Tuesday 25 September 2012

மன்மோகன் சிங்-ன் விபரீத ஆசையும்,அனுபவிக்கத் தெரியாத ஒபாமாவும்...

நட்புகளுக்கு வணக்கம்....

பெட்ரோல்,மண்ணெண்ணெய்,சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தில்தான் நம் பிரதமரை இவ்வாறு கேலியாக(!?) சித்தரித்துள்ளனர்.(ஆனால்... தை நாம் ஜாலியாகத்தான் எடுத்துக்கொள்ளனும்.இது மாதிரி ஏதாவது கிடைத்தால்தான் பதிவை தேத்த முடியுது..   :-))  )


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

து... நியூயார்க் Wall Street Landing Zone-ல் எடுக்கப்பட்டப்  படம்.அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்தியோக ஹெலிகாப்டர் Marine One-லிருந்து இறங்கி,கீழே நிறுத்தப்பட்டுள்ள ' Presidential limousines ' காருக்கு செல்லும் காட்சி.

ம்ஹும்...பார்ப்பதற்கு என்னதான் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு செம ரிச்சாக இருந்தாலும் ஏதோ ஒன்னு குறைகிற மாதிரி தெரியுதே..!? 


கேனப்பசங்க....இவ்வளவு டெக்னிக்கலா திங்க் பண்ணத்தெரிஞ்சவங்களுக்கு நம்மை மாதிரி செண்டிமெண்டா பில்டப் கொடுக்கத் தெரியுதா பாருங்க ...!

வெள்ளையும் சொள்ளையுமா 32 அமைச்சர்களையும் வரிசையா  நிற்கவைத்து குனிந்து வணக்கம் சொல்லவேண்டாமா? கார் கிளம்பும்போது ஒரு கையால் சட்டைப்பையைப் பொத்திக்கொண்டு "வாழ்க..வாழ்க.."என கோஷம் போட்டுக்கொண்டே பின்னாலேயே அரை கிலோமீட்டருக்கு ஓடவேண்டாமா ..? அட்லீஸ்ட்... கார் டயரையே பொற்பாதங்களாக நினைத்து விழுந்து வழங்க வேண்டாமா....? இதுகூட இல்லைனா என்ன அதிபர்...என்ன கவர்மண்டு...என்ன பாலிடிக்ஸ்..ச்சே..அனுபவிக்கத் தெரியாத மனுசம்பா ஒபாமா...! 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கொஞ்சம் ரிலாக்ஸ்....
 
"பக்கத்து வீட்டுக்காரன் சரியான கஞ்சப்பயல்... கரண்ட் பில் அதிகமாவுதுன்னு லைட்டை ஆ.'.ப் பண்ணிட்டு மெழுவர்த்தியை ஏத்தி வச்சு  சாப்ட்டுகிட்டு இருக்கான்..."

"அதுக்கு நீங்க ஏன் சார் கவலைப்படுறீங்க...?"

"ஹிஹி.. அவுங்க வீட்டு வெளிச்சத்தில்தான் இவ்வளவு  நாளா நான் சாப்
ட்டுகிட்டு இருந்தேன்..."
--------------------------------------------------X ---------------------------------------------
" என் சின்னவீட ' போடி பொறம்போக்கு 'ன்னு திட்டுனது நம்ம அமைச்சர் காதுல விழுந்துட்டுது..."

"அய்யய்யோ.. அதைக்கேட்டு கடுமையா திட்டியிருப்பாரே..."

"நாசமாப்போச்சு....இப்பவே  பட்டா போட்டுக்குடுன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு...."

--------------------------------------------------X ---------------------------------------------

கணவன்: அடியேய்... இவன் தானாடி உன் கள்ளக் காதலன்...பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.

மனைவி: தண்ணியப் போட்டுட்டு  கண்ணாடி முன்னாடி நின்னு உளராம போய் தூங்குங்க.

@FACEBOOK..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒரு குட்டிக்கதை...


வா(ல்)ழ்க்கையில் எதிலுமே திருப்தி அடையாத ஒரு ஆடும்,மாடும் தனித்தனியாக இறைவனிடம்
சென்று முறையிட்டது.

"எனக்கு ஏன் இவ்வளவு குட்டையாக வாலைப் படைத்தாய்?.பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது.ஆனால் மாட்டிற்குப் பார்..எவ்வளவு அழகான நீண்ட வால்.அது சுழட்டி சுழட்டி அடிக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது.அருவருப்பான இந்த குட்டையான வாலை எடுத்துக் கொண்டு மாட்டிற்கு உள்ளது போல் நீளமான வாலைக் கொடு." என இறைவனிடம் வேண்டியது ஆடு.

" இந்த நீளமான வாலை ஏன் எனக்கு படைத்தாய்.? பின்னால் அசிங்கமாக தொங்குகிறது.ஆட்டிற்குப் பார்...எவ்வளவு கச்சிதமா,சின்னதா அழகா இருக்கு.இந்த நெட்டை வாலை எடுத்துக்கொண்டு ஆட்டிற்கு உள்ளது போல் குட்டையாகக் கொடு.." என இறைவனிடம் மாடும் வேண்டியது.

இறைவன் கொடுத்த எந்த விளக்கத்தையும் ஆடும்,மாடும் ஏற்பதாக இல்லை.இரண்டும் விடாப்பிடியாக இருந்தது.இவைகளுக்கு பட்டால்தான் தெரியும் என நினைத்துக் கொண்டு அவைகளின் விருப்பப்படியே வாலை மாற்றியமைத்தார் இறைவன்.

தங்களின் விருப்பம் நிறைவேறியதையடுத்து  இரண்டும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்தன.

தனது நீண்ட வாலை சுழட்டி சுழட்டி விளையாடி மகிழ்ந்தது ஆடு.வழக்கம் போல திருட்டுத் தனமாக மேயும் தோட்டத்தில் புகுந்து அங்குள்ள செடிகளை தின்றது.எப்போதும் போல தோட்டக்காரன் துரத்த,தன் வழக்கமான தப்பிக்கும் பாணியை கையாண்டு வேலியின் இடுக்கு வழியாகத் தப்பிக்கப் பார்த்தது ஆடு.ஆனால் இந்தமுறை தோட்டக்காரன் கையில் அதன்  நீண்ட வால் வசமாக சிக்கியது.தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு போய் தனது பலநாள் வஞ்சத்தை மொத்தமாக வைத்து அடி பின்னி எடுத்துவிட்டான் அந்த தோட்டக்காரன்.  

தன் பின்னால் இருந்த பெரும் சுமை குறைந்த சந்தோசத்தில் மாடும் கர்வம் கொண்டது.தான் எப்போதும் உருண்டு புரளும் சேற்றில் குட்டிக்கரனமெல்லாம் அடித்து உருண்டு புரண்டது.ஆனால் இதன் விளைவை இரவில்தான் உணர்ந்தது.இரவில் இதை கொசுவும்,பூச்சியும் ரவுண்டு கட்டி கடிக்க,வழக்கம் போல் தனது வாலை சுழட்டி அடித்து விரட்ட முயற்சித்தது
மாடு.பாவம்...அந்த குட்டி வாலை வைத்துக் கொண்டு அதுவால் ஆட்ட மட்டும் தான் முடித்ததே தவிர,அடித்து விரட்ட முடியவில்லை.இரவெல்லாம் கடிபட்டு ரத்தம் சிந்தி கண்ணீர் வடித்தது மாடு.

அடுத்த நாள்.....அடிபட்ட ஆடும்,கடிபட்ட மாடும் இறைவனிடம் ஓடியது."எங்களை மன்னித்து விடு.தவறை உணர்ந்துகொண்டோம்.முன்பிருந்தது போலவே எங்கள் வாலை திருப்பிக்கொடுத்துவிடு " என கதறி அழுதது.

இறைவனும் அவற்றை மன்னித்து பழையபடியே வாலை திருப்பி அமைத்து விட்டார்...

இதன்மூலம் அறியவரும் நீதி...ஆண்டவன் எல்லோருக்கும் அளவோடுதான் படைத்திருக்கிறான்.அதை வைத்துக்கொண்டு சந்தோசப்படவேண்டுமே தவிர,அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது...

(பின் குறிப்பு...இந்தக்கதையின் நீதியை வேறு அர்த்தத்தில் பார்க்கக்கூடாது... அப்பறம் சாமி கண்ணை நோன்டிபுடும்.)




வணக்கங்களுடன்...
மணிமாறன்.
-------------------------------------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))----------------------------------

20 comments:

  1. ஜோக்ஸ் மற்றும் கதை அருமை....
    //இந்தக்கதையின் நீதியை வேறு அர்த்தத்தில் பார்க்கக்கூடாது... அப்பறம் சாமி கண்ணை நோன்டிபுடும்///
    இது மட்டும் புரியல பாஸ்... :)...

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...திரும்ப ஒரு தடவை படிங்க பாஸ்..புரியும்...
      வருகைக்கு நன்றி..

      Delete
  2. அனைத்தும் ரசிக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி...

      Delete
  3. நல்ல குட்டிக்கதை...

    கலக்கல் ரிலாக்ஸ்...

    (Reader-ல் இரண்டு பதிவாக வந்ததே... இரண்டையும் ஒன்றாக்கி விட்டீர்களா...?)

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி...முதலில் பப்ளிஷ் செய்து பின்பு நீக்கிவிட்டேன்...ஒருவேளை அதனாலையோ ...

      Delete
  4. முதல் ஜோக் ரொம்ப சூப்பர். நீதிக் கதையும் நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி...

      Delete
  5. ஹி ஹி ஹி... மங்கு ஸ்டில்லு டாப்பு தல! :)

    ReplyDelete
  6. பரதன் செத்து போயிட்டதா சொன்னாங்க.... நானும் நம்புனேன்... தமிழ்நாட்டுல 235 பரதன் இருக்காங்கங்றது மறந்தே போச்சு ஹி ஹி ஹி வாழ்க வாழ்க! :D

    ReplyDelete
  7. ஜோக்கெல்லாம் ஜீப்பரு தல....நீதிக்கதை உட்பட! :)

    ReplyDelete
    Replies
    1. பின்னூடத்திற்கு மிக்க நன்றி பாஸ்...

      Delete
  8. ஓபாமாவ பார்த்து பாவப் படுறதா இல்ல அம்மாவைப் பாத்து பாவப் படுறதா தெரியலியே சார்....
    ஆடு மாடு நீதிக் கதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி...

      Delete
  9. குட்டிகதை - பாஸ் உள்குத்து செம குத்து குத்திட்டு....சாமி கண்ண குத்துமா

    ReplyDelete
    Replies
    1. பின்னூடத்திற்கு மிக்க நன்றி பாஸ்...

      Delete
  10. //எனக்கு ஏன் இவ்வளவு குட்டையாக வாலைப் படைத்தாய்?//

    //வழக்கம் போல திருட்டுத் தனமாக மேயும் தோட்டத்தில் புகுந்து அங்குள்ள செடிகளை தின்றது//

    /ஆண்டவன் எல்லோருக்கும் அளவோடுதான் படைத்திருக்கிறான்.அதை வைத்துக்கொண்டு சந்தோசப்படவேண்டுமே தவிர,அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது...//

    அப்படி என்றால் ஆடுகள் களவெடுத்து எஸ் ஆவதற்கே ஆட்டு வால் சிறியதாக உள்ளதா? மறைமுகமாக நீங்கள் நாத்திகம் பேசுகிறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. கண்டிப்பதே பொழப்பா போச்சு ஹி ஹி.. tm5

    ReplyDelete
    Replies

    1. ஹா..ஹா...பின்னூடத்திற்கு மிக்க நன்றி பாஸ்...

      Delete
  11. கதை அருமை!நீதி போதனை நன்று!

    ReplyDelete
  12. ஐயா...தங்களின் கருத்துக்கும்...பாராட்டுக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete