Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, 26 June 2013

சீனியர் வீரர்களுக்கு ஆப்பு... தோனி முடிவு சரியா..?


 லைமைத்துவத்தில் தான் ஒரு விற்பன்னர் என்பதை மீண்டும் ஒரு முறை 
அனாயசமாக ஜெயித்து நிருபித்திருக்கிறார் நம் ' தோனி '. இன்னும் அழுத்திச் சொன்னால் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளத்தில் கட்டுக்கோப்புடன் அணியை சுமந்து வெற்றிக்கரையைக் கடந்திருக்கிறது இந்த சூப்பர் சிங்கத் ' தோணி '.



எவ்வளவு  பெரிய  திறமைசாலியாக  இருந்தாலும்  வெற்றி  தோல்வியைப் பொறுத்தே அவர்களின் சாதூர்யமும்  நுண்ணறிவும்  மெச்சப்படுகிறது. அதன் நிர்ணயம்  அவரவர்  அதிஷ்டத்தைப்  பொறுத்தது என்றாலும் மிகச்சிக்கலான தருணங்களில் சமயோசித புத்திக் கூர்மையால் எடுக்கப்படும் முடிவுகள் கூட அதிஷ்டத்தைத்  தாண்டி  வெற்றியை  மிகச் சுலபமாக்குகிறது.

அந்த வகையில் சமகாலத்திய கிரிக்கெட் கேப்டன்களில் சமீபத்திய வெளிச்சம் மகேந்திர சிங் தோனி. கிரான்ட் மாஸ்டரின் மாஸ்டரே  வந்தாலும் உத்தேசிக்கவே  முடியாத  உலக ஆச்சர்யம்  ' தோனி மனசில என்ன '  என்பது தான். தோனி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ரஸ்க்கை மீறிய ரிஸ்க்.  அது சரியானதுதானா  என  யோசிப்பதற்குள் அதை வென்று
அடுத்தப் பாய்ச்சலுக்கே தயாராகிவிடுகிறார்.

சாம்பியன் கோப்பைக்கு தேர்வாகியிருந்த அணியைப்  பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.  இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் வெற்றியை தூக்கி நிறுத்திய அநேக தூண்கள் மிஸ்ஸிங்.  இவ்வளவு பெரிய வெற்றிக்குப் பின் இவ்வளவு சிறிய காலத்திற்குள் எந்த நாட்டு வீரர்களும் இப்படி பந்தாடப்பட்டிருக்க மாட்டார்கள்.  சச்சின் ஓய்வுப் பெற்றதால் அந்த  இடம் மட்டுமே காலியாகயிருக்க வேண்டும்.ஆனால் 'டாப்ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அப்படியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். என்னதான் சீனியர் வீரர்கள் என்றாலும் 'கன்சிஸ்டன்சி' இல்லை என்றால் மூட்டைக்கட்ட வேண்டியதுதான் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து சொன்னதுபோல் இருந்தது தோனி மற்றும் தேர்வாளர்களின் முடிவு.

சச்சின் போனதால் ' நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என அலப்பரை கொடுத்த சேவாக்-க்கு வைக்கப்பட்டது முதல் ஆப்பு.  அணியின் உள்ளே தோனியுடன் தகராறு,  வெளியே கிரிக்கெட் போர்ட்டுடன் தள்ளு முள்ளு. ஆனால் பத்து மேட்ச்சில்  ஒரே ஒரு மேட்ச் மட்டும் அடித்துவிட்டு மற்றவற்றில் வெகு நேக்காக 'டக் அவுட்' ஆவார். உலக சாதனை வச்சிருக்கோம்ல,அசைச்சிக்க முடியாது என்ற மிதப்பில் இருந்த சேவாக்கை மண்ணோடு பெயர்த்துச் சாய்க்க தோனி பயன்படுத்திய கடப்பாரைதான் 'சிகார் தவான்'. முதல் இரண்டு போட்டியிலும் தொடர் சதம் அடித்த தவான் எடுத்த மொத்த ரன்கள் 363. (தவான் தம்பி.. தங்க ' பேட் 'டை நல்லா தூக்கி பிடி.அதுவும் அந்த சேவாக் கண்ல படுற மாதிரி...)

யு டியூப்-ல் கிரிக்கெட் ஃபைட்டிங் என தேடினால் நிறைய கவுதம் காம்பீரோட வீடியோ தான் வருகிறது.ஆனால் அந்த ஆக்ரோசம் பேட்டிங் பண்ணும்போது மட்டும் சமீபத்திய போட்டிகளில் சுத்தமாக தென்படவில்லை. ஒரு FLUKE -ல ரோகித் சர்மாவை தவானுடன் களமிறக்க, நான்கு போட்டிகளிலுமே வெற்றிக்கான அடித்தளத்தை இந்த ஜோடி கச்சிதமாக அமைத்துக் கொடுத்தது.(அப்புறமென்ன... நீ பேசாம டெல்லிக்கே  போய்டு காம்பீரு..)

அடுத்த விக்கெட் நம்ம ஆல்ரவுண்டர் யுவராஜ்தான். கடுமையான நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்ததால் என்னவோ அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும்,தொடர் சொதப்பல் IPL போட்டிகள் வரை தொடர்ந்தது. ஆல்ரவுண்டராச்சே...கருணைக் காட்டப்படாதா என கண்கள் பனிக்க காத்திருந்தவரின் விக்கட்டை வீழ்த்தியது நம்ம சர் ஜடேஜாஜீ தான். (ஆறு பால்... ஆறு சிக்ஸர்.. கண்ணு முன்னால வந்து வந்து போகுது....என்ன பன்றது தம்பி. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு,ஆனால் பில்டிங் புட்டுகிச்சேப்பா ... )


 
 அப்படியே, ஜாகிர்கானும் நெஹ்ராவும் முறையே புவனேஷ்குமார்,யாதவின் யார்க்கரில் கிளீன் போல்டாக, நான் இருக்கிற வரையில நீ உள்ள வர முடியாது மச்சி என ஹர்பஜனைப் பார்த்து செம தில்லாக கூறுகிறார் நம்ம ஊரு அஸ்வின்.இவை எல்லாவற்றையும் விட மிடில் ஆர்டரில் பீஷ்மனைப் போல் நிற்கிறார் நம்மூரு சிங்கம் தினேஷ் கார்த்திக்( ' வார்ம் அப் ' மேட்ச் எல்லாம் ரெக்கார்டுல வாராதுனு யாருச்சும் இவர் கிட்ட சொல்லுங்கப்பா)   

எந்த தைரியத்தில இப்படி ஒரு டீமை செலெக்ட் பண்ணினார் தோனி என 'டிவீட்' போட ஏற்கனவே தயாராக வைத்திருந்ததை அரக்கப் பறக்க அழித்திருக்கிறது பல கிரிக்கெட் பழங்கள். அணித்தேர்வில் இன்னொரு நெருடலும் இருந்தது. முரளி விஜய்,ரெய்னா, அஸ்வின்,ஜடேஜா இவர்களுடன் தோனி என ஐந்து பேர் CSK -ல் விளையாடியவர்கள். இந்த சலசலப்பு கூட வெற்றியின் ஆர்ப்பரிப்பால் அடங்கிப் போனது.

உலகக் கோப்பையை வென்றெடுத்த ஒரு அணியை பிரிப்பதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை தோனி உணராமல் இருந்திருக்க மாட்டார். அப்படி கழட்டி விடப்படும் வீரர்களின் இடத்தை நிரப்ப அவரை விட திறமையானவரை நியமிப்பதில்தான் ஒரு கேப்டனின் சவாலே இருக்கிறது.அதில் நூறு சதவித வெற்றி யடை
ந்திருக்கிறார் தோனி என்றே சொல்லலாம்.

சாம்பியன் கோப்பை இறுதிப் போட்டியின் 18 வது ஓவர். இங்கிலாந்து வெற்றி பெற 18 பந்துகளில் 28 ரன்கள் இலக்கு.ஆறு விக்கெட் அவர்களிடம் கைவசம் இருக்கிறது.மோர்கனும் போபராவும் இரும்புத்தூண்களாக இருபுறமும்.அடுத்த 19 மற்றும் 20-வது ஓவர் பவர் ப்ளே.கண்டிப்பாக அடித்து நொறுக்குவார்கள். இந்த ஓவர் தான் கோப்பை யாருக்கென்று நிர்ணயிக்கப் போகிறது. இந்த ஓவரில் இரண்டு தூண்களில் ஒன்றை சாய்த்தாக வேண்டும். என்ன முடிவெடுக்கப் போகிறார் தோனி என நூறு கோடி இந்திய உள்ளங்களும் படபடக்க, தோனி பந்து வீச அழைத்தது இசாந்த் சர்மாவை.


அதுவரையில் அதிக ரன்களை விட்டுகொடுத்திருந்த இசாந்த் சர்மாவை அழைத்தது சரியா என யோசித்துக் கொண்டிருக்கையில், இரண்டாவது பந்தில் சிக்சர் பறக்கிறது.அந்த நொடியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட ஒரே நபர் தோனியாகத்தான் இருக்கும்.ஆனால் அதற்கான பதிலடி அடுத்த இரண்டு பந்துகளில் கொடுக்கப்பட்டதுதான் மேட்சிக்கான பெரிய ட்விஸ்ட்.இரண்டு தூண்களும் அடுத்தடுத்து தகர்க்கப் பட்டது. இதை 'லக் ' என்ற வரையறையில் கொண்டுவர முடியாது. சமீபத்திய IPL -ல் CSK விளையாடிய நிறைய போட்டிகளில் கடைசி பந்து வரை டென்சன் எகிற,முடிவில் அது CSK  க்கு சாதகமாக அமைந்ததை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் 'லக்'கையும் மீறி தோனி எடுக்கும் நுட்பமான முடிவுகளாலே சாத்தியமானது என்று.

' கேப்டன் ' தோனியிடம் எல்லோருமே வியக்கும் ஒரு குணாதிசயம் உண்டு.அது, எவ்வளவு நெருக்கடியான  சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் முடிவெடுக்கும் ஆளுமைத் திறன்...!.  அதனால் தான்  என்னவோ தோல்வியையும் வெற்றியையும் சம தூரத்தில் வைத்து இவரால் பார்க்கமுடிகிறது. இதே இங்கிலாந்தில் 324 ரன்களை  இந்தியா சேஸிங் -ல் ஜெயித்தபோது சட்டையைக் கழட்டி கங்குலி போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது. உலகக்கோப்பை, சாம்பியன் கோப்பை ,T20 உலகக் கோப்பை என்கிற மூன்று மைல்கல்லை எட்டிய ஒரே கேப்டன் என்ற போதிலும் அந்த வெற்றிக்குப் பின் தோனியிடமிருந்து வெளிப்பட்ட நிதானம், கிரிக்கெட்டை விட்டு வெளியே இருப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.ஊழல் கரை படிந்த IPL -ல் CSK வுக்கு போட்டதைவிட இன்னும் தம்பிடித்து சத்தமாக தோனிக்கு ஒரு விசில் போடலாம்...



 --------------------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------------------------

Wednesday, 26 December 2012

சச்சின்...கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் பேரரசன்..!



மனம் ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது,சச்சின் இல்லாத நம் இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துப் பார்க்க  ...!

சச்சின் டெண்டுல்கர்...சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்ட மந்திரச்சொல்.....
கிரிக்கெட் என்ற உலகமகா சாம்ராஜ்யத்தின் பேரரசன்.. பறந்து விரிந்த கிரிக்கெட் என்ற பிரபஞ்ச வான்வெளியின்  சூரியன்.... இப்படி உலகத்தின் ஒட்டுமொத்த சக்திகளோடு நெஞ்சை நிமிர்த்தி ஒப்பிடலாம் அந்தக் கிரிக்கெட் கடவுளை..!.இதை மறுதலித்துக் கூட பேச முடியாது.ஏனென்றால் சச்சினின் கடந்த கால சாதனைகள் அப்படி...

சச்சினை சில நேரங்களில் நான் இசைஞானியோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதுண்டு.உயரத்திலும் தொழில் மீது கொண்ட அர்ப்பணிப்பிலும் அல்ல.அசர வைக்கும் சாதனைகளில்.

 பதினைந்து வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் எப்படி ஒரு அசைக்க முடியாத சக்தியாக இசைஞானி இருந்தாரோ அதே போலத்தான் கிரிக்கெட்டில் சச்சின். பிற மொழிப்பாடல்களில் லயித்துப் போயிருந்த தமிழ் ரசிகர்களை,மொத்தமாக தன் பக்கம் ஈர்த்து தமிழ் பாடல்களை ரசிக்க வைத்தவர் இசைஞானி. அதே போலத்தான் சச்சினும்.சச்சின் கிரிக்கெட்டில் தன் கணக்கைத் தொடங்குவதற்கு முன் வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ யார் என யோசித்துப் பார்த்தால் விவியன் ரிச்சர்ட்,டொனால்ட் பிராட்மேன், இம்ரான்கான், கவாஸ்கர், ரவிஷாஸ்திரி ..என பட்டியல் நீளும்.ஆனால் அத்தனை ரசிகர்களையும் தனது ' பேட்டிங் ஸ்டைலால்'  தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் சச்சின் என்றால் அது மிகையல்ல.

மியூசிகல் கடைகளின் போர்டுகளில் பல ஆண்டுகளாக இசைஞானியின் படம் மட்டுமே இடம்பெற்ற சாதனையைப் போல்,ஒரு காலத்தில் பள்ளி நோட்டு புத்தகங்களின் அட்டையில் லாரா,கபில்தேவ் படங்களுடன் கடைகளில் விற்ற காலம் போய்,மொத்தமாக சச்சின் படம் மட்டுமே இடம்பிடித்ததும் ஒரு சாதனையே.

இருவருமே பந்தயக் குதிரைகள்தான்.இளையராஜா கோலேச்சியிருந்த காலகட்டத்தில் அவரை முந்த பல குதிரைகள் களமிறக்கப்பட்டது.இன்னும் பத்தே படங்களில் இளையராஜாவை வீழ்த்திக் காட்டுகிறேன் என சபதமிட்டார் சந்திரபோஸ்.சொன்ன படியே பத்துப் படங்களின் பாடல்களும் ஹிட்டானது.ஆனால் அதற்குள் இளையாராஜா ஐம்பது படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருந்தார்.பல பிரபலமான இயக்குனர்கள், வெளி மாநில இசையமைப்பாளர்களைக் கூட களமிறக்கிப் பார்த்தார்கள்.அவர்கள் வந்த சுவடுகள் கூட இல்லாமல் போனார்கள்... 

ச்சினின் கிரிக்கெட் பயணமும் அப்படித்தான்.ஒரு நாள் போட்டிகளில் சச்சின் தனது சதங்களின் எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோது,அவருக்கு வெகு அருகில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் வந்துகொண்டிருந்தார்.எங்கே தொட்டுவிடுவாரோ என்ற அச்சம்,அடுத்தடுத்த அவரின் 'அவுட் ஆப் .'.பார்ம்'-னால் சிறிது நாட்களிலேயோ தகர்ந்து போனது.அதற்கடுத்து கங்குலி,மார்க் வாவ்,ஜெயசூர்யா,லாரா என சச்சினைத் துரத்திய ஜாம்பவான்கள் ஏராளம்.ஆனால் எல்லோருமே அவரைத் துரத்த முடிந்ததேத் தவிர,தொடக்கூடமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். கடைசியாக எதிர் பார்க்கப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்து விட்டார். இனி சச்சினின் சாதனைகள் அனைத்துமே முறியடிக்கப்படாமல் கிரிக்கெட் வரலாற்றின் கல்வெட்டுகளில் செதுக்கப்படப் போகின்றது...

கட்டைப்போடும் டெஸ்ட் மேட்சிலிருந்து வேறு ஒரு பரிணாமமாக ஒரு நாள் போட்டிகள் தோன்றியபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்த அதே பேட்டிங் முறையையே பின்பற்றி நிறைய பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடினார்கள்.ஒருநாள் போட்டிகளை விறுவிறுப்பாக்கிய வீரர்களில் சச்சின் மிக முக்கியமானவர்.முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் முறையை கையாண்டது முதலில் சச்சின்தான் என்று சொல்லப்படுகிறது.பிறகுதான் ஜெயசூர்யாவும்,அப்ரிடியும் மற்றவர்களும்.

உலகில் பவுலிங்கில் பல பேருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிறைய பவுலர்கள் சச்சினிடம் டவுசர் கிழிந்துதான் போனார்கள்.ஷேர்ன் வார்னேயிடமும், முத்தையா முரளிதரனிடமும் கேட்டால் ரூம் போட்டு விலாவாரியாக விளக்குவார்கள். 

கிராமங்களில் முன்பெல்லாம் கபடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்  தற்போது அவர்களின் வசதிற்கேற்ப கிடைத்த பொருள்களை பேட்டுகளாக்கி,வயல்வெளிகளை மைதானமாக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவருக்குமே சச்சின்தான் ' ரோல் மாடல் ' என்பதை மறுக்க முடியுமா.?அவர்களின் இந்த மாற்றத்திற்கு சச்சினும் ஒரு காரணம் என்பதை ஒத்
துக்கொள்ளத்தானே வேண்டும். 

சச்சின் சதமடித்த நூறு போட்டிகளும்.

எல்லா விளையாட்டு வீரர்களுக்குமே ஒய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.கால ஓட்டத்தில் கடவுள்,சச்சினுக்கு மட்டும் விலக்கு அளிப்பாரா என்ன...?ஆனால் சமீப காலத்தில் அவரின் ரன் குவிப்பில் ஏற்பட்ட சறுக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. நன்றாக விளையாடும்போது தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையாக விமர்சிப்பதும், இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடுதானே தவிர பக்குவமற்றத் தன்மை அல்ல.

எதிர்காலத்தில் கிரிக்கெட்டைப் பற்றி நான்கு வரியில் ஒரு குறிப்பு வரைக என்றால் அதில் ஒரு வரி கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரைப் பற்றி இருக்கும் எ
ன்பது மட்டும் நிதர்சன உண்மை.


வணக்கங்களுடன்...
மணிமாறன்.

------------------------------------------------------------------------------((((((((((((())))))))))))))))))))------------------------------------------------

Wednesday, 12 December 2012

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

(சிறுகதை)


நிர்மலா ஹாஸ்பிடல். 

பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி. 

"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?" 

"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது." 

 "ரொம்ப சீரியஸா டாக்டர்,,?" 

 "ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?" 

 "இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."

 "சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..." 

"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."

 "ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..." 

"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள். 

"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"

 தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."

 "ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..." 

 "அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்." 

"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்." 

"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.." 

"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "

 "அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."

 (டாக்டர் மைன்ட் வாய்ஸ்.. "அடி நாசமத்துப்போறவ...என் 'கைராசி'யைப் பத்தி நாலு பேருகிட்ட விசாரித்துட்டுதான் வந்திருக்கா..." )

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 அஸ்வின் ராக்ஸ்...(சும்மா அள்ளிவிடுவோம்..)





வணக்கங்களுடன்...
மணிமாறன்.  

--------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------------------

Saturday, 28 July 2012

பயணிகளின் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா...

   

நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.


இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் (AI 348 ) நடுவானில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளாகியிருக்கிறது.இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு பல பயணிகளும் காயமடைந்தனர்.ஆனால் இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியே தெரிந்திருக்கிறது.
 
    விமானம் புறப்பட்டு சரியாக ஒன்றரைமணி நேரம் கழித்து அனைவரும் 'சீட் பெல்ட்' போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.அடுத்த பத்தாவது நிமிடத்தில் 'ஏர் பாக்கெட்' ஊடாக விமானம் பயணிக்க, கடுமையான அதிர்வுக்கு விமானம் உள்ளாகி குலுங்கி இருக்கிறது.நிறையப்பேர் முன்னால் உள்ள இருக்கையில் மோதியும்,சிலர் தரையிலும் விழுந்தும் காயப்பட்டிருக்கின்றனர். மேலேயுள்ள பேக்கேஜ் லாக்கர் தானவே திறந்து பெட்டிகள் எல்லாம் பயணிகள் மேலே விழுந்து,சில பொருட்கள் உள்ளேயே பறந்தது என்று அந்த விமானத்தில் பணியாற்றிய ஒரு சிப்பந்தி தெரிவித்ததை வைத்துப் பார்த்தால் விமானம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
 
        சரி இது எதனால் ஏற்படுகிறது?... ஏர்-பாக்கெட் என்பது என்ன..? டெக்னிகலா பார்த்தால் இதை டர்புலன்ஸ்(Turbulance)என்று தான் அழைக்க வேண்டும்.

     முக்கியமாக ஒருமுறையாவது விமானப்பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.குண்டும் குழியுமாய் இருக்கும் நம்ம ஊர் சாலையில் டவுன் பஸ்ஸில் செல்லும் போது குலுக்கி எடுக்குமே அப்படி ஒரு குலுக்கல் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் விமானத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? ஈரகுலையே நடுங்கி விடாதா?முதல்முறை செல்பவர்களுக்கு நிச்சயம் வயிற்றில் புளியை கரைக்கும்...

     விமானம் பறப்பதற்கு,அதன் இறக்கையின் மேல்புறம் குறைந்த காற்றழுத்த மண்டலமும் இறக்கையின் கீழ்புறம் அதிக காற்றழுத்த மண்டலமும் உருவாக்கப்படுகிறது,இதற்கு ஏற்றார் போல் அதன் இறக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும்.இந்த இரண்டும் சேர்ந்துதான் விமானத்தை தூக்குகிறது.சில நேரங்களில் ஆகாயத்தில் ஏற்படும் காற்றின் அடர்த்தி மாற்றங்களால் விமானத்தின் இறக்கையில் இருக்கும் காற்றழுத்தம் ஒரே சீராக இருக்காது.இந்த காற்றழுத்தம் மாறுபடும் போதுதான் விமானம் குலுங்குகிறது.

உதாரணத்திற்கு மேகத்தினுள் பயணிக்கும்போதெல்லாம் இந்த டர்புலன்ஸ் கண்டிப்பாக விமானத்தில் வருவதை உணரமுடியும்...

    மேகம் என்பது அதை சுற்றியிருக்கும் காற்றை விட அடர்த்தி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.விமானத்தின் இறக்கை அதனுடன் உராயும்போது,திடீரென்று காற்றின் அடர்த்தி மாறுபடுவதால்,அதன் மேல் மற்றும் கீழுள்ள காற்றழுத்தமும் மாறுபடுகிறது.அதனால் விமானத்தின் மேல் நோக்கு விசை திடீரென்று மாறிமாறி கூடும் குறையும்.. இதனால்தான் விமானமே ஆடுகிறது.இதன் காரனியைத்தான் டர்புலன்ஸ் என்று சொல்கிறார்கள்.

   டர்புலன்ஸ் எப்படி இருக்கும்?உதாரணமா ஊதுபத்தி கொழுத்தும் போது அதன் முனையில் ஒரே சீராக வெளிவரும் புகை மேலே செல்லச் செல்ல சுழண்டு சுழண்டு செல்லுமே...அது போலத்தான் இருக்கும்.

கீழே உள்ள படம்..டர்புலன்ஸிலிருந்து  தப்பித்து வரும் விமானம்...


 இதனால் விமானவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் எதுவும் கிடையாது.ஆனால் பயணம் செய்பவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுண்டு... சிலநேரங்களில் விமானங்களுக்கு சேதம் கூட ஏற்பட்டிருக்கிறது.இது போன்ற சூழ்நிலையில் விமானிகள் சமயோசிதமாக விமானத்தை உடனே கீழே இறக்கி அல்லது மேலே ஏற்றி இந்த தாக்குதலிலிருந்து தப்பிப்பார்கள்.

சரி...இது சாதாரணமாக நடப்பதுதானே.இதற்கு எதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்று கேள்வி எழுகிறதா??? 

 முதலில்,இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட விமானத்தை உடனே இயக்க மாட்டார்கள். விமானத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து,எல்லாம் சரியான நிலையில் உள்ளதா என ஆராய்ந்த பின்னரே இயக்க அனுமதிப்பார்கள்.

 ஆனால்,இந்த விவகாரத்தை வெளியிலேயே சொல்லாமல் விமானிகள் மறைத்ததும் இல்லாமல்,அடுத்த 4 மணி நேரத்தில் அதே விமானத்தில் 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷாங்காயிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளது.டெல்லிக்கு வந்த பிறகே விமானத்தை சேவையிலிருந்து விலக்கியுள்ளனர். இதன்மூலம் 250 பயணிகளின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளது ஏர் இந்தியா.

 இந்த விஷயம் குறித்து சில விமான சிப்பந்திகள் மூலம் பத்திரிக்கைகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, விவகாரம் வெளியில் வந்துள்ளது.

இதையடுத்து இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்குச் சொன்னது யார் என்ற விசாரணையில் ஏர் இந்தியா இறங்கியுள்ளது. ஆனால்,நடுவானில் நடந்த சம்பவத்தை தங்களிடம் கூட தெரிவிக்காமல் மறைத்த விமானிகள் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஏற்கனவே ஏர் இந்தியா பிளைட்டை நிறைய பேர் 'குப்பைலாரி' என்றுதான் அழைக்கிறார்கள்.விமானம் புறப்பட்டதிலிருந்து இறங்கும்வரை தடதட... வென்று லாரியில் செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பைலட் ஸ்ட்ரைக் வேறு.கடைசியில் கிங்பிஷர் நிலைமை இதற்கும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
************************************************************************************************************************************************
     ட்ச லட்சமாக கட்டணம் வசூலிக்கும் பணத்தில் ஓட்டையிருந்தால் பெற்றுக்கொள்வார்களா?சின்னசிறு பிஞ்சு உசுரோடு விளையாடியிருக்கிறார்கள் படுபாவிகள்...

எப்.சி. கொடுத்தவர் மீதுதான் குற்றம்... பேருத்தை ஓட்டிய ஓட்டுனர் மீதுதான் குற்றம்... சரியாக பராமரிக்காத உரிமையாளர் மீதுதான் குற்றம்... இப்படியொரு பேருந்தை அமர்த்திய பள்ளி நிர்வாகத்தின் மீதுதான் குற்றம்... இப்படி மக்களின் கோப அம்புகள் எல்லோர்மீதும் சரமாரியாகப் பாய்கிறது.இவர்கள் மீது வழக்கும் தொடரப்படலாம்..பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும் நமது சட்டத்தில் உள்ள LOOP HOLES அகலமானது.தந்திர நரிகளுக்கு தப்பவா தெரியாது?

மணல் கடத்தினான் என்று ஒரு அப்பாவியை சுட்டு வீழ்த்திய தமிழக போலிஸ் துப்பாக்கியின் ரவைகள்,கல்வியை காசாக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டத்தை நோக்கி காரி உமிழாதா?


   இந்தப்பிரச்சனை கோர்ட்வரை வரை சென்று கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் நேற்று வேலூரில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது.பள்ளி வேன் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் மூன்று வயதே நிரம்பிய LKG படிக்கும் சுஜிதா என்ற மற்றொரு பிஞ்சு,வாகன சக்கரம் ஏறி அநியாயமாக இறந்திருக்கிறார்.மணல் லாரி ஓட்டிக்கொண்டிருந்தவரை ஓட்டுனராக பள்ளி நிர்வாகம் நியமித்ததாம்.பள்ளி நிர்வாகமும் அவர்கள் நியமித்திருக்கும் வாகனமும் கிட்டத்தட்ட எமனும் எருமையும் போலத்தான் காட்சியளிக்கிறது.
 
சுஜிதா 
************************************************************************************************************************************************
கொஞ்சம் ரிலாக்ஸ்...

என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! - செங்கோட்டையன்

# #  அண்ணே கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்கண்ணே..! இப்டி குனிஞ்சி நின்னா என்ன அர்த்தம்..!? நெஞ்சு தெரியாம எப்படி பொளக்குறதாம்...!?

************************************************************************************************************************************************
  
கடவுளை அடைய ஆசைகளை துறந்த ரமணரும்....
ஆசைகளை அடைய கடவுளை மறந்த போலி சாமியார்களும்....



************************************************************************************************************************************************
ஒருவன் தற்கொலைக்கு முன்னே ஒரு குறிப்பு எழுதி வைத்தான்.

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்.
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது...
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்.என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்.
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன். அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்.என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்.

VAIRAM SIVAKASI
  
************************************************************************************************************************************************
தமிழுக்கு இந்தியாவில் கிடைக்காத அங்கீகாரம் உலக அளவில் கிடைத்திருக்கிறது.ஒலிம்பிக் போட்டிக்காக வெளியிடப்பட கானொளியில் முதலில் சொல்லப்படுவது 'வணக்கம்' என்ற தமிழ் சொல்..!!!! 



அடுத்தப்பதிவில் சந்திப்போம்...  ---------------------------------------------------------((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------------------------

Thursday, 19 January 2012

கங்காரு தேசத்தில் நொண்டியடிக்கும் நம் சண்டிக்குதிரைகள்.....




" பால் இந்தப்பக்கம்மா தான் வந்திச்சி...இப்ப அது எங்க போச்சுன்னு தெரியிலயே...."

"இங்க சீனியரெல்லாம் சிங்கிலா  அடிக்கும் போது  நான் மட்டும் செஞ்சுரி அடிக்கனுமா?"

"ஹி.. ஹி...என்ன  ரொம்ப   புகழாதிங்க ...நான் நூறாவது சதம் அடிக்க இன்னும் நாப்பது மேட்ச் இருக்கு..........."


"நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா வழியிலேயும் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ....இவனுக மட்டும் எப்படி அசால்டா  செஞ்சுரி   அடிக்கிறானுவனே   தெரியிலயே ...."

 "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க ......எங்களுக்கு தொப்பையும் இல்ல தொந்தியும் இல்ல .. "

"சனியம் புடிச்சவனே ....நானும் அப்பத்திலேருந்து பாத்துகிட்டே இருக்கேன் .... பக்கத்திலே நின்னுகிட்டு ஒரு ரன் கூட எடுக்க விடாம  பண்றான்....."

            "  ஓ....இதுக்கு பேருதான் கிளீன் போல்டா ?...சொல்லவே இல்ல....."


          "கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது....நானும் வரமாட்டேன்...பேச்சி பேச்சாத்தான் இருக்கணும்....."

"ரெண்டு பிளேட் பிரியாணியும் ,ஒரு குவாட்டரும் ஆர்டர் பண்ணி வைடா மாப்ளே . ஒன் அவர்ல மேட்டர் முடிச்சிட்டு வந்திடுறேன்..... "


"நம்மள அடிச்சி இவனுக பெரிய ஆளாகுனும்னு  நெனைக்கிராய்ங்க... அடிச்சிட்டு போவட்டும்.. அதுக்காக எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?.....  "   

    "அநியாயமா இருக்கு...... நம்மள மட்டும் ஒரு செஞ்சுரி  கூட அடிக்கவிட மாட்டேன்கிறாங்க....அவனுக இத்தன செஞ்சுரி அடிச்சாங்களே  ..நாம ஒரு வார்த்தை கேட்டிருப்போமா..இல்ல.. அடிக்க விடாமத்தான் தடுத்திருப்போமா.. ஒரு டீசன்சி வேணாம்? சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு....."


                              "ஏன் மாப்ளே 'அதுக்கு' நாம சரிபட்டு வருவோமா?..."

"இதுக்கெல்லாம் கவலை படுற ஆள் நான் கிடையாது....பத்து மேட்சில டக் அவுட்டாகி பதினோராவது மேட்சில வேர்ல்டு ரெகார்ட் பண்ணி சரி கட்டிடுவேன்.."

"நைட்டு சரக்கு அடிச்சிட்டு சாய்ஞ்சு கெடந்த என்ன இப்படி அர தூக்கத்தில எழுப்பி பேட்டிங் பண்ண சொல்றிங்களே......." 

"போயிட்டு பொறுமையா நாலு மணி நேரங்கழிச்சு வாங்கயா ...அவ்வளவு சீக்கிரம் யாரையும் நாங்க அவுட்டாக்கிட  மாட்டோம்......"

"ச்சே....நாங்களும் எவ்வளவு நேரம்தான் பேட்டிங் பன்றது......எப்படியாவது அவுட்டாகி ரெஸ்ட் ரூம்ல போயி ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா ...கடைசியில இங்கேயே ரெஸ்ட் எடுக்கும்படி   ஆயிடிச்சே ..... "


"வா மாப்ளே ...நீயும் வந்து படுத்துக்க....நாமளும் அவங்கள அவுட்டாக்குற மாதிரி தெரியில....அவனுவளும் அவுட்டாவுற  மாதிரியும்  தெரியில....."


"அந்த ஸ்டெம்ப  பாத்து  பால போடுங்கடான்னா.....  ...............  ............ ........"


"நாங்க மொத்தமா அடிச்சத இப்படி ஒத்த ஆள விட்டு அடிக்க வக்கிறீங்களே... உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல?.தைரியம் இருந்தா மொத்தமா வந்து அடிச்சி காமிங்கடா...."


"நீ எப்படி வேணும்னாலும் தள்ளி நின்னு..அதப்பத்தி எனக்கு கவலை இல்ல .. ஆனா நான் போடுற பால் ஸ்டம்புக்கு மட்டும் வராது....."


"அடிக்கிற  மாதிரியே எல்லா பாலையும் போடுறாங்களே.....நான் எப்படித்தான் அவுட்டாவுறது  ?....."


" இப்படி சொல்லி வச்சி அவுட்டாக்குராங்களே.... இப்பவே இப்படி கண்ணக்கட்டுதே....."


                                                      (வொய் திஸ் கொலைவெறி?)


"ஏன் மாப்ளே  ஷேவ் பண்ணி ஸ்மார்டா இருக்க கூடாதா?..நைட் 'பப்'க்கெல்லாம் வேற போகணும்....."


"அஞ்சு நாளு விளையாட வேண்டிய மேட்ச இப்படி மூணு நாளிலே முடிச்சி வைக்கிரமே...நமக்கு ஏதாவது ஸ்பெஷல் கப் தருவாங்களா ?.."


"இந்த பத்திரிகைகாரங்க எதைக்கேட்டாலும் வாயே திறக்கக்கூடாது...இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்....." 




                           (இவர் காட்டுவது நமக்கா?... அல்லது அவர்களுக்கா?..)

Monday, 16 January 2012

வீரம் வெளஞ்ச மண்ணு....


              தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின்  வீரத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜல்லிக்கட்டு நம் தென் மாவட்டங்களில் தான் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது...

        ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தமிழகத்தின் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது  என்பதை யாரும் மறுக்கமுடியாது....

 
           

       ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதை ஒரு கலையாகவே நினைத்து செய்கின்றனர்.இதற்கு பச்சரிசி ஊறவைத்து அரைத்து கொடுப்பது , குளிப்பாட்டுவது,போட்டிக்கு தயார் செய்வது என்று ஆண்களுக்கு இணையாக வீட்டுப் பெண்களும் ஈடுபடுவது ஆச்சர்யமான விஷயம்.இதன் கொம்புகளும் மிக கூர்மையாக தீட்டப்பட்டு ராணுவத்திற்கு தயார் செய்வது  போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.

      ஜல்லிக்கட்டில் இரண்டு வகை உள்ளது.ஒன்று வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் திறந்து விடப்படும்.வெளியில் காத்திருக்கும் வீரர்கள் இதை பாய்ந்து  சென்று பிடிப்பார்கள்.மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படும். இதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும் யாரைத் தூக்கும் என்று தெரியாது. 

       தென்தமிழகத்தில்  அலங்காநல்லூர், கொடிக்குளம், வேந்தன்பட்டி, அவனியாபுரம்,சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி,  மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


          
         

        காளையை அடக்குவது ஒன்றும் சாதாரமான விஷயம் அல்ல.நாம.... துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்த்தே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவோம்.செம்மண் புழுதியில் சீறிவரும் காளைகளை நம் மண்ணின் சிங்கக் குட்டிகள்  எப்படி அடக்குகிறார்கள் என்று பாருங்கள்.இதில் ஜெயித்தால் இவர்களுக்கு கிடைப்பதென்னவோ சோப்பு டப்பாவும்,பிளாஸ்டிக் குடமும் தான். ஆனால் இவர்களுக்கு பரிசு ஒரு பொருட்டு அல்ல.நாலு காளைய அடக்கினோம்  என்ற பெருமையோடு வீட்டுக்கு போகணும்னு விரும்புவாங்க. கை,கால்,மார்பு,முதுகு என்று தழும்பு இல்லாத இளைஞர்களை பார்ப்பதே அபூர்வம். புதுப்படம் ரிலீஸ் ஆகும்போது  தியேட்டர் வாசலில் டிக்கெட் வாங்க முண்டியடித்து சண்டை போடும் இளைஞர் கூட்டத்தை பார்த்திருக்கலாம். இங்கே வாடிவாசல் வெளியே...திமிறி வரும் காளையை  அடக்க திரண்டிருக்கும்   நம் மண்ணின் மைந்தர்களைப் பாருங்கள்.......



  

இவர்களின்  செங்குருதி இம்மண்ணில்  சிந்திதான் செம்மண் ஆனதோ?



-------------------------------((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))------------------


   

Saturday, 14 January 2012

சச்சின் சதம் அடிக்க பத்து யோசனைகள்...

"வருசத்துக்கு ஆறேழு செஞ்சுரி அடிச்சிகிட்டு இருந்தேன் ..இந்த சனியன் புடிச்ச அ.'.ப்ரிடி என்னைக்கு வாய வச்சானோ தெரியில ...ஒரு செஞ்சுரி அடிக்கிறதுக்குள்ள உசிரே  போவுதே....." அனேகமா சச்சினோட லேட்டஸ்ட் புலம்பல் இதுவாகத்தான் இருக்கும்.சச்சினுக்கு இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்....சச்சினின் சதத்தில் சதம்... உலகமே எதிர்பாக்குது...அதனாலையோ என்னவோ சச்சினுக்கு டென்சன் எகிறுது ..உலகின் நெ. 1 பேட்ஸ்மேன்.... கிரிகெட்டின் அடையாளம்...  யாருமே கிட்ட வரமுடியாத சாதனைகள்...ஆனா என்ன....90 ரன்ன தாண்டினாத்தான் கொஞ்சம் பேஸ்மென்ட் வீக்..


அவரோட டென்சன குறைக்கிறதுக்கும்,சதம் அடிக்கிறதுக்கும் என்னால் முடிஞ்ச யோசனையை I.C.C க்கு ஒரு கோரிக்கையா வைக்கலாம்னு  இருக்கேன்,கண்டிப்பா சச்சினுக்காக இத பரிசீலனை செய்வாங்கன்னு நெனைக்கிறேன். 

1 .ஒவ்வொரு சீரிஸ் ஆரம்பிக்கும் போது,அபசகுனமாக,"இந்த தொடரில் சச்சின் சதமடிப்பார்" என்று நாக்குல சனியோட திருவாய் மலரும் தோனியை இனிமேல்"இந்த தொடரில் சச்சின் சதம் அடிக்க வாய்ப்பே இல்ல"ன்னு மாத்தி சொல்ல வைக்கணும்.

2 .  உடனடியாக கென்யா,பெர்முடா,U.A.E போன்ற நாடுகளுடன் ஐந்து டெஸ்ட் மற்றும் பத்து ஒரு நாள் போட்டி நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அதுவும் இந்திய மண்ணில்.

3 .சச்சின் விளையாடும் போது அப்பப்போ கேமரா,லைட்டிங்,ரெண்டு மூணு மாடல் அம்மணிங்க  எல்லாம் சச்சின் கண்ணுக்கு தெரியும்படி வந்து போக வேண்டும். இடை இடையே 'பஸ் டயர' குறுக்கால நெடுக்காலையும் ஒருவர் ஓட்டி செல்ல வேண்டும்.கண்டிப்பாக அடிக்கடி 'கட்' சொல்லவேண்டும். இதெல்லாம் விளம்பர படம் எடுக்கிற ஒரு செட்டப் உருவாக்கத்தான்.( பின்ன ... அதுலதானே எல்லோரும்  சிக்ஸர் அடிக்கிறாங்கபா ...)

4 .சச்சின் பேட்டிங் செய்யும் போது 'பீல்டிங் செட்' பண்ணும் உரிமை சச்சினுக்குதான் கொடுக்கவேண்டும்....

5 .சச்சின் அடிக்கிற பாலை டைவ் அடிச்சோ ,ஓடிவந்தோ பிடிக்கக் கூடாது.கைக்கு தானாக வந்தால் மட்டுமே பிடிக்க வேண்டும்.அப்படியும் மீறி புடிச்சா...புடிச்சவுங்க அவுட்.(இது எப்படி இருக்கு...?) 

6 .சச்சின் 80 ரன்னை தொட்ட  பிறகு அடுத்தடுத்து   யார் 'பவலிங்' செய்யனும்னு சச்சின்தான் முடிவு செய்வார்...

7 .ரெண்டு காலிலேயும் 'லெக் கார்ட்ஸ்' க்கு பதில் 'பேட்ட' கட்டிக்க அனுமதிக்க வேண்டும். .'.புட் பால்ல எப்படி நெஞ்சு,தலையால  பால அடிக்கலாமோ அதே மாதிரி இங்க காலாலையும்,தலையாலையும் 'பேட்டிங்'பண்ண அனுமதிக்க வேண்டும்... 

 8 .சச்சின் 'பேட்டிங்' பண்ணுவாரே தவிர 'ரன்' எடுக்க ஓட மாட்டார். அவருக்கு கொறஞ்சது மூணு  பேராவது 'பை ரன்'னரா  களத்தில் எப்போதும்  இருக்கவேண்டும். இவர்கள் 'ரிலே ரேஸ்' முறையில் ஓடி ரன் எடுப்பார்கள்.

9 . 'டெஸ்ட் போட்டி' யில  நாலு இன்னிங்க்ஸ், 'ஓன் டே' யில ரெண்டு இன்னிங்க்ஸ் விளையாடசச்சினுக்கு மட்டும்  அனுமதி கொடுக்கணும்.... 

இப்படியும் முடியலயா.....கடைசியாக..

10 .சச்சினை 'அவுட்' செய்பவருக்கு கிரிகெட் விளையாட மூன்று   வருஷம்  தடை விதிக்கப்படும் னு அறிவிக்க வேண்டும்.

(ஹி ஹி..இதெல்லாம் சச்சின் நூறாவது சதம் அடிக்க மட்டும்தான்.  அடிச்சிட்டாரு......அப்பறம் எந்த கொம்பனாலையும்   சச்சின அவுட்டாக்க முடியாது...)
-------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் ....சதத்தில் சதமடிப்பார் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்...சீக்கிரமே எனக்கு 'பெரிய பல்ப்' கிடைக்க சச்சிதானந்த ஸ்வாமிகள் அருள் புரிவாராக....

Saturday, 26 November 2011

கபடி.... கபடி..... கண்டுபிடி..

வாழ்த்துவோம் ;


காணாமல் போன கபடி விளையாட்டைக் கண்டெடுக்கும் ஓர் முயற்சி :-

நமது இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக  நம் மண்ணின் வீரம் செறிந்த கபடி விளையாட்டின் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றெடுத்திருக்கிறது. இதற்கு முதலில் சிரம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்வோம்.
    
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான், இலங்கை, தாய்லாந்து, சீனா, இத்தாலி,ஆப்கனிஸ்தான், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,  நேபால், நார்வே, ஸ்பெயின்  மற்றும் அர்ஜென்டினா ஆகிய  நாடுகள் பங்கேற்றது. போட்டி மிகக்கடுமையாக இருந்தும் 'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் ' என்று மீண்டும் நிரூபித்து வாகை சூடியிருக்கிறது  நம் இந்திய அணி.

ஆனால், இந்தியா கிரிக்கெட் சாம்பியன் ஆனபோது சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட நம்மவர்கள், இவ்வெற்றியைப்பற்றி சிலாகித்து ஒரு வார்த்தைக்கூட தெரிவிக்காதது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

கபடி விளையாட்டு என்றால் என்ன...? ஏதோ ரோட்டோரத்தில் டவுசர், பனியனோடு குஸ்தி சண்டைப் போல சகதியில் கட்டிப்புரண்டு உருள்வார்களே அதுவா...? கபடி விளையாட்டைப் பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கும்...

இந்தியா, கபடி விளையாட்டில்  பெரிய அளவில்  என்ன  சாதித்துவிட்டது..? நிறையப்பேருக்கு தெரிந்திருக்காது. காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள்...

இதோ இந்தியாவின் வெற்றி வரலாறு..





(தகவல்கள் -நன்றி விக்கிப்பீடியா)

கண்ணைக்கட்டுமே.....! குழப்பிக் கொள்ள வேண்டாம்... இதன் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதின் ஆதாரம்தான் மேலே உள்ள தகவல்கள்.

கபடி விளையாட்டு தமிழர்களின்  பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச்சாரத்தின் உயிர் செல்கள் ஒவ்வொன்றாய் மரித்து போய் உதிர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், கபடியும் அப்படிப்பட்ட கோமா நிலையில்தான்  ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்கள்... அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத்தோடு அதன் வரலாற்றை முடித்துக்கொள்ளும்.

கபடியைப் பற்றி ஓர் தவறான புரிதல் நம் சமூகத்தில் நிலவுகிறது. இது நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டு போலவும், ஜல்லிக்கட்டுப் போன்ற ஆபத்தான விளையாட்டு போலவும் இதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும் எனவும் மேலெழுந்தவாரியாக ஓர் எண்ணம் சமகால நகரப்புற மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக படித்தவர்கள் மத்தியில்... 

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப்போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333..  மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடவேண்டும். ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்.

சிறுவயதில் கபடி எனக்கு உயிர் மூச்சு. எனக்கு தெரிந்த ஒரே விளையாட்டும் அதுதான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்வதற்குள் பள்ளியின் விளையாட்டு களத்தில் ஒரு ஆட்டம், ஆற்று மணலில் ஒரு ஆட்டம் என்று இரண்டு ஆட்டம் போட்டுவிடுவோம். இரண்டும் பக்கத்து ஊர் பசங்களுடன். பிறகு வீட்டில் புத்தகப் பையை தூக்கி எறிந்துவிட்டு பக்கத்து தெரு பசங்களுடன் ஒரு ஆட்டம்.

சில நேரங்களில் கால் முட்டி பெயர்ந்து விடும். கைகளில் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மண்டை கூட உடையும். அடுத்த நாள் குளத்து தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துதான் எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரியவரும். அதற்காக ஒருபோதும் கவலைப் பட்டதும் இல்லை.  

புழுதி பறக்கும் களத்தில் குருதிச்சொட்ட விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது. கோடைக் காலங்களில் இதுதான் எங்கள் பொழுதுப்போக்கு. நாலு பேரு ஒன்னா சேந்தா, நடுவுல ஒரு கோடு  போட்டு , அணிக்கு ரெண்டா பிரிச்சி ஆசையோடு விளையாடிய ஞாபகங்கள்......
            
மண்ணோட வாசமும் ருசியும் ஒன்னா கலந்ததால சோறு தண்ணியும் மறந்து விடும்..சுகமும் துக்கமும் மறத்து  போகும். மட்டையும்  பந்தும் தேவையில்ல..அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு.. புல்தரையும் போர்க்களமாகும்...வயல்வெளியும் மைதானமாகும்..   

பள்ளிக்கூடத்தில் அரை பெல் அடிச்சா, அந்த அரை மணி நேரத்திலும் அணி பிரிச்சி  ஒரு ஆட்டம் போடுவோம். முழுப் பரிட்சை  முடிஞ்சா முழுமூச்சா இறங்கிடுவோம்..ஊர் ஊராச்  சுத்தி ஒரு போட்டியும் விடாம களம் கண்டு வெறியோடு வெல்வோம்.
               
இதில் எடைப்பிரிவு இருக்கு." நாங்க விதிமுறையில சொன்ன எடையைவிட இரண்டு கிலோ அதிகம் " னு நடுவர் சொல்வார். விடமாட்டோம். ஒரு வாரம் ஓடினாலும் ரெண்டு கிலோ குறையாது. ஆனாலும் ஏதோ நம்பிக்கையில நாத்து வயல்களுக்கு நடுவே மூச்சிரைக்க ஓடுவோம். ஒரு கிலோ கூடயிருக்குனு நடுவர் சொன்னப்ப, வாய்க்குள்ள  விரலைவிட்டு வாந்தி எடுத்த கதையும் இன்னும் நினைவிலிருக்கு ...  
                   
வெற்றியோ தோல்வியோ ..அதைப்பற்றியெல்லாம் கவலையில்ல.. களமிறங்கி விளையாடுனும். இதுல கிடைக்கும் ஆத்மதிருப்தி  வேறெதிலும் அப்போ கிடைக்காது. கபடியைப் பொருத்தவரையில் மண்ணைக் கவ்வுவதும், மீசையில் மண் ஓட்டுவதும் ,தோல்விக்கான அடையாளம் அல்ல .
 
இப்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால், சின்னப்பசங்க எல்லாம் கையில பேட் பந்தோட சுத்துறாங்க. கேட்டால், லை.'.ப்  ஸ்டைல் மாறிப்போச்சாம்... சொல்றாய்ங்க..
'டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி ...முதல் பரிசு 5001 ' அப்படின்னுதான் இப்பெல்லாம் போஸ்டர் பார்க்க முடியுது. அதிலும் சினிமாவில கபடியைக் காட்டும் விதம் அதைவிடக்கொடுமை. ஹீரோ ஹீரோயினோட மன்மத விளையாட்டுபோலவும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கொடுரமான சண்டை போலவும் (அதுவும் விரலிடுக்குள்ள பிளேடு வச்செல்லாம்......@ கில்லி ) காட்டப்படுகிறது. விதிவிலக்கு 'வெண்ணிலா கபடிக்குழு' ...

கபடியின் பூர்விகம் என்ன ? அதன் விதி முறைகள் என்ன ? கபடி எவ்வாறு விளையாடப்படுகிறது ? என்பதைப்பற்றி(நீங்க விரும்பாவிட்டாலும்) உங்களோட பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்..

கபடியைப்பற்றி அறியாதவர்களுக்கு  எனக்குத்தெரிந்த தகவல்கள் ..

இது தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு...இதன் வயது 4000  வருடங்களுக்கு மேல். அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டுவ என்பது கூடுதல் தகவல். கபடி தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கபடி 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை. உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்வதற்குப்பதில் கபடி விளையாடிவிட்டுப் போகலாம்

கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள்.

ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல்  நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப  விளையாடப்படுகிறது என்றாலும்  இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .
 
             கபடி        (kabbadi)             ---------------  இந்தியா ,பாகிஸ்தான் 
             ஹடுடு  (hadudu)              ----------------- பங்களாதேஷ் 
            டூ-டூ          (do-do)                ----------------- நேபாளம் 
            குடு           (guddo)               -----------------  ஸ்ரீ லங்கா 
            சடு-குடு   (chado-guddo)   -----------------   மலேசியா 
            டெசிப்      (techib)                 ----------------- இந்தோனேசியா

கபடியின்  வகைகள் ; 

         இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.
     1 . சர்ஜீவ்னி 
     2 . காமினி 
     3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)

சர்ஜீவ்னி :
                       தென்னிந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில் விளையாடும் விளையாட்டு.இது கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை.
  •  பாடிச்செல்லும்போது  கபடிக்கபடிக்கபடி......என்று ஒரே மூச்சில  பாடனும்னு    அவசியம் இல்லை.கபடி ..கபடி...கபடி...என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம்  . எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில்  தப்பித்து வரவேண்டும்.
  • ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12  பேர் இருப்பார்கள்.ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.மீதி ஐவரும் ரிசர்வ் .
  • ஆட்டக்காரர்களில் ஒருவர் எதிரணியினரின்   களத்தினுள் நுழைந்து 'கபடி ...கபடி...' என்று பாடியபடி செல்வார்.எதிரணியினரில் யாராவது ஒருவரைத் தொட்டு விட்டு ,மூச்சு விடாமல்,உச்சரிப்பதையும் நிறுத்தாமல் தன்னுடைய களத்திற்கு திரும்பி வந்தால் ,தொடப்பட்ட நபர் 'அவுட் 'ஆகிவிடுவார்.
  • பாடி வருபவரை ஒருவரோ அல்லது ஒட்டுமொத்தமாகவோச் சேர்ந்து  பிடிக்கலாம்.இதை மீறி அவர் தப்பிச் சென்று விட்டால் ,பிடிக்க முயற்சித்த அனைவருமே 'அவுட்' தான்.ஒருவேளை பாடி வருபவரைப் பிடிக்க முயற்சி செய்யும்போது ,பிடிக்க முயல்வோர் யாராவது நடுக்    கோட்டைத் தொட்டாலும் பிடித்தவர் அனைவரும் அவுட் டாக நேரிடும்.
  • எதிரணியில் ஒருவர் வெளியேறும்போது அதற்குக் காரணமாயிருந்த அணிக்கு ஒரு புள்ளி (Point )   வழங்கப்படும்.ஆட முடிவில் அதிக புள்ளிகளைப்பெற்ற அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
  •  'டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம்   .ஆனால் இரண்டாம்பகுதியில்     மாற்றி எடுக்க வேண்டும்.
  •  ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.
  •  பாடி வருபவரின் கை,கால்,இடுப்புப்பகுதிகளை மட்டும் தான் பிடிக்கவேண்டும் .அவர் வாயையும் பொத்தக்கூடாது.மீறிச் செய்தால் அது '.'.பவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.  
  • ஒருவர் ,பல முறை ரைடு போகலாம்.ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட்.
  • எதிரணியில் உள்ள அனைவரையும் அவுட் செய்தால்,இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும்.இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள் 
   இப்படி நிறைய ரூல்ஸ் இருக்குங்க...   
   
       மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் . இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு இரு  நடுவர்கள்  தேவை.

ஆடுகளம்:
       ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.
இதுதான் கபடியின் ஆடுகளம்......



சர்ஜீவனி முறையில் விளையாடப்படும்  தமிழ்நாட்டுக் கபடி..(வீடியோ)



ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல...தூள் கிளப்பும் பெண்கள்.....(வீடியோ)




அமர் (பஞ்சாப் ஸ்டைல்):
                   
                                    இது கிட்டத்தட்ட மல்யுத்தம் போன்ற போட்டிதான்.இந்த வித விளையாட்டில்தான் இந்தியா  தற்போது   உலகக்கோப்பையை  வென்றது.    நம்ம  ஊரில்  விளையாடப்படும்  சர்ஜீவினி  முறை கபடிக்கு எல்லா  வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும்  என்றஅவசியம் கிடையாது.  ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம்.( மேலே  நான்காவதாக குறிப்பிட்ட விதிமுறைப்படி).ஆனால் அமர் முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர்  மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். தொடப்பட்டநபர் உடனே மைதானத்தை விட்டு  வெளியே  செல்லவேண்டும்  என்ற அவசியம் கிடையாது. பாடி  வருபவர்  திரும்பிப்  போகும்     வரை   பிடிக்க முயற்சி செய்யலாம். இந்த விதிமுறைதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.
         மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும்.இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு வட்டக்கபடி (CIRCLE KABBADI) என்ற பெயரும் உண்டு.

ஆடுகளம்.....

அமர் முறையில் விளையாடப்படும் பஞ்சாப் ஸ்டைல் கபடி


 பஞ்சாப்பில் நடந்த உலகக் கோப்பையின்  இறுதிப்போட்டி 
                 

நம்ம ஊர் சர்ஜீவ்னி கபடியின் உயிரோட்டமான விசயங்கள் இதில் (அமர்) இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தமே ... ஏதோ  WWE விளையாட்டு பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை..ஒருவேளை இதுதான் கபடியின் பரிணாம வளர்ச்சியோ..  ?

-------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))---------------------------