Wednesday 22 February 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்



     லகின்  பணக்கார  நாடுகள் எல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.உலகில் உயரமான கட்டிடம் எங்களிடம்தான் உள்ளது என்று சொல்வதற்காகவே கட்டப்படும்  விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கு அவர்கள் அள்ளி வீசும் டாலர்கள்,யுரோ, திர்ஹம், ரியால்  அளவிட முடியாது. ஆனால் அவற்றை கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மர்களே..நம் மூளையும்,அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும் தான் அவர்களை ஜொலிக்க வைக்கிறது. ஆனால் வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள் தான் முன்னோடியா இருந்ததாக வரலாறு சொல்கிறது...

     உதாரணத்திற்கு...உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 வருடங்களாக கட்டப்பட்டதாம்.. இவ்ளோ உயரமா  கட்டப்போறோமே....இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையை சோதிக்கவேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூடவா  தெரியாமல்  இருக்கும். கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்ச கொஞ்சமா சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாக சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டிடம். ஆனால் இது  உலக அதிசயப் பட்டியலில் இன்றும் இருப்பது தான் மாபெரும்  வியப்பு.


    நம் தஞ்சையில் கம்பீரமாக நிற்கும் 216  அடி தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம். கட்டிடக் கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக்கோயில் ராஜராஜசோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80டன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம். கிரேன்,புல்டோசர்,உட்பட எந்தவித  தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் அதிசயப் பட்டியலில் இடம் பெறாததே ஒரு அதிசயம் தான்.

     கட்டுமானத்தொழிலில் நாமதான் 'கிங்' என்று சொல்வதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?.....  

 -------------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))--------------------------------

2 comments:

  1. தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க அரசு முயல வேண்டும்.

    ReplyDelete
  2. நச், நச், நச், நச்
    ந(ல்லா)ச் சொன்னீங்க
    சகாதேவன்

    ReplyDelete