Thursday 23 February 2012

பவர்கட் ஜோக்ஸ்


இவிங்க  இம்ச  தாங்க  முடியலப்பா.....






---------------------------------------------------------------------------------------------------------------


 "இவிங்க பிரச்சனையில நம்ம பேர 'பவர்கட் ஸ்டார்' னு மாத்திட்டாங்கனா என்ன பண்றது?..........."

--------------------------------------------------------------------------------------------------------------

   "நம்ம அமைச்சர் ரொம்ப வெகுளியா இருக்காருப்பா.... "

   " எத வச்சு சொல்ற?..... "

    " CM  .'.போன்  பண்ணி,உங்க பவர புடுங்கியாச்சுனு  சொன்னதுக்கு....  பரவாயில்ல மேடம் ..  வீட்ல UPS இருக்கு வச்சி சமாளிச்கிகுவன் னு பதில் சொல்லியிருக்காரு...."

--------------------------------------------------------------------------------------------------------------
   பவர்கட்டை  சமாளிக்க   ஒரே வழி........


      இந்தியனின் உன்னத கண்டுபிடிப்பு.......அரிக்கேன் விளக்கு......

    என்ன யோசிக்கிறீங்க....அந்தக் காலத்து "பெல் பாட்டம்' இந்தக் கால .'.பேஷன் ஆகலியா?... எவ்வளவு   காலம் கடந்தாலும் இளையராஜாதான் 'தி பெஸ்ட்' னு சொல்றதில்லையா?...............ஆதிகால மக்கள் கீழேயும்  மேலேயும்  இலை தழைய வச்சி மறச்சிகிட்ட மாதிரி இப்ப உள்ள மாடர்ன் பெண்கள் டிரஸ் போடுறதில்லையா?.......ஆதிவாசிகள் காட்டுல இருக்கிற மிருகங்கள வேட்டையாடி பிறகு நெருப்புல சுட்டுத் தின்ன மாதிரி இப்போ 'BBQ சிக்கன்'  னு சொல்லிட்டு நாம சுட்டுத் திங்கலையா?..........அது போல தான் இதுவும்......

     இத அவ்வளவு லேசா நெனச்சிடாதீங்க.....இந்த விளக்கு வெளிச்சத்துல படிச்சுதான் பல மேதைகளும்,அறிஞர்களும்,விஞ்ஞானிகளும்,தலைவர்களும் உருவாகியிருக்காங்க.....
  
-----------------------------------------------------------------------------------------------------------
                    (பவர்கட்டுக்கும்  இதுக்கும்  சம்மந்தமில்ல .....)

பழைய மொக்கையான ராமராஜன் மேட்டர் ஒன்னு .....



                        'ஒலக மகா பால்காரன்' அப்படீங்கிற பட்டத்துக்காக, உலகத்திலே அதிகமா பால் கறக்கிரவிங்க யாருனு ஒரு போட்டி நடந்துச்சு ... அதுல நம்ம இந்தியாவிலேருந்து 'போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட'நம்ம பசுநேசன் ராமராசன் கலந்துக்க போனாரு.போட்டி கடுமையா இருந்துச்சு.முடிவில, நடுவர்கள் ஒவ்வொரு நாட்டு பால்காரன் கிட்டையும் போயி எவ்வளவு பால் கறந்திருக்கிராங்கனு அளந்து பாத்துட்டு நோட் பண்ணிட்டு வந்தாங்க. ஒவ்வொருத்தனும் கறந்தது பத்து லிட்டர், பதினஞ்சி, இருபதுன்னு போய் கிட்டே இருந்திச்சி. கடைசியா நம்ம ஆளுகிட்ட வந்தாங்க...நம்ம ஆளு பாட்டுப்படி,டான்ஸ் ஆடி,வித்த காட்டி அப்டி இப்டினு வெறும் அரை லிட்டர் பால கறந்திட்டு வேர்க்க விருவிருக்க நின்னுகிட்டிருந்தார். கிட்ட போயி  பாத்த நடுவர்கள் ஆச்சர்யப் பட்டுப் போய்.. ராமராசந்தான் 'ஒலக மகா பால்காரன்' னு அறிவிச்சிட்டாங்க.. என்னடான்னு விசாரிச்சா..... பொறவுதான் தெரிஞ்சது..... நம்ம ராமராசன் போட்டிக்கு கெளம்புற அவசரத்துல பசு மாட்டுக்குப் பதிலா காளமாட்ட கூட்டிட்டு போயிருக்கிறாருனு.......    


---------------------------------------((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------

1 comment:

  1. I've used ur context here -> http://yosinga.blogspot.com/2012/05/18.html

    Thanks!!:)

    ReplyDelete