Tuesday 22 November 2011

ஒரு 'சன் TV நேசனின்' புலம்பல்...

  
                           தமிழ் அகராதியில் 'அரட்டை' என்றால் வெட்டித்தனமாக வாயாடிக்கொண்டிருப்பது  என்று சொல்வார்கள்(@ நம்ம அகராதியில ....) அரட்டை அடிக்காதே என்று திட்டுவதும் உண்டு .ஆனால் இதை 'அர்த்தமுள்ள அரட்டை ' என்று தன் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் மாற்றிக்காட்டியவர்  விசு.
       சன் டிவி யில் பத்து வருடத்திற்கு மேல் TRP RATING ல் எக்குத்தப்பாக எகிறிப்போன நிகழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணிக்கு வந்தேமாதரம் பாடலோடு தொடங்கும்போது, சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை எல்லோரையும் TV க்கு முன்னால் கட்டிப்போட்டுவிடும் மேஜிக் இந்த நிகழ்ச்சிக்கு அப்போது இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
    டாக் ஷோ வில் ... தன் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக தன் Slang லே சொன்னால்தான் சொல்லவந்த செய்திக்கு உயிரும் உணர்வும் இருக்கும்... (ஒருவேளை இதனால்தான் கோபியின் "நீயா நானா"  'டாப்'பில் உள்ளது என்று நினைக்கிறேன்)
   இந்த நிகழ்ச்சியை விசு நடத்தும் போது, ரிகர்சல் செய்து நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.ஆனால் TV யில் பார்க்கும் போது அவ்வளவாக தெரியாது. சொல்லக்கூடிய சம்பவங்களும்  மிகைப்படுத்தப்படாமல் இருக்கும். அதிலும் குழந்தைகள் பேசும் போது,அந்த மழழைப்பேச்சும்,முகபாவமும் இன்னும் சுவாரஸ்யமாக  இருக்கும்.
         விசு சன் டிவி யிலிருந்து ஜெயா டிவிக்கு  மாறும்போது... 'பல கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது' என்று கலைஞரே அறிக்கை விடும் அளவுக்கு இந்த SHOW  'டாப்' ல் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
        இப்போது பல கை மாறி T. ராஜேந்தரிடம் ,குரங்கு கையில் சிக்கிய மாலை( ஒரு உவமைக்காகத்தான்  சொன்னேன் ..வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா  அடியேன் பொறுப்பல்ல...)போல் தவித்துக்கொண்டு இருக்கிறது. சினிமாவில்தான் இவர் இம்சை தாங்கமுடியலனா TV யிலயும் வந்து படுத்துகிறார் .
       அரட்டை அரங்கத்திற்கு என்று தனியாக ஒரு பாசை உள்ளது போல..."அய்யா...ஆ....நான் என்ன சொல்ல வரேன்கய்யா”...ஆ...., என்று “அய்யா..ஆ..”. பாசையில்தான் பேசவேண்டுமா  என்ன?..  அதிலும் ஒவ்வொரு வார்த்தைக்கும்?.. .ஆனால் இதை விசு தான் ஆரம்பித்து வைத்தார். ஒருவேளை இந்த பாசைத்தெரிந்தால்தான் சேர்த்துக்கொள்வார்கள் என்னமோ!!!!
   குழந்தைகளை வைத்து கடந்த இரண்டு மாதமாக அரட்டைஅரங்கம் ஒளிப்பரப்பாகிறது. சினிமாவில் மட்டும்தான் அழுதுக்கொண்டே 5 பக்க வசனத்தை மாடுலேஷன் கொஞ்சம் கூட குறையாமல் பேசுவார்கள்  .இதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார் T.R.


    "அய்யா..ஆ எங்க அம்மா பத்துபாத்திரம் தேய்ச்சி என்ன படிக்க வச்சிசியா...எங்க அப்பா...ஆ.. வேற ஒரு பொம்பலையோடு ஒடி போய்ட்டாருயா...  நான்...நைட் எல்லாம் கண்ணு முழிச்சி கஷ்டப்பட்டு படிசேன்யா...அஞ்சாவதுல எங்க ஸ்கூல்ல...(கொஞ்சம் ஹை பிட்சில் ) நான் முதல் மார்க் வாங்கினேன்யா...ஆ."..என்று அந்த சிறுமி போலியாக கதறும்போது....இந்த T .ராஜேந்தரை  ஏன் சிறுவர் வன் கொடுமைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போடக்கூடாது ?..என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.அதிலும் அவர் முகத்தில் ஆஸ்கார் அவார்டு ரேஞ்சுக்கு ஒரு' expression ' கொடுப்பார் பாருங்க....ஒருவேளை 'வீராசாமி' படம் பார்த்தவர்கள் வேண்டுமானால் சகித்துக்கொள்வார்கள், அதுக்கு  இது பரவாயில்லை என்று. மற்றவர்களின் கதி ??
                  
          சன் டிவி ஆரம்பிக்கப்பட்டபோது தொடங்கப்பட்ட எல்லா  நிகழ்சிகளுக்கும்  மூடுவிழா  நடத்தப்பட,  அரட்டைஅரங்கம்மட்டும்தான்உயிரோடுஇருக்கிறது.அந்த உயிர் இப்போது   ஊசலாடிக்கொண்டிருக்கிறது.  இதையும் குழிதோண்டி புதைத்துவிடாமல்,  மீண்டும்  இதற்கு   பழைய  உயிரும்,  உணர்வும்    கொடுப்பதற்க்கான முயற்சியை சன் டிவி எடுக்கவேண்டும் என்பது எங்களைப்போன்ற சன் ரசிகர்களின் ஆசை...........