Tuesday 30 October 2012

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...!



மீப நாட்களாக அன்பு சகோதரி சின்ன மாயி அவர்களை ஆபாசமாக சித்தரித்தும்,அருவருப்பான ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததற்காக இணையவெளி நண்பர்கள் சிலரை நம் மானமிகு காவல்துறை கைதுசெய்து நடவடிக்கை எடுத்துவருகிறது.இதைப்பற்றி ஒரு வரிகூட எழுதாத நீயெல்லாம் ஒரு பிளாக்கரா என வசைபாடிய என் நண்பனை சைபர் கிரைமில் சிக்கவைத்து பழிதீர்ப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும் அருமை சகோதரி சின்ன மாயி அவர்களுக்கு நிகழ்ந்த இந்த வன் கொடுமையை கண்டிக்கும் தலையாய கடமை எனக்கும் இருக்கிறது என்பதை என் மனம் திரும்ப திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது....

 பொது இடத்தில் பெண்கள் குனியும்போது அவர்களுக்குத் தெரியாமல் அதை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றுவது,கல்லூரிப் பெண்களோடு லூட்டியடித்து அவர்களின் அனுமதியில்லாமல் படமெடுத்து, மிரட்டி சீரழித்து,கடைசியில் இணையத்தில் பதிவேற்றி அதன்மூலம் சிற்றின்பம் அடைவது...இதுபோன்ற 'சாதாரண' விசயங்களை கவனிக்க நேரமின்றி பரபரப்புடன் இயங்கி
க் கொண்டிருந்த நமது சைபர் கிரைம் போலீசாருக்கு,உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய,மதிப்பிற்குரிய சகோதரி சின்ன மாயி அவர்கள் மீது ஏவப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனத் தாக்குதலின் விளைவாக,அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிரடி வேகத்தில் செயல்பட்டு,சம்மந்தப் பட்டவர்களை கைது செய்து தன் கடமையுணர்வை கச்சிதமாக செய்து முடித்த சைப்ப்பர்ர்ர்ர் கிரைம் போலிசாருக்கு நன்றி.

முன்பெல்லாம் பிரபலங்களுடனும்,எழுத்தாளர்களுடனும் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல...பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் மூலமாகவோ அல்லது வாசகர் கடிதங்கள் மூலமாகத்தான் நடக்கும்.அதுவும் அதிஷ்டமிருந்தால் மட்டுமே.தற்போது உள்ளங்கையில் உலகம்...! யாரிடம் வேண்டுமானாலும் மாற்றுக் கருத்துகளை முன்வைத்து நேரிடையாக வாதிடலாம்.நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற மன பிம்பத்தை நொடியில் தரைமட்டமாக்கிவிடும் அரசியில் ரீதியான சூடான வாதங்கள் நம் கண் முன்னே நடப்பதை உணரலாம்.இவையெல்லாமே நவீன அறிவியல் நமக்கு அளித்த வரப்பிரசாதம்.

பொதுவெளியில் அரசியல்,சமுதாய ரீதியான கருத்துகளை முன்வைக்கும்போது எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.தான் கொண்ட அரசியல் நிலைப்பாடு,தன்னை
த் தொடரும் எல்லோருக்கும் இருக்கும் என நினைப்பது தவறு.எல்லோரும் தன் நிலைப்பாட்டையே ஒத்துப் போகவேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.தன்னை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்துக்கொண்டு தன் பின்னால் பெரிய கூட்டமே இருக்கிறது என நினைப்பது மிகப்பெரிய அறிவீனம்.தான் ஒரு பிரபலம்...எது சொன்னாலும் அது எளிதில் எல்லோரையும் சென்றடையும் என நினைப்பவர்கள், அவர்களிடமிருத்து வரும் விமர்சனங்களையும் மாற்று கருத்துகளையும் எதிர்கொள்ள மறுப்பது ஏன்...? வெளிப்படையான ஒரு பொது ஊடகத்தில் உங்களால் வைக்கப்படும் கருத்துகளுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன ம&*&%$க்கு கருத்து சொல்லன்னுன்னேன்...?   அதற்கு பேசாமல் உங்கள் அலைபேசியில் உள்ள நண்பர்களுக்கு மட்டும் 'எஸ்எம்எஸ்' செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாமே...


  ராஜன் அவர்களின் சில ட்வீட்கள் வக்கிரமானவைத்தான்.ஆனால் அவரின் மொத்த ட்வீட்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால் இவைகள் மிகமிக குறைவு.அவர் தங்கள் முன் வைத்த வாதங்கள் ஆபாசமாக இருந்தாலும் அதில் நியாயமான கருத்து இருக்கத்தானே செய்தது.மிகப் 'பிரபலமான செலிபிரிடியான' நீங்கள் அதற்கு பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாமே.அல்லது பதில் சொல்லாமல் நிராகரித்திருக்கலாமே.அதைவிட்டுவிட்டு..."மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள்...."  என்று சொல்லிவிட்டு,நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என மழுப்புவது நியாயமா..? உங்கள் கருத்தின் உள்நோக்கம் என்னவென்பதை அறியமுடியாத அளவுக்கு யாரும் இங்கு முட்டாள்கள் கிடையாது.தன்னை "high..nkaar " என ஒரு இடத்தில் பெருமையடித்துவிட்டு,இன்னொரு இடத்தில் "so called  thaazhththappattavarkal .." என நக்கலடித்துவிட்டு,பிரச்சனை பெரிதானவுடன் "மறவர் சீமை தமிழச்சி.." என அறிக்கை வெளியிட்டு ஆதரவு தேடுவதைப்பார்க்கும் போது உங்களை ஒரு பக்குவமற்ற பேதை என்று அழைப்பதைவிட வேறு என்ன சொல்ல...?

இணையத்தில்,எழுத்து சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டதல்ல...அச்சு ஊடகத்தில் தன்னை ஆச்சார்யமாகக் காட்டிக்கொள்ளும் நிறைய எழுத்தாளர்கள் கூட இணையத்தில் வாயில் வந்ததையெல்லாம் எழுதுகிறார்கள்..இது ஒரு திறந்தவெளி மைதானம்.இதில் வரம்பு மீறி போகிறவர்களை கண்டிக்கலாம். ஆனால் தண்டிக்கும் உரிமை யாருக்கும் இல்லை...நாட்டின் உயர்பதவிகளில் இருக்கும் தலைவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் அர்ச்சனை செய்வது தவறுதான்.இதை ராஜன் மட்டும் செய்யவில்லை. ஈழப் போரின் தோல்வியை வைத்து கலைஞர் மீது ஏவப்படும் ஆபாசத் தாக்குதல்களை ஒப்பிட்டால் அன்பு சகோதரி சின்ன மாயி(என் வாயில் அப்படித்தான் வருகிறது) பற்றி ராஜன் அவர்கள் பேசியதாக சொல்லப்படும் வார்த்தைகள் அவ்வளவு ஒன்றும் மோசமானவையல்ல... இந்த விசயத்தில் 'ராஜன் லீக்ஸ்' ராஜன் கண்டிக்கப்பட வேண்டிவரே...தண்டிக்கப்பட வேண்டியவரல்ல....!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

நமக்கு எதுக்கு பொல்லாப்பு..தோ..நம்ம கேப்டனை கலாய்கிறேன்.அவர் என்ன சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு,வெளிய நின்னு வீராப்பா பேட்டியா கொடுக்கப்போறாரு...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு எங்க கேப்டன்...  :))))



வணக்கங்களுடன்.....
மணிமாறன்..

------------------------------------------------------(((((((((((((((((((((((())))))))))))))))))))-------------------------------------------- 
 

Tuesday 23 October 2012

அந்நிய நேரடி முதலீடு VS மச்சினிச்சி மறைமுக முதலீடு...



நட்புகளுக்கு வணக்கம்..

கொஞ்ச நாட்களாக பதிவுலக பக்கமே எட்டிப்பார்க்கவில்லை... பணிச்சுமை..ஆர்வமின்மை...எழுதுவதற்கு விஷயம் கிடைக்காமை..இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.('நீ எழுதலன்னு இங்கு யார் அழுதா.. சர்தான் போப்பா..' அப்படீன்னு நீங்க திட்டுறது கேக்குது பாஸ்..).வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் நெருங்குகிறது.
பெரிசா ஒன்னும்  நட்பு கிடைக்கல,தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் ஒரு சிலரைத் தவிர.தமிழ்மணத்தின் தனிப்பெருங்கருணையால் குறிப்பிடும்படியான ஹிட்ஸ்...ஆனால் இன்னும் பாலோயரில் சதம் கூட அடிக்க முடியாத அப்பாவி நான். :-((

   சரி...கொஞ்ச நாள் ஓய்வு கொடுக்கலாம்னா...திரும்ப இங்க வர போரடிக்குது.ஒருவேளை இப்படித்தான் பல 'பெரியவங்க' எழுதாம ஒதுங்கி போயிட்டாங்க போல...நாம எழுதி ஒன்னும் பெருசா புரட்சி பண்ணப் போறதில்ல.புரட்சி பண்ணக்கூடிய இடமும் இதுவல்ல.அப்பப்போ மனசில என்ன தோணுதோ அதை அப்படியே இங்கே பதியணும்னு தோணுது.அவ்வளவுதான்.

  ரெண்டு நாட்களுக்கு முன்னால் சும்மா என் வலைப்பூவை திறந்து பார்த்தேன்.லேசான இன்ப அதிர்ச்சி!. புலவர் ராமானுசம் அய்யா என் பாலோயர் லிஸ்டில் இருக்கார்.பாராட்டி கமென்ட் வேற போட்டிருந்தார்... விடப்படாது.திரும்பவும் எழுதனும்னு ஆர்வம் வந்திடுச்சி....இனி கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் என் எழுத்தின் சீற்றம் எவரையேனும் வெட்டிச் சாய்த்தால் அதற்கு முழு பொறுப்பு  புலவர் ராமானுசம் அய்யா அவர்களையே சாரும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். :-))))))  


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்போதெல்லாம் அடிக்கடி  'சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு' பற்றியே பேசுறாங்களே...அப்படீனா என்ன..? (ஆமா.. 'பிராபலங்களை' கிண்டல் செய்தால் 'உள்ளே' தூக்கி போடுறாங்களாமே...அப்படியா..??? )


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 யுதபூஜை-னா வீட்டில் உள்ள மர,இரும்பு சாமான்கள்,வாகனங்கள் அனைத்தையும் கழுவி,சுத்தப்படுத்தி சந்தனம்,குங்குமம் பூசி சாமிக்கு படைப்பாங்க... கார்,லாரி போன்ற பெரிய வாகனங்களை ஆற்றிலோ அல்லது குளத்திலோ இறக்கி சுத்தம் பண்ணுவாங்க..இதானுங்க காலகாலமா பின்பற்றி வருகிற பழக்க வழக்கம்.நம் முன்னோர்களும் இதைத்தானே நமக்கு கற்பித்திருக்காங்க...

சரி..வீட்டில் மட்டும் கொண்டாடினால் போதுமா... ஆபிசிலும் கொண்டாடவேண்டாமா..?  அதுக்காக ஆபிசில் இருந்த வாகனத்தை
க் கழுவி சுத்தப்படுத்தினது தப்பாங்க...? அதுக்கு போயி ஆபிசை விட்டு தூக்கிட்டாங்க.....(என்னவொன்னு..'சைஸ்' கொஞ்சம் பெரிசா இருந்ததால கடல்ல இறக்கி சுத்தப்படுத்த வேண்டியதாயிற்று. அவ்வளவுதான்.....)


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 

குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்.கணவன் மனைவிக்கும் இடையே நடக்கும் சிறு சிறு உரசல்கள்(சண்டையைச் சொன்னேன்.... ),அவர்களுக்கிடையே உள்ள அன்பின் ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்த வேண்டுமே தவிர,பிரிவுக்கு விதையாக அமைந்து விடக்கூடாது.அதிலும் ஒரு சில குடும்பங்களில் சிறிய சண்டை என்றாலும் மாதக்கணக்கில் பேசாமல் இருக்கும் கணவன் மனைவி எல்லாம் இருக்காங்க...

இப்படித்தாங்க... என் நண்பர் ஒருவர் புதிதாக திருமணமாகி மனைவியுடன் தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்.வீட்டில் அவருக்கும் அவரின் மனைவிக்கும் ஏதோ தகராறு போல.மூணு நாளா பேச்சு வார்த்தை எதுவும் இல்லையாம். இதுல என்ன  பிரச்சனைனா...யார் முதலில் பேசுவது என்பதுதான்...

ஆனாலும் பொழைப்பை ஓட்டவேண்டுமே...முதல் நாள் வெறும் சைகையிலே பேசியிருக்காங்க.ஆனால் அது அவ்வளவு சௌரியப்படவில்லை. அடுத்ததா,ரெண்டு பேரும் பேப்பரில் எழுதி வச்சி பேச ஆரம்பித்திருக்காங்க. நண்பர் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பேப்பரில் எழுதி காண்பிப்பார். அதேபோல் அவரின் மனைவி ஏதாவது கேட்க நினைத்தால் அவரும் ஒரு தாளில் எழுதி அதற்கான பதிலை பெறுவார்.....

"காலையில் என்ன டிபன் செய்யட்டும்.." இது நண்பரின் மனைவி...

"மிளகு பொங்கல்,சாம்பார் செய்யவும்.." இது நண்பர்...

"சாயங்காலம் எப்போ வருவீர்கள்....."

"ஆபிசில் வேலை இருக்கிறது எட்டு மணியாகும்..."

"மளிகை சாமான் வாங்கவேண்டும்...எனக்கு பணம் தேவைப்படுகிறது..."

"என் ஹான்ட் பேக்கில் இருக்கிறது எடுத்துக் கொள்ளவும்.."

இப்படியே பேப்பரில் எழுதி காட்டியே நல்லாத்தான் குடித்தனம் நடத்திருக்காங்க.ஆனால் கடைசில இது பெரிய சிக்கல்ல கொண்டு வந்து விட்டுவிட்டது.

நண்பர் அடுத்த நாள் காலையில ஒரு முக்கியமான இன்டர்வியுக்கு செல்லவேண்டும்.ஆபிசிலிருந்து களைப்புடன் வந்த நம்ம நண்பர்,பெட்டில் படுக்கும் முன் வழக்கம் போல ஒரு தாளில் ," நாளைக்கு ஒரு முக்கியமான இன்டர்வியு இருக்கிறது.அதிகாலை ஐந்து மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும்.அதனால் நான்கு மணிக்கு என்னை எழுப்பி விடவும்" என எழுதி மேசை மேல் வைத்துவிட்டு தூங்கிட்டாரு.

அசதியில் கடுமையாக தூங்கியவர் திடுக்கிட்டு விழித்து கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார்..காலை மணி ஏழரை...!!

நண்பருக்கு கடுமையான கோபம்....'என்னை ஏன் எழுப்பி விடவில்லை' என அவரின் மனைவியைப் பார்த்து சத்தமாக கத்தியிருக்கிறார்..

அதற்கு அந்தம்மா சொல்லியிருக்கு...,"நான் தான்  நாலு மணிக்கே எழுந்திரிச்சி  'நாலு மணியாகிவிட்டது எழுந்திரிக்கவும்'னு  ஒரு பேப்பரில் எழுதி உங்கள் தலையணைக்கு பக்கத்தில் வச்சேனே.. பார்க்கவில்லையா..?"



## இப்படியிருந்தா வெளங்கிடும்.....!!!


வணக்கங்களுடன்....
மணிமாறன்..

------------------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))--------------------------------------------------------