Saturday 30 November 2013

ஜன்னல் ஓரம் ...




2012-ல் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆர்டினரி(Ordinary) படத்தை, ஜன்னலோரம் நின்று, பட்டும் படாமல் பார்த்துவிட்டு, தமிழில் முயற்சித்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஆர்டினரி படத்தின் ஜீவனே கதையோடு பயணிக்கும் நகைச்சுவைதான். அதில் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டு உப்பு சப்பில்லாத வெகு ஆர்டினரி படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

ஆர்டினரி கதைதான்.  பார்த்திபனும், விமலும் முறையே அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள். இவர்கள் தங்கியிருக்கும் பண்ணைக்காடு என்கிற கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேசின் மகளுக்கும்( மனிஷா யாதவ் ), விமலுக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.இது ஒருபுறமிருக்க, தன் நண்பனின் மகளை(பூர்ணா)த் தத்தெடுத்து வளர்த்து வரும் ராஜேஷ், அவரையே தன் மகனுக்கு மனம் முடிக்க எண்ணுகிறார்.

சூரத்தில் வேலைபார்க்கும் ராஜேசின் மகன்,திருமணத்திற்காக பண்ணைக்காட்டிற்கு வரும்பொழுது பார்த்திபன் & விமல் ஓட்டிவரும் பேருந்தில் அடிபட்டு இறந்துவிடுகிறார். துரதிஷ்டவசமாக அந்த பேருந்தை இயக்கிய 'நடத்துனர்' விமல் மீது கொலைப்பழி விழுந்து சிறைக்கு செல்கிறார். ஆனால் ராஜேசின் மகனை விமல் பேருந்து ஏற்றி கொல்லவில்லை என்பது பிற்பாடு தெரியவர,அவரை உண்மையிலேயே கொன்றது யார்..? எதற்காக கொன்றார் ..? என்பதற்கான பதில்தான் இறுதியில் சொல்லப்படும் ஒரேயொரு டிவிஸ்ட் .

அழுத்தமான கதையில்லைதான்.  வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே மலையாளத்தில் கல்லா கட்டியிருக்க வேண்டும். அதையே தமிழில் எடுக்கும்பொழுது நகைச்சுவைக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா...?.  ஒரு இடத்தில்கூட சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை இயக்குனர். திரைக்கதை -யிலும் எந்த சிரத்தையும் எடுத்தமாதிரி தெரியவில்லை. `வசனங்களிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பார்த்திபன்,விமல், விதார்த், ரமணா, யுவராணி, ராஜேஷ், சிங்கம் புலி, சந்தானபாரதி என பெரிய பட்டாளமே இருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்தாது பெரும் குறை. அதிலும் பார்த்திபனுக்கு ஹீரோவுக்கு இணையான பாத்திரப்படைப்பிருந்தும் அவரது அக்மார்க் நக்கல் பெரிதாக இல்லை. படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது அந்த அரசுப்பேருந்து. அக்கிராமத்திற்கு வரும் ஒரே பேருந்து என்பதால் அது அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம். அதற்காக சில கேரக்டர்கள் தொடர்ந்து அதே பஸ்ஸில் பயணிப்பதாகக் காட்டுகிறார்களே..அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா...? குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி.

பூர்ணாவை மைனா ரேஞ்சுக்கு காதலிப்பதாக விதார்த் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரைக் கொல்ல மனமில்லாமல்தான் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். அப்படியிருக்க, ஒரு காட்சியில் பூர்ணா சேலை மாற்றும்பொழுது ஜன்னல் வழியாக அவருக்குத் தெரியாமல் காமப் பார்வையோடு ரசிப்பது ஏன்..?

ராஜேசின் மகனை தாங்கள்தான் பேருந்தை ஏற்றி கொன்றுவிட்டதாக நினைக்கும் பார்த்திபனும் விமலும் அவரது 'பேக்'கை இவ்வளவு அலட்சியமாகவா வீட்டில் வைத்திருப்பார்கள்....?


பூர்ணாவை குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுத்து ராஜேஷ் வளர்ப்பதாக சொல்கிறார்கள். ராஜேசின் மகன், மகளோடு சிறு வயதிலிருந்தே உடன்பிறந்தவள் போலவே வளர்பவள் எப்படி ராஜேசின் மகனோடு காதல் கொண்டார்..? அதிலும் ராஜேசின் மகன் ஊருக்குக் கிளம்பும்போது பூர்ணாவோடு காதலில் ததும்பி வழிந்து கொஞ்சும் காட்சி ஓவராகத் தெரியவில்லையா...?

இடையில் வெள்ளைகார தம்பதி ஒன்று வருகிறது( ஒரிஜினலிலும் வருகிறார்கள்). எதற்காக வந்தார்கள்... பிறகு எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

விமல் தன் காதலை தெரியப்படுத்த,பத்து ரூபாய் நோட்டில் 'சம்மதமா' என்று எழுதி மனிஷா யாதவிடம் கொடுப்பார். அவரும் அடுத்தக் காட்சியிலேயே நேரடியாகவே 'சம்மதம்' என்று சொல்வார். ஆனால் இரண்டு காட்சிகள் கழித்து விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். என்னய்யா இது..?

ஒன்று, படம் நகைச்சுவையாக நகர வேண்டும், அல்லது சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக செல்லவேண்டும். இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதுபோல குறைபாடுகள், இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் கெடுத்துவிடுகிறது.

இவர்களின் பேருந்து பழுதடைந்துவிட, அதை சரிபார்க்கும் மெக்கானிக்காக சந்தானபாரதி வருகிறார். டூல் பாக்சை திறக்கிறார். உள்ளே குவார்ட்டரும், சைடு டிஷும். உடன் வந்த உதவியாளரை பேருந்தை சரிசெய்ய சொல்லிவிட்டு பார்த்திபனும் அவரும் நடு ரோட்டில் தண்ணியடிக்கிறார்கள். இது காமெடி சீனாம் .இதற்கு சிரிக்கவேண்டுமாம்... போங்க சார்...

படத்தில் ஆறுதலான சில விசயங்களில் பாடல்களும் ஒன்று. கரு பழனியப்பன்-வித்யாசாகர் கூட்டணி மீண்டும் கலக்கியிருக்கிறது. எல்லாப் பாடல்களும் முதல்முறைக் கேட்கும்பொழுதே ரசிக்க வைக்கிறது.

'பார்த்திபன் கனவு' கொடுத்த கரு. பழனியப்பனின் படைப்பா இது..? மனுஷ்ய புத்திரனை தொலைக்காட்சி விவாதமொன்றில் முதன்முதலில் திணறடித்து, புரட்டியெடுத்த அந்த கரு.பழனியப்பனா இவர்..?  என்னவோ போங்க சார்..!



Friday 29 November 2013

தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் சங்கரராமன்..

(மு.கு: ஆனந்தவிகடனின் 3D கண்ணாடியைப் பயன்படுத்தி 20 வினாடிகள் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இரண்டு திருடர்கள் திரிடியில் 'எழுந்தருளி' காட்சித் தருவார்கள். அப்படியே காறித்துப்பிவிட்டு அடுத்தப் படத்திற்கு செல்லவும். கடைசியாக சின்னவா-லின் கனவுக்கன்னி உங்களுக்காக கவர்ச்சி விருந்து படைக்கக் காத்திருக்கிறாள். )

மிழ் சினிமாவில் வழமையான ஒரு கிளைமாக்ஸ் காட்சியமைப்பு உண்டு. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹீரோ, நிரபராதி என்று தெரிந்தவுடன், தீர்ப்பின் முடிவில் "ஜட்ஜ் அய்யா" இப்படித்தான் சொல்வார்,
 "........ .... .....  ஆகவே இந்தக்கொலையை ராஜா செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கொலையை யார் செய்தது என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது ".

இப்படிக்கூட சொல்லவில்லை.குற்றவாளிகள் எனத்தெரிந்திருந்தும்,மொத்தமாக விடுதலை செய்யப்பட்டிருக் -கிறது ஒரு மொள்ளமாரிக் கும்பல்.

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடிச்சி...
ஆக,செத்தவனே நேரில் வந்து, "சத்தியமா இவன்தான் சாமி என்னை வெட்டிக்கொன்றான்" என்று சொன்னாலும் "ஏய்  நீ வாயை மூடுல... நாங்கத்தான் பெரியவங்க சொல்றோம்ல, சரியான சாட்சி இல்லன்னு... எல்லாம் சட்டப்படிதாம்ல செய்யுறோம். உன்னை யார் கொன்னதுனு நீ சொல்லக்கூடாது. பின்ன சட்டம் படிச்ச நாங்க எதுக்கு இருக்கோம் " அப்படின்னு செத்தவன்கிட்டேயே வகுப்பு எடுப்பாய்ங்க நம் நாட்டு சட்ட மேதைகள்.

துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

சரி....., வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்திருந்த சங்கரராமனை ஜெயேந்திரன், விஜேயேந்திரன் ( ' ர் ' போடும் அளவுக்கு இவனுளுக்கு தகுதி இல்லீங்க ஆபிசர்) குரூப் கொலை செய்யவில்லை. அதைத்தான் நம் சட்டம் தெளிவுபட சொல்லிவிட்டது. அதனால்தானே எந்தக்குற்றமும் செய்யாத இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்கரராமன் எப்படி செத்திருப்பார்..?

இது ஒரு புறமிருக்க, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரராமனின் மகன் அறிவித்திருக்கிறாராம். அந்தத் தம்பிக்கு நம்ம நாட்டு சட்டங்களைப் பற்றிய அடிப்படையறிவும், நீதி அமைப்புகளின் நெளிவு சுளிவுகளும் சரியாகத் தெரியவில்லை போல. தற்போதாவது சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மேல்முறையீடு செய்தால், அவர்களின் தீர்ப்பு இப்படியாகத்தான் இருக்கும்..

# சங்கரராமனே அரிவாளை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப் போயிருக்க வேண்டும். அதை மறைக்க,செத்துப்போனபிறகு அவர் பயன்படுத்திய அந்த அரிவாளை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அவரே மறைத்திருக்க வேண்டும்.

#  பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் ஏழாம் உலகத்து மக்களுக்கு அவசரமாக ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டிருக்கலாம். அங்கு நம்மவூர் சங்கரராமனைப் போல் தோற்றம் உடைய ஒரு மக்கு மட சாம்பிராணிக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, நமது உலகத்தில் இருக்கும் சங்கரராமனை கொன்று அந்த உலகத்திற்கு தெய்வத்தாய் அழைத்து சென்றிருக்கலாம்.

# நடிகர் முத்துக்காளையின் நெருங்கிய உறவினரான சங்கரராமன், ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு ரவுடிக் கும்பலைக் கூப்பிட்டு அவர்களுடன் 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை விளையாடும் பொழுது, ஒருவேளை செத்துப் போயிருக்கலாம்.

# (இது முகநூளில் ஒரு நண்பர் போட்டது) வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச் சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சங்கரராமன், கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத் தூக்கிய போது பேலன்ஸ் தவறி, பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்தலை அடிபட்டு ரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர, ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப் பிறகு அதை நக்கிப் பார்த்தவர் சொன்னதாகவும் கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


இதுபோலத்தான் முன்பு, தா.கிருட்டிணன் ரோட்டில் வாங்கிங் செய்துகொண்டிருந்த பொழுது, முதுகு அரிக்கிறது என்று அரிவாளை எடுத்து சொறியப்போய், அது தவறுதலாக கை, கால், கழுத்து, தலை என்று சரமாரியாக வெட்டிவிட, அந்த இடத்திலேயே அவர் செத்துப்போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் கொசுவர்த்திச்சுருள் பத்தவைக்கப் போய்,அதிலிருந்து கிளப்பிய தீப்பிழம்பால் மூன்று பேர் உடல்கருகி 'தற்கொலை' செய்து கொண்டார்கள்.

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகள்தான் என்பதை தமிழக அரசு ஆணித்தரமாக நம்புவதாக அறியநேர்கிறது .

இதுபோல தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனவர்கள் நம் தேசத்தில் ஏராளம்.முன்பு சாட்சியளித்த -வர்கள் தற்போது பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களாம். ஒரு வழக்கை ஒன்பது வருடத்திற்கு இழுத்தடித்தால் ஏன் பிறழ் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் ?. "செத்துப்போனவன் உசுரோடவா வரப்போறான்... ஆனால் அவன் உசுரோட இருந்தா உங்களுக்கு என்ன செஞ்சியிருப்பானோ அதைவிட பல மடங்கு நாங்க செய்யுறோம்.." என்று ஆரம்பிக்கும் பேரத்தில் முக்கிய சாட்சியே பல்டி அடிக்கும் பொழுது , மற்ற சாட்சிகள் என்ன செய்யும்..?  

ஒரு ஆட்சியில் நெருக்கிப் பிடிக்கப்படும் கழுத்து, அடுத்த ஆட்சியில் தளர்த்தப் படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் வழக்கின் ஸ்திரத்தன்மை இங்கே பேணப்படுவதில்லை. எந்த ஆட்சியில் போடப்பட்டது என்பதைப் பொறுத்தே அவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இவ்வழக்கு, அடுத்து கலைஞர் ஆட்சியில் நீர்த்துப்போகும்படி செய்யப்பட்டது. எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட கொடுமையெல்லாம் அப்போதுதான் நடந்தது. வெறுமனே தீர்ப்பு மட்டும் தற்போது வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் நாம் இன்னொரு உண்மையை உணரவேண்டிவரும்..." நமது முன்னாள் பாரதப் பிரதமர், தன்னைத்தானே வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததால்தான் செத்துப்போனார் ".


(ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")


Saturday 23 November 2013

இரண்டாம் உலகம்-விமர்சனம்...


ரண்டாம் உலகம் ஒரு mystical லவ் ஸ்டோரி.

"நாம் எவ்வளவு நாள் காதலிக்கிறோம், யாரைக் காதலிக்கிறோம், எப்படிக் காதலிக்கிறோம் என்பது முக்கிய -மில்லை. ஆனால் காதல் மட்டும் பரிசுத்தமாக, உண்மையாக இருக்கவேண்டும். ஏனெனில் உண்மையான காதலுக்குத்தான் இந்த உலகம் அசைந்து வழிவிடும்.நீங்கள் உண்மையாக காதலிக்கும் பொழுது, அப்பெண்ணின் நினைப்பு ரத்தமாக ஓடும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப் பட தேவையில்லை. உங்கள் காதல் நிச்சயமாக ஜெயிக்கும்". இதுதான் செல்வராகவன் சொல்லவரும் மெசேஜ்.

இதற்காக, காதல் வசப்பட்ட ஒரு கோழை, மாவீரனாகி சரித்திரம் படைத்த கதையைத்தான் இரண்டாம் உலகம் மூலம் கற்பனையாகத் தட்டிவிட்டிருக்கிறார் இயக்குனர். இது முழுக்க முழுக்க பேண்டசி வகை படைப்பு என்பதால் மில்லி கிராம் அளவுக்குக் கூட லாஜிக்கை தேடவேண்டியதில்லை.

நாம் வாழும் உலகத்திலும்,விசித்திரம் நிறைந்த இரண்டாம் உலகத்திலும் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தைக் கதையாக ஆர்யா சொல்வதாக விரிகிறது படம். முதல் ஐந்து நிமிடங்களில் அவர் சொல்லும் முன்னோட்டத்தை கவனிக்கத் தவறினால் மொத்தக் கதையும் புரியாமல் போவது நிச்சயம்.

இரண்டாம் உலகத்தை எப்படி நம் உலகத்தோடு முடிச்சு போடுகிறார் என்பதை தெரிந்துகொண்டாலே ஓரளவு கதை புரிந்துவிடும். இரண்டாம் உலகம் என்றால் என்ன என்பதை சிறு வயதில் பாட்டி கதை சொன்னதுபோல் சொன்னால்தான் விளங்கும். விமர்சனம் என்றால் மொத்தக் கதையும் சொல்லக்கூடாது என்கிற நியதி இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதையை எப்படி சொன்னாலும் யாருக்கும் விளங்காது என்பதுதான் இங்க விசயமே.. :-))


நாம வாழ்ற பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில பூமி மாதிரியே ஒரு கிரகம் இருக்கு.அதுக்கு பேரு இரண்டாம் உலகம். அங்க விசித்திரமான விலங்குகள், பறவைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அங்க வாழ்கிற மக்கள் நம்ம மாதிரியே இருக்காங்க. நம்ம மாதிரியே தமிழ் பேசுறாங்க..நம்ம மாதிரியே டிரெஸ் போட்டுகிறாங்க... கோவப்படுறாங்க... சிரிக்கிறாங்க...சண்டைப்போடுறாங்க.. அடிச்சிகிறாங்க.. ஆனா நம்ம உலகத்தில இருக்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்க இல்ல. அது .. காதல்...!

அங்க பெண்கள் இருக்காங்க. ஆனா அவுங்க ஆண்களுக்கு அடிமையாக இருக்காங்க. அந்த தேசத்தில காதல் இல்லாததால பூக்களே பூப்பதில்லை. எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ அங்க தேசம் சீக்கிரமா அழிந்து போய்விடும். அங்கயும் அப்படித்தான். நோய்கள் , குற்றங்கள் எல்லாம் பெருகி கிடக்குது.

அந்த தேசத்தை ஒரு ராஜா ஆட்சி செய்யுறார். நம்ம நாட்ல இருந்த மாதிரியே  தளபதி, வீரர்கள் எல்லாம் இருக்காங்க. வர்களுக்கெல்லாம் ராஜகுரு மாதிரியும், மக்களைக் காக்கும் தெய்வம் மாதிரியும் ஒரு அம்மா இருக்காங்க. தம்மையும், தம் நாட்டையும் படைத்தது பெண் ரூபத்தில் இருக்கிற அந்த தெய்வம்தான்னு நம்புறாங்க. 

ராஜானா சண்டை, போர் எல்லாம் இருக்கணுமே...!  ஆமா அதுவும் இருக்கு. பக்கத்து ஊர்ல ஒரு அரக்கன் இருக்கான். அவன் அடிக்கடி தன் ஆட்களுடன் இங்க வந்து சண்டைபோட்டு, கொள்ளையடிச்சி, பெண்களை கடத்திட்டும் போறான். ஆனால் அவனுடைய ஒரே இலக்கு அந்த தெய்வத்தாய்தான். அவரை கடத்திக்கொண்டு போய்விட்டால் அந்த உலகத்தையே தம் காலடியில் கொண்டுவந்து ஒரே ராஜாவாக இருக்கலாம் என்பது அவனது திட்டம்.

அதைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கும் தன் நாட்டில் ஒரு மாவீரன் உருவாகனும்னு அந்த தெய்வத்தாய் நினைக்கிறாங்க. அப்படி ஒரு மாவீரன் உருவாகுனும்னா அவனுக்கு ஒரு பெண் துணை வேணும். அவனை அவள் காதலிக்க வேண்டும். அவனுக்குள்ளும் காதல் வரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் ஒரு விசித்திர சிங்கத்தைக் கொன்று தான் வீரன் என்பதை உணர்த்துகிறான் ஒருவன். அவன்தான் ஆர்யா. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். திருமணம் செய்ய முயல்கிறான். அவள் அனுஷ்கா. ஆனால் அவர்களுக்குள்  காதல் இல்லை. அவர்களுக்கு காதல் வந்துவிட்டால் அந்த தேசத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கி நந்தவனமாகிவிடும். அவன் மாவீரனாகிவிடுவான். ஆனால் காதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த தேசத்தில் அவர்களுக்குள்  எப்படி காதலை விதைப்பது ...?

இங்கேதான் நம் உலகத்துக்கும் இரண்டாம் உலகத்துக்கும் முடிச்சுப் போடுகிறார் இயக்குனர். காதலின் தேசமான நம் உலகத்திலிருந்து காதலில் கசிந்துருகும் ஒருவனை இரண்டாம்  உலகத்திற்குக் கொண்டுவந்து அங்கிருக்கும் ஆர்யா-அனுஷ்காவுக்கு காதலைப் போதித்தால்..?

அதற்கு பலிகடா ஆகிறார் நம் உலகத்து மதுபாலகிருஷ்ணன்(ஆர்யா). அவரின் காதலியான அனுஷ்காவை பலியிட்டு, இரண்டாம் உலகத்துக்கு அவனை இழுக்கிறார் தெய்வத்தாய். அங்கே அனுஷ்காவுக்கு காதல், வெட்கம், பீலிங்க்ஸ் என்றால் என்ன என்பதை கிளாஸ் எடுக்க, அனுஷ்காவுக்கு இரண்டாம் உலகத்து ஆர்யா மேல் காதல் தொற்றிக்கொள்கிறது. அதன் மூலம் ஆர்யா மிகப்பெரிய மாவீரனாகி அந்த அரக்கக் கூட்டத்தை கொன்றொழிக்கிறான். அங்கே பூக்கள் பூத்துக்குலுங்கி நந்தவனமாகிறது. இரண்டாம் உலகம் சுபிட்சமடைகிறது.

சரி.. இப்போ நம் உலகத்திலிருந்து அங்கு சென்ற ஆர்யா என்ன ஆவார்..? அவரைக் கொன்று மூன்றாம் உலகத்துக்கு அனுப்பிவிடுகிறார் தெய்வத்தாய். அங்கே இன்னொரு அனுஷ்கா இருக்க....அவர்களுக்கும் காதல்... (சரி..சரி  உங்க நிலைமை புரியுது..அது அடுத்த பார்ட்டாக வரக்கூடும்..)


இதுதான் இரண்டாம் உலகம் மூலம் செல்வராகவன் சொல்லவந்த கற்பனைக் கதை. இந்தக் கதையை நம் குழந்தைகளுக்கு சொன்னால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். " அவர்கள் உலகம் சுபிட்சமடையணும்னு நம்ம உலகத்து காதலை பிரித்து,காதலியைக் கொன்று, காதலனை அவுங்க உலகத்துக்கு அவுங்க தெய்வம் கொண்டு போனிச்சி சரி.அப்போ நம்ம உலகத்து கடவுள்களெல்லாம் என்ன பண்ணினாங்க?".  இப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு ஃபேண்டசி ஃபில்ம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.

இப்படியொரு கதையை தமிழில் எடுக்க முயற்சி செய்ததற்காக செல்வராகவனை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். இக்கதையை நமக்குள் அடங்கும் பட்ஜெட்டில் எடுத்தாக வேண்டும் என்கிற பிரச்சனைதான் அவர் சந்தித்த முதல் சவாலாக இருக்கவேண்டும். இரண்டாம் உலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமே CG WORK  செய்துதான் ஒப்பேற்றவேண்டும் என்பதால் பட்ஜெட்டில் முக்கால்வாசி இதுவே விழுங்கியிருக்கும். இரண்டாம் உலகத்தைக் காட்டியவகையில் ஹாலிவுட்டுக்கு இணையாக செதுக்கியிருக்கிறார் என்பதே தமிழில் ஒரு சாதனைதான். எது எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு கொண்டுசெல்லும் இயக்குனர்களில் செல்வராகவன் மிக முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்........   வெறுமனே இந்த ஜில்பான்சி கதையை வைத்து படமாக எடுத்ததின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். நம் உலகத்து ஆர்யா-அனுஷ்காவின் ஆரம்ப காதல் காட்சிகள் எல்லாம் செல்வராகவனின் அக்மார்க் முத்திரை. அதிலும் அனுஷ்கா தன் காதலை ஆர்யாவிடம் புரப்போஸ் பண்ணும் காட்சி அருமை. அதன் பின்புதான் வெறுப்பேற்றுகிறார். ஆர்யா தன் தாத்தா சீரியஸாக இருக்கிறார் என்று பொய் சொல்லி அனுஷ்காவுடன் கோவா செல்லும் காட்சியிலிருந்தே போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அனைத்தும் செயற்கைத்தனமாகவே இருக்கிறது. தனது காதலியையோ அல்லது காதலனையோ இம்ப்ரெஸ் பண்ண வேண்டுமென்றால் அவர்களது  பிறந்தநாளின் முதல் நாள் இரவு கேக்,மெழுகுவர்த்தி சகிதமாக "ஹாப்பி பர்த்டே டூ யூ.." என பாடும் காட்சியை இன்னும் எத்தனை வருசத்துக்கு காட்டப்போறீங்க யுவர் ஆனர்..? வேற ஏதாவது யுத்தி யோசிக்கக் கூடாதா...?


இது கற்பனைக்கதை என்பதால் அவர் இஷ்டத்திற்கு கதை விட்டிருக்கிறார். ஜெயமோகனின் டார்த்தீனியம் படிப்பது போல் இருந்தது. இரண்டாம் உலகத்து அனுஷ்கா இறந்து போனதால்தான் ஆர்யா பைத்தியம் மாதிரி திரிந்து அந்த சுவாமி மலையின் மீது ஏறி இன்னொரு ஆர்யாவைக் கூட்டிவருகிறார். பிறகு அனுஷ்கா திடீரென்று தோன்றுகிறார். கேட்டால் அவர் மட்டும் காட்டில் தனியாக வசிக்கிறாராம்.

படத்திற்கு நிச்சயம் வரிவிலக்கு கிடைத்துவிடும். இது நம் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் இல்லை என்றாலும், இரண்டாம் உலகத்தில் வரும் அந்தத் தெய்வத்தாய், நமது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் குறியீடுதான் என்பதைப் பச்சைக் குழந்தைக் கூட சொல்லிவிடும். அதிலும் இடைவேளைக்கு முன் இரட்டை இலை துளிர்ப்பது ஒரு குறியீடே அல்ல. அது, "கொஞ்சம் பார்த்து கவனித்து வரிவிலக்கு கொடுங்க தாயீ " என்பதின் நேரடிக் கெஞ்சல்...!

படத்தில் ஆறுதலான விஷயம் பாடல்கள். "கனிமொழியே...","மன்னவனே என் மன்னவனே..","பழங்கல்ல.."   பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அப்பாடல்கள் வரும் காட்சி மட்டும் கொஞ்சம் உற்சாகப்படுத்தியது. மற்றபடி பின்னணி சிம்பொனி இசை அமைத்திருப்பதாக பீத்திக் கொண்டதெல்லாம் அவ்வளவாக இம்ப்ரெஸ் பண்ணவில்லை.

உலகத்தரம், உலக சினிமா எடுக்கவேண்டுமென்றால் ஹாலிவுட் படங்களைப் போல் கதைப்பின்னவேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்த்த கதைகள் எவ்வளவோ இருக்கிறது. பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க முயன்றவர்களில் செல்வராகவனும் ஒருவர். அப்படியொரு காவியத்தை எடுத்து வணிக ரீதியாக தோற்றுப் போயிருந்தால் கூட இழப்பு வெறும் பணமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அழுத்தமாகப் பெயர் பதிந்திருக்கும். தன் கற்பனையில் ஓடிய ஒரு கதையை  படமாக எடுத்து ரசிகனை இவ்வளவு அவஸ்தைக்குள்ளாக்க வேண்டுமா..? ஒருவேளை இந்தப்படத்தை 3D யில் முயற்சி செய்திருந்தால் (கொஞ்சம் பட்ஜெட் எகிறினாலும் ) அந்த பரவசத்திற்காகவாவது தியேட்டருக்கு கொஞ்சம் கூட்டம் வந்து போட்ட பணத்தை எடுத்திருக்கலாம்.   இவரது போதைக்கு பாவம் அந்த தயாரிப்பாளர்தான் ஊறுகாய் போல..!

Tuesday 19 November 2013

சத்யத்தின் அயோக்கியத்தனமும் சச்சினின் ஆற்றமுடியா பிரிவின் வலியும் (சும்மா அடிச்சி விடுவோம்..-6 )


ஞ்சையில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக ஒரு டாஸ்மாக் குடிமகன் தமிழக முதல்வரையும், விஜயதரணி அவர்களையும் செம்மொழியில் அர்ச்சனை செய்த சம்பவம் இன்னமும் ஓயவில்லை என்று நினைக்கிறேன்.


நினைவு முற்றம் இடிக்கப்பட்டது பச்சை மொள்ளமாரித்தனம். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் ஜெயாவின் ஈழ நிலைப்பாட்டை இன்னமும் புரிந்துகொள்ளாத நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்களை நம்பி, பின்னால் இவ்வளவு பெரிய கூட்டம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான் புரியாத மர்மம்.

கலைஞராவது ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பார். ஆனால் ஜெயாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாமே எப்போதும் அவருக்கு கசப்பு வார்த்தைகள்தான். ஜெயாவின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் இதைத்தான் சொல்லும். அப்படியிருக்க, ஜெயா என்ன மாதிரியான பிரச்சனையைக் கொடுப்பார் என்று யோசிக்கும் அளவுக்கு சமயோசித புத்தி கூடவா இந்த ஈழ அரசியல்வாதி -களுக்கு இல்லை..?  மட்டுமில்லாமல், சுவர் எழுப்பிய இடம் குத்தகைக்கு விட்டது கலைஞர் ஆட்சியில். முற்றம் அமைந்துள்ளது நடராஜனுக்கு சொந்தமான இடத்தில். இது போதாதா இடிப்பதற்கு..?

தமிழர்களின் வரலாற்று நினைவு சின்னத்தையே இடித்துத் தள்ளும் இந்த ஜெயாதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருப்பாராம்...ஈழத்தாயாம்...இலை மலர்ந்தால் ஈழம் மலருமாம்...!  அட போங்கப்பு... :-)

சரி... சத்யம் டிவி விவகாரத்துக்கு வருகிறேன். அந்த செம்மொழி ஆசாமி அப்போது குடித்திருந்தாராம். இருக்கட்டும். அம்மையார் ஆட்சியில் இது ஒன்றும் பெருங்குற்றமல்ல.  ஆனால் ஒரு நேரலை நிகழ்ச்சியில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரிடம் 'லைவ்' ஆக கருத்து கேட்கும் முன்பு அவர் என்ன சொல்லப்போகிறார், எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள மாட்டார்களா என்ன.. ?  பாடல் நிகழ்ச்சிகளில் கூட என்ன பாட்டு வேண்டும், என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கேட்டறிந்து கொள்வார்களே..

வெறும் டிஆர்பி ரேட்டுக்காக இவர்கள் செய்யும் அட்டூழியங்களை முடிவு கட்டுவதற்கு ஒரு விதத்தில் இப்படி ஒரு சம்பவம் தேவைதான். சத்யம் டிவியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி மனுஷ்யப் புத்திரன் தன் முகநூளில் ஒரு செய்தி பகிர்ந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எனக்கென்னவோ அந்த செம்மொழி ஆசாமியை அவர் பாட்டுக்கு பேசச்சொல்லியிருந்தால் இப்படி நடத்திருக்காது என நினைக்கிறேன். நிகழ்ச்சியை நடத்தும் அரவிந்தன் அவரிடம், "உங்கள் கருத்தை சுருக்கமா சொல்லுங்க...சுருக்கமா சொல்லுங்க... என திரும்பத்திரும்ப சொன்னதால்தான் ரத்தினச் சுருக்கமா அப்படி சொல்லிவிட்டார் போல... :-))

ஆனால் ஒன்னுங்க... அந்த ஆள் இவ்வளவு அசிங்கமாக பேசினப் பிறகும் கொஞ்சம் கூட அவர்மீது கோபப்படாமல் "உங்கள் அழைப்புக்கு நன்றி.." என சொன்னார் பாருங்க... அவரின் கடமையுணர்ச்சியைக் கண்டு நான் இன்னமும் வியக்கேன்..!



வில்லா படத்திற்கு  இணையத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது. விமர்சனத்திற்கு விமர்சனம் கூட வந்திருக்கிறது. வெறுமனே நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு விமர்சனம் எழுதியவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அழுத்தமான, ஆழமான விமர்சனங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் நாடிப்பிடித்துப் பார்த்த விசயங்களோடு அவர்களின் விமர்சனமும் ஓரளவு ஒத்துப் போன வகையில் எனக்கு கொஞ்சம் திருப்தி.

நிஜமாகவே சொல்கிறேன், வில்லா என்னுள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை திரையரங்கின் கடைசி வரிசையில் உட்காந்து பார்த்ததால் அப்படி இருந்திருக்குமோ என்னவோ..! இனிமேல் இதுபோன்ற படங்களை திரைக்கு அருகில் இருந்துதான் பார்க்கவேண்டும் போல... போகட்டும்.

ஒரு பேய் படம் அல்லது திகில் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் சினிமாவிலே நிறைய உதாரணங்களை அடுக்கலாம். முதல் பாதியில் வரும் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளையும் பிற்பகுதியும் எப்படி லாஜிக்காக அவிழ்க்கிறார்கள் என்பதில்தான் திகில் படங்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த விதத்தில் 'யாவரும் நலம்' தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு காட்சியும் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது.

வில்லா படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை அறிந்துகொள்ளும்  ஆவலோடுதான் ஒவ்வொரு ரசிகனும் இருந்திருப்பான். அசோக் செல்வனின் நண்பராக வருபவர் வெவ்வேறு இடங்களில் சேகரித்த தகவலின் அடிப்படையில் அவரிடம் இப்படித்தான் விவரிப்பார். "ஐ ஹாவ் சீன் ஒன் பிளாக். அவர் பேரு தேவநேசன்.. தமிழ் ஆளுதான்.அவரு என்ன சொல்றார்னா, இந்த நெகடிவ் எனர்ஜிக்கு பியூச்சரை பிரெடிக்ட் பன்றதுக்கு தூண்டுதல் சக்தி இருக்கிறதா சொல்லியிருக்கார்.."

தேவநேசனிடம் போனபிறகு, அவரும் இப்படித்தான் ஆரம்பிப்பார். " பிளாக்மேஜிக் மூலமா பியூச்சரை பிரெடிக்ட் பண்ண முயற்சி பண்ணியிருக்கான்...  " .  ஒரு சாராசரி ரசிகன் இந்த இடத்தில்தான் பேந்தப் பேந்த முழித்திருப்பான். ஒருவேளை இங்கு எழுதியதால் இதன் அர்த்தம் தற்போது புரிந்திருக்கும். ஆனால் கதையின் அடிநாதமான இந்த விஷயம் படத்தில் போகிற போக்கில் வந்து போகும். எத்தனைப் பேர்  இதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்..?

ஆரம்பம் படத்தை வெகுவாக ரசித்தவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்வார்கள். படத்தில் முக்கியமான ஒரு காட்சியில்,  'தரமில்லாத புல்லட் புரூப்.' என்கிற வார்த்தையை நான்கைந்து தடவை அழுத்தி உச்சரிப்பார் தல. இந்த இடத்தில் 'தரமில்லாத' என்கிற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். தன் மேலதிகாரியிடம் புகார் செய்யும்போது, இதற்குப் பதிலாக வேறு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம். ஆனால் கதைக் கருவின் அடிநாதமே அதுதான் என்பதால் பாமரனுக்கும் விளங்கவேண்டும் என்பதற்காக அந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள்.

வில்லா படத்தில் இதுபோன்ற ஒரு முக்கிய காட்சியைத்தான் புரியாத மொழியில் ஜல்லியடித்திருக்கிரார்கள் என்று விமர்சித்திருந்தேன். அதேப்போல இறுதிக் காட்சி எத்தனைப் பேருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இதைத்தான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, மற்றபடி இந்த புண்ணாக்கு, பருத்திகொட்டை கிண்டுற வேலையெல்லாம் எனக்கு தெரியாது சாமீ....


சச்சின் டெண்டுல்கர்....

இதை எழுதும் போதே கண்களில் நீர் முட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இந்திய இளைஞர்கள் அதிகமாக உச்சரித்த சொல் இதுவாகத்தான் இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, உடன் பிறந்தவளை திருமணத்திற்குப் பின் பிரியும்போது ஏற்படும் வலிபோல துக்கம் நெஞ்சை அடைக்கிறது. சச்சின் அணியில் இருந்தபோது சரியாக விளையாடவில்லை என்று விமர்சித்த வாய்தான் இன்று வரண்டுபோய் கிடக்கிறது. எனக்கெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கபடியை விட்டால் வேறு எந்த விளையாட்டும் தெரியாது. எங்கள் கிராமப்புறங்களில் அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. நாடே சச்சின்.. சச்சின் என்ற பொழுது நாங்களும் அந்த பொது நீரோட்டத்தில் ஐக்கியமானோம்.   

ஒரு விளையாட்டு வீரனுக்கு இவ்வளவு பில்டப் தேவையா....? சும்மா ஒன்னும் விளையாடவில்லையே, கோடி கோடியாக சம்பாதிக்கதானே செய்தார்.' பாரத் ரத்னா ' கொடுப்பதற்கு இவர் என்ன எல்லையில் போயி சண்டையா போட்டார்..? இப்படி அற்பத்தனமாகக் கேள்வி கேட்கிறது ஒரு பிரிவு.

பல லட்சம் கோடிகளை சர்வ சாதாரணமாக தின்று ஏப்பம் விடும் ஊழல் பெருச்சாளிகள் மலிந்திருக்கும் நம் நாட்டில், நாட்டுக்காக 20 வருடத்திற்கு மேல் விளையாடிய ஒரு வீரர், தன் திறமையின் மூலம் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...?  100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை தன் தலைமீது சுமந்துகொண்டு விளையாடுவது மனரீதியாக எவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்..?. அதிலும் இருபது ஆண்டுகளாக இந்தியாவின் 'ஒரே நம்பிக்கை' சச்சின் போன்றவர்களுக்கு..?

நாட்டுக்காக விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமல்ல. இந்திய அணி வெற்றிபெற்றால், ' INDIA WON THE MATCH ' என்றுதான் சொல்கிறார்களே தவிர, ' INDIAN CRICKET TEAM WON THE MATCH ' என்று செல்வதில்லை. இந்தியா எத்தனை தடவை சச்சின் என்கிற தனிப்பட்ட ஒருவரால் ஜெயித்திருக்கிறது..!

சச்சின் எல்லையில் சென்று சண்டை போடவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தானை சுருட்டி வீசியெறிந்த காட்சியைக் கண்டு முதலில் சந்தோசக் கூத்தாடுவது நம் எல்லை வீரர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா..?  இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு தடவை கூட பாகிஸ்தானை இந்தியா ஜெயிக்க விட்டதில்லை என்கிற சாதனையின் பின்னணியில் சச்சினின் பங்களிப்பு    மகத்தானது என்பதை நாம் அறிவோம்தானே...!

ராஜன் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

"கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக விளையாண்ட ப்ளேயர்களெல்லாம் கிளம்பிய பிறகு, அந்த இலக்கணத்தை எழுதியவன் கிளம்புகிறான்..."

Good bye Sachin...!


கலாட்டூன் கார்னர்....

 எவன்டா இந்த வேலையை செஞ்சது...?

------------------------------------------------------X---------------------------------------------------

ஆனா, இது சத்தியமா நான் செஞ்ச வேலைதாங்க...





                                                                                                   - இன்னும் அடிச்சிவிடுவோம்...

Friday 15 November 2013

வில்லா...நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை ..(விமர்சனம் )

நீண்ட காலமாக திறக்கப்படாமல் கிடக்கும் ஒரு பழைய பங்களா, நிறைய இருட்டு, இரைச்சலான பின்னணி இசை, வித்தியாசமான கேமரா கோணங்கள், இறுக்கமான முகத்தோடு கதாபாத்திரங்கள் இவைகள் இருந்தாலே போதும், பார்வையாளனை மிரட்டிவிடலாம் என்கிற தட்டையான சிந்தனையிலிருந்து நம் கோடம்பாக்கத்து மேதைகள் எப்போதுதான் வெளிவரப்போகிறார்களோ தெரியவில்லை... இதை மட்டுமே வைத்து ஒரு சராசரி ரசிகனை திருப்திபடுத்தி விடமுடியுமா....?

பில்லி சூனியம்,மாந்திரீகம் போன்ற நம்மவூர் சமாச்சாரங்களை வைத்துதான் கதையைப் பின்னியிருக் -கிறார்கள். அதையே BLOCK MAGIC, WITCHCRAFT, FUTURE PREDICTION என மேல்தட்டு மக்களுக்கு மட்டும் விளங்கும் மொழியில் ஜல்லியடித்திருக்கிறார். இதில் பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, J.J தாம்சன் எபெக்ட் போன்ற அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வேறு. படம் பார்ப்பவர்கள் எல்லாம் வாரத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களை பார்ப்பவர்கள் என்கிற நினைப்பிலேயே எடுத்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய பகுதியே இப்படி விளங்காத மொழியில் இருந்தால், ஓர் சாமானிய ரசிகனை எப்படி கதையினூடே பயணிக்கச்செய்யும்...?

கதையில் ஒன்றும் வித்தியாசமில்லை.ஹாரர் படத்திற்கே உரித்தான அதே டெம்பிளேட் கதைதான்.

கிரைம் எழுத்தாளரான கதாநாயகன் அசோக் செல்வனின் அப்பாவான நாசர், கோமா நிலையிலிருந்தே இறந்து போகிறார். அவர் இறந்த பிறகுதான் அசோக்செல்வனின் பெயரில் பாண்டிச்சேரியில் ஒரு வில்லா இருக்கும் விஷயம் தெரியவருகிறது. நாசர் எதற்காக மறைக்கவேண்டும் என்ற கேள்வியிலிருந்தே யூகிக்கலாம், அது அமானுஷ்யம் நிறைந்த பாழடைந்த வில்லா. அதில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன... அதிலிருந்து விடுபட்டாரா என்பதே மீதிக்கதை.

அந்த வில்லாவின் பின்னணி கொஞ்சம் சுவாரஸ்யமானது.

பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அந்த வில்லா ஒரு பிரெஞ்சுகாரரால் கட்டப்பட்டது. பில்லி சூனியம்(அதைத் தான் BLOCK MAGIC, WITCHCRAFT என்று பில்டப் கொடுக்கிறார்கள்) போன்ற வித்தைகளில் கைத்தேர்ந்தவரான அந்த பிரெஞ்சு ஆசாமி, FUTURE PREDICTION எனப்படும் எதிர்காலத்தை கணிக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள ஒரு குழந்தையை நரபலியிடுகிறார். அச்சம்பவத்துக்குப் பிறகு அந்த வில்லா நெகடிவ் எனர்ஜி எனப்படும் பில்லி சூனியத்தால் முழுவதுமாக சூழப்படுகிறது.

அதன் பிறகுதான் சுவாரஸ்யம். அங்கு வசித்தவர்கள்/வசிப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சக்தியினால் அழுத்தப்பட்டு எதிர்காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். அக்கணிப்பை கவிதையாகவோ, ஓவியமாகவோ, கதையாகவோ ஏதோ ஒரு கலைவடிவத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அக்கணிப்புகள் அடுத்தடுத்து உண்மையாகி விடுவதுதான்  திரைக்கதையில் திகிலூட்டும் திருப்பங்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு பிரெஞ்சுகாரரிடமிருந்து அரசாங்கம் கையகப்படுத்தி ஏலம் விடுகையில், அந்த வில்லா ஜமீன்தாரரான வீர சந்தானம் கைக்கு மாறியிருக்கிறது. அதன் பின்னர் அந்தக் குடும்பம் நொடித்துப் போய்விட, பிற்பாடு  நாசர் அந்த வில்லாவை வாங்கியிருக்கிறார்.

வீர சந்தானம் தன் குடும்பத்தினருக்கு எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை கவிதையின் மூலம் தெரியப் படுத்தி பின்பு மனநிலை பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார். அது போலவே பெயின்டிங் வரைவதில் ஈடுபாடுள்ள நாசர், தனக்கும் தன் மனைவி மற்றும் மகனுக்கும் நடக்கப் போகும் விபரீதங்களை ஓவியங்களாக வண்ணம் தீட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த அமானுஷ்யங்கள் அவர்களுக்குத் தெரியாமலே அந்த வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியால் நடப்பவை.

பேய், அமானுஷ்யப் படம் என்றால் பீதி நிறைந்த ஒரு பங்களாவில் நீண்ட காலமாக பூட்டியே கிடக்கின்ற மர்ம அறை ஒன்று இருக்கவேண்டும். அதை கதாநாயகன் வந்துதான் ரிப்பன் வெட்டி திறக்க வேண்டும் என்கிற விதி இதிலும் பின்பற்றப்படுகிறது. அங்கு ஏதோ ஒரு மர்மப் பொருள் இருக்கப்போகிறது என்று மனது படபடக்க, அந்த அறைக்குள்தான் நாசர் வரைந்த பெயிண்டிங் இருக்கிறது. இதை எதற்கு இவ்வளவு ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று யோசிக்கும் போதுதான் இந்த FUTURE PREDICTION பற்றி தெரியவருகிறது. அதன் பிறகு அவர் தேடி அறிந்த விசயங்கள் தான் மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டிருக்கிறது.


நாயகனாக வரும் அசோக் செல்வம் சிரமமில்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க இறுக்கமான முகத்தோடு வருகிறார். பேய் படம் என்றால் இந்த ஒரே எக்ஸ்ப்ரஸன் தானே...! ஆரம்பத்திலேயே நாசர் இறந்து விடுவது போல் காட்டப்படுவதால், பின்னர் அழுத்தமான பிளாஸ்பேக் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது. கருப்பு கண்ணாடி போட்ட நாசரின் அந்த பிளாக் ஒயிட் புகைப்படம் அருமை.

நாயகியாக வரும் சஞ்சிதா கொஞ்சம் அஞ்சலி சாயலில் இருந்தாலும், தமிழ்ப் பேய் படங்களில் வழக்கமாக வரும் மேற்படி கில்மா காட்சிகள் எதுவும் இல்லாததால் மனதில் ஒட்ட மறுக்கிறார். படத்தில் அழுத்தமாக மனதில் பதிந்த கேரக்டர் என்றால், அது பொன்ராஜாக வரும் அந்த வெள்ளந்தி மனிதர். மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் திகிலூட்டும் காட்சி என்று எதையும் பெரிதாக சொல்லமுடியவில்லை. வெறும் சவுண்டு எபெக்ட் மட்டுமே சில காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. மற்றபடி காதிரண்டையும் பொத்திக்கொண்டால் 'நாகா' சீரியல் பார்த்த உணர்வுதான்.

பேய், பில்லி சூனியம்,அமானுஷ்யங்கள் எல்லாமே நம் சமூகத்தில் விரவிக்கிடக்கும் மிகப்பெரிய லாஜிக் மீறல்கள் என்பதால், அதை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களில் லாஜிக் மிஸ்டேக் என்று தனியாக லென்ஸ் வைத்து தேடவேண்டியதில்லை.

படத்தில் சிரிப்பதற்கு ஒரே ஒரு காட்சி மட்டும் இருக்கிறது.மூடநம்பிக்கைகளால் மூழ்கிப்போன நம் சமூகத்தில் பின்பற்றும் சில மரபுகளை விஞ்ஞான ரீதியாக விளக்கம் சொல்லி முட்டுக் கொடுப்பார்கள் பாருங்கள்.. அதற்கு சிரிக்காமல் என்ன செய்ய..?

கடவுளின் சக்தியை இதில் பாசிடிவ் எனர்ஜி என அவதானிக்கிறார்கள். அதாவது நம்ம ஊர்ல இருக்கிற கோயில்களின் கற்பகிரகத்தை ஐம்பொன்னாலான காந்தம் போன்ற பொருளை வைத்துதான் கட்டுறாங்க இல்லையா... அதனால் அதிலிருந்து பாசிடிவ் எனர்ஜி புரடியூஸ் ஆகுதுனு நம்புறாங்க. நம்ம முடிக்கு பாசிடிவ் எனர்ஜியை அப்சர்வ் பண்ணுகிற திறன் இருக்காமாம்.அதனாலதான் கோயிலுக்கு வருகிற ஆண்களை சட்டையைக் கழட்ட சொல்லியும், கையெடுத்துக் கும்பிடவும் சொல்றாங்க. ஏன்னா அக்குளில், மார்பில் இருக்கும் முடிகள் அந்த சக்தியை உட்கிரகித்துக் கொள்ளுமாம் ( ஏன் சாமி... இந்த தாழ்த்தப்பட்டவர்களை யெல்லாம் கோயிலுக்குள்ள அனுமதிக்க மாட்டேங்குறாங்களே.. அவுங்க முடிக்கெல்லாம் இந்த எனர்ஜியை அப்சர்வ் பன்ற திறன் இல்லையோ..?). பெண்களை அதிக நகைகளை போட்டு வர சொல்றதும் இதுதான் காரணமாம். தங்கம் பாசிடிவ் எனர்ஜியை அப்செர்வ் பண்ணுமாம்.(காஞ்சிபுரம் தேவனாதனை எந்த எனர்ஜி 'உசுப்பி' விட்டிருக்கும்...?)

இதை வெறுமனே 'வில்லா' என்ற பெயரில் எடுத்திருக்கலாம். தமிழில் இன்னுமோர் புதியமுயற்சி என்கிற ரீதியில் புன்முறுவலோடு சகித்துக்கொள்ளலாம். ஆனால் பீட்சா-2 என்று விளம்பரப் படுத்தப்பட்டதாலோ என்னவோ பீட்சா தந்த தாக்கத்தில் கால்வாசிகூட இந்தப்படம் தரவில்லை என்கிற உணர்வு ஏற்படுகிறது. படம் முடிந்து வெளிவரும்போது, நல்லவேளை இந்தப் படத்தின் ரிசல்ட்டால் பீட்சா-3 என்கிற அடுத்த விபரீதத்திற்கு தயாராக மாட்டார்கள் என்கிற நம்பிக்கை மட்டும் சற்று ஆறுதலை தந்தது.





Monday 11 November 2013

சிம்புவின் கரண்ட் லவ்வரும், ஒரு கில்மா பூங்காவும்...(சும்மா அடிச்சி விடுவோம்..-5 )



'காரை வச்சிருந்த சொப்னசுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா' என்பதை கூட ஈசியா கண்டுபிடித்து விடலாம்யா. ஆனா நம்ம சிம்பு கரண்ட்ல யாரை வச்சிருக்காரு என்பதைத்தான் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம். ஆனா ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். சிம்பு சீசனுக்கு ஒன்னு மாத்தினாலும்  சீக்ரெட்டா எதையும் வச்சிகிறதில்ல.  எப்படியோ மீடியாவுக்கு தெரியப்படுத்தி, எங்கப்பனைப் போல இல்ல, நான் ஒரு மச்சக்கார மன்மதன் என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு அப்படி ஒரு அலாதி.

லேட்டஸ்டா, ஆண்ட்ரியா போட்ட பாலில்(ஐ மீன்..பந்து) சிம்பு கிளீன் போல்டானாதாக கோலிவுட்ல பேசிக்கிறாங்க. இரண்டு பேருமே கிரவுண்டில் நின்று அடித்து ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் யார் பாலில் யார் போல்டானார்கள் என்பதுதான் தெரியில.. போகட்டும்...


இப்போ எனக்கு ஒரு சந்தேகம். முதலில் சிம்பு நயன்தாராவை லவ் பண்ணினார். என்ன பிரச்சனையோ தெரியவில்லை, நயன்தாரா பிரிந்து சென்று பிரபுதேவாவை லவ்வினார். அல்லது பிரபுதேவா 'கீப்'பினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நெருக்கமாக வளர்ந்த இவர்களின் ' லிவிங் டுகெதர் ' சமாச்சாரத்தின் இடையில் கரடியாக புகுந்தவர்தான் ஹன்சிகா. எங்கேயும் காதல் பட ஷூட்டிங்-ன் பொழுது  எங்கெங்கோ போயி காதல் பண்ணி 'ஸ்லீப்பிங் டுகெதர்' வரை சென்ற விஷயம் நயனுக்கு கிட்டவே, காதல் புட்(டுகிட்)டது.

அதன் பிறகுதான் சுவாரஸ்யம். இந்த தெய்வீக காதல் பணால் ஆக காரணமான அந்த சப்பாத்தி மாவு, பின்னர் முதல் காதலில் பணால் ஆனவரோடு தற்போது லவ்விக்கொண்டு இருக்கிறார். இப்போ இந்த 'சர்க்யூட்' பக்காவா முழுமையடைத்திருக்கு இல்லையா... ? அதாவது நான் லவ்வியவளை அவர் 'கீப்'பினார்... அவர் லவ்வியவரை நான் 'கீப்'பிகிறேன். இதிலிருந்து என்ன தெரியுது... வாழ்க்கை என்பது மட்டும் ஒரு வட்டம் அல்ல... காதல் கூட ஒரு வட்டம்தான்..


ஆனால் இங்கதான் டிவிஸ்ட்...  கடைசியாக, இந்த பணால் பார்ட்டிகளின் காதலுக்கு இடையில் புதுசா ஒரு பியூட்டி நுழைந்திருக்கு. பட் என்ன கொடுமைனா,  இதுவும் ஏற்கனவே அனிருத்கிட்ட அடிவாங்கினதுதான்.

ஆகக்கடைசியா எனக்கு என்ன தோனுதுனா...  இதைவைத்து ஏன் தமிழில் ஒரு சினிமா எடுக்கக் கூடாது...? இப்படியொரு காதல் கதை இதற்கு முன் தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் வந்திருக்கிறதா..?     ஏக்து​ஜே ​கேலி​யே வுக்குப் பிறகு நல்ல காதல்கதை எதுவும் வரவில்லை என்கிற குறையை இந்தப்படம் போக்கும் என்பது என் கணிப்பு. :-))

வேண்டுமானால் சுவாரஸ்யத்திற்கு சின்ன மாற்றம் செய்துக்கொள்ளலாம். பிரபுதேவா-நயன்தாராவை பிரிக்க சிம்பு அனுப்பிய அம்புதான் ஹன்சிகா என்கிற உண்மையை கிளைமாக்சில் சொல்றமாதிரி வைத்துக் கொள்ளலாம்.

அப்புறம் இடைவேளையின் பொழுது , பிரபு தேவாவைப் பார்த்து சிம்பு இப்படி பன்ச் டயலாக் பேசுற மாதிரி வச்சிக்கலாம்..

"இன்னிக்கு இந்தியாவிலே பெரிய டான்சர் என்கிற திமிர்ல என் பிகர நீ உஷார் பண்ணி எனக்குள்ள இருக்கிற மன்மதனை தட்டி எழுப்பிட்ட. தேவா...இதுவரை இந்த சிம்புவை விரல் சூப்பிரவனா பாத்திருக்க. இனிமேல விரல்வித்தைக்காரனா பாக்கப்போற. இந்த நாள்........, உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்க.  இன்னியிலிருந்து உன் அழிவுகாலம் ஆரம்பிச்சிடிச்சு. எனக்கும் உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடிச்சி. இந்த யுத்தத்தில, நீ எப்படி என் பிகர உஷார் பண்ணி என்னை முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விட்டியோ, அதே மாதிரி நானும் நீ பிக்கப் பண்ற எல்லா பிகரையும் உஷார் பண்ணி உன்னையும் என்னைப்போல முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விடல.. நான் எங்க கரடிக்கு... ச்சீ..எங்க டாடிக்கு பொறக்கலடா ..."


ரம்பம் படத்திற்கு இணையத்தில் முதல் விமர்சனம் நான் தான் எழுதினேன் என நினைக்கிறேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை, ஒரு குற்ற உணர்வை சுட்டிக்காட்டுவதற்காகக் குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எனது ஆபிசிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்திருக்கிறது தமிழ் சினிமாக்கள் ஓடும் அந்த சினி பிளெக்ஸ். சிங்கையில் நிறைய சினி பிளெக்ஸ் இருந்தாலும் இரண்டே இடத்தில்தான் தமிழ் படங்கள் திரையிடுவார்கள்.அதிலொன்று என் ஆபிஸ் அருகில் உள்ளது. பெரும்பாலான புதுப்படங்கள் முதல் நாள் இரவே இங்கு திரையிடப்படும்.  தற்போதெல்லாம் படம் வெளிவந்த மறுநாளே இணையத்தில் கிரிஸ்டல் கிளியரில் காணக்கிடைப்பதால், எவ்வளவு சீக்கிரம் திரையிட வேண்டுமோ அவ்வளவு லாபம் என்கிற வகையில் முதல் நாள் இரவிலிருந்தே திரையிடப்படும். எனது ஆபிஸ் ஷிப்ட் 12 PM - 9.00 PM  . இங்கு இரவு 9-30 மணியளவில்தான் முதல் காட்சி ஆரம்பிப்பார்கள். ஆக, மிகச்சுலபமால ஆபிஸ் முடிந்து படம் பார்த்துவிட்டு,அன்று இரவே முதல் விமர்சனம் போட்டுவிடலாம். சரி..சரி. இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்க வாறீங்க...அதானே...?. நானும் அதையேத்தான் கடைசியாக சொல்ல வருகிறேன்.

இப்படியாக, நிறைய படங்கள் முதல் நாள் இரவே பார்த்தாலும், முதல் விமர்சனம் என்று இரண்டு படத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். தலைவா மற்றும் ஆரம்பம் படத்திற்கு.  தலைவா படத்திற்கு மட்டும் ஆறாயிரம் ஹிட்ஸ் கிடைத்தது. சில பதிவர்கள் முதல் காட்சி பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து விமர்சனம் எழுதுவதின் சூட்சமம் அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் 'ஆரம்பம்'.

நானெல்லாம் எங்கெங்கோ தகவல்கள் திரட்டி, முக்கி முக்கி பதிவு போட்டாலும் முந்நூறு ஹிட்ஸ் வாங்குவதற்குள் மூச்சே போய்விடுகிறது. ஆனால் ஆரம்பம் விமர்சனத்திற்கு, படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் எட்டாயிரம் ஹிட்சுக்கு மேல் கிடைத்தது. பொதுவாக என் பதிவை தமிழ்மணத்தைத் தவிர்த்து வேறு எதிலும் இணைப்பதில்லை. என் பேஸ்புக் சுவரில் ஒன்றிரண்டு பதிவுகள்தான் இணைத்திருப்பேன். அன்று இணைத்தது  தமிழ்மணம் மற்றும் வெட்டி பிளாகர்ஸ் -ல் மட்டும்.அதன் பின்னர் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்-ல் நிறைய பேர் ' ஷேர்' செய்திருக்கிறார்கள் போல.இதில் என்ன கொடுமை என்றால், என் விமர்சனத்தை காப்பி செய்து டிவிட்டரில் அவர்கள் எழுதியாக சிலர் போட்டிருக்கிறார்கள். அதை வேறுசிலர், ட்விட்டரில் வெளியான முதல் விமர்சனம் என்று திரும்பவும் பேஸ்புக்கில் அப்படியே பதிந்திருந்தனர். இதைப் பார்த்தபோது அல்பத்தனமாக கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில், காப்பி பேஸ்ட் செய்யும் அளவுக்காவது என் எழுத்துக்கள் மதிக்கப்படுகிறதே என்கிற சந்தோசம்தான். அதனால்தான் என் வலைப்பூவில் "காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்..." என்று குறிப்பிட்டிருப்பேன்.

என்னைப்பொறுத்தவரையில் சினிமா விமர்சனம் என்பது, வெறுமனே அது நல்லா இருக்கு...இவரு நல்லா நடிச்சியிருக்காரு..., இந்தக் காட்சி அற்புதமாக இருக்கிறது... சிகரெட் பிடிக்கிறப்போ புகை ஏன் வரல... என்பதுபோல சிபித்தனமாக எழுதுவதில் உடன்பாடு கிடையாது. கதைக்கருவிலிருந்து ஆக்கம் வரை உள்ள குறீயீடுகள்,குறைபாடுகள், கதைக்களமும் தளமும் எதன் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது என்பதைப் பற்றி விரிவாக இருக்கவேண்டும்.உதாரணத்திற்கு , ஆரம்பம் படம் பார்த்துவிட்டு முதல் விமர்சனம் எழுதவேண்டும் என்கிற அவசரத்தில் வெறும் SWORDFISH படத்தை மட்டும் ஒப்பீடு செய்து விமர்சனம் எழுதி பதிவேற்றி விட்டேன். ஆனால் இந்தியாவில் நடந்த முக்கியமான சம்பவத்தை அதில் கையாண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் என் மரமண்டைக்கு அப்போது ஏறாமல் போய்விட்டது . இவ்வளவுக்கும் அதைப்பற்றி முன்பு ஒரு பதிவு எழுதி இன்னும் டிராப்டில் கிடக்கிறது. ஆனால் அச்சம்பவத்தைப் பற்றி மிகத் தெளிவாக, விரிவாக உண்மைத்தமிழன் எழுதியிருந்தார். அதைப் படித்தபொழுதுதான் உரைத்தது. சினிமா விமர்சனம் எழுதிவதில்  இன்னும் நான் 'ஒன்னாங்கிலாஸ்'யே தாண்டவில்லை என்று.

சமீபத்தில் சுட்டகதை விமர்சனம் லக்கிலுக் யுவா எழுதியிருந்தார். எவ்வளவு தகவல்கள்..! விமர்சனம் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்..!

தீபாவளிக்கு முதல்நாள் இரவே பாண்டிய நாடும், அழகு ராஜாவும் இங்கே ரிலீஸ் ஆகிவிட்டது. தியேட்டர் வழியாகத்தான் நான் பயணிக்கும் பஸ் போகும். ஒருபுறம் கால் பரபரவென்று இழுக்க, மனது ஏனோ மறுத்துவிட்டது. பிறகு படம் பார்த்து விட்டோமே என்பதற்காக இரவோடு இரவாக விமர்சனம் எழுதத் தூண்டும்... எதுக்கு தற்குறி என்பதை நாமே தம்பட்டம் அடித்து நிருபிக்கவேண்டும்...?

(எக்ஸ்கியூஸ்மீ...."அப்பாடா இவன் தொல்லையிலேருந்து தப்பிச்சாச்சிப்பா "என்று பெருமூச்சு விடாதீங்க. நவ 22, இரண்டாம் உலகம் ரிலீசாமே...?. 21 இரவே இங்க ரிலீசாமாம். ராவோடு ராவா போட்டுடவேண்டியதுதான். பின்ன நாங்கல்லாம் எப்போ பாஸ் பிரபல பதிவரா ஃபார்ம் ஆகுறது..?   )   



ரு அடல்ட் ஒன்லி மேட்டர்... பெண்கள் இந்த லிங் -கை திறந்து பார்க்க வேண்டாம்( சில ஆண்களும் கூட..). பட்.. வெரி இன்ட்ரஸ்டிங்..!

வாரக்கடைசியில் எங்கேயாவது பார்க்-க்கு போகலாம்னு கூகுள்ல டைப் செய்து தேடிப் பார்த்தேன். இது வந்தா என் கண்ல மாட்டனும்..? ஏதோ புதுவகையான செடிபோலனு  நெனைச்சி உற்றுப்பார்த்தா,  கருமம்.. கருமம் ... இதுக்கு கூடவா பார்க் வச்சி மெய்ண்டைன் பண்றாங்க...? ஆனால், சும்மா சொல்லக் கூடாது கொரியாகாரனுவ கில்லாடிகள்தான். என்னவொரு கலை நுணுக்கம்... !!!  

இந்த 'பார்க்'(Haeshindang Park) தென்கொரியாவில் இருக்கிறது.இதன் பின்னணியில் ஓர் சுவாரஸ்யமான கதை உள்ளது .

முன்னொரு காலத்தில் மீனவன் ஒருவன் தன் 'கன்னிக்' காதலியை ஒரு பாறை மீது அமரச்செய்துவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றானாம். அப்போது கடுமையான புயல்தாக்கி அவள் இறந்துவிட்டாளாம். அதன் பின்னர் அந்தப் பகுதி மக்களால் மீன் பிடிக்க முடியவில்லையாம். பிறகுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த கன்னியை தன்னந்தனியாக அங்கே விட்டுச்சென்றதுதான் அதற்குக் காரணமாம். அதனால் அதற்குப் பரிகாரமாக, இறந்துபோன அந்த கன்னி ஆவியை சமாதானப்படுத்தும் பொருட்டு மிகப்பெரிய சைசில் 'அதை' மரத்தால் செய்து அங்கே நட்டுவைத்து விடவேண்டும் என தீர்மானித் -திருக்கிறார்கள்.

ஆனால் என்ன ஆச்சர்யம்... அதன் பின்னர் அவர்கள் வலையில் மீன்கள்  சிக்கோ சிக்கு என்று சிக்கியிருக்கிறது. பிற்பாடு அவர்களும் 'அதையே' கடவுளாகப் பாவித்து பூஜை செய்து(!) வணங்கி வருகிறார்களாம்...

இதுக்கு நம்ம ஊரு கன்னி ஆவிகள் எவ்வளவோ தேவலையப்பா... :-))



கலாட்டூன் கார்னர் :
ணர்ச்சியின் உச்சத்துக்குப் போன ஒரு ரத்தத்தின் ரத்தம், இப்படி போஸ்டர் அடிச்சி ஒட்டியிருந்திருக்கு.. நெஞ்சைப் பொளந்து அம்மாவை காண்பிக்கிறாராராமாம் . நான் விடுவேனா...? அந்த அப்ரசண்டியின் உணர்ச்சிக்கு உயிர் கொடுத்திட்டேன்... ! :-))



கிரிக்கெட்டின் ஆல்டைம் கடவுளாக மதிக்கப்படுகிற டொனால்டு பிராட்மேனை, அவரது வீட்டின் பூஜை -யறையில் தற்போதைய கடவுள்களான வார்னேவும், சச்சினும் சந்தித்தபோது... :-))









Thursday 7 November 2013

ஜெயமோ தந்திரம், எழுத்தே மந்திரம், தமிழே பத்திரம் சிவ சம்போ..!


Kaniyitai eriya sulaiyum -mutral 
kazhaiyitai eriya saarum,
panimalar eriya thenum- kaaichchup
paakitai eriya suvaiyum 
nanipasu pozhiyum paalum-thennai 
nalkiya kulirila neerum,
iniyana enpen eninum -thamizhai 
ennuyir enpen kanteer! 

ப்படி படிக்க  நல்லா இருக்குல்ல....

இதை எனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிற பிலிப்பைன்ஸ்காரனிடம்( Pacey Averilla) கொடுத்து படிக்கச் சொன்னேன். அவனது தாய்மொழி 'டகாலூக்'. அதன் வரிவடிவம் லத்தின் (ஆங்கில) எழுத்துகள். (அதாவது ஜெமோ சொன்னது போல் அதை 'எழுத்துரு'னு சொல்லலாம்... வரிவடிவம்னு சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. புண்ணாக்குனும் சொல்லலாம்) 

அவன் முதல் வரியை படித்துப் பார்த்துவிட்டு, "எழுத்தெல்லாம் ஓகே. ஆனால் இது டகாலூக் இல்லையே " என்றான். "ஆமா இந்த லாங்குவேஜ்க்கு பேரு 'டகால்டி' . இப்பத்தான் எங்க ஊர்ல புதுசா கண்டுபுடிச்சிருகாங்க..  நீங்களெல்லாம் இப்படி எழுதித்தான் பெரிய ஆளா இருக்கீங்கன்னு எங்க ஊரு விஞ்சானி ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிருக்காரு. இப்ப நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம்... கொஞ்சம் படிச்சி மட்டும் காமி " னு சொன்னேன்.

கொஞ்சம் தட்டுத்தடுமாறி முதல்வரியைப் படித்தவன், இரண்டாம் வரியை இப்படி படித்தான்." கசையடி எரிய சாரும்.." .  நல்லவேளை கசையடியோட என் தமிழ் தப்பித்தது.

எதற்காக அவனைப் படிக்கச் சொன்னேன் என்றால், ஜெயமோகன் குறிப்பிட்ட 'டகாலூக்' -ஐ தாய்மொழியாகக் கொண்டவன் என்பதற்காக மட்டுமல்ல, ஒருவேளை ஜெயமோகன் சொன்னது போல தமிழ் வரிவடிவம் வழக்கொழிந்து ஆங்கில(லத்தின்) வரிவடிவம் மட்டும் நம் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டப்பட்டால், அவர்களின் மொழி உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்துப் பார்க்கத்தான்.ஆனால் சர்வ நிச்சயமாக,  ன-ண, ர-ற, ழ-ள-ல இவை எல்லாம் காலப்போக்கில் ஒரே ஒலிவடிவத்தில் மாற்றம் கண்டு,  தமிழ் மெல்ல செத்து போகும்.

ஜெயமோகன் உதாரணம் காட்டும் மற்றொரு மொழி மலாய். மலேசிய மக்கள் பேசும் இம்மொழி லத்தின் (ஆங்கில) வரிவடிவத்தை பயன்படுத்தி எழுதப்படுகிறது. மலாய் மொழிக்கு தனித்துவமான வரி வடிவம் கிடையாது என்பது மட்டுமல்ல, நிறைய பதத்திற்கு நேரடியான மலாய் வார்த்தைகளே கிடையாது.

உதாரணத்திற்கு,

Doctor என்பதற்கு தமிழில் மருத்துவர் என்ற பெயர் உண்டு. ஆனால் மாலாய் மொழியில் அதை' Doktor ' என்று சொல்வார்கள். நான் சிங்கை வந்த புதிதில் உடம்பு சரியில்லை என்றவுடன் ஒரு மலேசிய தமிழ் நண்பர் ' போயி டொக்டர பாருங்க' என்றார். ஒருவேளை டாக்டரைத்தான் அப்படி உச்சரிக்கிறார் என்று நினைத்தால் கடைசியில் அவர் மாலாய் மொழியில் அப்படி சொல்லியிருக்கிறார் எனப் புரிந்தது.

அதே போல் நிறைய வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளையே  தழுவி வரும். biscuit  / biskut , coffee  / kopi,  lorry  / lori ..இப்படி நிறைய சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், சுயமான வார்த்தைகளே இல்லாத மலாய் மொழியோடு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியை, அதுவும் ஒர் தமிழ் இலக்கியவாதி ஒப்பிட்டு பேசுகிறாரே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக..! 

நிற்க,

எத்தனையோ இடையிறாத எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் இந்த மகா சிந்தனை ஜெயமோகன் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்று மங்குனி அமைச்சர் போல மணிக்கொருமுறை உட்காந்து யோசித்துப் பார்க்கிறேன்.

அதாகப்பட்டது....

அவர் சென்னையில் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றை கடந்து செல்லும் வேளையில் அங்கு வாசலில் ஒட்டியிருந்த ஓர் அறிவிப்பு  அவரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஆங்கில நூல் ஒன்று வெளிவந்த முதல் நாளே 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்பதற்கான அறிவிப்புதான் அது.


விழுமியங்கள், தரிசனம், மனவெழுச்சி, புறமொழி, நனவிலி, நிகழ்வியல், படிமங்கள், குறியீடுகள் என்று தமிழில் புதிய அகராதியே எழுதுமளவுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாற்றிக்கொண்டிருக்கும் இலக்கியவாதியான எனது புத்தகங்களே வருடத்திற்கு 500 பிரதிகள் விற்பது குதிரைக் கொம்பாக இருக்கும் தமிழ்ச்சூழலில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஒரே நாளில் 2,000 பிரதிகள் எப்படி விற்றது என்று அப்படியே ஓரமாக முட்டுச்சந்தில் உட்கார்ந்து முக்கி முக்கி யோசித்த பொழுதுதான் இப்படியொரு ‘தரிசனம்’ அவருக்குக் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது,ஜெமோ அவர்கள் பேனா பிடித்து எழுதி பதிமூன்று வருடங்களாகிறதாம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகளை தட்டச்சு செய்து தமிழில் எழுதுவது போரடித்துவிட்டதால், நேரடியாக ஆங்கில 'எழுத்துரு' வையே பயன்படுத்தலாமே என்கிற யோசனை வந்திருக்கிறது. 

வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால் வீட்டையே கொளுத்துவது எப்படி சரிவரும் ஜெமோ சார்?. தமிழ் இலக்கியப் பரப்பில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி மட்டுமல்ல, விஷ்ணு புரம், அறம் போன்ற அற்புதப் படைப்புகளை தமிழுக்கு அருளியவர் நீங்கள். அதற்காக தமிழ் இலக்கிய உலகமே உங்களைச்சுற்றி சுழலவேண்டும் என நினைப்பது எப்படி சரியாகும்..?  நீங்கள் எழுதிய நூல்கள் வருடத்திற்கு 500 பிரதிகள்தான் விற்கிறது என்றால் அதுதான் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிற்கான வணிக வரையறையா..?  நீயா நானா கோபி, சோம வள்ளியப்பன் எழுதிய புத்தகங்கள் லட்சக் கணக்கான பிரதிகள் விற்றதாக சொல்கிறார்களே...? சுஜாதா, இறையன்பு எழுதிய புத்தகங்கள் பல்லாயிரக் கணக்கில் விற்றுள்ளதாக ஒரு பதிப்பாளர் சொல்கிறாரே.?

தமிழில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்படாததற்கு தமிழ் எழுத்துருவே காரணம் என்றால் இது மட்டும் எப்படி சாத்தியமானது.?. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனுக்கு உங்கள் நாவல்களை வாசிக்கத் தடையாக இருப்பது உங்கள் மொழியின் கனமே அன்றி எழுத்துரு அல்ல. உங்களின் கட்டுரைக்கு வந்த எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் மீதான தனி மனித தாக்குதல் அல்ல. உங்களது கருத்துக்கான எதிர்வினைகள். எமது தாய்த் தமிழை சிறு களங்கமுமில்லாமல் எங்களின் அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடு. அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைவிட எங்களுக்கு நிறையவே இருக்கிறது. 


டிஸ்கி

ஜெமோ-வின் கட்டுரை வெளியாகிய சில மணி நேரத்திலே அதற்கான எதிர்வினைகள் பேஸ்புக்கில் வெளியாகி, அவரது கருத்துக்கெதிராக பலரும் பொங்கித்தள்ளினர். இரண்டு நாட்கள் வரை விவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக சில தமிழார்வ அரசியல் தலைவர்கள்  'தி இந்து' அலுவலகத்திற்குச் சென்று எதிர்ப்பை நேரிடையாக பதிவு செய்தனர். ஏனோ தெரியவில்லை.... பிளாக்கரிலும் வலைத்தளத்திலும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிளாக்கர்கள் வெறுமனே சினிமா விமர்சனம் எழுதத்தான் லாயக்கு என சில பேஸ்புக் பதிவர்கள் கிண்டலடித்ததைப் படித்திருக்கிறேன்.. ஒருவேளை அதுதான் உண்மையோ...!     

Monday 4 November 2013

தமிழ் சினிமாவில் சாதிய வன்மங்கள்...(பகுதி -1)


தீபாவளியன்று சன் டிவியில் 'திரைப்படங்களால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றங்கள்' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்ததை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருபுறமும் பொங்கித் தள்ளினார்கள். குறிப்பாக எதிரணியில் சினிமா ஏற்படுத்திய சமூக சீர்கேடுகள் பற்றி பல ஆதாரங்களுடன் பாரதி பாஸ்கர் உள்ளிட்ட அவரின் சகாக்கள் உணர்ச்சிப் பொங்கக் கதறிக் கொட்டினர்.அவர்கள் பட்டியலிட்ட சீர்கேடுகளில் முக்கியமான ஒன்றை விட்டுவிட்டனர். அது, நமக்கே தெரியாமல், நம் சமூகப் பரப்பில் திரைப்படங்கள் மறைமுகமாக விதைத்துள்ள சாதிய வன்மங்கள்.
 

சில வருடங்களுக்கு முன்பு சிங்கையில், தமிழ் சினிமா 75 வருட நிறைவையொட்டி தமிழ் திரைப்படக் கலைஞர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அதில் ஒரு பகுதியாக இதேமாதிரி ஒரு பட்டிமன்றம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

' தமிழ் சினிமா,சமூகத்திற்கு கேடுவிளைவிக்கிறதா இல்லையா..' என்பது போன்ற தலைப்பு. ஆம் என்று வாதிட, ராஜா, பாரதி பாஸ்கர், உள்ளூர் கலைஞர்களான வடிவழகன் மற்றும் இன்னொரு பெண்மணி. இல்லை என்று பேச பாரதிராஜா, சத்யராஜ், 'சிந்தனைச்செல்வி' குஷ்பு, இன்னொருவர்(ஞாபகமில்லை ). கண்டிப்பாக எவரும் கேடு விளைவிக்கிறது என்று அடித்துப் பேசப்போவதில்லை. பட்டிமன்ற முடிவும் சாதகமாகத்தான் இருக்கும். ஏனெனில், அது தமிழ் சினிமாவைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா.    

முதலில் 'சிந்தனைச்செல்வி,நாளைய தமிழகம்' குஷ்பு பேச அழைக்கப்பட்டார்.அவருக்கு மைக் பிடித்து பேசத்தெரியும் என்பதே அப்போதுதான் தெரியும். அவரது கன்னிப்பேச்சில் பிரதானமாக இருந்தது இதுதான்.  "டமில் சினிமாவிலே ஷாதி இல்லே. மதம் இல்லே. எங்களுக்குள்ள வேறுபாடு இல்லே. ஷாதி, மதம் எல்லாம் கடந்து ஒற்றுமையா இருக்கோம். நாங்கள் மக்களுக்கு சொல்வதும் இதுதான். இது மாறி வேறு துறைகள் இருக்கா." அப்படினு பேசி கைதட்டல் வாங்கினாங்க. (கைதட்டினது எல்லாம் நம்ம பயபுள்ளைகதான் ).

அடுத்ததாக, இந்தப் பக்கத்திலிருந்து வடிவழகன் பேச அழைக்கப்பட்டார். வடிவழகன் சிங்கப்பூர்வாசி. அவர் இப்படி ஆரம்பிக்கிறார்... "குஷ்பு மேடம் சொன்னாங்க,தமிழ் சினிமாவில் சாதி இல்லைனு.உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் சாதி என்றால் என்னானு தெரியாது. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் எத்தனை சாதிகள் இருக்கிறது என்பதை நாங்கள் தமிழ் சினிமாவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம்."என்று சொல்லி முடிக்கக் கரகோஷம் அரங்கக் கூரையைப் பிளந்தது( இப்ப கைத்தட்டினதும் அதே பயபுள்ளைகதான்). ஆகா.. பார்க்க வேண்டுமே..! இயக்குனர் இமயத்தின் முகத்தில் ஈயாடவில்லை.

இந்திய மண் வாசனையையே அறியாத வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் சாதி பாகுபாடு அறவே கிடையாது. பலருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. சிங்கை வந்த புதிதில், எவரிடமும் சாதியைக் கேட்கும் ஈனப்புத்தியும் அடித்துக் கேட்டாலும் சாதியை சொல்லும் பழக்கமும் இல்லாத நான், சில சிங்கை,மலேசியா வாழ் தமிழர்களிடம் அங்குள்ள வாழ்வியல் முறைகளைப் பற்றி விசாரிக்கும்போது, சாதி பற்றிய அவர்களின் புரிதல் எப்படிப்பட்டது என அறிந்துகொள்வதற்காக சில கேள்விகளை வைத்தேன்.  நல்லவேளை எவரும்  'யார்ட்ட வந்துடா சாதியை கேட்ட..? ' என்று சட்டையைப் பிடிக்கவில்லை.

ஆனால் எவருக்குமே அவர்களின் சாதி தெரிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். ஒருவேளை அதற்கான அவசியமும் இல்லை போல. மாறாக, " சாதினா...கவுண்டரு, தேவருனு சொல்லுவாங்களே.. அதுவா..?  சினிமாவில பாத்திருக்கேன்ல்லா.." என்று அவர்கள் சொன்னபோதுதான், தமிழ்சினிமா எந்தளவு சாதி பற்றிய சிந்தனைகளை கடல்கடந்து விதைத்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

இதிலென்ன இருக்கிறது...?. சாதி கட்டமைப்புகள் நம் தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று தானே. அதைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதில் என்ன தவறு இருக்கிறது.... தவிரவும் இதில் வன்மம் எங்கே வருகிறது... என்ற மேம்போக்கான எண்ணம் கொண்டவராக இருப்பின், உங்களுக்கான அலசல்தான் இது. 

தமிழ் சினிமாவில் சாதிய வன்மம் என்கிற கண்ணோட்டத்தில் அலச முற்பட்டால், அதை 1990-களுக்கு முன், 1990-களுக்குப் பின் என்று முதலில் வகைப்படுத்தவேண்டும். எதன் அடிப்படையில் இந்தப் பிரிவு என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.சாதிப் பெயர்களைத் தாங்கி வந்தத் திரைப்படங்களையும் சாதிப் பெருமிதங் -களைத் தாங்கிவந்த திரைப்படங்களையும் வகைப்படுத்தவே இந்தப் பிரிவு. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தற்போது குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தப் பதிவு முடியும்போது அதற்கான தெளிவு கிடைக்கும்.

குறத்தி மகன்
முதலில் 1990 க்கு முன் வந்தத் திரைப்படங்களை அலசுவோம்.

90-களுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் சாதிப் பெயர்களைத் தாங்கி வந்தத் திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால் இரட்டை இலக்கத்தைக் கூடத் தொடாது என்பது என் கணிப்பு. ( நன்றி wikipedia)

ஹரிஜனப் பெண் (1937)
சந்தனத் தேவன்(1939)
ஹரிஜன சிங்கம்(1940)
பாண்டித்தேவன்(1959)
சங்கிலித் தேவன்(1960)
புரட்சி வீரன் பூலித்தேவன்( 1963)
மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)
குறத்தி மகன்(1972)
நாயக்கரின் மகள்(1982)

நான் தேடிய வகையில் 1931-1990 வரையிலான அறுபது ஆண்டுகள் தமிழ் சினிமா வரலாற்றில் சாதிப் பெயர்களைத் தலைப்பில் தாங்கி வந்த நேரடித் தமிழ்ப் படங்கள் இவை. (1948 -ல் ராமதாஸ் என்கிற தலைப்பில் ஒரு படம் வந்திருக்கிறது. தெரியாமல் முதலில் அதையும் இந்தப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்..)

இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், இத்திரைப்படங்கள் யாவும் தலைப்பில் மட்டும் சாதிப் பெயர்களைத் தாங்கி வந்ததேயொழிய கதைக்கருவைப் பொருத்தவரையில் சமகால சாதிப் பெருமிதங்களைத் தூக்கிப் பிடிக்கும் திரைப்படங்களோடு ஒப்பிடத் தக்கவைதானா என்பதை யோசிக்கவேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,தேவர் மகன் படத்திற்கு முன்பு தன் சாதி அடையாளத்தைத் தாங்கிவந்த எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. அதேவேளையில், என் மகன்(1974) படத்தில் "நான் ராமையாத் தேவன்டா...",  பட்டிக்காடா பட்டணமா(1972) படத்தில் "நான் சேர்வைடா....", முதல் மரியாதை படத்தில் "நான் சுத்தமான தேவன்டா... " என்று தனது சிம்மக்குரலில் சாதிப் பெருமையடித்ததையும் மறுக்க முடியாது.


ஆனால், 90 களுக்கு முன்பு வந்த எந்தத் திரைப்படத்திலும் ஆதிக்க சாதியினரை வானத்தைப் போல மனம் படைத்தவராகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல்சட்டைப் போடாமல், துண்டை அக்குளில் செருகிக்கொண்டு மம்மியைக் கண்ட அமைச்சர்கள் போல பம்மியபடி கும்பிடு போடுவராகக் காண்பித்ததில்லை...

சாதிப்பெயர் சூட்டி,சாதிப்பெருமிதம் பேசும் திரைப்படங்களை எடுத்து தமிழ்த் திரைப்படத்துறையில் சீரழிவுப் பாதைக்கு வழி உருவாக்கிக் கொடுத்தப் பெருமை இயக்குனர் மனோஜ்குமார் அவர்களையேச் சாரும். அவர் உருவாக்கிய பாதையில் பயணித்து தமிழ் சினிமாவை இன்னும் அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஆர்.வி.உதயகுமாரும், கே.எஸ் ரவிக்குமாரும். இந்த இரண்டு சுமார் மூஞ்சி குமார்களின் முகத்திரையை அடுத்தப் பகுதியில் கிழித்தெடுக்கிறேன்.