Showing posts with label 3D படங்கள். Show all posts
Showing posts with label 3D படங்கள். Show all posts

Friday, 29 November 2013

தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் சங்கரராமன்..

(மு.கு: ஆனந்தவிகடனின் 3D கண்ணாடியைப் பயன்படுத்தி 20 வினாடிகள் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் இரண்டு திருடர்கள் திரிடியில் 'எழுந்தருளி' காட்சித் தருவார்கள். அப்படியே காறித்துப்பிவிட்டு அடுத்தப் படத்திற்கு செல்லவும். கடைசியாக சின்னவா-லின் கனவுக்கன்னி உங்களுக்காக கவர்ச்சி விருந்து படைக்கக் காத்திருக்கிறாள். )

மிழ் சினிமாவில் வழமையான ஒரு கிளைமாக்ஸ் காட்சியமைப்பு உண்டு. கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹீரோ, நிரபராதி என்று தெரிந்தவுடன், தீர்ப்பின் முடிவில் "ஜட்ஜ் அய்யா" இப்படித்தான் சொல்வார்,
 "........ .... .....  ஆகவே இந்தக்கொலையை ராஜா செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கொலையை யார் செய்தது என்பதை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது ".

இப்படிக்கூட சொல்லவில்லை.குற்றவாளிகள் எனத்தெரிந்திருந்தும்,மொத்தமாக விடுதலை செய்யப்பட்டிருக் -கிறது ஒரு மொள்ளமாரிக் கும்பல்.

கைப்புள்ள அரிவாளோட கிளம்பிடிச்சி...
ஆக,செத்தவனே நேரில் வந்து, "சத்தியமா இவன்தான் சாமி என்னை வெட்டிக்கொன்றான்" என்று சொன்னாலும் "ஏய்  நீ வாயை மூடுல... நாங்கத்தான் பெரியவங்க சொல்றோம்ல, சரியான சாட்சி இல்லன்னு... எல்லாம் சட்டப்படிதாம்ல செய்யுறோம். உன்னை யார் கொன்னதுனு நீ சொல்லக்கூடாது. பின்ன சட்டம் படிச்ச நாங்க எதுக்கு இருக்கோம் " அப்படின்னு செத்தவன்கிட்டேயே வகுப்பு எடுப்பாய்ங்க நம் நாட்டு சட்ட மேதைகள்.

துருப்பிடித்த, ஓட்டைவிழுந்த, ஒத்தப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நம் தேசத்து சட்ட அமைப்புகளை வைத்து ஒரு ம#&%*ம் புடுங்க முடியாது. பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

சரி....., வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்திருந்த சங்கரராமனை ஜெயேந்திரன், விஜேயேந்திரன் ( ' ர் ' போடும் அளவுக்கு இவனுளுக்கு தகுதி இல்லீங்க ஆபிசர்) குரூப் கொலை செய்யவில்லை. அதைத்தான் நம் சட்டம் தெளிவுபட சொல்லிவிட்டது. அதனால்தானே எந்தக்குற்றமும் செய்யாத இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சங்கரராமன் எப்படி செத்திருப்பார்..?

இது ஒரு புறமிருக்க, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரராமனின் மகன் அறிவித்திருக்கிறாராம். அந்தத் தம்பிக்கு நம்ம நாட்டு சட்டங்களைப் பற்றிய அடிப்படையறிவும், நீதி அமைப்புகளின் நெளிவு சுளிவுகளும் சரியாகத் தெரியவில்லை போல. தற்போதாவது சங்கரராமன் கொலை செய்யப்பட்டார் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மேல்முறையீடு செய்தால், அவர்களின் தீர்ப்பு இப்படியாகத்தான் இருக்கும்..

# சங்கரராமனே அரிவாளை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப் போயிருக்க வேண்டும். அதை மறைக்க,செத்துப்போனபிறகு அவர் பயன்படுத்திய அந்த அரிவாளை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அவரே மறைத்திருக்க வேண்டும்.

#  பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும் ஏழாம் உலகத்து மக்களுக்கு அவசரமாக ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டிருக்கலாம். அங்கு நம்மவூர் சங்கரராமனைப் போல் தோற்றம் உடைய ஒரு மக்கு மட சாம்பிராணிக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, நமது உலகத்தில் இருக்கும் சங்கரராமனை கொன்று அந்த உலகத்திற்கு தெய்வத்தாய் அழைத்து சென்றிருக்கலாம்.

# நடிகர் முத்துக்காளையின் நெருங்கிய உறவினரான சங்கரராமன், ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு ரவுடிக் கும்பலைக் கூப்பிட்டு அவர்களுடன் 'செத்து செத்து விளையாடும்' விளையாட்டை விளையாடும் பொழுது, ஒருவேளை செத்துப் போயிருக்கலாம்.

# (இது முகநூளில் ஒரு நண்பர் போட்டது) வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச் சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த சங்கரராமன், கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத் தூக்கிய போது பேலன்ஸ் தவறி, பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்தலை அடிபட்டு ரத்தம் வெளியேறியிருப்பதாகவும், அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர, ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப் பிறகு அதை நக்கிப் பார்த்தவர் சொன்னதாகவும் கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


இதுபோலத்தான் முன்பு, தா.கிருட்டிணன் ரோட்டில் வாங்கிங் செய்துகொண்டிருந்த பொழுது, முதுகு அரிக்கிறது என்று அரிவாளை எடுத்து சொறியப்போய், அது தவறுதலாக கை, கால், கழுத்து, தலை என்று சரமாரியாக வெட்டிவிட, அந்த இடத்திலேயே அவர் செத்துப்போனார்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் கொசுவர்த்திச்சுருள் பத்தவைக்கப் போய்,அதிலிருந்து கிளப்பிய தீப்பிழம்பால் மூன்று பேர் உடல்கருகி 'தற்கொலை' செய்து கொண்டார்கள்.

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தது பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகள்தான் என்பதை தமிழக அரசு ஆணித்தரமாக நம்புவதாக அறியநேர்கிறது .

இதுபோல தானாகவே வெட்டிக்கொண்டு செத்துப்போனவர்கள் நம் தேசத்தில் ஏராளம்.முன்பு சாட்சியளித்த -வர்கள் தற்போது பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்களாம். ஒரு வழக்கை ஒன்பது வருடத்திற்கு இழுத்தடித்தால் ஏன் பிறழ் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் ?. "செத்துப்போனவன் உசுரோடவா வரப்போறான்... ஆனால் அவன் உசுரோட இருந்தா உங்களுக்கு என்ன செஞ்சியிருப்பானோ அதைவிட பல மடங்கு நாங்க செய்யுறோம்.." என்று ஆரம்பிக்கும் பேரத்தில் முக்கிய சாட்சியே பல்டி அடிக்கும் பொழுது , மற்ற சாட்சிகள் என்ன செய்யும்..?  

ஒரு ஆட்சியில் நெருக்கிப் பிடிக்கப்படும் கழுத்து, அடுத்த ஆட்சியில் தளர்த்தப் படுகிறது. குற்றத்தின் அடிப்படையில் வழக்கின் ஸ்திரத்தன்மை இங்கே பேணப்படுவதில்லை. எந்த ஆட்சியில் போடப்பட்டது என்பதைப் பொறுத்தே அவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இவ்வழக்கு, அடுத்து கலைஞர் ஆட்சியில் நீர்த்துப்போகும்படி செய்யப்பட்டது. எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கப்பட்ட கொடுமையெல்லாம் அப்போதுதான் நடந்தது. வெறுமனே தீர்ப்பு மட்டும் தற்போது வாசித்திருக்கிறார்கள்.

அடுத்த சில வருடங்களில் நாம் இன்னொரு உண்மையை உணரவேண்டிவரும்..." நமது முன்னாள் பாரதப் பிரதமர், தன்னைத்தானே வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததால்தான் செத்துப்போனார் ".


(ஸ்சொர்ணக்கா ......" ச்வீட் எடு..கொண்டாடு..")


Tuesday, 24 April 2012

டிவி சீரியலும் கில்மா படக்காலண்டரும் -ஏன் இப்படி இருக்கு?(சிதறல்கள்-6)



 வானம் வசப்படும்.....

       சிங்கப்பூர் ஒலி 96.8 FM வானொலியில் சில  வருடங்களுக்கு முன் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சி.ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரைப் பற்றி அழகாகத் தொகுத்து வழங்குவார்கள்.அவர்கள் பேசும் நடையும்,துல்லியமாகத் தரும் தகவல்களும்,பின்னணியில் வரும் இசையும் அப்படியே நம்மைக் கட்டிப் போட்டு விடும்.ஒரு முறையாவது இதைக் கேட்டுப் பாருங்கள்... 





--------------------------------------------------------------------------

 நான் ஏன் இப்படியிருக்கேன்?

        பதிவுலகில எங்கிருந்துதான் ரொம்ப கேஷுவலான தலைப்பெல்லாம் புடிக்கிறாங்களோ தெரியில.சொல்ல வந்த விசயங்கள விட அதன் தலைப்பு தான் மனசில பசைப்போட்டு ஒட்டிக்கிது. ஆனா என்ன....சில நேரங்களில பின் விளைவையும் இது ஏற்படுத்திடுது.கொஞ்ச நாட்களுக்கு முன் நண்பர் தமிழ்வாசி பிரகாஷின் பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு? படிச்சுட்டு,ரெண்டு நாளைக்கு எதப்பாத்தாலும் இந்த கிச்சன் ஏன் இப்படியிருக்கு?, இந்த பாத்ரூம் ஏன் இப்படி இருக்கு?,இந்த டிவி-ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?-னு கேக்க ஆரம்பிச்சுட்டேன்.நல்லாத்தான இருந்தாரு இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு வீட்ல வேற சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் கொஞ்ச நாட்கள்ல அது சரியாயிடுச்சு. இப்படித்தான் நேத்திக்கு  நைட் இன்னொரு பதிவரோட பதிவப் படிச்சி அப்படியே லயிச்சி போயிட்டேன். இன்னிக்கி காலையில ஆபிஸ் மீட்டிங்க்ல ப்ராஜெக்ட் விசயமா பேசிக்கிட்டு இருக்கும் போது எங்க பாஸ் தோ கேட்க,எப்படித்தான் அந்த வார்த்தையை சொன்னேனோ தெரியல.பாஸே குழம்பிப் போய் அவர் முகமே கேள்விக்குறி மாதிரி வளைஞ்சி போச்சி. நல்லவேளை அவருக்கு அர்த்தம் புரியாததால நான் தப்பிச்சேன். அப்படி ஒன்னும் தப்பா ஏதும் சொல்லிடலங்க..அவரு என்னைப் பார்த்து ஆச்சர்யமா, எப்படி உனக்கு இப்படி தோணிச்சினு கேட்டார்.அதுக்கு நான் சொன்ன பதில்.. ஹி.ஹி .'நானா யோசிச்சேன்'  
      

----------------------------------------------------------------------------------------------------------------
 இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?


      வர வர இந்த டிவி சீரியலே பார்க்கப் பிடிக்கல.... பின்ன என்னங்க.. திடீர் திடீர்னு இவருக்குப் பதில்அவர்,அவருக்குப் பதில் இவர்னு ஆள மாத்திக்கிட்டே இருக்காங்க.ஒரு கன்டினியுட்டியே இருக்க மாட்டேங்குது.அதுவும் ரொம்ப முக்கியமான கேரக்டர்களை மாற்றும்போது கதையோட அழுத்தமே குறைந்து போயிடுது.

      சன் டிவியின்  தொடர்களிலே டாப்ல உள்ள தென்றல்-ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.டிவி சீரியல் என்றாலே குறைந்தது ஒரு நாளைக்கு ரெண்டு பேராவது அழுகிற மாதிரி சீன் இருந்தே ஆகணும் என்கிற விதியை உடைச்ச ஒரு சில தொடர்களில் தென்றலுக்கும் தனி இடமுண்டு. "பெண்ணென்பவள் பூவில்லையே பூகம்பம் நேர்ந்திடும் வேளையிலே.." என்று பாடகர் கார்த்திக்கின் கணீர் குரல் இரவு ஒன்பது மணிக்கு ஒலிக்கும் போது,எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, டிவியின் முன் உட்கார வைத்து விடுவது தென்றலின் தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட சீரியல்ல கொஞ்ச நாளைக்கு முன்னால் துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலா 'துண்டு' கேரக்டர்ல நடித்த ஒரு நடிகையை போட்டிருக்காங்க.ஆனால் சாந்தி வில்லிமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாரா வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.

       சரி இவங்கள விடுங்க...துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டாங்க.இந்த நாடகத்தில இவங்களுக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். துளசிக்கு இவங்கதான் அம்மான்னு தெரிய வருகிற நேரம்.துளசியோட ரியாக்சன் எப்படி இருக்கும், ஐஸ்வர்யாவை எப்படியெல்லாம் நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கப்போறாங்க,அதுக்கு ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க.இதுல இன்னொரு கொடுமை என்னானா...இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரன். இவங்களைப் பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட சூட் ஆகல.எனக்கு ஒரு டவுட்டு...பிற்பாடு,இதுதான் உன் அம்மா-னு துளசியோட  அப்பா,சுதாசந்திரனை நோக்கிக் கை காட்டும் போது,அய்யய்யோ இது எங்க அம்மா இல்ல.அவங்க இப்படி இருக்கமாட்டாங்க.ஐஸ்வர்யாதான் எங்க அம்மானு சொல்லிட்டா என்ன பன்றது? ச்சே....இதுக்குத்தான் ஓவரா சீரியல் பாக்கக் கூடாது. 

     இந்தக் கூத்து தென்றலில் மட்டுமல்ல...திருமதி செல்வத்திலும் இருக்கு. முதல்ல நந்தினிங்கிற கேரக்டர்ல ஒரு பொண்ணு நடிச்சது.பிற்பாட்டு இதைத் தூக்கிட்டு லதாராவ் வந்தாங்க.இப்ப லதாராவை தூக்கிட்டு  திரும்பவும் அதேப் பெண்.இதே மாதிரி நாதஸ்வரம்...மௌலியின் மூத்தப் பெண்ணை இதுவரை நான்கு தடவை மாற்றியாச்சு.ராசியில்லாத கேரக்டர் போல...

    இப்பெல்லாம் சீரியல்ல யாராச்சும் புதுசா வந்தாங்கன்னா,யாருக்குப் பதிலா இவங்கனு கேட்க வேண்டியிருக்கு. ச்சே....இந்த டிவி சீரியல் எல்லாம் ஏன் இப்படி இருக்கு?

---------------------------------------------------------------------------------------------------- 

இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?


       ஒரு வழியா விவேக் கண்ட கனவு நினைவாகிடும்னு நெனைக்கிறேன். பயப்படாதீங்க.இது சென்னையில உள்ள ஒரு பஸ் ஸ்டாண்ட்.சென்னையில நிறைய டிராபிக் ஜாம் ஆகுதாம்.அதனால மாநகராட்சியே இந்த பைபாஸ் வழிய திறந்து விட்டிருக்கு.உள்ளே டிராபிக் ஜாமே இல்லையாம்.இப்படிக்கா குதிச்சீங்கனா, எப்படிக்கா வேணும்னாலும் வெளிய வரலாமாம்.காலையில ஆபிசுக்கு போறவங்க இந்த ரூட்ட பயன்படுத்தினா கரக்ட் டைமுக்கு போயிடுலாம்னு பேசிக்கிறாங்க.என்ன ஒரு பிராப்ளம்னா ...மழைக் காலத்தில இது வழியாப் போகணும்னா நீச்சல் அடிக்கத் தெரிஞ்சிருக்கணும். ச்சே.. இந்த பஸ் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?

----------------------------------------------------x ----------------------------------------------------- 

சிங்கப்பூரும்  கில்மா பட காலண்டரும்.


         
  நான் சென்னையில வேலை பார்த்தப்போ நியூ இயர்  காம்ப்ளிமண்ட்ஸா  எங்க ஆபிசுக்கு நிறைய காலண்டர் வரும்.அதுல எல்லாமே சாமி படம்(நிஜ சாமிங்க..)அல்லது இயற்கைக் காட்சி சம்மந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும். ஆனால் சிங்கபூர்ல இது மாதிரி வர்ற காலண்டர் எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி ரகமாத்தான் இருக்கும்.முக்கால் நிர்வாணத்தோடு பீச்சுல படுத்து போஸ் கொடுக்கிறது,அருவிக்குப் பக்கத்தில நின்னு மலையில சாஞ்சிகிட்டே போஸ் கொடுக்கிறது,இலை,செடி மறைவுல நின்னு பார்க்கிறதுனு நெறைய ஆங்கில்ல எடுத்த போட்டோக்கள் அதுல இருக்கும்.தாய்லாந்து,சீனா, இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்-னு பாரபட்சம் பார்க்காம எல்லா நாட்டு பொண்ணுங்களோட போட்டோவும் இருக்கும்.இதுல...இந்தக் காலண்டர் எல்லோருடைய டேபிள் மேலேயும் இருக்கணும்னு கண்டிசன் வேற.சரி..இதுக்குப் பின்னாடி ஏதாவது கதை இருக்கானு கேட்டா,அப்படியேதும் இல்லைங்கிறாங்க.ஏன்னா...சைனாக்காரங்க எதற்கெடுத்தாலும் ஒரு கதை சொல்வாங்க. 

      போன வாரம் எங்க HR மேனேஜர் லீவு விசயமா பேசறுத்துக்காக என் டேபிளுக்கு வந்தாங்க.அவங்க ஒரு சைனா கேர்ள்.நான் என் டேபிள்ள இருந்த காலன்டர எடுத்து வச்சுக்கிட்டு அவங்களுக்கு தீவிரமா விளக்கிக்கிட்டு இருந்தேன்.அவங்களும் எல்லாத்தையும் பொறுமையாக் கேட்டுட்டு ஓகேனு சொல்லிட்டு போய்ட்டாங்க.அவங்க போனப்பின்னதான் பார்த்தேன் என் கைல இருந்தது 'அந்த மாதிரி' காலண்டர். அடச்சே..இந்த கன்றாவியத்தான் இவ்வளவு நேரமா விளக்கிகிட்டு இருந்தேனா..பாவம் அந்தப்புள்ள எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும்...  

   அதிருக்கட்டும்,இந்த மாதிரி காலண்டருக்கு பொட்டப் புள்ளைங்க மட்டும் தான் போஸ் கொடுக்கனுங்களா... ஏன் நாம கொடுக்கக்கூடாது? 

 ------------------------------------------------------------------------


3D  CORNER                                          காமாட்சி


 மனதை மட்டுமல்ல,கண்களை ஒருமுகப் படுத்தினால் கூட கடவுளைக் காணலாம்.




----------------------------------------------------((((((((((((((((((((((((())))))))))))))))))))))))------------------





Saturday, 31 March 2012

சிதறல்கள்-6

முத்தத் திருவிழா ...       
   
     நம்ம ஊர்ல கலாச்சார சீர்கேடு என்று சொல்லப்படும் பொது இடத்தில் முத்தமிடுதல்,இந்தோனேசியாவில் ஒரு கலாச்சார விழாவாகவே நடத்தப் படுகிறது.பல தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் பாலித்தீவு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம்.இங்கு வருடந்தோறும்  ஓமெட்- ஓமெடன் (Omed-Omedan) என்ற முத்தமிடும் திருவிழா நடக்கிறதாம்.இது கடந்த வாரம் இந்தத் தீவில் வெகு விமரிசையாக நடந்து முடிந்ததாம்.


     இது 17ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு நடக்கிறதாம்.ஓமெட் என்றால் பாலி மொழியில் இழு என்று பொருள்.ஓமெட்- ஓமெடன் என்றால் ஒருவரை ஒருவர் இழுத்துக்கொள்ளுதல் என்று அர்த்தம் வருமாம்(இதில் எங்கே கிஸ் வருகிறது?). ஆனால் இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஒரு அரசன்  உடல்நிலை சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாராம். அப்போது அவரது மாளிகைக்கு வெளியே சில இளைஞர்களும் பெண்களும் இதுபோல் முத்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளனராம்.ஒரு பக்கம் ஆண்களும் மறுபக்கம் பெண்களும் நின்று கொண்டு இரண்டு பக்கத்திலிருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதற்காக தள்ளிவிடுவார்களாம். இவர்கள் போட்ட சத்தத்தில் தூக்கத்தை இழந்த அரசர் படுக்கையை விட்டு எழுந்து வந்து இவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு பின் உள்ளே சென்ற அரசருக்கு ஒரே ஆச்சர்யம். அது வரை இவரைப் பிடித்திருந்த நோய் விலகி பூரண குணமாகிவிட்டாராம். உடனே அவர் மூளையில் உதித்தது அந்த யோசனை.இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விளையாட்டை இங்குள்ளவர்கள் விளையாட வேண்டும் என்று புலிகேசி ஸ்டைலில் உத்தரவு போட்டுவிட்டாராம்.
போருக்கு புறப்படும் முன் 
தயார் நிலையில் பெண்களும் ஆண்களும் 
ஓசியில் படம் பார்க்கும் உற்சாகத்தில் திரண்ட கூட்டம் 

    முத்தத் திருவிழா என்றால் கண்டபடி கண்ட இடத்தில் அவரவர் இஷ்டம் போல் முத்தமிட்டுக்கொள்வது என்று பொருளாகாது.இதற்கென்று நிறைய விதிமுறைகள் உள்ளனவாம்.இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முதலில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.பிறகு இதற்கென்று இருக்கும் 'பதினோரு பேர் கொண்ட ஒரு குழு' 50ஆண்கள்,50பெண்களை தேர்ந்தெடுக்கும்.பின்பு அவர்கள்  அனைவரும் 'புர பன்ஜார்' என்ற கடவுளை வணங்கி பிராத்தனை செய்து விட்டு, இந்த முத்தப் போருக்கு தயாராகி விடுவார்களாம்.இதில் இன்னொரு சுவாரஸ்யம் யாருடன் யார் ஜோடி சேருவார்கள் என்று  யாருக்குமே தெரியாதாம்.எல்லாம் அந்த சாமிக்கே வெளிச்சம்.காஞ்சமாடு கம்புல புகுந்த கதையா எதுவும் ஆகிட கூடாது என்று உஷாரா நாலு ஆளுங்க சுத்தி நின்னு தண்ணிய ஊத்திகிட்டே இருப்பாங்களாம்(பின்ன...தீப்பிடிக்க முத்தம் கொடுத்தா.. அத எப்படி அணைக்கிரதாம்?) 
       வரம்பு மீறவில்லை என்றால் எதுவும் தப்பில்லை போல.....

மேலே சொன்ன செய்திக்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
------------------------------------------------------------x -------------------------------------------------------- 
 உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

அடுத்து ஒரு சூடான மேட்டர்..(மேலே சொன்னது மட்டும் என்னவாம்?) 

  சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி எ‌ன்ற 26 வயததிபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை தனி நாடக பிரிக்க வேண்டும் என்று திபெத்தியர்கள் தலாய்லாமா தலைமையில் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இவர்களின் கோரிக்கைகளுக்கு சீனாவும்  செவி சாய்ப்பதாக இல்லை.சீனா பல முறை எச்சரித்தாலும் இவர்கள் விசயத்தில் இந்தியா எப்போதும் தலாய்லாமாவிற்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இலங்கை விசயத்தில் மட்டும் ஏன் இந்த ஒரு  தலை பட்சமோ....?


உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?....ஒரு ஜீவன் இங்கே தீயில் கருகி மரணத்தின் வாசலில் விழுந்து துடித்துக் கொண்டிருக்க.... அவரைக்  காப்பாற்றுவதை விட்டுவிட்டு தன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள். 


-----------------------------------------------x ----------------------------------------------------

 நெத்தியடி....

தந்தை பெரியாரிடம் ஒருவர், "மதம் வேண்டாம் என்று கூறுகிறீர்களே..அதற்குப் பதிலாக வேறு எதைப் பின்பற்றுவது?...."

 இதற்கு பெரியாரின் நெத்தியடி பதில்...

"கதவு இடுக்கிலிருந்து கையை எடு..கை நசுங்கி விடும் என்றால் கையை வேறு எங்கே வைப்பது என்று கேட்கிறீர்களே?......."

----------------------------------------------x------------------------------------------------------------------------
 சும்மா அதிரப்போகுதுல்ல!!!!!!...


 21 வருடங்களுக்குப் பிறகு சொந்தக்குரலில் பாடி அசத்தப்போகும் சூப்பர் ஸ்டார் ...கலக்கு தலைவா...
----------------------------------------------------------x---------------------------------------------------------
       MAESTRO......


----------------------------------------------------X------------------------------------------------------

3D CORNER


                         தெய்வ தரிசனம்: சிவன் பார்வதியுடன் கணேசன்...



------------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))-------------------------------

Tuesday, 27 March 2012

சிதறல்கள்-5

   
 சைனீஸ் மொழியிலும் கலக்கும் இசைப்புயல்.

   சமீபத்தில் ஆபிசில் நான் மும்முரம்மாக வேலை பார்த்துக்கொண்டிருந்த  போது என் அருகே உள்ள  சைனீஸ் நண்பர் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார்.சட்டென்று ஒரு பாடல் என் கவனத்தை திசை திருப்பியது.அது முதல்வன் படத்தில் வரும் ஷக்கலக்க பேபி பாடல்.ஆனால் ஒலித்தது சீன மொழியில்.சீன நண்பரிடம் விசாரித்தபோது இது சிங்கப்பூர் பாடகி 'கெல்லி பூன்' 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆல்பத்தில் உள்ள பாடல் எனவும் இது சீனர்களின் மிக விருப்பமான பாடல்களில் இதுவும் ஓன்று என தெரிவித்தார்.ஆனால் முதல்வன் படம் 2001-ல் வந்ததல்லவா... அதிலிருந்து சுட்டுவிட்டார்களோ என்று நண்பரிடம் கேட்டபோது இல்லவே இல்லை இது ஒரிஜினல் வெர்சன் என்று கூற,எனக்கு பொறுக்க முடிய வில்லை.நம் இசைப்புயலின் பாடல்தான் இது என நிருபிக்க வேண்டும் என்று முதல்வன் பாடலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஓடவிட்டு நண்பரை கவனிக்க சொன்னேன்.ஆனால் அவர் மனம் ஏனோ ஒத்துக்கொள்ள மறுத்தது.சரி..எப்படி அவரை நம்ப வைப்பது என்று யோசித்த நான் பின்பு நேரடியாகவே அந்தப் பாடலை இணையத்தில் தேடிய போது எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது.அந்த ஆல்பத்திலே இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று எழுதப்பட்டிருந்தது.அதை அவரிடம் காண்பித்தவுடன் அவர் தலையை சொரிந்து அசடு வழிந்ததைப் பார்த்து எனக்கு பாவமாக தெரியவில்லை.. மாறாக பெருமையாக இருந்தது நம் இசைப்புயலை நினைத்து.

      
----------------------------------------------x----------------------------------------------

கூகுள் மேப்பில் மறைக்கப்படும் பத்து இடங்கள்.

        உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் வசதியுடைய கூகுள் எர்த் மற்றும் கூகுல் மேப்பில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.இதில் சில இடங்கள் வேண்டுமென்றே மங்கலாக தெரியும் படி செய்யப்பட்டுள்ளது என்பது தான் அது.வடகொரியாவில் பெரும்பாலான இடங்கள்,ராயல் பேலஸ் நெதர்லாந்து,நியூயார்க் அணுமின் நிலையம் உட்பட ஒரு சில இடங்கள் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படுகிறது.
   
   ஆனால் இதைப்பற்றி கருத்து தெரிவித்த கூகுள் நிர்வாகம்,எங்களுக்கு தகவல் மற்றும் படங்கள் தரும் நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தான் படங்களை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.அவர்கள் தரும் படங்களைத்தான் நாங்கள் பிரசுரிக்கிறோம்.அதில் ஒரு சில படங்கள் இது போல மங்கலாகத்தான் தெரிகிறது.

கூகுள் மேப்பில் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படும் அந்த பத்து இடங்கள்...

1. The Royal Residence, The Netherlands 

2. Buffalo Niagara International Airport

3. Tantauco National Park, Chile

4. Keowee Dam, South Carolina

5. Mysterious Russian Site

6. Minami Torishima Airport, Japan

7. The Michael Aaf Building, Utah

8. Cornell University Combined Heat and Power Plant, New York

9. Babylon, Iraq

10. Vlissingen, The Netherlands

-------------------------------------------------------------x-------------------------------------------------------------------  

அனுபவம் பேசுது...

  #   எல்லா காரியத்திற்கும் கடவுளையே நம்பாதீர்கள்.பிறகு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.

#  கலகலன்னு பேசுறவங்க எல்லோரும் காசு விசயத்துல கறாரா இருப்பாங்க..

#   பாசம் அதிகமாக இருக்கிற எல்லோர்கிட்டேயும் கோபமும் அதிகமாக இருக்கும்.ஆனா கோபம் இருக்கிற எல்லோர்கிட்டேயும் பாசம் இருக்கும்னு சொல்ல முடியாது. 
 
 -----------------------------------------------------------x--------------------------------------------------

பழிக்குப் பழி?

     கிரிக்கெட் விளையாட்டுல நம்மள விட பாகிஸ்தான் ரசிகர்கள்  பயங்கர வெறியர்கள்.வெற்றியோட திரும்பினா ஏர்போர்ட்டுல ஏக போக வரவேற்பு கிடைக்கும்.பலே..பலே...நம்ம ஆளுங்கனு அந்த நாட்டு பத்திரிக்கையெல்லாம் பாராட்டுவாங்க.அதுவே தோத்துட்டாய்ங்க அவ்வளவுதான்.அழுகின முட்டை, தக்காளி அபிஷேகம் தான் ஏர்போர்ட்டுல.அங்க இவ்வளவு வாங்கினாங்க.இங்க இவ்வளவு வாங்கினாங்க-னு நோண்டி நொங்கெடுத்துடுவாய்ங்க.வாங்கலனா கூட வாங்கினதா பேசுவாங்க.ஒரு சில நேரங்களில பயந்துகிட்டு ஊருப்பக்கம் வராம அப்படியே ஒவ்வொரு நாடா சுத்திட்டு யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில ஊருக்கு திரும்பின வீரர்களெல்லாம் நிறைய பேர் இருக்காங்க.இப்ப இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறவங்க அடுத்ததா படிங்க.

  சமீபத்தில ஆசியக்கோப்பையை வென்று திருப்பின பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு தருவதற்காக  ஏர்போர்ட்டுல ஏராளமான ரசிகர்கள் காத்திருந்திருக்காங்க.வீரர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக முண்டியடித்து எல்லோரும் வர பெரிய தள்ளுமுள்ளு நடந்ததாம்.இதுல கோபமான அ.'.ப்பிரிடி ஒரு ரசிகரை ஓங்கி அறைந்து விட்டாராம்.பிறகு சமாதானப்படுத்தி அவரை(அடி வாங்கியவரை அல்ல) காரில் ஏற்றி அனுப்பி விட்டார்களாம்


   (தோத்தா அவிங்க இவிங்கள அடிக்கிறாய்ங்க....ஜெயிச்சா இவிங்க அவிங்கள அடிக்கிறாய்ங்க..பழிக்குப் பழி வாங்குறதுல பாகிஸ்தான்காரங்கள அடிச்சுக்க முடியாதுப்பா... ) ----------------------------------------------------------------x-----------------------------------------------------

  மிழ்ல எழுதும் போது வரும் சிறு சிறு குழப்பங்களில் இதுவும் ஒன்னு. ர-ற.மொதல்ல உள்ளத 'சின்ன ர'- ம்பாங்க....அடுத்து உள்ளத 'பெரிய ற'- ம்பாங்க. எழுதுவதிலும் சரி பேசுவதிலும் சரி..இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆனால் பேச்சு வழக்குல இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்ல.இருந்தாலும்  ப்ளாகர்ல எழுதும் போது சில நேரங்களில தவறா வந்துடுது. உதாரணத்திற்கு, 

    அதற்கு      -           அதற்க்கு 
    சிறிய-பெரிய      சிரிய-பெறிய             
    கற்போம்       -      கற்ப்போம்                      
   வரவேற்பு      -   வரவேற்ப்பு    


   இந்த சின்ன 'ர' இருக்கு பாருங்க...இது ரொம்ப மென்மையானது.இது புள்ளி எழுத்தா (மெய்யெழுத்து) வரும்போது பக்கத்துல இன்னொரு புள்ளியெழுத்து வருவதற்கு அனுமதிக்கும். 
  
          உதாரணம்.....உணர்ச்சிகள்.
       
      ஆனா இந்த பெரிய'ற' (வல்லினம்) இருக்கு பாருங்க....ரொம்ப கறாரான பேர்வழி.தன் பக்கத்துல புள்ளி எழுத்து வர எப்போதும் அனுமதிக்காதுங்க. அதற்கு உண்டான சத்தத்தைதையும் இதுவே சேர்த்து கொடுத்துடும்.  
         உதாரணம் ..அதற்கு,வரவேற்பு,கற்போம். 

--------------------------------------------------------------------x-------------------------------------------------------- 
Legends.....
 
----------------------------------------------------------X ----------------------------------------------

சரி....இது உள்ளே இருக்கிற கிருஸ்துமஸ் தாத்தாவை கண்டுபிடிங்க பாப்போம்.




-------------------------------------------((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))----------------------




Friday, 23 March 2012

சிதறல்கள்-4

உலகின் மிகப்பெரிய டிவி அறிமுகம்.

           LCD TV தயாரிப்பில் இது ஒரு மைல் கல்லுன்னு சொல்லலாம். சீனாவின் மிகப்பெரிய டிவி தயாரிப்பு நிறுவனமான TCL கம்பெனி உலகின் மிகப்பெரிய 110 "  LCD TV  யை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.இது 4096 X 2160 படத்துடன் தொடு திரை வசதியுடன் அறிமுகமாகும் இந்த முப்பரிமான(3D)TV விற்பனைக்கு வருமா என்பது இன்னும் தெரியவில்லை.ஏற்கனவே LG நிறுவனம் 84 அங்குல டிவி யை ஐ.டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதை விஞ்சும் விதத்தில் TCL நிறுவனத்தின்அதிரடியான தயாரிப்பு தான் இந்த Multi-TouchTechnology 110"LCDTV.இதை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது .   
                                                     

World's Biggest 3D TV at 110 Inches Across!


LG-84inch tv
   ------------------------------------------- X ------------------------------------------------------------------
ஆத்தா வச்ச ஆப்பு ...

                சில நாட்களுக்கு முன் சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வரும்  கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்திருந்தார்.இவரு எதுக்குடா ஓஞ்சி கிடக்கிற ஆள உசுப்பேத்தி வுடுராறேனு விசாரிச்சா... கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படாத காரணத்தால் நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கருணாநிதி அண்மையில் தெரிவித்திருந்தார்.அதுக்கான பதிலடிதான் இதுவாம்.பின்ன...1.76 லட்சம் கோடி இழப்புக்கே வருந்தாதவர் இதுக்கு வருத்தப்பட்டா கோவம் வராம பின்ன என்னவாம்?ஆனா... பாவம் இடைத்தேர்தலுக்குப் பிறகு அம்மா வைக்கப்போற ஆப்பு சும்மா ராக்கெட் கணக்கா இவரு மேல பாயப்போகுதுன்னு தெரியாப் போச்சு.மின்தடை அவதியால் போராட்டம் எல்லாம் பிசுபிசுத்துப் போக,இப்போ தலைக்கு மேல கத்தி. ஆத்தா ரூபத்தில ஆப்பு..


--------------------------------------------------------------------------------------------------------------------
 தம்பி... டீ இன்னும் வரல.... 
                 
தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்                                
---------------------------------------------------------------------------------------------------------------------
கேப்டனுக்கு விழுந்த நெத்தியடி..

 சங்கரன்கோயில் பிரச்சாரத்தில் இன்னொரு சுவாரஸ்யம்....பிரச்சாரத்துக்கு போற விசயகாந்து எக்குத்தப்பா எதையாவது பேசி வசம்மா வாங்கிக் கட்டிக்கிறதே வேலையாப் போச்சு.இந்த தடவ சங்கரன்கோயில் கடையாலுரூட்டியில் விசயகாந்துக்குக்கும் அந்த ஊர் கிராமவாசிக்கும் நடந்த சூடான உரையாடல்.

விசயகாந்து : இடைத்தேர்தலுக்குப் பிறகு மின்வெட்டு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.இது மேலும் அதிகரித்தால் மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.அந்த அம்மா என்னடான்னா..........  ........      

இதை கேட்டுகிட்டிருந்த ஒரு கிராமவாசி கடுப்பாகி உடனே குறிக்கிட்டு........

கிராமவாசி:  ஏன்யா.....மின்சாரம் இருப்பதால்தானே உன்னால இப்ப மைக்க  புடிச்சி பேசமுடியுது..."

 உடனே கடுப்பான நம்ம விசயகாந்து: யாருயா நீ?  எந்த ஊருயா உனக்கு..?

கிராமவாசி:எங்க ஊர்ல வந்து என்னப்பாத்து யாருன்னு கேக்கிற...  மொதல்ல நீ யாரு?

உடனே நம்ம விசயகாந்துக்கு கண்கள் தீப்பிழம்பாக மாறுகிறது.அவர் நாக்கு பற்களுக்கிடையே சிக்கி நான்காக மடிகிறது.....

விசயகாந்து : அப்ப... நீ மேல வா பாக்கலாம்...

கிராமவாசி: நான் எதுக்கு மேலே வரணும் ?...மொதல்ல நீ கீழே வா....

இப்படியே தொடர்ந்த வாக்குவாதம் பிறகு கொழுந்துவிட்டு எரிய கடைசியில் போலிஸ் வந்து தண்ணி ஊற்றி அணைத்தார்களாம்.

        முடிஞ்சா.... என் கைக்குள்ள இருக்கிற 'கமார்கட்'ட புடிங்கிப்பாரு!!!!..
---------------------------------------------------x --------------------------------------------------------------

கிரிஷ்ணலீலை

                சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி பூச்சாண்டி காட்டின கதையா இருக்கு இலங்கைக்கு எதிரான  அமெரிக்க தீர்மானத்தில இந்தியாவின் நிலை.
     இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி  தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சில காட்சிகளை  சானல் 4  தொலைக்காட்சி வெளியிட்டபோது கலங்காத நெஞ்சங்கள் கூட கண்ணீர் வடித்தது.தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் (காங்கிரஸ் உட்பட)வெகுண்டு எழ,வேறு வழியில்லாமல் மௌன சாமியார் முதல் முறையாக மனமிறங்கி தமிழர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது.ஆனால் நமக்கு ஆப்பு வைக்கிறவன் நம்மை சுத்தி தான் இருப்பான் என்பது போல கன்னடகாரன் S.M.கிருஷ்ணா,இலங்கைக்கு எதிரான நிலையை எடுப்பதில் இந்தியா யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.நம்ம நாட்டின் மீது ரொம்ப அக்கரைத்தான் இந்தாளுக்கு......நம்ம நாட்டு தீர்மானத்தைப் படிக்கிறதுக்குப் பதிலா பக்கத்து நாட்டு தீர்மானத்தை வாங்கி படிச்சி மானத்தை வாங்கினவனாச்சே....கன்னட பிரசாதத்தோட டீலிங் பேசவே உனக்கு நேரம் பத்தாதே...ஏன் ராசா...எங்கே அந்த டோப்பா முடியையும்,பல் செட்டையும் கெழட்டி உன் உண்மையான மொகத்த மக்களுக்கு காமி பாப்போம்....... 
 

 --------------------------------------------x---------------------------------------------------

டாக்டராக நடிக்கும் புவ்வா....
                                           
                                'அந்த' மாதிரி வேலை செஞ்சி 'அந்த' மாதிரி கேரக்டர்ல நடிச்சி 'அந்த' மாதிரி நடிகைன்னு பேர் வாங்குன புவ்வா (புவனேஸ்வரியை செல்லமா..)கடைசியில சவுத்ல உள்ள ஒரு டாகுடருகிட்ட ஐக்கியமானது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.இப்ப இதுவல்ல நியுஸ்.....இப்ப நம்ம புவ்வா, இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்துல  ஒரு படத்துல டாகுடரா நடிக்கிறாராம். இனிமேல் நான் அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காம இந்த மாதிரி நடிக்கப் போறேன்னு சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திட்டாங்க...ஏன் வெங்கடேஷ் சார்....டாகுடருனா மாத்ருபூதம் டைப் டாகுடருதானே?

 வெயிட்.. வெயிட்..இதெல்லாம் ஒரு நியூஸானு பிக்காலித்தனம்மா கேள்வி கேட்கக் கூடாது...நேத்திக்கு சிங்கபூர் தமிழ் முரசுல இதுதான் 'ஹாட் நியூஸ்'      
 ------------------------------------------------------- x ----------------------------------------------------------------------

பொழைக்க வந்த எடத்தில் எதுக்கு தம்பி பொல்லாப்பு 


       சிங்கப்பூரில் நேற்று ஒரு இந்தியருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் கோபிநாதன்.முழு பெயர் பிஜிகுமார் ரேமாதேவி நாயர் கோபிநாதன்.நம் நாட்டிலிருந்து இங்கு வந்து ஷிப் யார்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.இவருக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசலின் ரெய்ஸ் பாஸ்கா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி அந்தப்பெண், மேன்ஷனில் அவரது அறையில் கொலையுண்டு கிடந்தார்.அவருடைய உடலில் மார்பு, வயிறு, கழுத்துப் பகுதியில் பல தடவை ஆயுதத்தால் குத்தப்பட்டு இருந்தது.சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கோபிநாதன்  பின்பு உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.தவறாக அந்தப் பெண் தன்னை அணுகியதாகச் சொன்ன கோபிநாதன்,அந்தப் பெண்ணை தான் கொலை செய்ததை மறுக்கவில்லையாம்.பிழைப்பைத் தேடி வெளி நாடுகளுக்கு வரும் நம்மவர்கள் அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் கடுமையை உணர்ந்து,தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டால் இது போன்ற  துயரங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும்.
--------------------------------------------------------------- x ----------------------------------------------------------
      
      என்ன அதுக்குள்ளே கெளம்பிடீங்க....கடைசியா ஒரு தெய்வத்தரிசனம் பாத்துட்டு போங்க... ஆனா இவர் எல்லாருடையக் கண்களுக்கும் தெரிய மாட்டார்.உங்கள் கண்களுக்கு ஒரு அற்புத சக்தி இருக்க வேண்டும்.அதை எவ்வாறு பெறுவதுனு யோசிக்கிறவங்க இங்கே  போய் பார்க்கவும். 

 ஒரு க்ளு... இதன் உருவம் இப்படித்தான் இருக்கும்.


--------------------------------(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))----------------------

Monday, 5 March 2012

அட்டகாசமான அடல்ட்ஸ் ஒன்லி 3D படங்கள்



இந்த 3D படங்கள் எல்லாமே எடுக்கப்பட்டது அல்ல....கலைநயத்துடன்    வரையப்பட்டது.!!!!. ஆகவே மக்களே...கலை கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்கவும்.
  
  (  முன்குறிப்பு : இந்தப் படங்களை எப்படி பார்ப்பது என்று தவிப்பவர்கள் இங்கே உள்ள குறிப்புகளை வைத்து முயற்சி செய்யலாம். )

      முதல் 3D படத்தில் உள்ளது போல...கெட்ட விசயங்களை   

          DON'T HEAR-DON'T SEE-DON'T TALK.....
      


























Wednesday, 4 January 2012

அசத்தலான 3D படங்கள்- Part - 2


       முதல் பாகத்தில் 3D படங்களை எப்படிப் பார்ப்பது என்று எனக்குத் தெரிந்த வழிமுறையைச் சொன்னேன். இந்த ஒரு வழிதான் என்றெல்லாம் கிடையாது... நிறைய இருக்கிறது. கணினியில் பார்ப்பதால் கொஞ்சம் தூரமாகவே வைத்துப் பார்க்கவும்.ஐந்து நிமிடத்துக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம். கண்வலிப்பது  போலிருந்தால் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யலாம்.   
                        'முயற்சி திருவினையாக்கும்......  '

      மீண்டும் உங்களுக்காக.......

ரொட்டித்துண்டுக்கு சண்டை போடும் எலியும் குருவியும்...
'அடல்ட்ஸ் ஒன்லி' தான் ...'கலை நய'த்தோடு பார்க்கலாம்...

'ஜம்' என்று காதல் செய்யும் எலிகள்.......
வரிக்குதிரை அல்ல.....
முந்துவது மூன்று மட்டுமே......
ஜாக்கிரதை .....'கொட்டி' விடப்போகிறது....
'கொடுத்து வைத்த டால்பின்'...........ஒருத்தி  மட்டும் முந்துகிறார்.....
'படபடக்கும்' பட்டாம்பூச்சி.....
'சிறகடிக்கும்' சிட்டுக்குருவி.......
'பாலைவனக்கப்பல்'  பதுசா நிக்குது......
'காந்திக்கு பால் கொடுத்த  கால்நடை'.....பூந்தோட்டத்தில்   புகுந்து விளையாடுது.....
சின்னஞ்சிறு உதவியால்    'ராமர் கையால் கோடு '  வாங்கியவர்...........
வரிசையாக 'முந்திநிற்கும்' தென்னைமரங்கள்.....
'கைக்கெட்டும் தூரத்தில்' வானவூர்தி.........





----------------------------------((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))----------------------