Thursday 20 June 2013

ஒரே அக்கப்போராகும் பேஸ்புக்...மனுஷ் VS சமூக நீதிமான்கள்



இது எப்படியும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என நினைத்திருந்தால் மீண்டும் மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது முக நூலில்.

முகம் தெரியாத நட்புகளை உருவாக்கி அவர்களுடன் கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சமூக நோக்கில் தொடங்கப்பட்ட முகநூலில் இன்று சில சமூக விரோதிகள் மேற்கொள்ளும் ஆபாச பேச்சு
க்கள், அவதூறு பிரச்சாரங்கள், தனிமனித தாக்குதல்கள் என இணைய சுதந்திரம் ஒரு தவறான பாதைக்கு தடம் மாறியுள்ளது.

ஒரு காலத்தில் வெறும் அச்சு ஊடகங்கள் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களையும், எழுத்தாளர் களையும் தொடர்பு கொண்டிருந்த காலம் போய் தற்போது கைக்கெட்டும் கம்ப்யு
ட்டர் ஸ்க்ரீன் வழியாக சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்.அதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் 'கழுவி ஊத்துதல்' என்கிற தனி மனித தாக்குதலை இணையத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு தவறான வழிகாட்டுதல் எங்கு ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால் ஈழப்பிரச்சனையில் தங்களு
க் கிருக்கும் சில சுய நிலைபாட்டோடு ஒத்துப் போகாத அன்றைய திமுக அரசிடமிருந்து அதுவும் கலைஞரிட மிருந்துதான் ஆரம்பித்திருக்கனும்.ஈழ இறுதியுத்தத்தில் கலைஞரின் செயல்பாடு என ஆரம்பித்தால் அது இதைவிட பெரிய அக்கப்போராக இருக்கும் என்பதால் தற்போது மனுஷ்யபுத்திரன்  விசயத்திற்கு வருவோம்.

முகநூல் பிரபலங்களில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர்தான். நிலைத்தகவலுக்கு விழும் லைக்,கமெண்ட் அடிப்படையில் மட்டுமே இங்கே பிரபலங்கள் என அறியப்படுவதால் அந்த வகைமைக்குள் மனுஷ்ய புத்திரனும் வருகிறார்.தவிர அவர் ஒரு பத்திரிக்கையாளர்,சமூக சிந்தனையாளர் ,இலக்கியவாதி என பன்முகங்களைக் கொண்டவர். ஒரு சாதாரண ஸ்டேடசுக்கு 500 லைக்குக்கு மேல் வாங்குபவர்,அதுவே விமர்சனத்துக்குள்ளாகும் ஸ்டேடஸ் என்றால் 1500 தாண்டியே சென்றிருக்கிறது. முகநூலில் ஊடகவியலார் என எடுத்துக்கொண்டால் (கார்டூனிஸ்ட் பாலா ,டிமிட்ரியைத் தவிர்த்து) இது ஒரு மைல்கல் தான். வெறும் லைக்கை மட்டும் வைத்து எப்படி ஒருவரின் தரத்தை நிர்மாணிக்க முடியும் என கேள்வி எழுப்பினால், 1000 பேருக்கு மேல் தன் நிலைபாட்டோடு ஒத்துப் போகச்செய்வதே ஒரு சவால் தானே... அதுவுமில்லாமல் முகநூலின் அளவுகோலே 'லைக்' எண்ணிக்கை  மட்டும் தானே..

சரி....இப்படி தனிக்காட்டு ராஜாவாக இருந்த மனுஷுக்கு என்ன ஆனது....?.கடந்த இரண்டு வாரங்களாக முகநூலில் சில கும்பல்களால் கடுமையாக தாக்கப்பட்டு வருவதில்லாமல், அவரது அந்தரங்க விசயங்களை தோலுரித்துக் காட்டுகிறேன் என இணையம் முழுவதும் அவதூறுகளை பரப்பி அவரை கடும் உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது அந்த கும்பல். அசால்ட்டா 600 லைக் வாங்கியவர் 200
லைக் வாங்குவதற்கே தண்ணி குடிக்கிறார். அப்படியென்ன தவறு செய்துவிட்டார் திருவாளர் மனுஷ்ய புத்திரன்...?

சமீபத்தில் நடந்த கலைஞரின் 90 வது பிறந்த நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் நடந்த 90 கவிஞர்கள் பங்குபெறும் கவிபாடும் மன்றத்தில் மனுஷ்யப் புத்திரனும் கலந்துகொண்டு கலைஞரை வாழ்த்திப் பாடினாராம்.இது தமிழ் கூறும் நல்லுலகுக்கே பெரும் அவமானம் அல்லவா..நம்பிக்கைத் துரோகமல்லவா...அதனாலதான் அந்த கும்பல் வெகுண்டு எழுந்தது.ஏனென்றால் அவர் அங்கு செல்வதற்கு முன் இந்த கும்பலிடம் அனுமதி வாங்கவில்லை போல...

முதலில் அவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது சரியா...?  மனுஷ்யப் புத்திரன் அவர்களை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்... அவர் கலைஞரின் ஒரு சில அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்திருக்கிறாரே தவிர கடுமையாக தாக்கிப் பேசியதில்லை.கலைஞரிடத்தில் எப்போதும் அவருக்கு ஒரு மெல்லிய பிரியம் இருந்ததை மறுக்கலாகாது. தவிர உயிர்மையை தவிர்த்து அவரின் ஊடக செயல்பாடுகள் குங்குமம்,நக்கீரன்,கலைஞர் டிவி என திமுகவை சார்ந்தே அமைந்திருக்கிறது.இப்படி ஒரு சூழலில் கலைஞரின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டது அந்த கும்பலுக்கு எந்த வகையில் வெறுப்பை ஏற்படுத்தியது..? ஒருவேளை கலந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.அவர் என்ன திமுகவின் கட்சி மாநாட்டிலா கலந்து கொண்டார்...?  அல்லது இவர் மட்டுமா கலந்து கொண்டார்..?

அடுத்தது... கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது தவறா...? உங்களுக்கு கலைஞர் பிடிக்க வில்லை என்றால் அவரை வாழ்த்துபவர்கள் எல்லாம் ஓணாண்டி புலவர்களா...? அப்படியென்ன அவர் தமிழுக்கு தீங்கிழைத்து விட்டார்?.சமகாலத்திய அரசியல் தலைவர்களில் அவர் அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருப்
ர் யார்? உடனே 'ஈழத்தில் ஒரு லட்ச்சத்து..........'என தேய்ந்து போன பழைய ரெகார்ட திரும்பவும் போட்டீங்கனா...பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டுன்னு சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வந்து தொலையும்.. சரி..இந்த விவகாரம் இப்ப தேவையில்ல.. மனுஷ் மேட்டருக்கு வருவோம்.

முதலில் அவர் மீது அவதூறைக் கிளப்பும் கும்பல் எது...? அவர்கள் ஒன்றும் நடுநிலை நாராயணசாமிகள் கிடையாது...எல்லோரும் அம்மாவின் அடிவருடிகள்தான். ஒருவர் சவுக்கு சங்கர். தமிழக காவல்துறையில் முன்பு எழுத்தராக பணிபுரிந்தவர்.காவல்துறை,நீதித்துறை என இவரின் தொடர்பு எல்லை பெரியது.அங்கு கிடைக்கும் சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொஞ்சம் கற்பனையையும் கலந்து தன் சவுக்கு தளத்தில் எழுதி வருகிறார். ஜெயலலிதாவைச் சுற்றி இருப்பவர்களை கடுமையாக சாடினாலும் அம்மாவை சிறு துரும்பு அளவுக்கு கூட விமர்சிக்க மாட்டார்.அப்படியொரு நடுநிலை நாயனம் இவர்.ஆனால் கலைஞரை யாராவது துதி பாடினால் அவரை சொம்பு என்று விளிப்பார். அந்த வகையில்தான் மனுஷ்ய புத்திரன் சொம்படி சித்தரானார். "இறந்து போங்கள்....","ஓய்வு பெறுங்கள்.." என  கலைஞரை சாடி இவர் எழுதிய பதிவுகளை உடன்பிறப்புகள் படித்தால் ரத்தக் கொதிப்பே வந்துவிடும்.அப்படியொரு நாகரீகமான எழுத்தாளர்.

அடுத்தவர் கிஷோர் சாமி என்கிற அம்மாவின் அதிதீவிர சொம்பு.. முகநூலில் இவரின் செயல்பாடுகள் முற்றிலுமாக அருவருக்கத்தது. திருமாவளவனை சாடுவதாக
ச் சொல்லி தனித் இன மக்களையே கேவலமாக திட்டுவார். முன்பு ஒருமுறை "நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்.."என்கிற ரீதியில் இவர் எழுதிய நிலைத் தகவலால் கொதித்துப் போன சிறுத்தைகள் அமைப்பு இவர் மீது காவல் துறையில் புகார் அளித்தது. இதைப்பற்றி ஒரு பதிவு  கூட எழுதியிருக்கிறேன்.ஆனால் நடவடிக்கை எதுவும் கிடையாது. காரணம் ஐந்து ஸ்டேடஸ் அவதூறாக இருக்கும். ஆறாவது ஸ்டேடஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இன்று அதைத்திறந்து வைத்தார்.... இதைத் திறந்து வைத்தார் என அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளுவார். அதிலும் முகநூல் முகப்பில் முதல்வரின் படம் வேறு(இந்த வார நக்கீரனில் கூட வந்திருக்கிறது).பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்..? இவர் குறிவைப்பது இணையத்தில் இயங்கும் தலித் பெண்கள் மீதுதான். குறிப்பாக கவிதா சொர்ணவல்லி,கவின் மலர் போன்ற பத்திரிகையில் இயங்கும் பெண்கள் மீது இவர் தொடுக்கும் ஆபாசத் தாக்குதல்கள் அருவருப்பின் உச்சம். இப்படிப்பட்டவரின் பார்வைதான் தற்போது மனுஷ் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது. அதிலும் அவரின் ஊனத்தை நக்கலடித்த திலிருந்து அவரின் ஒவ்வொரு ஸ்டேடசையும் காபி செய்து(கவிதைகள் உட்பட) இவர் பக்கத்தில் இட்டு அதன் கீழே மோசமான வார்த்தைகளில் எழுதுவது வரை இவரின் வன்மம் இன்னமும் தொடர்கிறது.  சரி..இவர்களை இப்படி தொடர்ந்து செயல்பட வைப்பது யார்..?  வேறு யாரு.. இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களின் அல்லக்கைகள்தான்.எவ்வளவு வன்மமாக எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு 'லைக்'கிடும்  இது போன்ற சொம்பு கூட்டங்கள் இருக்கும்வரை இவர்களின் வக்கிர செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த வார நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் எழுதியது.

இவரைத் தவிர்த்து இன்னும் சிலர் காலையில் எழுந்து தூக்கம் கலையாமல் பல்லு கூட விளக்காமல் முதல் வேலையாக முகநூலைத் திறந்து மனுஷ் இன்று என்ன ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் என்று ஆராய்ந்து அதற்கு பதிலடியாக தன் பக்கத்தில் எதாவது உளறி வைத்துவிட்டுத்தான் ஆபிசுக்கு கிளம்புகிறார்கள். இதில் நடுநிலை நாயன்மார்களாக பல வேசங்கள் போடும் சிலரும் நான் நடுநிலைதான் ஆனால் கலைஞரை யார் பாராட்டினாலும் எனக்கு அவர் எதிரிதான் என்கிற உயரிய நிலைப்பாட்டோடு அங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கே நான் மனுஷ்ய புத்திரனுக்கு சப்பைக் கட்டு கட்டவில்லை.விஸ்வரூபம் சம்மந்தமாக அவரின் ஒரு ஸ்டேடசை கடுமையாக விமர்சித்து நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். ஆனால் விமர்சனம் என்பது வேறு...அவதூறு தாக்குதல் என்பது வேறு. ஒருவரின் கருத்தோடு உங்களுக்கு முரண்பாடு ஏற்பட்டால் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்கொள்வதுதான் நாகரீகம்.அதைவிடுத்து அவரின் அந்தரங்க விசயங்களில் மூக்கை நுழைத்து கட்டுக் கதைகள் பல அவிழ்த்து விடுவது வக்கிரமல்லவா.. இதில் சில அறிவிலிகள்,சவுக்கு சங்கர் வெளியிட்ட குற்றச்சாட்டு பொய் என்றால் இவர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாமே. அமைதியாக இருக்கிறார் என்றால் எல்லாம் உண்மையென்று அர்த்தம் தானே என கேட்கிறார்கள்.அவர்தான் தெளிவாக சொல்கிறார்.'அவர் கூறிய ஒரு குற்றச்சட்டையாவது ஆதாரத்தோடு நிருபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்' என்று. நமக்கு நிருபிப்பதா முக்கியம். முகநூல் பாசை படி 'கழுவி ஊத்தணும்,டவுசர் கழட்டனும் ' அது போதும்.


இவர்கள் மட்டுமல்ல இணையத்தில் மட்டும் (கவனிக்க மட்டும்..)தன்னை ஒரு போராளி(!?)யாகக் காட்டிக் கொள்ளும் இன்னொரு குருப்பும் இப்படித்தான். கலைஞர் சம்மந்தப்பட்ட எந்த பதிவாக இருந்தாலும் அங்கு சென்று வாந்தியெடுத்து விட்டு வந்து விடுவார்கள். இவர்களின் நோக்கம்தான் என்ன..?

வெரி சிம்பிள்... 2011 தேர்தலில் படு தோல்வியடைந்த கலைஞர் மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடாது. இணையத்தில் இதுவரை மிக மோசமாக,வக்கிரமாக விமர்சனம் செய்யப்பட கலைஞர்,எக்காரணம் கொண்டும் யாராலும் சிறு புகழுக்குக் கூட ஆளாகி விடக் கூடாது. அதாவது கலைஞர் கடைசிவரை கழுவி ஊற்றப்பட வேண்டும்.ஏதோ முக நூல்தான் தமிழகத்தில் தலைவிதியையே மாற்றி எழுதுகிற மாதிரி. மனுஷ்ய புத்திரன் போன்ற மீடியாவில் புகழ் பெற்றவர்கள் கலைஞரை பாராட்டி பேசும்போது எங்கே கலைஞர் மீதிருக்கும் தவறான பிம்பம் மாறிவிடுமோ என்கிற அச்சம்தான் இது போன்றவர்களை மனநிலை பாதிக்கும் அளவுக்கு உசுப்பேற்றியிருக்கிறது.

எனக்கு இன்னொரு சந்தேகம்.முகநூலே கலைஞருக்கு எதிராக இருக்கிறது என்பது போன்ற பிம்பம் நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை...?  உண்மையைச் சொன்னால் இப்படியொரு மாயபிம்பம் உருவாகவில்லை, உருவாக்கபட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.இதற்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் 'பிளாக்' என்கிற ஆப்சன். கலைஞரை வசைபாடி எழுதுகிற நிலைத்தகவலுக்கு யாராவது வந்து எதிர் கேள்வி கேட்டால் உடனே அவர்களை பிளாக் பண்ணிவிடுவார்கள்.அதாவது இனி அவர்கள் இடும் நிலைத்தகவல் பிளாக் செய்யப்பட்டவருக்குத் தெரியாது.இப்படி கேள்வி கேட்பவர்கள் எல்லோரையும் பிளாக் செய்துவிட்டு தன்னோடு ஒத்தக் கருத்து உள்ளவர்களை மட்டும் தன் நண்பர்கள் லிஸ்டில் வைத்துக் கொண்டால் இனி எவனும் கேள்வி கேட்க முடியாதல்லவா...    


அப்படிஎன்றால் கலைஞரைக் கலாய்த்து போடும் ஸ்டேடசுக்கு அதிக லைக் விழுகிறதே...இதுவும் ஒரு மாய பிம்பம்தான்.முகநூலில் அதிக லைக் வாங்குபவர்களை( அரசியல் ரீதியாக மட்டும்..பெண்கள் குறிப்பாக நடிகைகள் இந்தக் கணக்கில் கிடையாது) எளிதாக அடையாளம் காணலாம்.உதாரணமாக கலைஞருக்காகவே கார்ட்டூன் வரைய அவதாரம் எடுத்த 'கார்டூனிஸ்ட் பாலா' வரையும் கார்ட்டூன்களுக்கு அதிக பட்சமாக 1500-2000 லைக் விழுந்திருக்கும். இது சராசரியை விட மிக அதிகமாயிற்றே என தோன்றும்(இந்த மிதப்பில் தான் இவரைப் போன்றவர்கள் கலைஞரை மட்டும் கலாய்ப்பதிலே குறியாக இருக்கிறார்கள்). ஆனால் சதவிகித அடிப்படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும். முகநூலில் இவருக்கு இருக்கும் நண்பர்கள் 5000+ பாலோயர்ஸ் 25,000 (இதில் அநேக உடன்பிறப்புகள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறார்கள்.)ஆக மொத்தம் முப்பதாயிரம் பேர்.அனைவருமே இவருடைய கருத்தோடு ஒத்துப் போகிறவர்கள் அல்லது நடுநிலைப் போர்வையில் ஒளிந்துக் கொண்டிருப்பவர்கள். ஆக முப்பதாயிரத்தில் வெறும் 1500 லைக்கை பெற்று ( 5 சதவிகிதம்) உலகமே கலைஞரைக் காரித்துப்புகிறது என்கிறார். குறிப்பாக இவருக்கு விழும் லைக்குகளில் பெரும்பான்மை தமிழகத்தில் ஓட்டுரிமை இல்லாத புலம் பெயர் தமிழர்கள்.அப்படி இப்படிப் பார்த்தால் தமிழகத்திலிருந்து 500 லைக் கூட விழுந்திருக்காது.இதுதான் முகநூலின் மிகப்பிரபலமான பிலாக்கூனிஸ்ட் பீலா...ச்சீ...கார்டூனிஸ்ட் பாலாவின் நிலைமை.இதை வைத்துதான் அவர் டவுசரை உருவுவேன் ..ஜட்டியைக் கழட்டுவேன்னு சொல்லிட்டு திரியுறார்.  

இப்படி கலைஞருக்கு எதிராக பொய்யாகவே கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை யாராவது தகர்த்து விடுவார் களோ என்கிற பதட்டத்தில் தான் இது போன்ற சில்லுண்டி வேலைகளைச் செய்கிறது அந்தக் கும்பல். கருத்தியல் ரீதியாக எதையும் எதிர்கொள்ள தைரியமில்லாத பொட்டைப் புழுக்கள். ஓவ்வொரு வருக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு.தன் நிலைபாட்டோடுதான் அனைவரும் ஒத்துப் போகவேண்டும் என எதிர்பார்ப்பது மடத்தனத்தின் உச்சம். இந்தப் பதிவு என்னோடைய நிலைப்பாட்டின் பிரதிபலிப்புதான். இதோடு நீங்கள் ஒத்துப் போகவேண்டும் என உங்களை நான் வற்புறுத்தவும் முடியாது.அப்படி ஒத்துப் போகாத உங்கள் மீது பொய்யான அவதூறுகளை நான் பரப்பினால் என்னை என்ன சொல்லி வசை பாடுவீர்களோ அதையேத்தான் அந்தக் கும்பலை நோக்கி கர்ர்ர்ர்...த்தூ எனத் துப்புகிறேன்.





------------------------------------------------(((((((((((())))))))))))))))))))-------------------------------------

8 comments:

  1. சரியான கருத்துக்களை, நிறையப்பேர் சொல்லத் தயங்கும் சில கருத்துக்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கலைஞர் பற்றிய உங்கள் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவருடைய சில செயல்களை விமர்சிப்பது என்பது வேறு. மிக ஆபாசமான வகையில் கொஞ்சமும் நாகரிகமற்று ஒரு பொதுவெளியில் நமது கருத்தை வெளியிடுகிறோம் என்ற சிந்தனைக்கூட இல்லாமல் நாராச நடையில் எழுதுவது என்பது வேறு. நிறையப்பேர் இதைத்தான் செய்துவருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி Amudhavan சார்..

      Delete
  2. அருமையாக சொன்னீர்கள்,
    நடுநிலையுடன் எழுதப்பட்ட உண்மையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி

      Doha Talkies

      Delete
  3. இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? கலைஞரை திட்டுவது ஒரு fashion

    ReplyDelete