரிமாற்றம்...

  இதன் கடைசி திருப்பமாக,இந்தப்பிரச்சனையில் பிசியாக இருந்த சுரேஷ் ரெட்டி,மூன்று நாள் கழித்துதான் அவரின் ஈமெயில்-ஐ எதோச்சையாக திறந்து பார்த்திருக்கிறார்.அதில்,நீலிமா தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு  முன் அனுப்பிய ஈமெயில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி திறந்து படித்திருக்கிறார். அதில்தான் நீலிமாவின் "திட்டமிட்ட தற்கொலை"க்கான முழு ஆதாரம் சிக்கியது.அந்த ஈமெயிலில் தனது கடைசி ஆசையாக,தான் இறந்த பிறகு தன் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் மேலும் பி.'.எப், இன்சுரன்ஸ்-லிருந்து வரும் பணம் யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்,தன்னிடம் உள்ள நகைகள் யாருக்கு போய் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை பாக்கி $500,பிரசாந்திடம் வாங்கிய கடன் $4000 அனைத்தையும் செட்டில் செய்ய வேண்டும் எனவும் தெளிவாக குறிப்பிட்டிருந்திருக்கிறார். கடைசியில்,தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும்,தனக்காக யாரும் வருந்த வேண்டாம் என்றும் இந்த வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டதாகவும் இந்த வாழ்க்கையை தொடர தனக்கு விருப்பமில்லை,என முடித்திருக்கிறார். 


   நீலிமா கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள்.கொலையாளியை விரைந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று தெருவில் இறங்கி போராடாத குறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த நீலிமா குடும்ப உறுப்பினர்கள் தற்போது இது தற்கொலைதான்,இந்த வழக்கை இனிமேல் தொடரக்கூடாது,உடனே நிறுத்த வேண்டும் என காவல்துறையினரிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு நிறைவுப்பகுதிக்கு வந்தாலும் இன்னும் விடை தெரியாத மர்மங்கள் சில உள்ளன.

நீலிமா,தற்கொலைக்காக தன் ஆபிசை அதுவும் கார் பார்க்கை ஏன் தேர்ந்தெடுத்தார்.....?

சுரேஷ்-ம் நீலிமாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நீலிமாவுக்கு இன்னொருவருடன் அதுவும் திருமணம் நடந்து ஐந்தே வருடத்தில் 'லவ் அ.'.பயர்' வருமளவுக்கு கணவன் மனைவி இடையே என்னப் பிரச்சனை?

இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் ஒரு தாய்,தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்லவைத்தது எது?

தற்கொலை என்பது திடீரென்று எடுக்கும் முட்டாள் தனமான முடிவு.ஆனால் பல நாட்களாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால் இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்ற மனைவியின் மனநிலையை,ஒரு கணவனால் புரிந்து கொள்ள முடியாமலா இருக்கும்?

 இது போன்ற கேள்விகளெல்லாம் நீலிமாவோடு சேர்ந்து எரிந்து சாம்பலா
கிவிடும்.ஆனால் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

   பெண்களை வெறும் போதை பொருளாகப் பார்த்த ஆண் வர்க்கம்,தற்போது பணம் அடிக்கும் இயந்திரமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.இந்தத் தற்கொலை,கள்ளக்காதல் கைகூடவில்லை என்ற விரக்தியில் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அலசிவிட முடியாது.வெறும் 26 வயதே நிரம்பிய ஒரு பெண்,தன் ஆசையான இரு குழந்தைகளையும் பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழும் அளவுக்கு அவளின் மனநிலை மாற்றப்பட்டிருக்கிறது.அதன் மூலம் கடுமையான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கலாம்.அதற்கு மருந்தாக பிரஷாந்தின் ஆறுதலான வார்த்தைகள் இருந்திருக்கலாம்.

  பொதுவாகவே I.T துறையில் வேலை என்பது  ஒரு  'மெண்டல் ஸ்ட்ரெஸ்' உள்ள வேலைதான்.இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே.நேரம் காலமில்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் வேறு.பெரும்பாலும் இந்தத்துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே நிறைய 'கம்மிட்மெண்ட்ஸ்'. வீட்டு லோன்,கார் லோன்,இன்ஸ்யுரன்ஸ் என்று வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலே கடன்காரியாக்கபடுகிறார்கள்.இதற்காகவே திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு
க் கட்டாயம் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்.இதில் வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி வேலை செய்பவர்களுக்கு பிரச்சனை குறைவுதான்.ஆனால் 'ஆன்-சைட் ஒர்க்' என்ற பெயரில் கிளைன்ட் இடத்திற்கே சென்று ஒருவருடம்/இரண்டு வருடம்  ஒப்பந்தம் அடிப்படையில் வேலைபார்க்கும் சூழ்நிலையில்தான் இதுபோன்ற பிரச்சனை வருகிறது.இது மாதிரி சூழ்நிலையில் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல்,தன் குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் என்கிற அக்கறை மனப்பான்மையோடு, இது போன்ற வாய்ப்புகளை பெண்கள் தவிர்த்து விடுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும்.      

 
  -------------------------------------------------------X----------------------------------------



வணக்கங்களுடன்....
மணிமாறன்.

      


  

Thursday 9 August 2012

புதுவை பவர் ஸ்டாரும், ஈமு போட்ட கூமுட்டையும்.....



 புதுவையின்  பவர் ஸ்டார் 

  அறிவியலின் அபார வளர்ச்சி,நம் அண்டத்தை அழிவுப்பாதையை நோக்கி நகர்த்துகிறது என்பதற்கு உதாரணமாக ஒட்டுமொத்த உலகமும் ஒருசேர கைகாட்டும் அணுகுண்டுக்கு அடுத்த இடத்தில் தற்போது போட்டோஷாப்...!. புதுவை முதல்வரின் பிறந்தநாளுக்கு அடித்த பேனர் தான் இது.இதைப்பார்த்து எந்தனை பேர் நாண்டுகிட்டு செத்துப்போனாங்களோ...!?.சத்தமில்லாமல் ஒரு பவர்ஸ்டார் உருவாகுகிறார்...!!!

  புதுவை வீரன் எ(ரெ)ங்கசாமி...


************************************************************************************************************************************************

ஈமு போட்ட கூமுட்டை....

      நடுத்தர வர்க்கத்தினரின் பண நெருக்கடியை மையமாக வைத்து,அவர்களின் பணப்பேராசையை பகடைக்காயாக்கி,புற்றீசல் போல அவ்வப்போது கிளம்பும் நிதிநிறுவன சேமிப்புதிட்டம்,தீபாவளி.'.பண்ட், தங்கக்காசு திட்டம் போன்ற ஏமாற்று திட்டங்களின் வரிசையில் அடுத்ததாக இணைந்திருக்கிறது ஈமு கோழி வளர்ப்பு திட்டம்.
    ஆனால் தற்போது இவர்கள் கைவைத்திருப்பது ஏழை விவசாயிகளின் அடி மடியில்.அன்றாட உணவிற்கே அல்லோலப்படும் ஏழை மக்களிடம் ஆசையைக் காட்டி,இறுதியில் நற்றாற்றில் தவிக்கவிட்டுத் தலைமறைவாகி விட்டனர் இந்த நிறுவன ஊழியர்கள்.




    இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது.இது போன்ற பணம் திண்ணும் கழுகுகளின் பித்தலாட்டத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் பிரபலப்படுத்த இவர்கள் கையாளும் சூத்திரம் சுவாரஸ்யமானது. வெறுமனே ஊடகங்களில் விளம்பரப்படுத்தினால் மக்களிடம் சரியாக சென்றடையாது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் இந்த முதலைகளுக்கு,சினிமா மோகம் என்ற பலவீனத்தை வைத்தே தமிழ் பாமர மக்களை நம்பவைத்து விடலாம் என்ற சூட்சமும் நன்றாவே தெரிந்திருக்கிறது.

      திரையில் உத்தமனாக நடித்து,தத்துவார்த்தமாக பேசி கைதட்டல் வாங்கும் பிரபல நடிகர்கள் விளம்பரம் செய்வது,கிட்டத்தட்ட சிபாரிசுக்கு சமமென்று நம்பும் பாமர மக்களும் இவர்களின் பசப்பு வார்தைகளை நம்பி முதலீடு செய்கிறார்கள்.அப்படியானால் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த இந்த
த் திரை நட்சத்திரங்கள் தானே முதல் குற்றவாளிகள்.ஈமு கோழி போட்ட இந்த கூமுட்டைகளுக்கு என்ன தண்டனை? 

"கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்".. இது ஈமு கோழி நிறுவனங்கள் சொல்லும் தாரக மந்திரம். "மு‌ட்டை‌யி‌ல் இரு‌ந்து கோ‌ழி வ‌ந்‌திரு‌க்கலா‌ம் ஆனா‌ ஈமு கோ‌ழி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் இலாப‌ம் வ‌ந்தது.." ''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' '‌கோ‌ழினா ஈமு பே‌பினா இலாப‌ம்' இப்படியெல்லாம் வாய்கூசாமல் அள்ளிவிடுவது நம்ம திரை நட்சத்திரங்கள் தான்.இதில் நடிகர் சங்கத்தலைவரும் சமக அகில அண்டத்தலைவருமான சரத்குமார் அவர்களும் உள்ளடக்கம் என்பதுதான் மிகப்பெரிய வெட்கக்கேடு.

   கோல்ட் குவிஸ்ட் தங்கக்காசு திட்டத்தில் தமிழகத்தின் உயரிய கலைக்குடும்பத்திலிருந்து வந்த அந்த வாரிசு நடிகரை வைத்து தானே விளம்பரப்படுத்தப்பட்டது.மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து துவங்கப்பட்ட அந்தத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சுருட்டிய அந்த நிறுவனம் மீண்டும் தற்போது அதன் சேவையை துவக்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி கூட வெளியாகியிருந்தது.அந்த நடிகரோ, அடுத்ததாக புரட்சி போராட்டத்தில் பங்கெடுத்த கையோடு,ஈமு திட்டத்திலும் தன் சேவையை செவ்வனே செய்திருக்கிறார்.
 
   மக்கள் போடும் பிச்சைக்காசில் சொகுசாக வாழும் திரை நட்ச்சத்திரங்கள்,வரம் கொடுத்தவர்களின் தலையிலே கை வைப்பதுபோல் அவர்களின் கழுத்தை நெரிக்க
த் துணைபோவது எப்படி நியாயமாகும்? இந்த விசயத்தில் தண்டிக்கப்படவேண்டிய முதல் குற்றவாளிகள் இவர்களல்லவா? 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...
       வழக்கமாக,கவுண்டர் எல்லா படங்களிலுமே செந்திலை ஐந்தறிவு மிருகங்களுடன் சம்மந்தப்படுத்தி கெட்ட கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து நம்மை மகிழ்விப்பார்.ஆனால் சில நேரங்களில் கவுண்டருக்கே கவுண்டர் டயலாக் அடித்து அதை ஒட்டு மொத்தமாக காலி செய்து விடுவார் செந்தில். சமீபத்தில் ரசித்த அப்படியொரு காட்சி....
செந்தில்: ஏண்ணே...இந்த மெக்கானிக்கல் வேலை எப்படிண்ணே கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: ஹே...ஹே...ஹே... அடேய்... அதுக்கெல்லாம் மூளை வேணும்டா...
செந்தில்: அதான்...நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க...?
கவுண்டர்: !?!?!?!?...டேய்...என்னயென்ன சாதாரண ஆளுன்னு நெனைச்சியா... எனக்கு ஒடம்பு  பூரா மூளைடா..
செந்தில்:  ஒடம்பு  பூரா இருந்தா அதுக்கு பேரு மூளை இல்லண்ணே ..கொழுப்பு...
************************************************************************************************************************************************

  ஒருத்தன், 15 வது  மாடியில் இருக்கும் அவன் வீட்டு பால்கனியில் நின்னுகிட்டு வடை சாப்பிட்டு கிட்டு இருந்தான்.அப்போ கீழே வேகமா வந்த ஒருத்தன் "கைலாஷ்..உன் பொண்ணு பிரியா கார் ஓட்டிகிட்டு போகும்போது லாரி மோதி செத்து போயிடுச்சிடா.."என்று கத்தினான்.இதைக் கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சியாகி என்ன செய்றதுன்னு தெரியாம 15 வது மாடியிலிருந்து கீழே குதிச்சிட்டான்.

12வது மாடி வரும்போதுதான் அவனுக்கு யோசனை வந்திச்சி."ச்சே...நம்ம கிட்டதான் கார் எதுவும் கிடையாதே..."

10 வது மாடியை தாண்டும் போதுதான் அவனுக்கு தோணிச்சி.."ச்சே...நம்ம பொண்ணு பேரு பிரியா கிடையாதே..."

8  வது மாடியை நெருங்கும் போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்திச்சி.." அடடா..நமக்கு பொண்ணே கிடையாதே.."

6  வது மாடிகிட்ட வரும்போதுதான் அவனுக்கு கொஞ்சம் புரிந்தது "நமக்குதான் இன்னும் கல்யாணமே ஆகலியே.."

4  வது மாடிய நெருங்கும்போதுதான் தெளிவா புரிஞ்சது...."ஐய்யயோ...என் பேரு கைலாஷ் இல்லையே.."

விதி வலியது..!!! வடை போச்சே...!!!


  -------------------------------------------------------X----------------------------------------


வணக்கங்களுடன்....
மணிமாறன்.

************************************************************************************************************************************************