Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, 4 July 2015

சப்பாத்தியை ஓட்டை போடுவது எப்படி..?

 சிங்கை வந்த புதிது. இங்குள்ள சிங்கப்பூர் தமிழ்க் குடிமக்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வட்டார பேச்சு வழக்கு உண்டு. நெல்லைத்தமிழ் , கொங்கு தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் என்று அந்தந்த பகுதி மக்களுக்கும் ஒரு ஸ்லாங் உண்டு.

இதை SLANG என்று சொல்வதை விட DIALECT என்று சொல்வதுதான் சரி. SLANG வேறு... DIALECT வேறு.  "ங்கோத்தா.. " என்பது சென்னை ஸ்லாங்.  "படா பேஜாருப்பா..இப்ப இன்னா சொல்லுறே நீ.." என்பது சென்னை DIALECT . புரியவில்லை என்றால் விட்டுவிடவும். நான் சொல்ல வருவது இதைப் பற்றியல்ல.

நம்மூரில் பல வட்டார பேச்சு வழக்கு இருப்பது போல சிங்கை-மலேசியாவுக்கும் தனித்துவமான வட்டார பேச்சு வழக்கு உண்டு. "அண்ணே... இத இனிமே பாய்க்க முடியாதண்ணே..." என்பார்கள். பாய்க்க முடியாது என்றால், பாவிக்க முடியாது. பாவிக்க முடியாது என்றால், பயன்படுத்த முடியாது. இதே வார்த்தை இலங்கையிலும் பாய்க்கப்படுவதாக ஸாரி..பயன்படுத்தப்படுவதாக சென்னைப் பித்தன் அய்யா பதிவு ஒன்றில் பார்த்தேன். இலங்கையில் ஒரு துணிக்கடையில் "நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று பதாகை எழுதி வைத்திருந்தார்களாம். உபயோகிக்கும்..பயன்படுத்தும்...என்கிற அர்த்தத்தில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கை சென்ற புதிதில், என் அலுவலகத்தில் மலேசியா நண்பன் ஒருவன் நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தான். அவனது பெயர் முருகன். காலை ஷிப்டை முடித்துக்கொண்டு நான் கிளம்பும் வேளையில் இரவுப் பணிக்கு அவன் வருவான். ஒரு நாள் பணிக்கு வந்த உடனேயே பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்..

"என்ன முருகா .. என்ன தேடிகிட்டு இருக்க..?.."

" என் சப்பாத்திய எவனோ ஓட்டை போட்டுட்டாண்ணே.."

" என்னது சப்பாத்திய ஓட்டை போட்டுட்டானுவளா.. அதப் போயி எதுக்குய்யா ஓட்டை போட்டாணுவ..  அத எங்க வச்சிருந்த..?"

" ட்ரெஸ் கழட்டுற இடத்தில தான்ணே வச்சிருந்தேன்.. "

" அத எடுத்துட்டு வா பாக்கலாம்... "

" அண்ணே.. ஓட்டை போட்டுட்டாணுவங்கிறேன்.. அத எடுத்துட்டு வா..ங்கிறீங்க.."

"சரியா.. டென்சன் ஆகாதய்யா.. வேற வாங்கிக்கிலாம் விடுய்யா ...."

"அண்ணே அது அம்பது வெள்ளிண்ணே.. "

" அம்பது வெள்ளியா.. என்னய்யா அநியாயமா இருக்கு.. சரி இனிமே வாங்குனா பேக்கு உள்ளேயே வச்சிக்க.. வெளிய வைக்காத..":

" நானே ஓட்டை போட்டுடாணுவங்கிற டென்சன்ல இருக்கேன்.. நீங்க வேற பேக்குல வய்யி.. லாக்கர்ல வய்யின்ட்டு.. "

"ஓட்டை போடுற அளவுக்கு வக்கிரம் புடிச்சவன் எல்லாம் இங்க இருக்கானா... ஒருவேள விளையாட்டா செஞ்சியிருப்பாங்க... சரி விடுய்யா... எவனாச்சும் கவர்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்கு விரல விட்டு பாத்துருப்பான். ஓட்டை விழுந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி அம்பது வெள்ளி விக்கிறது அநியாயம்யா.. அந்த ஹோட்டல் எங்க இருக்கு..."

அவ்வளவுதான். செம காண்டாகி அங்கிருந்து கிளம்பி போயிட்டான். எனக்கு ஒரே குழப்பம். நம்ம ஊரு பையன் ஒருத்தன கூப்பிட்டு, " என்னப்பா சாப்பிடற சப்பாத்திய போயி எவனாவது ஓட்டை போடுவானா... மட்டமா இருக்காங்கப்பா .."

"அவனே ஷூ வை காணும்னு தேடிக்கிட்டு இருக்கான்...  அவன ஏன்ணே டென்சன் ஏத்துறீங்க.."

" யோவ் சத்தியமா தெரியாதுய்யா.. அவன்தான் சப்பாத்தியை ஓட்டை போட்டுட்டாங்கனு சொன்னான்.."

"அது சப்பாத்தி இல்லன்ணே.. சப்பாத்து.."

அடப்பாவிகளா.. ஷூவதான் சப்பாத்துனு சொல்றீங்களா.. அப்போ இவ்ளோ நேரம் ஷூ காணாம போனத பத்திதான் பேசிகிட்டு இருந்திருக்கானா.. அவன் சப்பாத்துனு சொன்னது என் காதில சப்பாத்தின்னு விழுந்திருக்கு. நான் சப்பாத்தின்னு சொன்னது அவன் காதுல சப்பாத்துனு விழுந்திருக்கு. அப்போ ஓட்டைப் போடுறதுன்னா திருடிட்டு போறது போல.. 

அப்புறம் விசாரித்தால்தான் தெரியுது. சப்பாத்து என்பது shoe-வின் தமிழாக்கமாம். ஜெயமோகன் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நமக்குத்தான் தெரியாமல் போய்விட்டது.

ஒரு தமிழ் வார்த்தையை அயல்நாடு சென்று அறிய வேண்டிய சூழல் எனக்கு. ஆனால் வேற்று மொழியிலிருந்து வந்த நிறைய வார்த்தைகள் தற்போது தூய தமிழ் சொற்கள் போல தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் எழுதும் மரபுக் கவிதைகளில் கூட அவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது.

உதாரணத்திற்கு சில... (அடைப்புக் குறிக்குள் உள்ளது தூய தமிழ்ச் சொல்)

அர்ச்சனை  (மலரிட்டு வழிபடுதல்)
சுதந்திரம்  (விடுதலை)
வாகனம்  (ஊர்தி)
 வருடம்  (ஆண்டு)
பட்சி  (பறவை)
சங்கதி  (செய்தி)
வாசனை  (மணம்)
விவாகம்  (திருமணம்)
பண்டிகை  (திருவிழா)
கேணி  (கிணறு)
கடுதாசி  (கடிதம்)
ஆஸ்பத்திரி  (மருத்துவமனை)
மகசூல்  (விளைவு)
ஜமக்காளம்  (விரிப்பு)
தபால்  (அஞ்சல்)
தயார்  (ஏற்பாடு)
புகார்  (முறையீடு)
வக்கீல்  (வழக்குரைஞர்)
பந்தயம்  (பணயம்)
அசல்  (மூலம்)
ஆசாமி  (ஆள்)
இலாகா  (துறை)
சந்தா (உறுப்பினர் கட்டணம்)
மைதானம்  (திடல்)
சன்னல்  (காலதர்)
பந்தோபஸ்து  (பாதுகாப்பு)
சிபாரிசு  (பரிந்துரை)
கோர்ட்  (நீதி மன்றம்)
சிப்பாய்  (போர்வீரன்)
பாக்கி  (மிச்சம்)
வாய்தா  (நிலவரி)
ஏராளம்  (மிகுதி)
நபர்  (ஆள்)

டிஸ்கி..
ஒன்னுமில்ல... ஒரே சினிமா பதிவுகளா எழுதி எனக்கும் போரடிச்சி போச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு...

-------------------------------XXXXXXXXXXXXXXXXXXXX---------------------------------

Monday, 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.




Friday, 13 September 2013

சீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...?



      ' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...?

அண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் ..? தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....?

அப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என  வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று?  இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..?

விஜயலட்சுமினு ஒரு பொண்ணு,"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா?. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது," த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் " என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.

அதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா...?  நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா?. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே..! மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு "வீரமங்கை வேலுநாச்சியார்"  பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....

சரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. " வீழ்ந்து விடாத வீரம்....  மண்டியிடாத மானம் ".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..

அதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..?.

உங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்(!!!) கண்ணியம் காத்தவர் காளிமுத்து. "கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது.." போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)


போதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்தான்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்துக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..

சரி வேறென்ன...? பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... ? இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..


ஓஹோ...  கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...? அதான..?

" இல்ல..."

"பின்ன..எதுக்குத்தான்யா வந்த ?"

"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்."

"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்."




Friday, 16 August 2013

வெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா...?

(எந்திரனையும் விஸ்வரூபத்தையும் ஒண்ணா கலக்கி,நடுவுல கொஞ்சம் தசாவரதத்தை மிக்ஸ் பண்ணி, சைடுல லைட்டா அந்நியனை சொருகி, மேல அப்படியே ரமணாவை தூவி, புதுசா படம் எடுப்பதைப் பற்றி தீவிர சிந்தனையில் இளைய தளபதி.) 

முதல்லே சொல்லிடுறேன் விஜய்க்கும் நமக்கும் எந்த வாய்க்கா தகராறும் கிடையாது. படம் வெளிவந்து அடுத்த நாளே இணையத்தில் ரிலீஸ் ஆகும் இன்றைய சூழலில், துப்பாக்கியை இரண்டுமுறை தியேட்டரில் பார்த்தவன். ஒரு விதத்தில் நானும் விஜய் ரசிகன்தான். அவரின் நல்ல படங்களை மனதார பாராட்டும் ரசிகன்...

ஆக-15 தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன். ஆனால் 23ஆம் தேதி என எங்கேயோ படித்தேன். இப்போ விஜய் உண்ணாவிரதமெல்லாம் வேற இருக்க போறாராம்.(அப்பாடா...இத வச்சி இன்னும் அஞ்சு பதிவு தேத்திடனும் ) சரி..நம்ம விசயத்துக்கு வருவோம்.

தலைவா படத்தை பார்த்தவர்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களில் இயக்குனர் விஜய்யையும், நடிகர் விஜய்யையும் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குனர் சறுக்கி இருக்கலாம்.. ஹீரோ சொதப்பியிருக்கலாம்... ஆனால் தயாரிப்பாளர்..?

அவரைப்பத்தி யாராவது யோசிச்சிப் பாத்தீங்களாயா...?

பாவம்.. இவங்க அடிச்ச கூத்துல அந்த மனுஷன் எப்படி இருக்கிறாரோனு  நினைக்கும் போதுதான், அவரின் அறிக்கை வந்திருக்கு.தலைவா படம் வெளிவரவில்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என அறிக்கை விட்டுருக்கிறார்.ஆனால் அப்படி ஆவதற்கு வாய்ப்பில்லை.விஜய் சம்பளத்தில் பாதி திருப்பிக் கொடுத்தாலே போதும்.ஓரளவு சரிகட்டிவிடுவார்.

அதேவேளையில், தமிழ் நாட்டில் படம் ரிலீஸ் ஆகவில்லையே தவிர உலகம் முழுவதும் ரிலீசாகி படம் பிய்த்துக்கொண்டு 'ஓடு'கிறது அல்லவா...!

கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் தலைவாவின் வசூலைப் பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. முகநூளில் இதற்கென்று தனி பேஜ் உருவாக்கி நூல் நூலாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதாவது பரவாயில்லீங்ண்ணா. நம்ம இளைய தளபதி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் பாருங்க....

அதாவது ''நான் நடித்து எந்த படம் வந்தாலும்,அது நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்வதில்லை. ஆனால், தலைவா படத்தை மற்ற நாடுகளில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள் சந்தோஷத்தை அளிப்பதாக உள்ளது.'' (ஆய்...ஏ..ச்சூ...சிரிக்கப்படாது..என்ன சின்னப்புள்ளத்தனமா...)

ஆத்தா கோபத்துக்கு இதுதான் காரணமா..!?
அப்புறம்தான் தெரிஞ்சது... வெளிநாட்டு ரசிகர்கள் ஒன்னு சொல்ல, அத நம்ம விஜய் வேறு மாதிரியா புரிஞ்சியிருக்கிறாருனு.

ஆக்சுவலா என்ன நடந்ததுனா......

(அலைபேசியில்...)

ஒரு ரசிகர்:  தியேட்டர்ல உட்கார முடியிலீங்ண்ணா.  (செம கடி)

         விஜய்:  அப்போ என் டான்சை பாத்து தியேட்டரே எழுந்து ஆடியிருக்குனு சொல்றீங்க..! தேங் யூ..தேங் யூ.

ஒரு ரசிகர்: மூணு மணிநேரம் போனதே தெரியிலீங்ண்ணா ( தூங்கிட்டேன்)

         விஜய்: எனக்கு தெரியும். படம் செம விருவிருப்பா இருக்கும்னு... ஆங்..ரொம்ப நன்றிங்ண்ணா...

ஒரு ரசிகர்:  பாப்கார்ன், பப்ஸ், டீ, காபி சேல்ஸ் அபாரம் ( மொத்த கூட்டமும் வெளியதான நின்னது)

         விஜய்:   புரியுது... புரியுது... இதுவரை எந்தப்படத்துக்கும் வராத கூட்டம்னு சொல்றீங்க...
தேங்ஸ்ங்ண்ணா

ஒரு ரசிகர்:  சோல்டரை குலுக்கி ஒரு டான்ஸ் ஸ்டெப் வரும் பாருங்க..செம கிளாப்ஸ்(சாம் ஆண்டர்சன்..)

          விஜய்: என்னை ரொம்ப புகழாதீங்க... ஆக்சுவலா அது நானே கொரியோகிராஃபி பண்ணினது. இது வரையில நான் போட்ட ஸ்டெப்ஸ்ல இதுதான் பெஸ்ட்...

ஒரு ரசிகர்: இந்த படம் நாயகன்,பாட்சா ,தேவர் மகன்,பம்பாய் , தளபதி....

        விஜய்: போதும்..போதும்...எனாஃப்...எனாஃப். இதுக்குமேல ஒரு வார்த்தை சொல்லாதிங்க ...

ஒரு ரசிகர்: இல்லீங்ண்ணா..அது வந்து...  

      விஜய்: வேணாம்..வேணாம்.இந்தப் படத்தையெல்லாம் விட தலைவா சூப்பரா இருக்குனு சொல்லவாறீங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி.. போதும்...போதும்...

ஒரு ரசிகர்: ங்ண்ணா.. போனை வச்சிடீங்களா...அடச்சே...அதையெல்லாம் எப்படி அட்டக்காப்பி அடிக்க மனசு வந்ததுனு கேக்கலாம்னு பாத்தேன்.அதுக்குள்ளே வச்சிட்டாரே..

- இதுதாங்க நடந்தது...!

தமிழ்நாட்டின் 'தலையாயப் பிரச்சனை'யில் முதல்வர் தலையிட்டு தீர்த்து வைக்கும்படி வேண்டும் 'எதிர்கால இந்தியா'
ரி அடுத்த முக்கியமான மேட்டருக்கு வருவோம்.வெளிநாடுகளில் எந்திரன் வசூலையே தலைவா மிஞ்சி -விட்டது என தகவல் வருகிறதே உண்மையா... ? அது உண்மைதாங்கண்ணா(அணில் ரசிகர்களே சந்தோசமா.. ). ஆனால் அதைவைத்து படத்துக்கு பில்டப் கொடுக்கிறது கொஞ்சம் ஓவர்ங்ண்ணா.. அது எப்படினு சொல்றேன்..

இது தலைவா படத்திற்காக சொல்லவில்லை.. பொதுவாக வெளிநாடுகளில் வரும் வசூலை வைத்து எந்தப் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்க முடியாது. ஏன்னா, எந்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆனாலும் முதல் வாரக்காட்சிகள் ரிசர்வேசனில் ஹவுஸ்ஃபுல்லாகி விடும். பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் என்பதே இது போன்ற புதுப்படங்கள் வரும்போதுதான். அந்தப்படம் படுமொக்கை என்றாலும் பிளாக்பஸ்டர் மூவி என்றாலும் எல்லோரும் ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்.

குறிப்பாக சிங்கையை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒரு டிக்கெட்டின் விலை $15. இந்திய ரூபாயின் மதிப்பு 700. அங்கிருந்து பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாக தெரியும். ஆனால் இங்கு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் பணம். மதுரை முத்து,ரோபோ சங்கர் வகையறாக்களை அழைத்து வந்து நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு  $100, $150 என டிக்கெட் இருக்கும்போது, அதையே வாங்கிப் பார்க்கும் நம் மக்களுக்கு 15 டாலர் ஒன்றும் பெரிய விசயமில்லை.

தலைவா படம் ரிசர்வேசன் இருக்கிறதா என காலையில் விசாரிக்கும் போது, இன்னும் முடிவாகவில்லை என சொன்னார்கள். மாலை போய் கேட்டபோது நான்கு நாட்களுக்கு  ஹவுஸ்புல்.  சிங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்க்கு காரணம் அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை.

படம் புதன்கிழமை நைட்டே இங்க ரிலீஸ். நைட்டு 8 மணியிலிருந்து 10மணி,12 மணி, 3 மணி என தொடர்ந்து ஷோ. அடுத்தநாள் ஹரிராயா, அதற்கடுத்து நேசனல் டே ,சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை தினங்களில் இரவு விடிய விடிய காட்சி உண்டு. அப்படியென்றால் நான்கு நாட்களில் எத்தனைக் காட்சி ஓட்டியிருப்பார்கள் என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

TOP 5 All Time Kollywood Opening Weekend in Malaysia & Singapore..

1.Thalaivaa -4.2 crore

2.Endhiran -4 crore

3.Singam 2 -3.8 crore

4.Thuppaki -3.5 crore

5.Nanban -3 crore

இப்படியொரு தகவலை முகநூளில் Vijai Fans Club வெளியிட்டிருந்தார்கள். இது உண்மைதான்.முதல் நான்கு நாட்களுக்கான வசூல் இதுவாக இருக்கலாம். ஆனால் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதுன்னு சொல்றது கொஞ்சம் ஓவருங்ண்ணா... அது எப்படினா....
.
இப்போ ஒரு ஷோவை எடுத்துக்கிங்க...

மொத்த 1200 சீட்டுன்னு வச்சிக்குங்க... 1200X $15 = $18,000. அதாவது எந்திரன் வெளியான போது இந்திய ரூபாய் மதிப்பு படி $18,000 X 35  =₹6,30,000 ( ஒரு ஷோ வசூல்)

அதே தியேட்டர்ல  தலைவா படத்துக்கு இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு படி  $18000 X 48 = ₹8,64,000 (ஒரு ஷோ வசூல்)

ஆக எந்திரனையே தலைவா முந்திவிட்டதுனு சொன்னா நீங்க நம்பலாம். ஆனா நாங்க நம்பமாட்டோங்ண்ணா.. அதே மாதிரிதான் அமெரிக்காவிலும். எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் வசூல் இப்படித்தான் இருக்கும். இதில் மாற்றமிருக்காது.ஆனால் இந்திய ரூபாயில் கணக்கிடும்போது அன்றைய Exchange rate -க்கு அதிகமாகக் காண்பிக்கும்.

இது பொதுவாக சொல்லப்பட்ட விஷயம்.. வெளிநாடுகளின் புதிதாக வெளிவரும் படங்களின் ஓபனிங் வசூல் பழைய படங்களின் சாதனைகளை முறியடிப்பது இப்படித்தான்.ஆனால் சிவாஜியும் எந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..?
                  
கார்த்திக் என்கிற நண்பர் பின்னூட்டத்தில் அளித்த லிங்க்லிருந்து பெறப்பட்டது இந்த தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் டாப் 20 படங்களின் வசூல் இது. (MYR = Malaysian Ringgit ). 

 (நன்றி - ரசிகன் karthik)

இது தலைவா ரிலீசுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்றாலும் துப்பாக்கியை விடவா வசூல் மழை பொழிந்துவிடப்போகிறது தலைவா..?  இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற...!  அசைக்க முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறது எந்திரன்..!


Friday, 2 August 2013

பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

 (கடந்த பதிவின் தொடர்ச்சி...)
ங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர்.

பிகாபே பதிவர்: ஹி... ஹி...என்ன சீனு இந்தப்பக்கம்...?

சீனு : சும்மா காபிபேஸ்ட்.. ச்சே...காபி சாப்பிட்டு போவலாம்னு வந்தேண்ணே..  

பிகாபே பதிவர்: ஏதோ காப்பி பேஸ்டுனு காதுல விழுந்துச்சி...

சீனு :  (விழுந்துடுச்சா..) பேஸ்ட் வாங்கிட்டு அப்படியே காப்பி குடிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. இதைதான் சுருக்கி சொல்லிட்டேன்..

பிகாபே பதிவர்: காதல் கடித போட்டியெல்லாம் வக்கிறீங்க. என்னை கூப்பிட மாட்டீங்களா...

சீனு : நீங்க மூக்கு சிந்துற கேப்புல மூணு பதிவு போடுற ஆளு...  டிக்கெட் கவுண்டர எட்டிப்பாத்தே எட்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுற ஆளு...உங்களைபோயி எப்படிண்ணே... நீங்க 'மலை'.. நாங்க சும்மா  மடு...

பிகாபே பதிவர்: சாரி சீனு.எனக்கு புகழ்ச்சி புடிக்காது.என்னைப்பத்தி ஏதாவது புகழ்ந்து சொல்லனும்னா அதை அப்படியே ஒரு பதிவா போட்டுடுங்க..ஹி... ஹி.. அப்புறம் என்னை யாருமே கூப்பிடாதால நானே என்னை கூப்பிட்டு  காதல் கவிதை எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது சொந்தமா எழுதணுமாமே..அந்த ஒரு காரணத்துக்காக விட்டுட்டேன்.

சீனு :அதனால என்னாண்ணே இப்ப சொல்லுங்க...

பிகாபே பதிவர்: (ச்சே..வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேனே..) சரி...நீங்க கேக்கிறதால என் கற்பனையில் ஊறினத கக்குறேன்... பட் என் கவிதையை பாத்துட்டு ரொம்ப புகழக் கூடாது. ..ஏன்னா எனக்கு புகழ்ச்சி புடிக்காது...

"கொடியிடை விளைவது கனி...
இந்த கனியிடை விளைவது சுவை....
அந்த சுகம் பெற நமக்கென்ன குறை...
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்.."
எப்படி என் வார்த்தை வீச்சு....?

சீனு : அண்ணே இது 'அழகிய தமிழ் மகள் இவள்' பாட்ல வர்ற சரணம்ண்ணே... 

பிகாபே பதிவர்: என்னது முன்னாடி யாரோ எழுதிட்டாங்களா..? ச்சே..நாம என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்..? சரி அடுத்தத கேளுங்க..அசந்துடுவீங்க.

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்....
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்...
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே...

சீனு : அண்ணே இது 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில வர்ற பாட்டுண்ணே..கண்ணதாசன் எழுதினது.


பிகாபே பதிவர்: என்னது இதையும் எழுதிட்டாங்களா.... என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம் சீனு... அப்பப்போ எனக்கு தோணுறத அப்படியே ஒரு பேப்பர்ல கிறுக்கி தூக்கிப் போட்டுடுவேன். அதை எடுத்து இவனுக சினிமாவில பாட்டா போட்டுறாங்க. சரி இது கனநேரத்தில் கற்பனையில் உதித்தது ....

" கை வீசிடும் தென்றல்... கண் மூடிடும் மின்னல்...
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ..!
பண்பாடிடும் சந்தம்... உன் நாவினில் சிந்தும்....
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ...!

சீனு : ' மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி...தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..  '

பிகாபே பதிவர்: (கோபத்துடன்..) சீனு.. இது எப்படி உங்களுக்கு தெரியும்...?

சீனு : சும்மா வெறுப்பேத்தாதிங்கண்ணே..இது உலகத்துக்கே தெரியும்...

பிகாபே பதிவர்:   என்னது அதுக்குள்ளே வேர்ல்ட் முழுக்க ரீச் ஆச்சா...? இப்படித்தான் சீனு நான் இன்னிக்கி என்ன பதிவு போடப் போறேனோ அதை ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படியோ தெரிஞ்சிகிட்டு பத்திரிக்கையில போட்டுடுறாங்க... அதுவும் ஒரு எழுத்து கூட மாறாம. கடைசில என்னை காப்பி பேஸ்ட் பதிவர்னு இந்த உலகம் சொல்லது. ச்சே..என்ன மாதிரியான உலகத்தில வாழ்றோம்..?    

சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...

பிகாபே பதிவர்: சரி சீனு...இதுதான் பைனல் பீஸ்... இத எங்கேயும் கேட்டிருக்க முடியாது.. இப்ப ஏன் கற்பனை குதிரைய தட்டி விடறேன் பார்..

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்...
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே...
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக..
கண்கள் கலங்கி நானும் ஏங்க மழையின் சாரல் என்னைத் தாக்க..
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க..."

சீனு :   இதைத்தான் எதிர்பார்த்தேன்...அடடடா.. வரிக்குவரி சிக்சர்...பின்னிட்டீங்க... அனேகமா உங்களுக்குதான் முதல் பரிசு..

பிகாபே பதிவர் : சாரி சீனு.எனக்கு...........

சீனு : புகழ்ச்சி புடிக்காதுனு சொல்ல வறீங்க. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்....

( சீனு  அங்கிருந்து புறப்பட்டவுடன் ......)

பிகாபே பதிவர்: அப்பாடா நல்லவேளை.இது " யாரடி நீ மோகினி" படத்தில வர்ற பாட்டுனு கண்டுபிடிக்கல. ச்சே...ஒரு காப்பி பேஸ்ட் பதிவரா இருக்கிறது எவ்வளவு சிரமம்..!




எழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

நம்ம திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் போட்டி வச்சாலும் வச்சார்.. நிறைய பேர் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா எழுதி தள்ளிட்டாங்க.. இருந்தாலும் பாருங்க  நம்ம சீனு ஏனோ முழு திருப்தி ஆகல... இந்த தீபாவளி பொங்கலுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத சினிமா நடிகைங்ககிட்ட போய் பொங்கல் கொண்டாடுன அனுபவத்தை சொல்லுங்கன்னு டிவிகாரங்க பேட்டி எடுத்து,டிஆர்பியை ஏத்துற மாதிரி நாமளும் ஏதாவது செய்யனும்னு என்கிட்டே வந்து கேட்டப்போ,முதலில் எனக்கு எதுவுமே தோனல.

அப்புறம்தான் எனக்கு எழுச்சித் தலைவி பேரவை ஞாபகம் வந்திச்சி. ஆனா எழுச்சித் தலைவி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்குனு ரொம்ப பிசியா இருக்கிறதால....(சரி..சரி..இதுக்கெல்லாம் லாங்குவேஜ் முக்கியமானு கேக்க வர்றது புரியுது.ஆனாலும் பாருங்க தேசிய அளவில கட்சியின் வேர் அடிஆழம் வரையில பாயனும்னா இது போல சமூக சேவைகள் செய்துதானே ஆகணும்)

பல பிசியான ஷெட்யூல்களுக்கு மத்தியில நம்ம பேரவை வேண்டி விரும்பி கேட்டுகிட்டதால இளைஞர்களின் 'எழுச்சி'த்தலைவி,வருங்கால பாரதம், மானமிகு செல்வி பாபிலோனா அவர்களை சந்திக்க அனுமதி கிட்டியது. இனி சீனுவாச்சு...தலைவியாச்சு...
சீனு : வணக்கம் மேடம். (நேரடியாக விசயத்திற்கு வருகிறார்) காதல் கடிதங்கள் என்கிற தலைப்பில ஒரு போட்டி வச்சிருக்கோம். உங்களோட அனுபவங்களை என்கிட்டே பகிர்ந்துகிட்டீங்கனா உங்களையும் எங்க போட்டியில சேத்துப்போம்.

எழுச்சித் தலைவி: எக்ஸ்பீரியன்ஸ்தான ...? எனுக்கு நிறையா இருக்குது. இந்த காதல்ங்கிறது ரெண்டு பேரும் ஒன்னா கட்டிப்.....

சீனு : மேடம்..மேடம் ..நான் சொல்றது வேற...ஐ மீன் காதல்... அதாவது ஃபீலிங்ஸ்... 

எ.த:  ஓ அதுவா... (உதட்டை சுழிக்கிறார்) ஆ...ஆ.... ஏய்...ம்ம்..... . இந்த ஃபீலிங்ஸ்தான சீனு .?

சீனு : அந்த ஃபீலிங் இல்ல மேடம்..இது வேற.அப்படியே அடி வயித்திலேருந்து வரணும்..

எ.த:  புரிஞ்சி போச்சி.. ச்சீ... நாட்டி...

சீனு : மேடம் தப்பு  தப்பா புரிஞ்சிக்கக் கூடாது.. இந்த அன்பு, பாசம், நேசம்னு சொல்வாங்கல...அதே மாதிரிதான் காதல்...அதாவது லவ்...பியார்...

எ.த: சீனு என்னை  கன்பியூஸ் பண்ணாதிங்க ..  லவ்வுனா ஆம்பளையும் பொம்பளையும் பண்ணுவாங்களே அதான...?

சீனு :அதேதான். வெல்டன். (முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு)..இப்ப சொல்லுங்க...எங்க பாத்தீங்க அவர....? எப்படி உங்க காதல சொன்னீங்க....? அப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சி..? 

எ.த: மொகத்த எல்லாம் யார் பாக்குறா சீனு.. இருட்டு அறை ..லைட்டா வெளிச்சம் இருக்கும். பேச வேற கூடாதாம். ஸ்டார்ட் கேமரா ஆக்சன்-னு சொன்னவுடனே ஆரம்பிக்கணும்...கட்-னு சொன்னவுடனே முடிக்கணும்..  

சீனு :  ஆ...ஆ...அய்யோ...அம்மா... (எங்கேயோ ரேடியாவில் 'தென்பாண்டி சீமையில..தேரோடும் வீதியில...' பாடல் ஒலிக்கிறது..)

எ.த: என்னாச்சி சீனு.. நீங்க ரொம்ப ஃபீலிங்கா ஆயிட்டா...?

சீனு : இல்ல உங்க கிட்ட கேட்டா விதவிதமா அனுபவங்கள் கிடைக்கும்னு அனுப்பிவிட்ட ஆள் மட்டும் இப்ப என் கையில கிடைச்சா....

ங்கிருந்து ஒரு வழியா தப்பித்து வெளியே வர எதிரே 'மிரட்சித் தலைவி' நமீதா வருகிறார். "ஏதாவது பாக்கக் கூடாதத பாத்தது மாதிரி மச்சான்ஸ் சீனு ரொம்ப பதட்டமா இருக்குது.." என நமீதா வினவ , எழுச்சித் தலைவி யிடம் சிக்கி சின்னாபின்னமான கதையை சொல்கிறார்.

நமீதா : காதல் அனுபவம் தானே.. கவலைப் படாத சீனு..நான் கவிதை சொல்லுது......

சீனு. : நீங்களா..சரி...சொல்லுது...சொல்லுது...

நமீதா :
கவிதை சொல்லுது நானு..
கேக்குது மச்சான்ஸ் சீனு..

நானு இஸ்கூல் படிக்குது..-அங்க 
பத்து மச்சான்ஸ் இருக்குது.

நாலு மச்சான்ஸ் என்ன பாக்குது -அதுல
மூணு மச்சான்ஸ் லெட்டர் கொடுக்குது.

ரெண்டு மச்சான்ஸ் காதல் சொல்லுது 
ஒரு மச்சான்ஸ் கடன் கேக்குது.

கடன் கேட்ட மச்சான  கல்லால் அடிக்குது..
காரு வச்சிருந்த மச்சான்ஸ லவ் பண்ணுது. 

ஊரு சுத்துது...
வாங்கி துண்ணுது...
என்ஜாய் பண்ணுது..
மச்சான்ஸ் பர்சு காலியாவுது.  

காரை விக்குது...
வீட்டை விக்குது...
தாடி வளக்குது-கடைசில
மச்சான்ஸ் பிச்சை எடுக்குது..

நானு ஆக்ட்டு குடுக்குது...
இப்போ ஆள தேடுது..

நானு சீனு பாக்குது..
சீனு என்னை பாக்குது...

சீனு. : ஐயோ....ஞான் ஓடிப்போவுது....

அங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர். 

( தொடரும்....அடுத்தப் பதிவில்...)
 

Monday, 29 July 2013

சீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்சும்.. (சும்மா அடிச்சு விடுவோம்..1)

 ம்ம செந்தப்ளர் சீமான் அண்ணாச்சி தமிழ் கூறும் நல்லுலகே பெருமைப்படத்தக்க ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுருக்கிறார். அது என்னான்னு சொன்ன உடனையே எல்லோரும் கைதட்டி ஆதரவு தெரிவித்து தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாத்தனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.

அதாவது "தோற்றோர் இயல்" எனும் தமிழ் சொல்லே "Tutorial" என்னும் ஆங்கில சொல்லாக மாறி இருக்கிறது. இதுதான் அந்த அரிய கண்டுபிடிப்பு....சரி தட்டினது போதும்.. அடுத்த மேட்டருக்கு வருவோம்.(அப்போ ' TUTOR ' என்கிற சொல் ' தோற்றார் ' என்கிற சொல்லிலிருந்து வந்ததா என கேள்வி எல்லாம் எழுப்பக் கூடாது.) இதையடுத்து அண்ணனின் அடுத்த ஆராய்ச்சியைப் பற்றி விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்கள் இதோ...

FACIAL -  பேசா இயல் ( அதாவது இது போடும்போது யாரும் பேசாமல் இருப்பதால்)

BACTERIAL  - பாக்க முடியா இயல்...

PRINCIPAL -பிரிச்சி மேய்ஞ்ச ஆள்.(இதுவே காலப்போக்கில் பிரிஞ்ச ஆள் என மாறி கடைசியில் பிரின்சிபால் ஆனது)

VICTORY -வெற்றியைத்தான் அப்படி விரிச்சி சொல்றானுவ....
  
DONKEY -தாங்கி  ( பொதி சுமக்கும்போது தாங்கி தாங்கி நடப்பதால் தமிழில் தாங்கி என அழைக்கப்பட்டு பிற்பாடு ஆங்கிலத்தில் டாங்கி என மாறியது.)

MONKEY - மரத்துக்கு மரம் தொங்குவதால் தமிழில் 'மர தொங்கி' என்பது பின்பு ஆங்கிலத்தில் மங்கி ஆனது. 

-இன்னும் அண்ணனின் ஆராய்ச்சி தீவிரமாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
 
தாவது  பரவாயில்ல.. நம்ம ஃபரூக் அப்துல்லா அதைவிட அருமையான மேட்டர கண்டுபிடிச்சிருக்கார். அவர் என்ன சொல்றார்னா ஒரு ரூபாய் இருந்தாலே போதும் நம் இந்தியாவில் வயிறு நிறைய சாப்பிடலா ங்கிறார்.  இது இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணினாலும் ஏன் அப்படி சொன்னார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாக்கணும்..

சரி இதப்பத்தி நம்ம விஐபி எல்லாம் என்ன சொல்றாங்கன்னு கேக்குரதுக்காக ஒரு ரவுண்டு வந்தேன்.

 ஜெயா:.இதில் ஒன்றும் ஆச்சர்யம் இருப்பதாக எனக்குப் படவில்லை. என் ஆணைப்படி... மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நான் பிறகு என் ஆணைப்படி... எப்படி ஐந்தே வருடத்தில் அறுபது கோடிக்கு மேல் சொத்து சேர்க்க முடிந்தது என கேள்வி கேட்ட கோர்ட்டையே என் ஆணைப்படி நான் வாய்தா மேல வாய்தா வாங்கி இழுத்தடிக்க வில்லையா...? பிறகு என் ஆணைப்படி....

கேப்டன்: (நாக்கை நான்காக மடிக்கிறார்.)  எவண்டா சொன்னது ங்கொய்யால. ஒரு ரூபாயை வச்சு சரக்குக்கு சைடு டிஷ் கூட வாங்க முடியாதுடா ங்கொம்மால. இதுல புல் மீல்ஸ் சாப்பிட முடியுமா.. தமிழ் நாட்டுல மொத்தம் 8658 சாப்பாடு கடை இருக்கு. அதுல நான் வெஜ் 6854. வெஜ்....................(குதிச்சிடுடா கைப்புள்ள...) 

கமல்:ஒரு ரூபாய் என்பது மிகச்சிறிய தொகையாக இருந்தபோதிலும் அது நம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், அனைவருக்கும் ஒருவேளை உணவு கிடைப்பதரிதான இந்த அசாதாரண சூழலில் ஒரு ரூபாய்க்கான  உணவை கற்பனையாக வடிக்கும் பட்சத்தில்,அது உணவுத் தேவையை எந்த அளவுக்கு நிறைவு செய்யும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய காலகட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து யோசிக்க வேண்டியது  இங்கே மிக கட்டாயமாகிறது. இன்னும் சொல்லப்போனால்.... (என்னது இன்னுமா...? )

 கவுண்டமணி செந்தில்

'அண்ணே ... ஒரு ரூவாய்க்கு சோறு தர்றாங்கலாமே.. நான் வேணா வாங்கியாரவாண்ணே...? '

'யாரு..நீயி  ..? டேய் கோமுட்டித்தலையா நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்... நான் ஒரு ரூவா கொடுப்பேன்.நீ வாங்கி தின்னுட்டு கீழ கெடக்கிற ஒரே ஒரு பருக்கையை எடுத்து வந்து ஒரு ரூவாய்க்கு இதா
ண்ணே கொடுத்தாங்கன்னு சொல்லுவ.. இந்த டகால்டில்லாம் என்கிட்டே நடக்காது மகனே . ஓடிப்போயிடு நாயே...'

கடைசியா நம்ம தலகிட்ட போனோம்...

ஒரு  மணிநேரமா எப்படி கொடைஞ்சும் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரல. ஆனா கண்ணு மட்டும் சிவந்து போறத வச்சி தல ரொம்ப கோபமா இருக்கிறத உணர முடிஞ்சது. ஒரு கட்டத்துக்கு மேல பொறுமை இழந்து...

'இந்தாயா ஒரு ரூபாய்...இதுல போயி ஒரு புல் மீல்ஸ் வாங்கி வா...'

'ஒரு ரூபாய்க்கு எங்க தல புல் மீல்ஸ் கிடைக்கும்..?'

'தெரியுதுல...பின்ன எதுக்கு இங்க வந்து கேக்குற....?'

'இல்ல..அந்த பாரூக்..............'

'ஆமாயா....அந்த ஆளுதான் சொன்னான்.. டெயிலி ஒரு வேலையும் செய்யாம வெட்டியா சோறு திங்கிறேன்ல. அந்த வயித்தெரிச்சல்ல குத்திக் காமிக்கிரான்யா அந்த ஆளு.. உண்மை தெரிஞ்சிடுச்சுல... கிளம்பு கிளம்பு ."

Saturday, 27 July 2013

உங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..?

     எப்படி பதிவு போட்டாலும் ஹிட்ஸ் ஆக மாட்டேங்குது. ஓட்டும் விழ மாட்டேங்குது. கமெண்ட்ஸ்-ம் கிடைக்கல. பாலோயர்ஸ்-ம் அதிகரிக்க மாட்டேங்குது. இப்படியே போனா நான் எப்போ பிரபல பதிவர் ஆவது என பீல் பன்றிங்களா....?

' பிரபல பதிவர் ஆவது எப்படி...? ' னு 'மிகப் பிரபலபல பதிவர்கள்' போட்ட பழைய பதிவை ஃபாலோ பண்ணியும் பாத்துட்டேன்.அப்பவும் பிரபல பதிவராக முடியலனு வருத்தப்படுறீங்களா...?

கவலையை விடுங்க. நீங்களும் பிரபல பதிவர்தான். அது எப்படி சாத்தியம்னு தர்க்க ரீதியா கேள்வி எழுப்பாம கீழே உள்ளத பாலோ பண்ணினா நீங்களும் பிரபலபல பதிவர்தான்...


1. பிரபல பதிவருக்கான முதல் தகுதி மத்தவங்க பதிவுல போயி கமெண்ட் போடக்கூடாது. அதிலும் இந்த புதுசா எழுத வர்றவங்க, ஒரு வருசத்துக்கு முன்னால எழுத ஆரமிச்சவுங்க.....இவுங்க  பதிவுல போயி கமெண்ட் போட்டீங்க.... அவ்வளவுதான். பிரபல பதிவருக்கான தகுதியை அடுத்த நொடியே  இழந்திருவீங்க.

2. சரி.. கமெண்டே போடலனா நம்மை எப்படி கண்டுக்குவாங்கனு கேட்பீங்களே...அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு. மிகப் பிரபலபல பதிவர்னு சொல்லிட்டு சிலர் இருப்பாங்க. அவுங்க பதிவுல போயி, அருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up  இப்படி ஏதாவது  ஒரு டெம்பிளேட் கமெண்ட் போட்டுட்டு வந்திடுங்க. ஸ்மைலி மட்டும் போட்டால் இன்னும் வசதி. பார்ரா.. மிகப் பிரபலபல பதிவர் போஸ்ட்ல மட்டும் கமெண்ட் போடுறாரு.. அதுவும் டெம்பிளேட் கமெண்ட்.அப்படினா இவரும்  பிரபல பதிவர்தான்யானு ஒரு இமேஜ் தானா வந்துடும்.


3.முக்கியமா உங்க பதிவில யாராவது கமெண்ட் போட்டா விழுந்தடிச்சி ரிப்ளை பண்ணக் கூடாது. அப்புறம் கமெண்டுக்கு அலையிறான்னு இமேஜ் உருவாகிடும்(பின்ன.. பிரபல பதிவர் ஆக வேண்டாமா ). அப்படியே பண்ணினாலும் குறிப்பிட்ட 'மிகப் பிரபலபல பதிவர்' போட்ட கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணிட்டு விட்டுடணும். 

4.முக்கியமா  'Comment moderation has been enabled ' இதை விட்டுடாதிங்க. கமெண்டே விழலனானும் இதை வச்சி மெயிண்டைன் பண்ணிக்கலாம். நிறைய கமெண்ட் விழுந்தும் அத ரிலீஸ் பண்ண டைம் இல்லாம பிசியா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம். ஒரு கமெண்ட் கூட விழலனா அனானியா ரெண்டு கமெண்ட் நாமே போட்டுக் கலாம்.

5.மொத்தமா பத்தே பதிவுதான் போட்டிருந்தாலும்(அதுல ஒன்பது காபி பேஸ்டா இருந்தாலும் ) 'எனது பத்தாவது பதிவு' அப்படின்னு ஒரு பதிவு போடுங்க. அதுல செண்டிமெண்டா சில மேட்டர சேக்கணும்.. பெத்தவங்க, வளத்தவங்க, வாத்தியார் மொத கொண்டு எல்லாருக்கும் ஒரு நன்றியை சொல்லிபோடனும். அப்படியே, நான் யாருக்குமே கமெண்ட் போட்டதில்லைனாலும் எனக்கு தொடர்ந்து கமெண்ட் போடுற உங்களுக்கு நான் என்ன செய்யபோறேன்னு கண் கலங்கிற மாதிரி ஒரு பத்தி சேத்து விடுங்க.

6. ' வலையுலகத்திலிருந்து விடைபெறுகிறேன் நண்பர்களே' அப்படின்னு திடீர்னு ஒரு பதிவு போடனும். ஒரே நாள்ல பிரபல பதிவர் ஆவதற்கு இதுதான் சிறந்த வழி.இதுவரையில வராதவங்க எல்லாம் வருவாங்க. கமெண்டு போடாதவங்க எல்லாம் போடுவாங்க... சீக்கிரமே வரணும், மறுபரிசீலனை செய்யனும்னு சொல்வாங்க. சில பேரு ஒருபடி மேலே போயி பதிவுலகத்திற்கே பேரிழப்புனு சொல்வாங்க. அதெல்லாம் பிரியத்தில சொல்றாங்கன்னு நினைக்கக் கூடாது.அப்பாடா எண்ணிக்கையில ஒன்னு கொறைஞ்சி போச்சு என்கிற சந்தோசத்திலதான்.

7. ஆனால் அடுத்த வாரமே ' மீண்டும் பதிவுலகில் நான்'  என இன்னொரு பதிவு போடனும். ( நைசா முன்னாடி போட்ட பதிவை அழிச்சிடனும்) . உடனே , வருக நண்பரே..மீண்டும் பதிவுலகத்திற்கு வந்ததற்கு நன்றி..... அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிங்க....இப்படி வரிசையா கமெண்ட் விழும்.  எல்லாம் சந்தோசத்தில போடுறாங்கனு நெனைப்பீங்க. அதுதான் இல்ல.. ' ங்கொய்யால  உடனே வந்துட்டான்யா..." இதைத்தான் அப்படி சொல்ல வர்றாங்க.




8.  எந்த பத்திரிக்கையாளரோ அல்லது எழுத்தாளரோ இணையத்தில் எழுதும் யாரையோ மறைமுகமா குறிப்பிட்டு சொன்னால், அவர் என்னைத்தான் சொன்னார்னு ஒரு பதிவு போடனும்.  

9. ஏதாவது ஒரு திரட்டியை திட்டி பதிவு போடனும். அந்த திரட்டி இல்லனா வலைப்பூவே இயங்காதானு கேள்வி கேக்கணும். இவ்வளவு போல்டா பதிவு போடுறார்னா இவர் கண்டிப்பா பிரபல பதிவர்தான்னு நினைப்பாங்க. ஆனா அடுத்த மாசமே நைசா அதே திரட்டில உங்க பதிவைகளை இணைச்சு விட்டுடணும்.

10. சமீபத்தில், முகநூளில் அதிக லைக் வாங்கிறவங்க பின்னால மாபியா கும்பல் இருக்குனு மனுஷ்ய புத்திரன் சொன்னவுட
ன், அஞ்சு பத்து லைக் வாங்கிறவன் கூட பொங்கி எழுந்தான். அப்பத்தான் எவன் எவன் தன்னை பேஸ்புக் பிரபலம்னு நினைச்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அதேப் போல பிளாக்கரைப் பத்தி யாராவது, எங்கேயாவது , ஏதாவது சொன்னா.. பொங்குற மொத ஆளு நீங்களா இருக்கணும்.

11. ஒரு பொண்ணோட மனச இன்னொரு பொண்ணுதான் புரிஞ்சுக்க முடியும் என்பது மாதிரி..பிரபல பதிவர் ஆவது எப்படிங்கிறது ஒரு பிரபல பதிவருக்குத்தான் தெரியும் என்கிற லாஜிக் படி, 'பிரபல பதிவர் ஆவது எப்படி' னு ஒரு பதிவ போட்டீங்கனா...


இந்த நாள் மட்டுமல்ல வருடத்தில் எல்லா நாட்களும் நீங்கள் பிரபல பதிவர்தான்.



Thursday, 25 July 2013

என் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... (தொடர் பதிவு)


சகோ.."காணாமல் போன கனவுகள்" ராஜி அவர்கள் முதல் கணினி அனுபவத்தைப் பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்து வைத்தார். அதற்காக இரண்டாவது ரவுண்டிலே நான் வருவேன் என எதிர்பார்க்கவில்லை.தொடர் பதிவுக்கு அழைத்த தமிழ்வாசி பிரகாசுக்கு கோடானுகோடி நன்றிகள் சொல்லி என் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

( கொஞ்சம் பெரிய பதிவு...உங்களின் பொறுமைக்கு நன்றி)

1993-ல திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில இஞ்சினியரிங் சேர்ந்தேன்.அதுக்கு முன்னால கம்ப்யூட்டரை கண்ணால கூட பாத்தது இல்ல.நகர்ப்புறங்களிலேயே அவ்வளவாக பயன்பாட்டுக்கு வராத கம்ப்யூட்டரை கிராமத்திலிருந்து வந்த எனக்கு எப்படி தெரியும்..?

முதல் வருசத்தில் ஃபோர்ட்டான் 77 என்கிற சப்ஜெக்ட்.அதன் மூலம்தான் எனக்கு கம்ப்யூட்டர் பரிச்சயம் ஆனது. அப்போதெல்லாம் MS-DOS மட்டுமே இருந்ததால்(அப்படித்தான் நெனைக்கிறேன்) இப்ப இருக்கிற மாதிரி கலர்ஃபுல் கவர்ச்சி எல்லாம் கிடையாது.இணையமும் கிடையாது. புரோக்ராம், AUTOCAD போன்ற மேல்மாடி சமாச்சாரங்களுக்கு மட்டுமே உபயோகப் படுத்துவதால் இயற்பியல் லேபில் உள்ளதுபோல் கம்ப்யூட்டரும் ஏதோ ஒரு இன்ஸ்ட்ருமென்ட்/எக்யுப்மென்ட் அவ்வளவுதான் .

எனக்கு கணிதம் கொஞ்சம் நல்லா வந்தாலும்( நம்பித்தான் ஆகணும்) இந்த கம்ப்யூட்டர் புரோக்ராம் என்றாலே கொஞ்சம் உதறல்தான். எங்க காலேஜ்ல ஆக்டகன்(Octagon) என்கிற மிகப்பெரிய கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. அப்பவே 500 கம்ப்யூட்டருக்கு மேல் இருக்கும்.ஆசியாவிலேயே இதுதான் ரொம்பப் பெருசுனு சொல்வாங்க. அங்கதான் ரெகுலரா எங்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடக்கும்.

தமிழ் மீடியம் என்பதால்,சேர்ந்த புதிதில் சாதாரணமாவே எல்லா வகுப்பிலேயும் பேந்தபேந்த முழிக்கும் எனக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்பது கண்ணை கட்டி காட்ல விட்டது போலதான்.அந்த பயத்தாலேயே முதல் ரெண்டு மூணு வகுப்பை கட்டடிச்சுட்டேன்.கூடவே இன்னும் ரெண்டு பேரும்(எங்க போனாலும் நமக்குனே இப்படி ஒரு செட் சேரும்). அதுக்குள்ளே எப்படி லாக்இன் செய்வது ,பேசிக் புரோகிராம் எழுவது எல்லாம் நடத்திட்டாங்க. அடுத்த கிளாசுக்கு நான் போனப்போ, என்னைத்தவிர எல்லோரும் ஏதோ டைப்பிகிட்டு இருந்தாங்க.எனக்கு ஒன்னுமே புரியில. இருந்தாலும் AC ரூம்..எதிர்ல தனி கம்ப்யூட்டர்...வேறு ஒரு உலகத்ல இருக்கிற ஃபீலிங்..!

நமக்கு எப்போதும் எதையாவது நோண்டிகிட்டு இருக்கணும். மெக்கானிகல் எஞ்சினியர்(!) இல்லையா..? அது ஒத்த பைசாவுக்கு பிரயோசம் இல்லன்னாலும் எதையாவது கழட்டி உள்ள என்ன இருக்குனு பாக்குற ஆர்வம். அப்படியொரு ஆர்வக் கோளாறுல ஒரு தப்பு செஞ்சுட்டேன்.

எனக்கு கம்ப்யூட்டரே ஆச்சர்யம் என்றால் அதைவிட பெரிய ஆச்சர்யம் மவுஸ். இது எப்படி டேபிள்ள வச்சு தேய்ச்சா ஸ்க்ரீன்ல வேலை செய்யுது...? என் மூளை பரபரன்னு வேலை செய்ய ஆரம்பிச்சது. உடனே திருப்பி பாத்தேன்.  உள்ள ஏதோ பால் சுத்திகிட்டு இருந்தது.  இந்த பால் சுத்தறதால தான் கம்ப்யூட்டரே வேலை செய்யுதுனு நெனச்சிட்டு எதையோ திருகி என்னவோ பண்ணிட்டேன் போல.பால் கையோட வந்துடிச்சி...! ஆகா இந்த பாலுக்கும் மவுசுக்கும் எதோ கனெக்சன் இருக்கு போல. இப்ப கட்டயிடுச்சி.அடுத்து என்ன பன்றதுனு தெரியாம முழிச்சிகிட்டு இருந்தேன்.

மத்தவிங்க எல்லாம் புரோகிராம் எழுதறதுல வந்த டவுட்ட கேட்கிறதுக்காக மாஸ்டரை அங்கயும் இங்கயும் கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. இப்போ நான் என்ன சொல்லி அவர கூப்பிடறதுனு தெரியாம முழிக்க,அதை மாஸ்டர் எப்படியோ நோட் பண்ணிட்டாரு. நான் ஏதோ ப்ரோக்ராம் எழுதுற சந்தேகத்தில உட்காந்திருக்கேனு வேகவேகமா என்கிட்டே வந்து, எஸ்...எனி டவுட்..? னு கேட்டுட்டு கீழ பாத்தாரு..அங்க ஒரு கையில மவுஸ்.. இன்னொரு கையில பால்.. அவ்வளவுதான்.. @#$&^&%#%^^&%&% ஸ்டுபிட்... #&*&*^^^%$%^%$#$%^^ இடியட்..  நல்லவேளை இங்கிலிஸ்ல திட்டினதால பொறுத்துகிட்டேன்.மவனே தமிழ்ல மட்டும் திட்டி இருந்தாரு........ அழுதிருப்பேன்.  :-(

ஆக்டகன் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.அதனால் எப்போ வேண்டுமானாலும் உள்ளே போய் பிராக்டிஸ் செய்யலாம். மொத வருஷம் பூரா, விழுந்த அரியரை கிளியர் பன்றதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு. இதுல எங்க பிராக்டிஸ் செய்யுறது..? ஒரு வருஷம் கழிச்சி போனா அவனவன் எங்கேயோ போய்கிட்டு இருந்தானுவ. இப்ப போயி எப்படி லாக்இன் பன்றதுன்னு கேக்க முடியுமா..சரி நாம தான் மெக்கானிகல் பிராஞ்ச் ஆச்சே. நமக்கு எதுக்கு கம்ப்யூட்டர்னு விட்டுடேன்.

ஆக்டகன் முன்பு நான்... வலப்பக்க படத்தில் இடமிருந்து வலமாக கீழே முதலில் உட்காந்திருக்கேன்.(1994 ல எடுத்தது)
ஆனா சில பக்கிக நைட்டு பத்து மணிக்கு நோட்டும் கையுமா கிளம்பி போவானுக. எங்கடா மாப்ள போறனு கேட்டா ஆக்டகன்னு சொல்லி வெறுப்பேத்துவானுவ.கடைசில வேற வழியில்லாம நானும் போக ஆரம்பிச்சி ட்டேன். போயி பிராக்டிஸ் பன்றதுக்கு தானேனு கேட்கிறீங்களா..அதுதான் இல்ல. அங்க ஒரு வாட்டர் கூலர் இருக்கும்.காலேஜ்லே அங்கதான் சில்ல்டு வாட்டர் கிடைக்கும். அப்படியே குருப்பா போயி தண்ணி குடிச்சிட்டு திரும்பி வந்துடுவோம்.

அதிலும் அந்த செக்யூரிட்டி இருக்கானே.உள்ள போறதுக்கு எல்லோரும் ஐடி கார்டு காமிச்சிட்டுதான் போகணும். நாங்க வந்தாலே,'தண்ணி குடிக்க தான வந்தீங்க.அதுக்கெல்லாம் ஐடிகார்டு தேவையில்ல.குடிச்சுட்டு போங்க'னு நக்கலடிப்பான்.

காலேஜ் முடிக்கிறப்போ,என்கிட்ட இருந்த அறிவுக்கும் திறமைக்கும் ஆஃப்ட்ரால் இந்த கேம்பஸ் இன்டர்வியூவ் -ல செலக்ட் பண்ணிதான் எனக்கு வேலை கொடுக்குனுமான்னு என்னை யாருமே எடுக்கல.அப்புறம் அம்பத்தூர் வந்து CNC பீல்டுல முட்டி மோதி செட்டிலானேன்..

ஆனா எந்த அளவுக்கு கணினியை வெறுக்க ஆரம்பிச்சேனோ,பின்பு அதைவிட அதிகமாக அதை காதலிக்க ஆரம்பித்தேன். சிங்கப்பூருக்கு தேர்வாகி விசா கூட வந்துட்டு. நான் கிளம்பு இரண்டு வாரம் இருக்கையில் செப்-11 தாக்குதல் நடத்தது( பில்லேடனுக்கே பொறுக்கல போல). அதனால கிளம்புற டேட் தள்ளிப் போயிட்டே இருந்தது. அந்த நேரத்தில ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்க ' MASTERCAM ' படிச்சேன். படிச்சி முடிச்சுட்டு நானே மாஸ்டரா ஆயிட்டேன். அப்ப தொட்டதுதான். இப்ப தூங்கிற,திங்கிற,குளிக்கிற நேரம் மட்டும்தான் கணினியை தொடல.

 அடுத்து என் முதல் மனைவியைப் பற்றி...

ணினி மீது அதீத காதல் ஏற்பட்டவுடன் எனக்குள்ள ஒரு வெறி(!?) என்னையறியாமலே பரவ ஆரம்பிச்சுட்டு. அது சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்கியாகனும் என்று. அந்த நேரத்தில நம்ம ஊரில் அது சாத்தியமில்லை என்பதால் சிங்கை வந்த பின்பு முதல் மாத சம்பளத்தில் கம்ப்யூட்டர் வாங்கியே தீருவது என முடிவு செய்தேன். பொதுவாக வெளிநாடு வருபவர்கள் முதலில் எஜென்ட்டுக்கு கொடுக்க வாங்கிய கடனை செட்டில் பண்ண முயற்சிப்பார்கள்..நானோ வீட்டில், 'மொத மாச சம்பளம் அனுப்ப முடியாது,எங்க கம்பெனியில வேலை செய்யுறவங்க எல்லோரும் சொந்தமா கம்ப்யூட்டர் வச்சிருக்கனுமாம். இல்லனா ஊருக்கு திருப்பி அனுப்பிடு வாங்கலாம்'னு ஒரு பொய்யை அடிச்சிவிட்டேன்.

2002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் சொந்தமாக வாங்கப்பட்டது.ஸ்பீக்கர்,பிரிண்டரோடு சேர்த்து 1200 டாலர் ஆனது.

என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் அப்படினு ரெண்டு நிகழ்வை சொல்லுவேன்.ஒன்னு,இரண்டு வருசத்துக்கு முன்னால என் மகன் பிறந்த அடுத்த நொடியில் நர்ஸ் அந்த பிஞ்சுப் பூவை என் கைகளில் தவழ விட்ட தருணம். இன்னொன்று சிங்கையில் உள்ள Sim Lim Square -ல் அந்த கடைக்காரன் என் முதல் கம்ப்யூட்டரைத் தூக்கி என் கையில் கொடுத்த தருணம்.

என் முதல் மனைவியுடன் நான்.... (2004 ல எடுத்தது  )
கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் என்கூட அது இருந்தது.WINDOWS -XP தான் இன்ஸ்டால் செய்திருந்தேன். கொஞ்சம் ஸ்லோ ஆனாலும் உடனே ஃபார்மட் செய்திடுவேன். எந்த நண்பனும் அதைத் தொட அனுமதி கிடையாது.அதில் தான் நான்கு வருடமாக MASTERCAM கிளாஸும் எடுத்தேன். பிறகு லேப்டாப் வாங்கியும் அதைத் தூக்கிப்போட மனசு வரல. வீடு மாறும் போது கூட அது எக்ஸ்ட்ரா வெயிட்டாக தெரியவில்லை.2008ல மானிட்டர் படுத்த படுக்கையா ஆயிட்டு. கடையில கொடுத்தா ஒன்னுமே பண்ண முடியாதுனு சொல்லிட்டான். கடைசில மனசே வறாம தூக்கிப் போட்டேன். அடுத்த சில மாதங்களில் பிரிண்டரும் வேலை செய்யவில்லை.சர்வீஸ் செய்யிற காசுக்கு புதுசா வாங்குங்க சார்னு அதே ஆளு கடுப்பேத்திட்டான் . ஆனா CPU மட்டும் ஓடிகிட்டு இருந்தது. பிறகு அதுவும் SMPS ,ஹார்ட் டிஸ்க்,CDROM  எல்லாம் வரிசையா புட்டுகிச்சி.

ஆனாலும் அதைத் தூக்கிப் போடாம உள்ளே உள்ள எல்லா பார்ட்ஸ்-யும் மாற்றி,இப்ப பிளாக் அதில்தான் எழுதிகிட்டு இருக்கேன். என் முதல் கம்ப்யூட்டரில் தற்போது என்னிடம் இருப்பது CPU வெளிப்புற ஃபிரேம் மட்டும்தான்.. :-(

தொடர் பதிவை கொஞ்சம் பொறுமையாக எழுதலாம்னா ,நாம அடுத்து அழைக்க நினைத்த நபர்களை வேறு யாராவது அழைத்து விடுவார்களோ என்கிற பரபரப்பு பதிவை அவசர அவசரமாக எழுத வைத்திருக்கிறது. அப்படியும் இருவரை ஏற்கனவே அழைத்து விட்டார்கள்.

தற்போது தொடர் பதிவு எழுத நான் அழைப்பது...

டெர்ரர் கும்மியில் ஒருகாலத்தில் செம கும்மு கும்மியவர், எந்த மொக்கையும் போடாமல் வரலாற்று நாயகர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் 'மாணவன்' சிம்பு அவர்களையும் ( சமீபத்தில்தான் தொலைபேசியில் உரையாடினோம்..)

சிங்கையில் இருக்கும் மற்றொரு நண்பர் சொற்"க்"குற்றம் ராவணன்

ஆரம்பத்தில் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய (தற்போது ஏனோ ஒதுங்கியிருக்கிறார்)  மனசாட்சி முத்தரசு 

நவரசமாக தொடர்ந்து எழுதிவரும் நண்பர்  பாலாவின்-பக்கங்கள் பாலா....

தமிழ் கூறும் வலையுலகில் இவர் அளவுக்கு நீ..ண்ட பதிவு யாரும் போடுவது கிடையாது. அவ்வளவு பெரிய பதிவாக  போடாமல் நூறு வார்த்தைக்குள் சுருக்கி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 'தினசிரி ஜோக்' Bagawanjee KA