Wednesday 11 September 2013

அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?



வ்வொரு தடவையும் கொடநாட்டிலிருந்து திரும்பியவுடன் ஆத்தாவின் ருத்ரதாண்டவம் முதலில் அமைச்சர்கள் மீதுதான் அரங்கேறும். அந்த துர்பாக்கியவான்கள் யார் என்று சசிகலா தரப்பே கணிக்க முடியாத கொடநாட்டு ரகசியம். இந்த முறை யாருமே எதிர்பார்க்காத 'இலக்கிய சொம்பு' வைகைச்செல்வன் மீது பாய்ந்திருப்பது ரந்தததின் ரத்தங்களுக்கே பேரதிர்ச்சி. 

போயஸ் தோட்டத்தில் சசி கும்பலுக்கு அடுத்ததாக அம்மாவின் அனுக்கிரகம் நேரடியாக அமையப் பெற்றவர் என்கிற பிம்பத்தோடு வளம் வந்தவர் வைகைச்செல்வன்.அதற்கேற்றார்போல் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும் கூடவே அதிமுகவின் 'இளம்பெண்கள்' மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளர் உட்பட 'கனமான' பதவிகளை வகித்து வந்தவர். ஆனால் பதவியேற்று ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அலேக்காக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.


அமைச்சரவை மாற்றம் என்பது அம்மாவின் ஆட்சியில் அன்ட்ராயரைக் கழட்டி மாட்டுவது போல். அப்போதை -க்கு எந்த அன்ட்ராயர் பிடிக்குதோ அதை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

கல்வித்துறை ஒரு நாட்டுக்கு முதுகெலும்பு போன்றது. அதில் அரசியல் தலையீடு இல்லாதிருத்தல் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறாதது வெட்கக்கேடு. ஆட்சியமைத்த இரண்டு வருடத்தில் நான்காவது முறையாக கல்வியமைச்சர் மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் மாணவர்களுக்கு கல்வியமைச்சர் யார் என்கிற குழப்பம் வருவது ஒருபுறம் இருக்கட்டும், கல்வியமைச்சரிடம் ஒரு தைரியமான திட்டமிடல் எப்படி இருக்கும் ?

சரி.. இதைப்பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. அடுத்து முக்கியமான சங்கதிக்கு வருவோம். எதற்காக வைகைச்செல்வன் மாற்றப்பட்டார்..?

இதற்கு பல்வேறு காரணங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.மற்ற அமைச்சர்களை மதிப்பதில்லை,இளம்பெண்கள் பாசறையில் சிலருடன் விளையாடிவிட்டார் என அதிமுக தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் மனுஷ்ய புத்திரனை பாராட்டிப் பேசியதால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளானார் என்று ஜூவியில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மனுஷ்ய புத்திரனே தன் முகநூளில் பகிர்ந்திருக்கிறார்.

இதையெல்லாம் புறந்தள்ளுகிற ஒரு செய்தி முகநூலில் பரவியிருக்கிறது. அதைப்பற்றி எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள அடியேனுக்கு தைரியம் கிடையாது. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

முகநூலில் அதிமுகவின் மேல்மட்டத் தொடர்புடையவர் என்கிற பில்டப்போடு வளம்வருகிறவர் கிஷோர்சாமி. அவ்வப்போது அதிரடியாக ஸ்டேடஸ் பதிந்து பல பிரபலங்களை கலங்கடிப்பவர்.மனுஷ்யபுத்திரன்,கவின்மலர், யுவா உள்ளிட்ட பல ஜெயா எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்களை தன் முகநூல் சுவரில் கிழித்தெடுத்தே பிரபலம் ஆனவர். அவரின் லேட்டஸ்ட் நிலைத்தகவல்தான் இது. இவர் அடிக்கடி ஞாபகப்படுத்தும் ஒரு விஷயம், 'நான் எந்த ஆதாரமும் இல்லாமல் இங்கே பதிவு போடமாட்டேன். அப்படி போட்ட பதிவை எந்த மிரட்டலுக்கு பணிந்து நீக்கவும் மாட்டேன். சட்ட ரீதியாக எதையும் சந்திப்பேன்.'

இவர் ஸ்டேடஸ் போட்ட சில மணி நேரத்திலேயே இந்தத் தகவல் பிரசன்னாவுக்கு இவரால் பாதிப்புக்குள்ளான யாராலையோ தெரிவிக்கப்பட்டுள்ளது( அதற்குள் ஏகப்பட்ட லைக் ,கமெண்ட்ஸ் விழுந்துவிட்டது). பிரசன்னா பொங்கி எழுந்துவிட்டார். பின்ன.. மூன்று முறை தாலிக் கட்டியவரல்லவா ...!

ஆனால் பாருங்க... அதன்பிறகு இவர் ஸ்டேடசை நீக்கவும் இல்லை... பிரசன்னாவிடம் எந்த ரியாக்சனும் இல்லை... அப்படினா என்ன அர்த்தம் என நீங்க கேட்க வருவது புரிகிறது..வெயிட்..வெயிட்... இன்றோ நாளையோ சினேகாவே நேரிடையாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இதற்கு பின்புலமாக கிஷோரால் மன உளைச்சலுக்கு ஆளான சில ஊடகத்துறையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...

எது எப்படியோ..நமக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா பொழுதுபோகும்...  !


சற்று முன் அறிந்த செய்தி....


சென்னை போலீஸ் கமிஷர் அலுவலகத்தில் நடிகை சிநேகா புகார் கொடுக்க இன்று வருகிறார் என்ற தகவல் கேள்விபட்டு, இரு தரப்பிலும் பரஸ்பர சமரசம் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கிஷோர் சாமியும் தன் பதிவை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்..  (அப்படின்னு அவருதாங்க சொல்றாரு..)

என்னய்யா நடக்குது இங்க...?


(கிஷோர்சாமியைப் பற்றி இன்றைய கேப்டன் டிவியில்.)


3 comments:

  1. அமைச்சரவை மாற்றம் என்பது அம்மாவின் ஆட்சியில் அன்ட்ராயரைக் கழட்டி மாட்டுவது போல். அப்போதை -க்கு எந்த அன்ட்ராயர் பிடிக்குதோ அதை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.\\\\\\\\\

    அருமையான உதாரணம்

    ReplyDelete
  2. நன்றி சக்கர கட்டி...

    ReplyDelete
  3. அடுத்தவங்கள பத்தி அவதூறா பேசுறதுல என்ன பொழுதுபோக்கோ?
    சகிக்கல.

    ReplyDelete