Sunday 20 November 2011

சிதறல்கள்-1


கடந்த பல வருடங்களாக ப்ளாக் படித்து வந்த எனக்கு, திடீரென்று  எழுதனும்னு  எண்ணம் வந்தபோது 
என் கண்முன்னால   ஐந்து பாலகுமாரன்,பத்து சுஜாதா,பதினைந்து வைரமுத்து தெரிஞ்சாங்க...
ஆனால் எழுதனும்னு ஒக்காந்த போதுதான் என்னையே நான் தேட வேண்டியதாயிச்சு. எழுதறது 
ஒன்னும்  அவ்வளவு   ஈஸி இல்ல போல.சரி..யார் படிக்கிறாங்களோ இல்லையோ நாம திருப்திக்காக எழுதலாமேன்னு ஸ்கரீன வெறிச்சி பாத்துக்கிட்டு இருந்தப்ப 'யாருமே இல்லாத டீ கடையில இப்படி யாருக்காக டீ ஆத்துறீங்க 'னு எங்க 'வீட்ல' (ஹைலைட் பண்ணலனா கோவிச்சுப்பாங்க  ..) மொக்கையா நக்கலடிக்க ....அட விடுங்க பாஸ் ...வாழ்க்கையில நிறைய கஷ்டங்கள்    வரும் (ச்சே..ச்சே..நான் எங்க 'வீட்ட' சொல்லல..) எல்லாத்தையும் சமாளிக்கணும்....

         தமிழ்ல எழுதறதும் கொஞ்சம்  கஷ்டம்தான் .ஏன்னா தப்புக் கண்டு பிடிக்க  நிறையப்பேர்  இருக்காங்க...  சரி.. பேச்சு நடையில எழுதலாம்னு தோனிச்சி... 

தமிழ்ல எழுதும் போது புள்ளி எழுத்துகளில் தான் கொஞ்சம் குழப்பம் வரும். உதாரணத்திற்கு....
                                     
                                  பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
                                  எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?
 

இவை போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள்..ஆனால் சில நேரங்களில் இந்தப் புள்ளி எழுத்துக்களால் அர்த்தங்களே மாறி விடும்....

                                            வேலை செய்தான்
                                            வேலைச் செய்தான்

முதலில் உள்ள வேலை செய்தான் என்பது  பணியைச் செய்தான் என்ற பொருள்பட அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும் கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது. 

(ஸ்கூல்ல Rama killed, Rama  is  killed  ரெண்டும் ஒன்னுதான்னு                 சொல்லி வாத்தியாருகிட்ட  வசமா வாங்கிக் கட்டிக்கிட்ட கதை ஞாபகம் வருது...)

 'ச்'  என்ற ஒரு எழுத்தால் அர்த்தமே மாறி விட்டது. 'ச்ச்ச்ச்ச்....தாங்க  முடியலல?..  

சரி..சரி... இனிமேல் இதுபோல் நடக்காது...(டைட்டில்ல தலைவர் பேரைப் போட்டுட்டு எதுவுமே சொல்லலைனா எப்படி ?...)


---------------------------- ((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))---------------------------------------


     
     

No comments:

Post a Comment