Saturday 18 February 2012

கலைஞரின் 'குடியிருந்த கோயில் '--ஒரு நேரடி விசிட்



     மிழ் நாட்டில் விருதுநகர்,காஞ்சிபுரத்திற்கு அடுத்து பெருசா பேசப்படுற ஊர்  திருவாரூர்.தமிழக அரசியல் வரலாற்றை இந்த மூன்று ஊர்களையும் தவிர்த்து எழுதிவிட முடியாது.அப்படியென்ன சிறப்பு? பின்ன....மூன்று முத்தான முதல்வர்களை தந்த மண் அல்லவா இது..படிக்காத மேதையையும், பேரறிஞரையும், முத்தமிழ் அறிஞரையும் ஈன்றெடுத்த  பூமி இது...

கலைஞர் பிறந்த வீடு 

       காமராசரும்,அண்ணாவும் அவங்க சொந்த ஊரிலே தோற்றாலும்  போன  தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்ட கலைஞர் ஐம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சிருக்கார்.இது ஜெயாவின் திடீர் பூர்வீகமாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கத்தில் அவர் பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட பத்தாயிரம் ஓட்டுகள் அதிகம்.கடந்த தேர்தலில் திமுக வென்ற பெரும்பான்மையான தொகுதிகள் இழுபறியில் இழுத்துகிட்டு நிக்க... தலைவர் மட்டும் ஜம்முனு முன்னணியில் போய்கிட்டிருந்தார்.பொதுவா கம்னியுஸ்ட் அதிகம் உள்ள தொகுதியாச்சே இது எப்படி சாத்தியம்னு ஊருக்கு போன் போட்டு விசாரிச்சா...எல்லா சிவப்பு சட்டைக்காரங்களும்  கலைஞருக்குத்தான் ஒட்டு போட்டதா சொல்றாங்க.அப்படி என்னதான் பெரிசா செஞ்சிட்டாரு?


      கடந்த திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்கள் முதலில் கணினி மயமாக்கப்பட்டது திருவாருரில்தான். சென்ட்ரல் யுனிவர்சிட்டியையும் மெடிகல் காலேஜையையும் போராடி பெற்றுக்கொடுத்திருக்கிறார்.ஏர்போர்ட் கட்டும் பணியும் ஒரு புறம் நடைபெறுகிறது.உலக புகழ்பெற்ற திருவாரூர் தேர் தீ விபத்தால் நின்றுவிட தன் பகுத்தறிவு கொள்கையை கொஞ்சம் ஓரம்கட்டி விட்டு தேரை புதுப்பித்து ஓட வைத்திருக்கிறார்.இன்னும் எத்தனையோ..!! இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம்.. இவை எல்லாமே இவர்  இந்தத் தொகுதி  MLA வாக இல்லாத போது நடந்த நன்மைகள்.இவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து முதன் முதலில் போட்டியிட நினைத்தது திருவாருரில்தான்.ஆனால் அரசியல் சூழ்ச்சியால் அன்று இது தனித்தொகுதியாக மாற்றப்பட.. வேறு வழியில்லாமல் குளித்தலையில் போட்டியிட வேண்டியதாயிற்று.ஆனால் அன்றிலிருந்து இன்று வரை திருவாருரை அவர் தனது 'செல்லத்தொகுதி' யாக நினைத்து,மாவட்ட தலைநகராக்கி, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மக்களின் துயர் துடைத்து அவர்கள் மனதில் 'மண்ணின் மைந்தனாக'  இன்று வரை இருக்கிறார்.  தொகுதி சீரமைப்பால் கடந்த தேர்தலில் திருவாரூர் தனித் தொகுதியிலிருந்து விடுபட,இது அவருக்கு 'கனித்தொகுதி'யாக  மாறியது.       

   கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை,திருவாருரிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.ஒரு காலத்தில் இது ஒரு குக்கிராமம்தான். இன்று ஒரு பெரிய நகரத்தில் இருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.இங்குதான் கலைஞர் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது.எந்தவித ஆர்பாட்டமில்லாமல் ஐநூறு சதுர அடிக்கும் குறைவாக உள்ள அந்த அழகிய ஓட்டு வீடுதான் ஒரு மிகப்பெரிய தலைவனை தமிழகத்திற்கு அளித்த வீடு.
வீட்டின் உள்ளே...
 
வீட்டின் உள்ளே கலைஞரின் வசந்தகால நினைவுகள்.....

    நான் எப்ப ஊருக்கு போனாலும்  ரெண்டு விஷயம் கண்டிப்பா நடக்கும். ஒன்னு குல தெய்வ கோயிலுக்கு  வழுக்கட்டாயமா  கூட்டிடுப்போவாங்க. இன்னொன்னு எட்டுக்குடி முருகன் கோயில்.நான் பெரிய பக்திமான் இல்லன்னாலும் மற்றவங்க வற்புறத்தலையோ, நம்பிக்கையையோ  குறை சொல்லியதுமில்லை  புறந்தள்ளியதுமில்லை. எட்டுக்குடி கோயில்னா  உடனே கெளம்பிடுவேன்.அதுக்கு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு.. போற வழியில் தான் கலைஞர் பிறந்த திருக்குவளை இருக்கு. அவர் வீடு வழியாத்தான் கார் போகும்.அப்படியே  கலைஞர் வீ ட்டுக்குள்ள  போயி கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துட்டு அங்கிருக்கும்  அவருடை பழையகால போட்டோ, செய்திகள் எல்லாத்தையும் படித்து பாத்துட்டு வருவது வழக்கம்.அவர் வீட்டு காவலாளி சந்தானம்,'தலைவர் இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கும் முன்னால வந்து போனார். இதோ இங்கதான் சேர்ல உட்காந்திருந்தார்...இந்த முறை கொஞ்சம் கண்கலங்கிட்டார்'-னு செட்ன்டிமென்டா எடுத்துவிடுவார்.இந்த முறை ஊருக்கு நம்ம ஜுனியரோட முதல் முறையா வந்ததால கண்டிப்பா கலைஞர் வீட்ட ஒரு விசிட் போட்டுறலாம்னு கெளம்பி போனோம்.

கலைஞரின் படைப்புகள்...

       கலைஞர் பிறந்து வளர்ந்தது பழைய ஓட்டு வீடு என்பதால் அதை புதுப்பித்து நூலகமாக மாற்றியிருக்கிறார்கள்.தரையில் மொசைக்,ஏசி  என்று சகல வசதிகளுடன் ஒரு காட்சியகம் போல இருக்கும்.வீட்டிற்கு வெளியே அழகான சுத்தமான ரோடு.அதையொட்டி மிகப்பெரிய குளம்.குளத்தைச்சுற்றி  அழகிய பூங்காக்கள்.எந்த பேனரோ கட்சிக்கொடியோ தலைவர்கள் சிலையோ எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஓடியாடி விளையாடிய அந்த தெரு.

        அங்குள்ள பெரிசுகளிடம் பேச்சுக்கொடுத்தால் அவரோடு பழகிய  பழைய நினைவுகளை பெருமிதத்தோடு சொல்லி பூரிப்படைகிறார்கள். கலைஞர் ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது அவருடன் பள்ளியில் படித்த நண்பர்கள் ,தெருவில் ஓடியாடி விளையாடிய நண்பர்கள் என்று யாரையும் மறக்காமல் அழைத்து தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்துக் கொள்வாராம்.

   
       திருக்குவளை கிராமத்தில் கலைஞரின் சொந்த பந்தங்கள்  என்று யாருமில்லை. சொத்து பத்தும் எதுவுமில்லை. இங்கு கட்டாயம் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.ஆனாலும் வருடாவருடம் இங்கு வருகிறார். இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கு உதவி செய்கிறார். ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது தன் பேரக் குழந்தைகளை அழைத்து வந்து 'இதுதான் உங்க தாத்தா வாழ்ந்தவீடு,இது நான் படித்த பள்ளிக்கூடம்,இது நான் ஓடி விளையாடிய தெரு, இந்தக்குளத்தில்தான் நான்  'டைவ்' அடித்து குளிப்பேன்,இந்த மரத்தில் தான் நாங்கள் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் ' என்று தன் அடுத்த சந்ததியினருக்கு அந்த மண்ணின் மகத்துவத்தையும், பெருமையையும் சொல்லி பூரிப்படைவாராம்.

சந்தானம்.


வீடு அமைந்திருக்கும் தெரு.

கலைஞரின் 'குடியிருந்த கோயில்' (உள்ளே பழைய வீடு)
   
அரசியல்,சினிமா என்று தொட முடியாத உச்சத்திற்கு சென்றாலும்,தான் பிறந்து,தவழ்ந்து,வளர்ந்து,வாழ்ந்த அந்த வீட்டை ஒரு 'கோயில்' போல் தான் இன்றும் கலைஞர்  பார்க்கிறார். 



நன்றி சொல்லும் கலைஞர்..........


-------------------------------((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))-------------------------------- 

10 comments:

  1. Replies
    1. நண்பர் ராஜசீலன்...வருகைக்கு மிக நன்றி

      Delete
  2. கலைஞர் பத்தின தகவல்கள் அருமை

    ReplyDelete
  3. நாட்டில் எவ்வளவோ விசயங்கள் இருக்கையில் நீங்கள் மு, கருணாநீதி அவர்களை போற்றும் விதத்தில் கலைஞரின் குடியிருந்த கோவில் என பெருமை படுத்தியது எனக்கு மிகவும் வருத்தம அளிக்கிறது, எனக்கு யார்மீதும் கோபம் கிடையாது இருப்பனும் தன் கண்முன்னே தன் இனம் அழியக்கண்ட பெருமை யாரைச்சேரும் என்றால் அது நம் முத்தமிழ் வித்தகரை சேரும் நீங்கள் நான் எழுதிய முத்தமிழ் வித்தகருக்கு எனும் தலைப்பிலும்
    ஐந்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில் எழுதிய படைப்பையும் பார்க்கவும்
    முகவரி

    http://kenakkirukkan.blogspot.com/

    http://kenakkirukkan.blogspot.com/

    ReplyDelete
  4. Anbulla Manimaran,

    Neengal padiththathu thiruneipair pallikoodaththila?

    Anbudan

    Aaruraan(a)AshwinBalaji S

    ReplyDelete
  5. அருமையான படங்களுடன் கலைஞர் பற்றிய தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete