Showing posts with label சும்மா அடிச்சு விடுவோம். Show all posts
Showing posts with label சும்மா அடிச்சு விடுவோம். Show all posts

Monday, 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.




Thursday, 20 November 2014

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவது எப்படி..?



ரே நாளில் உலக ஃபேமஸ் ஆவது எப்படி..? ரொம்ப சிம்பிளான விசயம்ங்க..

நம் சமூகத்தின் ஏதோ ஒரு சந்து பொந்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர் நீங்கள். யாருக்கும் உங்களைத் தெரியாது. தெரு நாய் கூட உங்களை மதிக்காது என வைத்துக்கொள்வோம்

ஆனால் ஒரே நாளில் இந்த உலகமே உங்களைப்பற்றி பேசும். சிறார்கள், மாணவர்கள் எல்லாம் "சார்" என்று மரியாதையோடும், பெரியவர்கள் எல்லாம் "தம்பி" என்று பாசத்துடனும் அழைப்பார்கள். மாணவ சமுதாயமே உங்கள் பின்னால் திரளும். ஏழைகளுக்கு அடுத்த எம்ஜியார் நீங்கள் தான். அரசு ஊழியர்கள் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஊடகங்கள்,தொலைக்காட்சி எல்லாம் உங்களைப் பற்றியே பேசும். அரசியல்வாதிகளுக்கும்,  கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் நீங்க சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள்.

இப்படியெல்லாம் நடக்கணும்னா ஏதாவது புரட்சி செய்யணும் அல்லது போராட்டம் நடத்தனும் அல்லது தீவிரவாதியாக மாறணும் அப்படித்தானே... என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. அதுதான் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்னே ஒன்னுதான்... வாயால வடை சுடனும்..!

தெளிவாகச் சொல்கிறேன். அக்கம் பக்கத்தில் ஏதேனும் அநீதிகள் நடப்பதுபோல் உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரிந்தால் உடனே அதை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக பதியுங்கள். அல்லது சமூகத்தை திருத்துகிறேன் என்று ஏதாவது நாலு ஐடியா கொடுங்கள். உடனே உங்கள் பெயர் இந்தியா முழுவதும் பரவும்.

இந்த ரோடு ஏன் இப்படி குண்டும் குழியா இருக்கு தெரியுமா...? ரோடு போடுற கான்ட்ராக்டர் சரியில்லை. இந்த பைப்பில் ஏன் தண்ணீர் வரவில்லை தெரியுமா..? தண்ணீர் டேங் பைப்பை இன்னும் யாரும் திறக்கல.. தெருவிளக்கு ஏன் எரியமாட்டேங்குது தெரியுமா..லைட் பியூஸாகி விட்டது. இந்த பஸ் ஏன் ஆக்சிடெண்ட் ஆகுது தெரியுமா..?  டிரைவர் சரியில்லை. அதனால் தினமும் டியூட்டிக்கு செல்லும்முன் ஒரு மருத்துவரை வைத்து ஓட்டுனர்களை சோதிக்கணும். இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வு ஐடியாக்களை, நாலு பேரைக் கூப்பிட்டு தெரு முக்குல கூட்டம் போட்டு சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் .

எல்லோரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி,'இப்படி ஒரு அறிவாளியைத்தான் நாங்க தேடிகிட்டு இருந்தோம். இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ராசா...' என்று உங்களை ஆரத்தழுவிக் கொள்வார்கள். 'இம்பூட்டு  நாளா மூடிக்கிடந்த எங்கள் அறிவுக்கண்ணை சாவி இல்லாமலே திறந்து விட்டியே தம்பீ...'  என்று பெக்கர் முதல் கலெக்டர் வரை உங்கள் காலில் விழுவார்கள். 'இந்தத் தம்பி சொன்னது என்னிக்கு நடக்குதோ அன்னிக்குத் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைச்ச மாதிரி..'  என்று சொச்ச நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் தியாகிகள் எல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது.

என்ன...சொந்த மானிட்டராக இருந்தாலும் பரவாயில்லை, பொளிச்னு துப்பிடலாம்னு தோணுமே. எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஜெய்ஹிந்த்-2 படத்தை பார்த்தபோது...! .


ஒரு நாய் அனாதையா செத்துக்கிடக்கிறத பார்த்தவுடனையே அர்ஜுனுக்கு ஜென்டில்மேன், முதல்வன் படம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே "மனுசனா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்" னு சொல்லிட்டு கிளம்புவாரு. ஏதோ புரட்சி பண்ணப்போறாரு என்று பார்த்தால் இணையத்துல எதைஎதையோ தேடுவாரு. முடிவில ஹீரோயின் சைலண்டா வந்து 'இது மட்டும் நடந்திருச்சுன்னா இந்தியா வல்லரசு ஆகிடும்' என்பாங்க.

ரமணா பாணியில ஏதோ நடக்கப் போகுதுன்னு சீட் நுனி வரை நகர்ந்து  சீரியஸா கவனிச்சா, பிரஸ்ஸை கூப்பிட்டு, "தனியார் பள்ளிகளை எல்லாம் தேசியமயமாக்கனும்" னு வடை சுடுவாரு. அதற்கடுத்து நடக்கும் பாருங்க கொடுமை....! அவர் சொன்னது இந்தியா பூரா பரவி எல்லோரும் அபிமன்யு சொன்னது மட்டும் நடந்துட்டா இந்தியா அப்படியாகிடும்..இப்படியாகிடும்னு பில்டப் கொடுப்பாணுக.. இவ்வளவு நாளா எல்லோரும் அடிமுட்டாளா இருந்திருக்கோம் போல. அட இதைக்கூட மன்னித்து விடலாம். ஜெயில்ல இரண்டு கைதிகள்  அர்ஜுனைப் பார்த்து,"டிவியில பாத்தேன் தலைவா. சோக்கா பேசின..","தம்பி நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.."என்று சொல்லும்போது வரும் பாருங்க ஒரு கோபம்.. தட் அவரே குண்டு வைப்பாராம் அவரே எடுப்பாராம் மொமென்ட்..!

ஏம்பா இந்தியாவில உள்ளவங்க எல்லாம் இந்த அளவுக்குக் கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா.. தினமும் டிவியில விவாதம் என்கிற பெயரில் ஆளுக்கொரு ஐடியா சொல்றாங்க.. அவர்கள் எல்லாம் உலக பேமஸ் ஆகிடுறாங்களா என்ன..? அப்படிப் பார்த்தா நீயா நானா கோபியும் மனுஷ்யப் புத்திரனும் இந்நேரம் ஐநா சபை வரை போயிருக்க மாட்டாங்களா.. என்ன லூசுத்தனமான கான்செப்ட் அது..?  டிராபிக் ராமசாமிக்கே ஃபைனப் போட்டு ஆஃப் பன்ற ஊருய்யா இது.

எப்பவோ போட்ட டீ -யை இப்போ வந்து எதுக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்துறேன்னு கேக்கிறீங்களா.. ?  இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். "ஜெய்ஹிந்த்-2 படத்தை பிரதமருக்கு போட்டுக் காண்பிப்பேன்.." என்று அண்ணாத்தே அர்ஜூன் பேட்டி  கொடுத்திருந்தார்.  அதனாலதான் இவ்வளவு ஆத்த வேண்டியிருக்கு.

பாவம் அவரே பேக்கேஜ் டூர்ல ஒவ்வொரு நாடா சுத்திப் பாக்கப் போயிருக்கார். அதிலும் கேமராவைத் தேடித்தேடி போஸ் கொடுத்தே டயர்டா போயி வருவாரு. வந்த உடனே படத்தை போட்டு காண்பித்து ஏன்யா அவரை இன்னும் டயர்டா ஆக்கணும்..?


ஜெய்ஹிந்த் வெளிவந்த 1994 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்ப எந்தப் படமும் சிக்காததால் வேறு வழியில்லாமல் அப்படம் தேர்வானது. வித்தியாசமான கவுண்டமணி-செந்தில் காமெடி டிராக், ரகளையான(ஹி..ஹி..) ரஞ்சிதா என்கிற கமர்சியல் கலவைகள் நிறைந்திருந்தாலும் patriotism என்கிற விஷயம் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தது பாராட்டும்படி இருந்தது . எப்படா இது மண்டையப் போடும் என்று எரிச்சல் ஏற்படுத்தும் மனோரமாவின் போர்சனைத் தவிர படம் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஜெய்ஹிந்த்-2 வில் கான்செப்ட்டும் காமெடியும் மொக்கை, ஹீரோயின் சப்பை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சுவாரஸ்யமாகப் போகவேண்டிய திரைக்கதையை இப்படி தலைகீழாகத் திருப்பி  சொதப்பியிருக்கிறார்களே..!

திரைக்கதையைப் பற்றி அவ்வளவு நுட்பமாக எனக்குத் தெரியாது. இணையத்தில் உள்ள திரைக்கதைப் புலிகள் யாராவது சொல்லட்டும். இந்தப் படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கிறது. அதைப் பின்னித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

1. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பீஸ் கட்ட முடியாமல் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொள்கிறது.

2. அதனால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் பிரஸ்மீட் வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். நாடு முழுதும் அது காட்டுத்தீயாகப்(!) பரவுகிறது.

3. நீதி கிடைக்காததால் வெளிநாட்டில் பயிலும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளைக் கடத்துகிறார்.

இம்மூன்று சம்பவங்களும் இதே வரிசைப்படி நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படியே ரிவர்ஸில் அமைத்திருந்தால்...!

1. வெளிநாட்டில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளை அர்ஜுன் கடத்துகிறார். அது இந்தியா முழுமையும் பரபரப்பான செய்தியாகிறது. யார் கடத்தினார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று மீடியாக்கள் அலசுகிறது.

2.கடத்திய அர்ஜுன் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்தியாவே அந்த பிரஸ்மீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

3. எதற்காகக் கடத்தினார் என்று சொல்வதற்கு முன், ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளும் பிளாஸ்பேக்கை அவிழ்க்கிறார். அதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அதன்பிறகு அந்த தேசியமயமாக்கல், இன்னபிற சமாச்சாரங்களை எல்லாம் சொல்கிறார்.

அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் காண்பித்தால், சொல்ல வந்த விஷயம் இன்னும் வீரியமாக இருக்கும், படமும் விறுவிறுப்பாக இருக்கும். ரமணா படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட அப்படிப் பட்டதுதானே..


ஒரு ஏழ்மையான குடும்பம். அவர்கள் படிக்கும் காலத்தில் வசதிகள் இல்லாததால் படிப்பறிவு இல்லாமல் கூலிவேலை செய்துவருகின்றனர் . அதனால் தன் ஒரே மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பவேண்டும் என்று அக்குழந்தையின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்காக கண்டவன் காலில் விழுந்து (LKG அட்மிசனுக்காக!) பணம் புரட்டுகிறார். பணப் பற்றாக்குறையால் தன்  கிட்னியையே விற்கிறார்.அப்படியும் பணம் பற்றாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். (அந்தக் குழந்தை பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைத்தால்தான் படிப்பேன் என அடம்பிடித்ததா என்ன..அதை எதுக்குய்யா கொல்லனும்..?.) ஜென்டில்மேன் படத்தின் பிளாஸ்பேக் ஞாபகம் வருது இல்லையா..? 

இந்தப் படத்தில் அர்ஜுன் சொல்லும் அந்த 'கான்செப்ட்' ,  நடைமுறை சாத்தியமில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம். ஆனால் அந்த சோக சம்பவம் மூலம் அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்..?. தனியார் பள்ளியில்தான் நல்ல கல்வி கிடைக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் உயர்ந்த உத்தியோகத்துக்கு போக முடியும். அதற்காக கிட்னியைக் கூட விற்கலாம்.

ஒருவேளை, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்...? பிரைவேட் ஸ்கூல் LKG  சீட்டுக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்றால் நாமதான் அறிவுகெட்ட தனமா நம்ம பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டோம் போல என நினைக்கத் தோன்றாதா ?

இப்படி ஒரு மொக்கை கான்செப்ட் உள்ள படத்தைப் போட்டுக் காட்டுறேன் என்று  பிரதமர் ஆபிஸ் பக்கம் போனால் செக்யூரிட்டியே காரித்துப்பிடுவான்.



Tuesday, 3 December 2013

ஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த மரண அடியும் (சும்மா அடிச்சு விடுவோம்-8 )

ந்தியா மார்ஸ்-க்கு மங்கள்யான்  ராக்கெட் விட்டதற்கு அடுத்தப்படியாக மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம்,ஸ்ருதிஹாசன் வீட்டுக்குள்ள எவனோ கையை விட்டது. அதைப்பற்றிய 'சிறப்புப் பார்வை' யைத்தான் தற்போது காணப்போகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா....!. தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்," ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.".

உடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.

(கமல் எதைப்பார்த்து இப்படி கதறி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் )
சரி... முதலில் இந்தக் கோணத்தில் யோசிப்போம்.. அந்த நபர் எதற்காக ஸ்ருதிஹாசனைத் தாக்கவேண்டும்...?. ஒருவேளை அவர் சர்வதேச நடிகை(!) என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்....?  இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே...! அதேதான்.அந்த ரகசியத்தைத் தான் இப்போ சொல்லப்போறேன்.

அதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.

நம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா..! அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.

                                           ( பதினாறு அடி பாயும் குட்டி......! )

தாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.

இதிலென்ன இருக்கு.? சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்..! ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே...! லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... !

இவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன...? அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன..? . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி  நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..?

கேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்திருப்போமா...? அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.

உலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.
டிகர் திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...

" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்.."  (3D)

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது..!. போக்குவரத்துக்கு  இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...!

' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்..? கொஞ்சம் தள்ளி(!) மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...

ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான்.
தற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்) 
ன் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா..  நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி. 

" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா..?.அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது  ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன்.  உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா.." என்று அவனிடம் கேட்டேன்.

" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது.  வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .

"அப்படியா....?! " என்றேன் ஆச்சர்யமாக.

" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்.." என்றான்.

என்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே  பீலிங்...!

கடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், " நீ என் இனமடா.... ! "

கலாட்டூன் கார்னர்...


இது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))

--------------------------------------------------------------X------------------------------------------------------
 டிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். 




                                                                                                        இன்னும் அடிச்சி விடுவோம்..............

Tuesday, 19 November 2013

சத்யத்தின் அயோக்கியத்தனமும் சச்சினின் ஆற்றமுடியா பிரிவின் வலியும் (சும்மா அடிச்சி விடுவோம்..-6 )


ஞ்சையில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக ஒரு டாஸ்மாக் குடிமகன் தமிழக முதல்வரையும், விஜயதரணி அவர்களையும் செம்மொழியில் அர்ச்சனை செய்த சம்பவம் இன்னமும் ஓயவில்லை என்று நினைக்கிறேன்.


நினைவு முற்றம் இடிக்கப்பட்டது பச்சை மொள்ளமாரித்தனம். இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் ஜெயாவின் ஈழ நிலைப்பாட்டை இன்னமும் புரிந்துகொள்ளாத நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்களை நம்பி, பின்னால் இவ்வளவு பெரிய கூட்டம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான் புரியாத மர்மம்.

கலைஞராவது ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பார். ஆனால் ஜெயாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாமே எப்போதும் அவருக்கு கசப்பு வார்த்தைகள்தான். ஜெயாவின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் இதைத்தான் சொல்லும். அப்படியிருக்க, ஜெயா என்ன மாதிரியான பிரச்சனையைக் கொடுப்பார் என்று யோசிக்கும் அளவுக்கு சமயோசித புத்தி கூடவா இந்த ஈழ அரசியல்வாதி -களுக்கு இல்லை..?  மட்டுமில்லாமல், சுவர் எழுப்பிய இடம் குத்தகைக்கு விட்டது கலைஞர் ஆட்சியில். முற்றம் அமைந்துள்ளது நடராஜனுக்கு சொந்தமான இடத்தில். இது போதாதா இடிப்பதற்கு..?

தமிழர்களின் வரலாற்று நினைவு சின்னத்தையே இடித்துத் தள்ளும் இந்த ஜெயாதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருப்பாராம்...ஈழத்தாயாம்...இலை மலர்ந்தால் ஈழம் மலருமாம்...!  அட போங்கப்பு... :-)

சரி... சத்யம் டிவி விவகாரத்துக்கு வருகிறேன். அந்த செம்மொழி ஆசாமி அப்போது குடித்திருந்தாராம். இருக்கட்டும். அம்மையார் ஆட்சியில் இது ஒன்றும் பெருங்குற்றமல்ல.  ஆனால் ஒரு நேரலை நிகழ்ச்சியில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரிடம் 'லைவ்' ஆக கருத்து கேட்கும் முன்பு அவர் என்ன சொல்லப்போகிறார், எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள மாட்டார்களா என்ன.. ?  பாடல் நிகழ்ச்சிகளில் கூட என்ன பாட்டு வேண்டும், என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கேட்டறிந்து கொள்வார்களே..

வெறும் டிஆர்பி ரேட்டுக்காக இவர்கள் செய்யும் அட்டூழியங்களை முடிவு கட்டுவதற்கு ஒரு விதத்தில் இப்படி ஒரு சம்பவம் தேவைதான். சத்யம் டிவியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி மனுஷ்யப் புத்திரன் தன் முகநூளில் ஒரு செய்தி பகிர்ந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எனக்கென்னவோ அந்த செம்மொழி ஆசாமியை அவர் பாட்டுக்கு பேசச்சொல்லியிருந்தால் இப்படி நடத்திருக்காது என நினைக்கிறேன். நிகழ்ச்சியை நடத்தும் அரவிந்தன் அவரிடம், "உங்கள் கருத்தை சுருக்கமா சொல்லுங்க...சுருக்கமா சொல்லுங்க... என திரும்பத்திரும்ப சொன்னதால்தான் ரத்தினச் சுருக்கமா அப்படி சொல்லிவிட்டார் போல... :-))

ஆனால் ஒன்னுங்க... அந்த ஆள் இவ்வளவு அசிங்கமாக பேசினப் பிறகும் கொஞ்சம் கூட அவர்மீது கோபப்படாமல் "உங்கள் அழைப்புக்கு நன்றி.." என சொன்னார் பாருங்க... அவரின் கடமையுணர்ச்சியைக் கண்டு நான் இன்னமும் வியக்கேன்..!



வில்லா படத்திற்கு  இணையத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது. விமர்சனத்திற்கு விமர்சனம் கூட வந்திருக்கிறது. வெறுமனே நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு விமர்சனம் எழுதியவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அழுத்தமான, ஆழமான விமர்சனங்கள் நிறைய வந்திருக்கிறது. நான் நாடிப்பிடித்துப் பார்த்த விசயங்களோடு அவர்களின் விமர்சனமும் ஓரளவு ஒத்துப் போன வகையில் எனக்கு கொஞ்சம் திருப்தி.

நிஜமாகவே சொல்கிறேன், வில்லா என்னுள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை திரையரங்கின் கடைசி வரிசையில் உட்காந்து பார்த்ததால் அப்படி இருந்திருக்குமோ என்னவோ..! இனிமேல் இதுபோன்ற படங்களை திரைக்கு அருகில் இருந்துதான் பார்க்கவேண்டும் போல... போகட்டும்.

ஒரு பேய் படம் அல்லது திகில் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் சினிமாவிலே நிறைய உதாரணங்களை அடுக்கலாம். முதல் பாதியில் வரும் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளையும் பிற்பகுதியும் எப்படி லாஜிக்காக அவிழ்க்கிறார்கள் என்பதில்தான் திகில் படங்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த விதத்தில் 'யாவரும் நலம்' தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு காட்சியும் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது.

வில்லா படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை அறிந்துகொள்ளும்  ஆவலோடுதான் ஒவ்வொரு ரசிகனும் இருந்திருப்பான். அசோக் செல்வனின் நண்பராக வருபவர் வெவ்வேறு இடங்களில் சேகரித்த தகவலின் அடிப்படையில் அவரிடம் இப்படித்தான் விவரிப்பார். "ஐ ஹாவ் சீன் ஒன் பிளாக். அவர் பேரு தேவநேசன்.. தமிழ் ஆளுதான்.அவரு என்ன சொல்றார்னா, இந்த நெகடிவ் எனர்ஜிக்கு பியூச்சரை பிரெடிக்ட் பன்றதுக்கு தூண்டுதல் சக்தி இருக்கிறதா சொல்லியிருக்கார்.."

தேவநேசனிடம் போனபிறகு, அவரும் இப்படித்தான் ஆரம்பிப்பார். " பிளாக்மேஜிக் மூலமா பியூச்சரை பிரெடிக்ட் பண்ண முயற்சி பண்ணியிருக்கான்...  " .  ஒரு சாராசரி ரசிகன் இந்த இடத்தில்தான் பேந்தப் பேந்த முழித்திருப்பான். ஒருவேளை இங்கு எழுதியதால் இதன் அர்த்தம் தற்போது புரிந்திருக்கும். ஆனால் கதையின் அடிநாதமான இந்த விஷயம் படத்தில் போகிற போக்கில் வந்து போகும். எத்தனைப் பேர்  இதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்..?

ஆரம்பம் படத்தை வெகுவாக ரசித்தவர்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்வார்கள். படத்தில் முக்கியமான ஒரு காட்சியில்,  'தரமில்லாத புல்லட் புரூப்.' என்கிற வார்த்தையை நான்கைந்து தடவை அழுத்தி உச்சரிப்பார் தல. இந்த இடத்தில் 'தரமில்லாத' என்கிற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். தன் மேலதிகாரியிடம் புகார் செய்யும்போது, இதற்குப் பதிலாக வேறு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கலாம். ஆனால் கதைக் கருவின் அடிநாதமே அதுதான் என்பதால் பாமரனுக்கும் விளங்கவேண்டும் என்பதற்காக அந்த வார்த்தையை உபயோகித்திருப்பார்கள்.

வில்லா படத்தில் இதுபோன்ற ஒரு முக்கிய காட்சியைத்தான் புரியாத மொழியில் ஜல்லியடித்திருக்கிரார்கள் என்று விமர்சித்திருந்தேன். அதேப்போல இறுதிக் காட்சி எத்தனைப் பேருக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இதைத்தான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, மற்றபடி இந்த புண்ணாக்கு, பருத்திகொட்டை கிண்டுற வேலையெல்லாம் எனக்கு தெரியாது சாமீ....


சச்சின் டெண்டுல்கர்....

இதை எழுதும் போதே கண்களில் நீர் முட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக இந்திய இளைஞர்கள் அதிகமாக உச்சரித்த சொல் இதுவாகத்தான் இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, உடன் பிறந்தவளை திருமணத்திற்குப் பின் பிரியும்போது ஏற்படும் வலிபோல துக்கம் நெஞ்சை அடைக்கிறது. சச்சின் அணியில் இருந்தபோது சரியாக விளையாடவில்லை என்று விமர்சித்த வாய்தான் இன்று வரண்டுபோய் கிடக்கிறது. எனக்கெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கபடியை விட்டால் வேறு எந்த விளையாட்டும் தெரியாது. எங்கள் கிராமப்புறங்களில் அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. நாடே சச்சின்.. சச்சின் என்ற பொழுது நாங்களும் அந்த பொது நீரோட்டத்தில் ஐக்கியமானோம்.   

ஒரு விளையாட்டு வீரனுக்கு இவ்வளவு பில்டப் தேவையா....? சும்மா ஒன்னும் விளையாடவில்லையே, கோடி கோடியாக சம்பாதிக்கதானே செய்தார்.' பாரத் ரத்னா ' கொடுப்பதற்கு இவர் என்ன எல்லையில் போயி சண்டையா போட்டார்..? இப்படி அற்பத்தனமாகக் கேள்வி கேட்கிறது ஒரு பிரிவு.

பல லட்சம் கோடிகளை சர்வ சாதாரணமாக தின்று ஏப்பம் விடும் ஊழல் பெருச்சாளிகள் மலிந்திருக்கும் நம் நாட்டில், நாட்டுக்காக 20 வருடத்திற்கு மேல் விளையாடிய ஒரு வீரர், தன் திறமையின் மூலம் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது...?  100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை தன் தலைமீது சுமந்துகொண்டு விளையாடுவது மனரீதியாக எவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்..?. அதிலும் இருபது ஆண்டுகளாக இந்தியாவின் 'ஒரே நம்பிக்கை' சச்சின் போன்றவர்களுக்கு..?

நாட்டுக்காக விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமல்ல. இந்திய அணி வெற்றிபெற்றால், ' INDIA WON THE MATCH ' என்றுதான் சொல்கிறார்களே தவிர, ' INDIAN CRICKET TEAM WON THE MATCH ' என்று செல்வதில்லை. இந்தியா எத்தனை தடவை சச்சின் என்கிற தனிப்பட்ட ஒருவரால் ஜெயித்திருக்கிறது..!

சச்சின் எல்லையில் சென்று சண்டை போடவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தானை சுருட்டி வீசியெறிந்த காட்சியைக் கண்டு முதலில் சந்தோசக் கூத்தாடுவது நம் எல்லை வீரர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா..?  இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு தடவை கூட பாகிஸ்தானை இந்தியா ஜெயிக்க விட்டதில்லை என்கிற சாதனையின் பின்னணியில் சச்சினின் பங்களிப்பு    மகத்தானது என்பதை நாம் அறிவோம்தானே...!

ராஜன் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

"கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக விளையாண்ட ப்ளேயர்களெல்லாம் கிளம்பிய பிறகு, அந்த இலக்கணத்தை எழுதியவன் கிளம்புகிறான்..."

Good bye Sachin...!


கலாட்டூன் கார்னர்....

 எவன்டா இந்த வேலையை செஞ்சது...?

------------------------------------------------------X---------------------------------------------------

ஆனா, இது சத்தியமா நான் செஞ்ச வேலைதாங்க...





                                                                                                   - இன்னும் அடிச்சிவிடுவோம்...

Monday, 11 November 2013

சிம்புவின் கரண்ட் லவ்வரும், ஒரு கில்மா பூங்காவும்...(சும்மா அடிச்சி விடுவோம்..-5 )



'காரை வச்சிருந்த சொப்னசுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா' என்பதை கூட ஈசியா கண்டுபிடித்து விடலாம்யா. ஆனா நம்ம சிம்பு கரண்ட்ல யாரை வச்சிருக்காரு என்பதைத்தான் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம். ஆனா ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். சிம்பு சீசனுக்கு ஒன்னு மாத்தினாலும்  சீக்ரெட்டா எதையும் வச்சிகிறதில்ல.  எப்படியோ மீடியாவுக்கு தெரியப்படுத்தி, எங்கப்பனைப் போல இல்ல, நான் ஒரு மச்சக்கார மன்மதன் என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு அப்படி ஒரு அலாதி.

லேட்டஸ்டா, ஆண்ட்ரியா போட்ட பாலில்(ஐ மீன்..பந்து) சிம்பு கிளீன் போல்டானாதாக கோலிவுட்ல பேசிக்கிறாங்க. இரண்டு பேருமே கிரவுண்டில் நின்று அடித்து ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் யார் பாலில் யார் போல்டானார்கள் என்பதுதான் தெரியில.. போகட்டும்...


இப்போ எனக்கு ஒரு சந்தேகம். முதலில் சிம்பு நயன்தாராவை லவ் பண்ணினார். என்ன பிரச்சனையோ தெரியவில்லை, நயன்தாரா பிரிந்து சென்று பிரபுதேவாவை லவ்வினார். அல்லது பிரபுதேவா 'கீப்'பினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நெருக்கமாக வளர்ந்த இவர்களின் ' லிவிங் டுகெதர் ' சமாச்சாரத்தின் இடையில் கரடியாக புகுந்தவர்தான் ஹன்சிகா. எங்கேயும் காதல் பட ஷூட்டிங்-ன் பொழுது  எங்கெங்கோ போயி காதல் பண்ணி 'ஸ்லீப்பிங் டுகெதர்' வரை சென்ற விஷயம் நயனுக்கு கிட்டவே, காதல் புட்(டுகிட்)டது.

அதன் பிறகுதான் சுவாரஸ்யம். இந்த தெய்வீக காதல் பணால் ஆக காரணமான அந்த சப்பாத்தி மாவு, பின்னர் முதல் காதலில் பணால் ஆனவரோடு தற்போது லவ்விக்கொண்டு இருக்கிறார். இப்போ இந்த 'சர்க்யூட்' பக்காவா முழுமையடைத்திருக்கு இல்லையா... ? அதாவது நான் லவ்வியவளை அவர் 'கீப்'பினார்... அவர் லவ்வியவரை நான் 'கீப்'பிகிறேன். இதிலிருந்து என்ன தெரியுது... வாழ்க்கை என்பது மட்டும் ஒரு வட்டம் அல்ல... காதல் கூட ஒரு வட்டம்தான்..


ஆனால் இங்கதான் டிவிஸ்ட்...  கடைசியாக, இந்த பணால் பார்ட்டிகளின் காதலுக்கு இடையில் புதுசா ஒரு பியூட்டி நுழைந்திருக்கு. பட் என்ன கொடுமைனா,  இதுவும் ஏற்கனவே அனிருத்கிட்ட அடிவாங்கினதுதான்.

ஆகக்கடைசியா எனக்கு என்ன தோனுதுனா...  இதைவைத்து ஏன் தமிழில் ஒரு சினிமா எடுக்கக் கூடாது...? இப்படியொரு காதல் கதை இதற்கு முன் தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் வந்திருக்கிறதா..?     ஏக்து​ஜே ​கேலி​யே வுக்குப் பிறகு நல்ல காதல்கதை எதுவும் வரவில்லை என்கிற குறையை இந்தப்படம் போக்கும் என்பது என் கணிப்பு. :-))

வேண்டுமானால் சுவாரஸ்யத்திற்கு சின்ன மாற்றம் செய்துக்கொள்ளலாம். பிரபுதேவா-நயன்தாராவை பிரிக்க சிம்பு அனுப்பிய அம்புதான் ஹன்சிகா என்கிற உண்மையை கிளைமாக்சில் சொல்றமாதிரி வைத்துக் கொள்ளலாம்.

அப்புறம் இடைவேளையின் பொழுது , பிரபு தேவாவைப் பார்த்து சிம்பு இப்படி பன்ச் டயலாக் பேசுற மாதிரி வச்சிக்கலாம்..

"இன்னிக்கு இந்தியாவிலே பெரிய டான்சர் என்கிற திமிர்ல என் பிகர நீ உஷார் பண்ணி எனக்குள்ள இருக்கிற மன்மதனை தட்டி எழுப்பிட்ட. தேவா...இதுவரை இந்த சிம்புவை விரல் சூப்பிரவனா பாத்திருக்க. இனிமேல விரல்வித்தைக்காரனா பாக்கப்போற. இந்த நாள்........, உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்க.  இன்னியிலிருந்து உன் அழிவுகாலம் ஆரம்பிச்சிடிச்சு. எனக்கும் உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடிச்சி. இந்த யுத்தத்தில, நீ எப்படி என் பிகர உஷார் பண்ணி என்னை முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விட்டியோ, அதே மாதிரி நானும் நீ பிக்கப் பண்ற எல்லா பிகரையும் உஷார் பண்ணி உன்னையும் என்னைப்போல முச்சந்தில நிக்க வச்சி பொலம்ப விடல.. நான் எங்க கரடிக்கு... ச்சீ..எங்க டாடிக்கு பொறக்கலடா ..."


ரம்பம் படத்திற்கு இணையத்தில் முதல் விமர்சனம் நான் தான் எழுதினேன் என நினைக்கிறேன். இதைப் பெருமைக்காக சொல்லவில்லை, ஒரு குற்ற உணர்வை சுட்டிக்காட்டுவதற்காகக் குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எனது ஆபிசிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்திருக்கிறது தமிழ் சினிமாக்கள் ஓடும் அந்த சினி பிளெக்ஸ். சிங்கையில் நிறைய சினி பிளெக்ஸ் இருந்தாலும் இரண்டே இடத்தில்தான் தமிழ் படங்கள் திரையிடுவார்கள்.அதிலொன்று என் ஆபிஸ் அருகில் உள்ளது. பெரும்பாலான புதுப்படங்கள் முதல் நாள் இரவே இங்கு திரையிடப்படும்.  தற்போதெல்லாம் படம் வெளிவந்த மறுநாளே இணையத்தில் கிரிஸ்டல் கிளியரில் காணக்கிடைப்பதால், எவ்வளவு சீக்கிரம் திரையிட வேண்டுமோ அவ்வளவு லாபம் என்கிற வகையில் முதல் நாள் இரவிலிருந்தே திரையிடப்படும். எனது ஆபிஸ் ஷிப்ட் 12 PM - 9.00 PM  . இங்கு இரவு 9-30 மணியளவில்தான் முதல் காட்சி ஆரம்பிப்பார்கள். ஆக, மிகச்சுலபமால ஆபிஸ் முடிந்து படம் பார்த்துவிட்டு,அன்று இரவே முதல் விமர்சனம் போட்டுவிடலாம். சரி..சரி. இதெல்லாம் ஒரு பொழப்பானு கேட்க வாறீங்க...அதானே...?. நானும் அதையேத்தான் கடைசியாக சொல்ல வருகிறேன்.

இப்படியாக, நிறைய படங்கள் முதல் நாள் இரவே பார்த்தாலும், முதல் விமர்சனம் என்று இரண்டு படத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். தலைவா மற்றும் ஆரம்பம் படத்திற்கு.  தலைவா படத்திற்கு மட்டும் ஆறாயிரம் ஹிட்ஸ் கிடைத்தது. சில பதிவர்கள் முதல் காட்சி பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து விமர்சனம் எழுதுவதின் சூட்சமம் அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் 'ஆரம்பம்'.

நானெல்லாம் எங்கெங்கோ தகவல்கள் திரட்டி, முக்கி முக்கி பதிவு போட்டாலும் முந்நூறு ஹிட்ஸ் வாங்குவதற்குள் மூச்சே போய்விடுகிறது. ஆனால் ஆரம்பம் விமர்சனத்திற்கு, படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் எட்டாயிரம் ஹிட்சுக்கு மேல் கிடைத்தது. பொதுவாக என் பதிவை தமிழ்மணத்தைத் தவிர்த்து வேறு எதிலும் இணைப்பதில்லை. என் பேஸ்புக் சுவரில் ஒன்றிரண்டு பதிவுகள்தான் இணைத்திருப்பேன். அன்று இணைத்தது  தமிழ்மணம் மற்றும் வெட்டி பிளாகர்ஸ் -ல் மட்டும்.அதன் பின்னர் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ்-ல் நிறைய பேர் ' ஷேர்' செய்திருக்கிறார்கள் போல.இதில் என்ன கொடுமை என்றால், என் விமர்சனத்தை காப்பி செய்து டிவிட்டரில் அவர்கள் எழுதியாக சிலர் போட்டிருக்கிறார்கள். அதை வேறுசிலர், ட்விட்டரில் வெளியான முதல் விமர்சனம் என்று திரும்பவும் பேஸ்புக்கில் அப்படியே பதிந்திருந்தனர். இதைப் பார்த்தபோது அல்பத்தனமாக கோபமெல்லாம் வரவில்லை. ஏனெனில், காப்பி பேஸ்ட் செய்யும் அளவுக்காவது என் எழுத்துக்கள் மதிக்கப்படுகிறதே என்கிற சந்தோசம்தான். அதனால்தான் என் வலைப்பூவில் "காபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்..." என்று குறிப்பிட்டிருப்பேன்.

என்னைப்பொறுத்தவரையில் சினிமா விமர்சனம் என்பது, வெறுமனே அது நல்லா இருக்கு...இவரு நல்லா நடிச்சியிருக்காரு..., இந்தக் காட்சி அற்புதமாக இருக்கிறது... சிகரெட் பிடிக்கிறப்போ புகை ஏன் வரல... என்பதுபோல சிபித்தனமாக எழுதுவதில் உடன்பாடு கிடையாது. கதைக்கருவிலிருந்து ஆக்கம் வரை உள்ள குறீயீடுகள்,குறைபாடுகள், கதைக்களமும் தளமும் எதன் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது என்பதைப் பற்றி விரிவாக இருக்கவேண்டும்.உதாரணத்திற்கு , ஆரம்பம் படம் பார்த்துவிட்டு முதல் விமர்சனம் எழுதவேண்டும் என்கிற அவசரத்தில் வெறும் SWORDFISH படத்தை மட்டும் ஒப்பீடு செய்து விமர்சனம் எழுதி பதிவேற்றி விட்டேன். ஆனால் இந்தியாவில் நடந்த முக்கியமான சம்பவத்தை அதில் கையாண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் என் மரமண்டைக்கு அப்போது ஏறாமல் போய்விட்டது . இவ்வளவுக்கும் அதைப்பற்றி முன்பு ஒரு பதிவு எழுதி இன்னும் டிராப்டில் கிடக்கிறது. ஆனால் அச்சம்பவத்தைப் பற்றி மிகத் தெளிவாக, விரிவாக உண்மைத்தமிழன் எழுதியிருந்தார். அதைப் படித்தபொழுதுதான் உரைத்தது. சினிமா விமர்சனம் எழுதிவதில்  இன்னும் நான் 'ஒன்னாங்கிலாஸ்'யே தாண்டவில்லை என்று.

சமீபத்தில் சுட்டகதை விமர்சனம் லக்கிலுக் யுவா எழுதியிருந்தார். எவ்வளவு தகவல்கள்..! விமர்சனம் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்..!

தீபாவளிக்கு முதல்நாள் இரவே பாண்டிய நாடும், அழகு ராஜாவும் இங்கே ரிலீஸ் ஆகிவிட்டது. தியேட்டர் வழியாகத்தான் நான் பயணிக்கும் பஸ் போகும். ஒருபுறம் கால் பரபரவென்று இழுக்க, மனது ஏனோ மறுத்துவிட்டது. பிறகு படம் பார்த்து விட்டோமே என்பதற்காக இரவோடு இரவாக விமர்சனம் எழுதத் தூண்டும்... எதுக்கு தற்குறி என்பதை நாமே தம்பட்டம் அடித்து நிருபிக்கவேண்டும்...?

(எக்ஸ்கியூஸ்மீ...."அப்பாடா இவன் தொல்லையிலேருந்து தப்பிச்சாச்சிப்பா "என்று பெருமூச்சு விடாதீங்க. நவ 22, இரண்டாம் உலகம் ரிலீசாமே...?. 21 இரவே இங்க ரிலீசாமாம். ராவோடு ராவா போட்டுடவேண்டியதுதான். பின்ன நாங்கல்லாம் எப்போ பாஸ் பிரபல பதிவரா ஃபார்ம் ஆகுறது..?   )   



ரு அடல்ட் ஒன்லி மேட்டர்... பெண்கள் இந்த லிங் -கை திறந்து பார்க்க வேண்டாம்( சில ஆண்களும் கூட..). பட்.. வெரி இன்ட்ரஸ்டிங்..!

வாரக்கடைசியில் எங்கேயாவது பார்க்-க்கு போகலாம்னு கூகுள்ல டைப் செய்து தேடிப் பார்த்தேன். இது வந்தா என் கண்ல மாட்டனும்..? ஏதோ புதுவகையான செடிபோலனு  நெனைச்சி உற்றுப்பார்த்தா,  கருமம்.. கருமம் ... இதுக்கு கூடவா பார்க் வச்சி மெய்ண்டைன் பண்றாங்க...? ஆனால், சும்மா சொல்லக் கூடாது கொரியாகாரனுவ கில்லாடிகள்தான். என்னவொரு கலை நுணுக்கம்... !!!  

இந்த 'பார்க்'(Haeshindang Park) தென்கொரியாவில் இருக்கிறது.இதன் பின்னணியில் ஓர் சுவாரஸ்யமான கதை உள்ளது .

முன்னொரு காலத்தில் மீனவன் ஒருவன் தன் 'கன்னிக்' காதலியை ஒரு பாறை மீது அமரச்செய்துவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றானாம். அப்போது கடுமையான புயல்தாக்கி அவள் இறந்துவிட்டாளாம். அதன் பின்னர் அந்தப் பகுதி மக்களால் மீன் பிடிக்க முடியவில்லையாம். பிறகுதான் அதற்கான காரணத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த கன்னியை தன்னந்தனியாக அங்கே விட்டுச்சென்றதுதான் அதற்குக் காரணமாம். அதனால் அதற்குப் பரிகாரமாக, இறந்துபோன அந்த கன்னி ஆவியை சமாதானப்படுத்தும் பொருட்டு மிகப்பெரிய சைசில் 'அதை' மரத்தால் செய்து அங்கே நட்டுவைத்து விடவேண்டும் என தீர்மானித் -திருக்கிறார்கள்.

ஆனால் என்ன ஆச்சர்யம்... அதன் பின்னர் அவர்கள் வலையில் மீன்கள்  சிக்கோ சிக்கு என்று சிக்கியிருக்கிறது. பிற்பாடு அவர்களும் 'அதையே' கடவுளாகப் பாவித்து பூஜை செய்து(!) வணங்கி வருகிறார்களாம்...

இதுக்கு நம்ம ஊரு கன்னி ஆவிகள் எவ்வளவோ தேவலையப்பா... :-))



கலாட்டூன் கார்னர் :
ணர்ச்சியின் உச்சத்துக்குப் போன ஒரு ரத்தத்தின் ரத்தம், இப்படி போஸ்டர் அடிச்சி ஒட்டியிருந்திருக்கு.. நெஞ்சைப் பொளந்து அம்மாவை காண்பிக்கிறாராராமாம் . நான் விடுவேனா...? அந்த அப்ரசண்டியின் உணர்ச்சிக்கு உயிர் கொடுத்திட்டேன்... ! :-))



கிரிக்கெட்டின் ஆல்டைம் கடவுளாக மதிக்கப்படுகிற டொனால்டு பிராட்மேனை, அவரது வீட்டின் பூஜை -யறையில் தற்போதைய கடவுள்களான வார்னேவும், சச்சினும் சந்தித்தபோது... :-))









Saturday, 19 October 2013

இஞ்சி இடுப்பழகி - ஒரு தீவிர ஆராய்ச்சி...(சும்மா அடிச்சி விடுவோம்..-4 )

ராஜா ராணி படம் போன வாரம்தான் பார்த்தேன். இப்படியே போனா .... போன வருசந்தான் பாத்தேன்னு எழுதுற நிலைமையில கொண்டு போயி விட்டுடும். என்னங்க பன்றது. எழுதனும்னு உட்கார்ந்தா ஏதாவது ஏழரை வந்து உச்சத்தில உட்கார்ந்து ஊஞ்சல் கட்டி ஆடுது.அதை பைசல் பண்ணிட்டு வர்றதுக்குள்ள எழுத வந்தது மறந்துடுது. ஒரே குஷ்டமப்பா...

சரி.. என்னசொல்ல வந்தேன்...?  ஆங்... ராஜா ராணி படம். இதுக்கு தனியாக விமர்சனம் எழுதி கழுவி ஊத்த இது மொக்கைப் படமோ அல்லது காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல...  கொஞ்சம் சுமாரான படம்.. சாதாரண கதை. ஆனால் நயன்தாரா -ஜெய் போர்சன் எக்ஸலண்ட்..!  இரவுக்காட்சி சென்றதால் கடைசி ரயிலைப்பிடிக்க படம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டேன். அதை சமீபத்தில்தான் பார்த்தேன். அதுவரை நெஞ்சில் நின்ற ஜெய் கேரக்டர், மம்மியைப் பார்த்த மினிஸ்டர் மண்டை போல 'டொக்' கென்று விழுந்துவிட்டது. வழக்கம் போல சந்தானம்,  'மச்சி..காதல்ன்றது....' என ஆரம்பிச்சி கழுத்தை அறுக்கிறார். இருவருடைய பிளாஸ்பேக் முடியும்போதும், அதைக்கேட்கும் ஆர்யா, நயன்தாராவின் ரியாக்சனை ஒரே மாதிரியாகத்தான் காண்பிக்கவேண்டுமா அட்லி...? இருவரின் முகமும் ஒரே மாதிரியாக குளோசப்பில் கண்களில் நீர்வடிய எதையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது.

ஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.  தம்பி அட்லி, மணிரத்னம் மாதிரி வரணும்னு ஆசைப்படுறாரு போல. அதுக்காக அவர் இயக்கிய  படத்தை ரீமேக் பண்ணக்கூடாது தம்பி. அடுத்த தடவை வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணு.

சரி அதைவிடுங்க.. நான் சொல்ல வந்தது வேற விஷயம். இந்தப்படத்தில நயன்தாரா கூடவே இலவச இணைப்பா ஒன்னு சுத்திகிட்டு இருக்கும். துடைப்ப கட்டைக்கு துப்பட்டா போட்ட மாதிரி. 'வணக்கம்ங்க.. என்ட்ர பேரு புவனாங்க..'.னு ஜெய் கிட்ட ஒரு அம்மணி போனில காலாய்க்குமே. அந்த அம்மணி பெயர்  தன்யா பாலகிருஷ்ணா.. இதைச்சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பானு குறுக்கால கேள்வி கேட்காதிங்க. அப்புறம் சொல்ல வந்தது மறந்துடும்.

சில நாட்களுக்கு முன்னால ஒரு பெங்களூர் அம்மணி சென்னை மக்களை 'பிச்சைக்காரன்' என்கிற ரீதியில்...  ரீதியில் என்ன... நேரடியாவே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, நம்ம மக்கள் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு இனிமே சென்னை பக்கமே வரமாட்டேன்னு சொன்னதே ஞாபகம் இருக்கா...? அப்படியானு ஆச்சர்யகுரியை மூஞ்சில தொங்க விடமா அந்த ஸ்க்ரீன் ஷாட்டை திரும்பவும் போடுறேன் பாருங்க.
இப்போ என்ன  சந்தேகம்னா, இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னால அம்மணி 'ஏழாம் அறிவு' படத்தில முக்கியமான ஒரு ரோல்ல நடிச்சது. பிறகு தான் பிரச்சனை வந்து ஓடிப்போனது.. ஓடிப்போன அம்மணியை திரும்பவும் கூட்டிட்டு வந்து வாய்ப்பு கொடுத்து வாழவைத்திருக்கிறார் நம்ம A.R முருகதாஸ்.

அண்ணா முருகதாஸ்ண்ணா...உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி,  'ஏழாம் அறிவு' படத்தில இந்த அம்மணியை பக்கத்தில வச்சிக்கிட்டு சூர்யா ஒரு உணர்ச்சிபூர்வமான டயலாக் பேசுவாப்டி..."தமிழனை மலேசியாவில அடிச்சாங்க....இலங்கையில அடிச்சாங்க.... இப்போ தமிழ்நாட்டுக்கே வந்து அடிக்கிறாங்க.... "

நரம்பு புடைக்க  வசனம் எழுதுன உங்களுக்கு தமிழர்களை பெங்களூர்ல அடிச்சத மறந்து விட்டீங்களா.. அதனாலதான் அந்த துடைப்ப கட்டை அம்மணிக்கு மாஞ்சி மாஞ்சி வாய்ப்பு தருகிறீர்களோ... தமிழ் நாட்ல ஹீரோயினுக்குத்தான் பஞ்சம்னு கேரளா, ஆந்திராவிலிருந்து இம்போர்ட் பண்ணுறீங்க... ஒரு தொப்புளுக்காக கோர்ட் படி கூட ஏறுவீங்க.. இது போன்ற துக்கடா கேரக்டருக்குக் கூடவா தமிழ் நாட்டில் நடிகைங்க இல்ல..? 

என்ன செய்யுறது தமிழர்களில் மறதி குணம் அப்படி... அடுத்த படத்தில 'ஜப்பான்ல ஜாக்கிச்சான் அடிச்சாரு.. அமெரிக்காவில மைக்கேல் ஜாக்சன் அடிச்சாரு'... னு வசனம் எழுதுங்க. நாங்களும் கைதட்டி, விசிலடிச்சி என்ஜாய் பண்றோம்.
டுத்ததும் வில்லங்கமான மேட்டர்தான். கொஞ்சம் பழைய செய்தி. ஆனால் என் பதிவு சம்மந்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில், நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவருடன் புன்னகை நடிகையைத் தொடர்புப் படுத்தி கிசோர் கேசாமி போட்ட ஒரு ஸ்டேடஸ் பெரும் சர்ச்சையானது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கேப்டன் டிவியில் கிசோர் கேசாமியுடன் நடந்த நேர்காணலை சமீபத்தில்தான் பார்த்தேன். 
http://www.youtube.com/watch?v=jztqrHrf3jY
http://www.youtube.com/watch?v=cPYM926Zt5o

அதில் அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட  கேள்வி அந்த நடிகை சம்மந்தப்பட்டதுதான். உலகம் முழுவதும் அது ஒளிப்பரப்பாகும் என்று தெரிந்திருந்தும்,அதில் அவர் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. கடைசிவரை அது தவறான பதிவு என்றோ, சரியாக விசாரிக்காமல் போடப்பட்ட நிலைத்தகவல் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த நேரத்தில் திருச்சியில் இருந்ததாகவும்,அதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அந்தத் தகவலைப் பதிந்தேன் எனவும் தெரிவித்தார். பிரசன்னா தரப்பு காவல்துறையில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. இடையில் அன்பான நண்பர் ஒருவரின் பேச்சுவார்த்தையால் புகார் அளிக்கவில்லை. அதனால் என் பதிவையும் நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.  அது தொடர்பாக எனக்கெழுந்த சந்தேகம் இதுதான்..

புகார் ஏன் அளிக்கவில்லை என்று  ஊடகவியலார்கள் அன்று பிரசன்னாவிடம் கேட்டபோது, அப்படி யாரும் தவறாக எழுதவில்லை.. நான் யாரிடமும் வாதிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் கிசோர் அந்த ஸ்டேடசை பதிந்தபிறகு பலரும் அதை நக்கலடித்து எழுத, பிரசன்னா கமெண்ட் போட்ட பிறகுதான் அந்த விவாதம் வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதில் நக்கலடித்தவர்கள் அனைவரின் இன்பாக்சுக்கு சென்று பிரசன்னா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதை கிஷோர் தனது அடுத்த நிலைத்தகவலில், ஸ்டேடஸ் போட்ட என்னிடம் வாக்குவாதம் செய்யாமல் கமென்ட் போட்ட நண்பர்களின் இன்பாக்ஸில் சென்று மிரட்டுவது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். பிரசன்னாவின் அந்த கமெண்டில் அவர் பெயரைச் சொடுக்கினால் அது அவரின் பேஸ்புக் பக்கத்திற்குத்தான் சென்றது. அதில், அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'கல்யாண சமையல் சாதம்' படம் பற்றிய அப்டேட்கள் நிறைய இருந்தது. அது அவரது பேஸ்புக் பக்கம்தான்.

ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்டு குடைந்த போது பிரசன்னா கடைசியாக ஒரு போடுபோட்டார் பாருங்க... 'எனக்கு பேஸ்புக்ல அக்கவுண்டே கிடையாது'னு.. இதிலிருந்து என்ன தெரியுது. ..? உங்களுக்கு என்ன தெரியுதோ அதேத்தான் எனக்கும் தெரியுது. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நாம வேற வேலையைப் பார்ப்போம்.


அடுத்து அகழ்வாராய்ச்சி(!) ஒன்றில் ஈடுபடலாம்னு இருக்கேன்..

‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ -தேவர்மகன் படத்தில் வரும் இந்தப்பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப்பாடலுக்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுத்தாங்க... இருக்கட்டும்.

அது என்ன ‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...? அதற்கான ஆராய்ச்சியிலத்தான் இறங்கப்போறோம். ஆமா இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்மந்தம்...?

பழைய பாடல்களுக்கும் புதிய பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியே கின்னஸ் ரெகார்டு வரை போன திண்டுக்கல் லியோனி ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'அது என்ன இஞ்சி இடுப்பழகி... இஞ்சி பாத்திங்கனா ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும். ஒன்னு ஐரோப்பா மேப் மாதிரி இருக்கும். அதுமாதிரியா இடுப்பு இருக்கும்..? ரெண்டாவது வரி மஞ்சச் சிவப்பழகி  போட்டாச்சி. மொத வரில இடுப்பப் பத்தி சொல்லணும். இடுப்புக்கு இ-ல ஆரம்பிக்கிற மாதிரி ஒன்ன போடனும். போட்டுவுடு ஒரு இஞ்சை-னு போட்டுடாங்க' அப்படினு சொல்வாரு. 

தென்கச்சி சொன்னதா எங்கேயோ படித்திருக்கேன். 'இஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பெல்லாம் நீங்கி சிக்-னு சிறியதா நச்சுனு இருக்கும். அப்படி உள்ளவர்களைத்தான் இஞ்சி இடுப்பழகினு சொல்றாங்க' என புது விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு வேறு ஒரு விளக்கம் பேஸ்புக்ல கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கொடுத்திருக்கார்...

இஞ்சுதல்’ என்று தொழிற்பெயர் உண்டாம். இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி. அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !

அடேங்கப்பா... இதுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறதா..?

ஆனால் அந்தப் படத்தையும் பாடலையும் கவனித்தீர்கள் என்றால் இன்னொரு வினா எழுப்பத் தோன்றும். பாடலில் முதலில் பெண் குரல்தான் பாடும். " இஞ்சி இடுப்பழகா... மஞ்சச் சிவப்பழகா.." அப்படி என்றால் இது ஆணுக்கான  வர்ணனை தானே.. ஆணின் இடுப்பை அப்படி வர்ணிக்கலாமா..?  என்றால், இதற்கு பாடல் எழுதிய வாலியே விளக்கம் கொடுத்திருக்கிறார். 'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்' என சொல்லியிருக்கிறார்.

எனக்கிருக்கும் சந்தேகம் அந்த வரியை உண்மையிலேயே வாலிதான் எழுதியிருப்பாரா என்பதே.பொதுவாகவே இசைஞானி நாட்டுப்புற இசைப்பின்னணியில் பாடல் அமைக்கிறார் என்றால் வேறு பாடலாசிரியர் எழுதினாலும் ராஜாவின் பங்கும் அதில் இருக்கும். ஒரு சில நாட்டுப்புற வரிகளை அதில் கோர்த்து விடுவார். 'ஒத்த ரூவாயும் தாறேன்...' பாடலின் முதல் இரண்டு வரிகள் ஏற்கனவே எங்கள் கிராமப்புற பகுதியில் பாடப்பட்ட பாடல்தான்.

அதேப்போல்  “இஞ்சி இடுப்பழகா, எலுமிச்சங்காய் மாரழகா, மஞ்சச் சிவப்பழகா, மறக்க மனம் கூடுதில்லை” என்ற இவ்வரிகள் நெல்லை ,மதுரைப் பகுதிகளில் பாடப்படும் நாட்டுபுறப் பாடல்களில் இடம்பெற்றதாக ஒரு தமிழர் நாட்டுப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இது முதல் வரியிலேயே ரசிகனை கவர்ந்திழுக்க வேண்டும் என்று ராஜா போன்ற மேதைகள் கையாளும் யுத்தி.

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வு எழுதப்போகும் 10,+2 மாணவர்கள் இதைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு தேர்வில் பதில் தெரியாமல் திண்டாடக்கூடாது ஆமா....(உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்..)
 
அரசியல் கலாட்டூன்..  :-)

Wednesday, 11 September 2013

அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?



வ்வொரு தடவையும் கொடநாட்டிலிருந்து திரும்பியவுடன் ஆத்தாவின் ருத்ரதாண்டவம் முதலில் அமைச்சர்கள் மீதுதான் அரங்கேறும். அந்த துர்பாக்கியவான்கள் யார் என்று சசிகலா தரப்பே கணிக்க முடியாத கொடநாட்டு ரகசியம். இந்த முறை யாருமே எதிர்பார்க்காத 'இலக்கிய சொம்பு' வைகைச்செல்வன் மீது பாய்ந்திருப்பது ரந்தததின் ரத்தங்களுக்கே பேரதிர்ச்சி. 

போயஸ் தோட்டத்தில் சசி கும்பலுக்கு அடுத்ததாக அம்மாவின் அனுக்கிரகம் நேரடியாக அமையப் பெற்றவர் என்கிற பிம்பத்தோடு வளம் வந்தவர் வைகைச்செல்வன்.அதற்கேற்றார்போல் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும் கூடவே அதிமுகவின் 'இளம்பெண்கள்' மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளர் உட்பட 'கனமான' பதவிகளை வகித்து வந்தவர். ஆனால் பதவியேற்று ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அலேக்காக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.


அமைச்சரவை மாற்றம் என்பது அம்மாவின் ஆட்சியில் அன்ட்ராயரைக் கழட்டி மாட்டுவது போல். அப்போதை -க்கு எந்த அன்ட்ராயர் பிடிக்குதோ அதை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

கல்வித்துறை ஒரு நாட்டுக்கு முதுகெலும்பு போன்றது. அதில் அரசியல் தலையீடு இல்லாதிருத்தல் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறாதது வெட்கக்கேடு. ஆட்சியமைத்த இரண்டு வருடத்தில் நான்காவது முறையாக கல்வியமைச்சர் மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் மாணவர்களுக்கு கல்வியமைச்சர் யார் என்கிற குழப்பம் வருவது ஒருபுறம் இருக்கட்டும், கல்வியமைச்சரிடம் ஒரு தைரியமான திட்டமிடல் எப்படி இருக்கும் ?

சரி.. இதைப்பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. அடுத்து முக்கியமான சங்கதிக்கு வருவோம். எதற்காக வைகைச்செல்வன் மாற்றப்பட்டார்..?

இதற்கு பல்வேறு காரணங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.மற்ற அமைச்சர்களை மதிப்பதில்லை,இளம்பெண்கள் பாசறையில் சிலருடன் விளையாடிவிட்டார் என அதிமுக தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் மனுஷ்ய புத்திரனை பாராட்டிப் பேசியதால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளானார் என்று ஜூவியில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மனுஷ்ய புத்திரனே தன் முகநூளில் பகிர்ந்திருக்கிறார்.

இதையெல்லாம் புறந்தள்ளுகிற ஒரு செய்தி முகநூலில் பரவியிருக்கிறது. அதைப்பற்றி எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள அடியேனுக்கு தைரியம் கிடையாது. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

முகநூலில் அதிமுகவின் மேல்மட்டத் தொடர்புடையவர் என்கிற பில்டப்போடு வளம்வருகிறவர் கிஷோர்சாமி. அவ்வப்போது அதிரடியாக ஸ்டேடஸ் பதிந்து பல பிரபலங்களை கலங்கடிப்பவர்.மனுஷ்யபுத்திரன்,கவின்மலர், யுவா உள்ளிட்ட பல ஜெயா எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்களை தன் முகநூல் சுவரில் கிழித்தெடுத்தே பிரபலம் ஆனவர். அவரின் லேட்டஸ்ட் நிலைத்தகவல்தான் இது. இவர் அடிக்கடி ஞாபகப்படுத்தும் ஒரு விஷயம், 'நான் எந்த ஆதாரமும் இல்லாமல் இங்கே பதிவு போடமாட்டேன். அப்படி போட்ட பதிவை எந்த மிரட்டலுக்கு பணிந்து நீக்கவும் மாட்டேன். சட்ட ரீதியாக எதையும் சந்திப்பேன்.'

இவர் ஸ்டேடஸ் போட்ட சில மணி நேரத்திலேயே இந்தத் தகவல் பிரசன்னாவுக்கு இவரால் பாதிப்புக்குள்ளான யாராலையோ தெரிவிக்கப்பட்டுள்ளது( அதற்குள் ஏகப்பட்ட லைக் ,கமெண்ட்ஸ் விழுந்துவிட்டது). பிரசன்னா பொங்கி எழுந்துவிட்டார். பின்ன.. மூன்று முறை தாலிக் கட்டியவரல்லவா ...!

ஆனால் பாருங்க... அதன்பிறகு இவர் ஸ்டேடசை நீக்கவும் இல்லை... பிரசன்னாவிடம் எந்த ரியாக்சனும் இல்லை... அப்படினா என்ன அர்த்தம் என நீங்க கேட்க வருவது புரிகிறது..வெயிட்..வெயிட்... இன்றோ நாளையோ சினேகாவே நேரிடையாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இதற்கு பின்புலமாக கிஷோரால் மன உளைச்சலுக்கு ஆளான சில ஊடகத்துறையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...

எது எப்படியோ..நமக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா பொழுதுபோகும்...  !


சற்று முன் அறிந்த செய்தி....


சென்னை போலீஸ் கமிஷர் அலுவலகத்தில் நடிகை சிநேகா புகார் கொடுக்க இன்று வருகிறார் என்ற தகவல் கேள்விபட்டு, இரு தரப்பிலும் பரஸ்பர சமரசம் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கிஷோர் சாமியும் தன் பதிவை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்..  (அப்படின்னு அவருதாங்க சொல்றாரு..)

என்னய்யா நடக்குது இங்க...?


(கிஷோர்சாமியைப் பற்றி இன்றைய கேப்டன் டிவியில்.)